வெர்சாய் ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: kk:Версаль бейбіт келісімі |
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: bs:Versajski sporazum |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[bn:ভার্সাই চুক্তি]] |
[[bn:ভার্সাই চুক্তি]] |
||
[[br:Feur-emglev Versailhez]] |
[[br:Feur-emglev Versailhez]] |
||
[[bs:Versajski |
[[bs:Versajski sporazum]] |
||
[[ca:Tractat de Versalles]] |
[[ca:Tractat de Versalles]] |
||
[[ckb:پەیمانی ڤێرسای]] |
[[ckb:پەیمانی ڤێرسای]] |
12:50, 22 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
ஜேர்மனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம். | |
---|---|
ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம் | |
கையெழுத்திட்டது | 28 ஜூன் 1919 |
இடம் | வெர்சாய், பிரான்ஸ் |
நடைமுறைக்கு வந்தது | 10 ஜனவரி 1920 |
நிலை | Ratification by Germany and three Principal Allied Powers. |
கையெழுத்திட்டோர் | பிரான்ஸ் இத்தாலி ஜப்பான்n ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா Other Allied Powers |
வைப்பகம் | பிரான்ஸ் அரசு |
மொழிகள் | பிரெஞ்சு, ஆங்கிலம் |
முழு உரை | |
Treaty of Versailles விக்கிமூலத்தில் முழு உரை |
வெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) என்பது, முதலாம் உலகப் போரின் முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்களுள் ஒன்று. இது ஜேர்மனிக்கும், கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட் என்பவர் கொலை செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது.