பாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:
என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. [[நன்னூல்|நன்னூலில்]] இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.
என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. [[நன்னூல்|நன்னூலில்]] இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.
==இருநூலுக்கு ஒரு பாயிரம்==
==இருநூலுக்கு ஒரு பாயிரம்==
: [[சிவஞான சித்தியார்]] என்னும் நூலின் சுப பக்கப், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ''ஒரு கோட்டான் இரு செவியன்'' எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, [[தேவி காலோத்தரம்]], [[சர்வ காலோத்தரம்]] என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப்பாடல் அமைந்துள்ளது. [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206
: [[சிவஞான சித்தியார்]] என்னும் நூலின் சுப பக்கப், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ''ஒரு கோட்டான் இரு செவியன்'' எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, [[தேவி காலோத்தரம்]], [[சர்வ காலோத்தரம்]] என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப்பாடல் அமைந்துள்ளது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206</ref>

==காண்க==
==காண்க==
* [[பதிகம்]] - விரிவான செய்தி
* [[பதிகம்]] - விரிவான செய்தி

08:04, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

நூலில் பாய்ந்திருக்கும் செய்தி பாயிரம்.

தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும். இது பாடலாக அமைந்திருப்பதே வழக்கு.

பாயிரம் என்னும் சொல்

பாயிரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் பயிலப்பட்டுள்ளது. அடுத்து, பெருங்கதை நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்.

வகைகள்

பாயிரங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. இவை,

என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. நன்னூலில் இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.

இருநூலுக்கு ஒரு பாயிரம்

சிவஞான சித்தியார் என்னும் நூலின் சுப பக்கப், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ஒரு கோட்டான் இரு செவியன் எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, தேவி காலோத்தரம், சர்வ காலோத்தரம் என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப்பாடல் அமைந்துள்ளது. [1]

காண்க

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயிரம்&oldid=1278304" இலிருந்து மீள்விக்கப்பட்டது