கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removing wrong interwiki
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ml:പള്ളി
வரிசை 58: வரிசை 58:
[[lv:Neredzamā baznīca]]
[[lv:Neredzamā baznīca]]
[[mg:Fiangonana]]
[[mg:Fiangonana]]
[[ml:പള്ളി]]
[[mwl:Eigreija]]
[[mwl:Eigreija]]
[[nds:Kark (Organisation)]]
[[nds:Kark (Organisation)]]

16:51, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருச்சபை (கிரேக்கம்: kyriakon (κυριακόν), "கடவுளுக்கு உரியது" அல்லது "சபை") என்பது தமிழில் கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். புதிய ஏற்பாட்டில் இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. திருச்சபையின் உட்பிளவுக்குப் பின் தன்னோடு ஒப்புறவில் இல்லாத சபைகளை திருச்சபையாக ஏற்றுக்கொள்ள உரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் மறுக்கின்றன.

சொல் பிறப்பு

திருச்சபை என்னும் சொல் கிறிஸ்தவர்களின் சமூகத்தினைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இதில் திரு என்பது 'புனிதத்தை'யும் சபை என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்று பொருள் கொள்ளலாம்.

இயேசுவின் திருச்சபை

இயேசு கிறிஸ்து தனது திருச்சபையை, தனது முதன்மை திருத்தூதரான பேதுருவின் தலைமையில் உருவாக்கினார்.[1] அவருக்கு விண்ணகத்திற்கு தகுதி பெறுவதற்கு, இவ்வுலக மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்தளிக்கவும் அதிகாரம் அளித்தார்.[2] இதன் வழியாக கிறிஸ்தவ சமூகத்துக்கு ஒரே தலைமை இருக்க வேண்டும் என்றே இயேசு விரும்பினார். கிறிஸ்தவர்கள் ஒரே சமூகமாக பிளவுபடாமல் வாழவேண்டும்[3] என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.

மக்களின் பாவங்களை மன்னிக்கவும்,[4] வாழ்க்கை நெறிகளை வகுக்கவும்[5] இயேசு திருத்தூதர்களுக்கு அதிகாரம் அளித்தார். திருத்தூதர்கள் திருச்சபையின் முதல் ஆயர்களாக கருதப்படுகின்றனர். தலைமைத் திருத்தூதர் பேதுருவின் அதிகாரம் அவரது வழித்தோன்றலான திருத்தந்தைக்கும், மற்றத் திருத்தூதர்களின் அதிகாரம் அவர்களது வழித்தோன்றல்களான திருச்சபையின் ஆயர்களுக்கும் வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை.

தொடக்கத் திருச்சபை

உயிர்த்தெழுந்த இயேசு, தனது திருச்சபையின் ஆடுகளை (மக்களை) பேதுருவிடம் ஒப்படைத்தார்.[6] பேதுருவும் திருச்சபைக்கு தலைமைதாங்கி வழிநடத்தி வந்தார். கிறிஸ்துவின் நற்செய்தியை, மக்களுக்கு முதன்முதலில் பறைசாற்றியவர் திருத்தூதர் பேதுருவே.[7] தொடக்கத் திருச்சபையின் சந்தேகங்களுக்கு முடிவு கூறியவரும் அவரே. யூதர் அல்லாத பிற இனத்தாருக்கு திருமுழுக்கு வழங்க முதலில் கட்டளையிட்டவரும் அவரே.[8]

தொடக்கத் திருச்சபையின் மக்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்.[9]

திருச்சபையின் பிளவு


ஆதாரங்கள்

  1. மத்தேயு 16:18 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
  2. மத்தேயு 16:19 "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்."
  3. யோவான் 17:21 "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!"
  4. யோவான் 20:23 "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா"
  5. மத்தேயு 18:18 "மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
  6. யோவான் 21:17 'மூன்றாம் முறையாக இயேசு பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணிவளர்" என்றார்.'
  7. திருத்தூதர் பணிகள் 2:14,22 'அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே."
  8. திருத்தூதர் பணிகள் 2:14,22 'பேதுரு, "நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?" என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார்.'
  9. திருத்தூதர் பணிகள் 2:42-47
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவத்_திருச்சபை&oldid=1285566" இலிருந்து மீள்விக்கப்பட்டது