க. கைலாசபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28: வரிசை 28:


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==
* [http://noolaham.net/library/books/04/388/388.pdf தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன்]
* [http://noolaham.net/library/books/04/388/388.pdf தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன்] - நூலகம் திட்டம்


[[பகுப்பு:தமிழ் விமர்சகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் விமர்சகர்கள்]]

17:41, 22 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

பேராசிரியர் க.கைலாசபதி

க.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் மலேயா என்று அழைக்கப்பட்ட, இன்றைய மலேஷியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் பிறந்தார். சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணம் வந்த இவர், வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும், அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பு சென்று அங்கே றோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக் கழகம் புகுந்தார்.

இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.

தொழில்

பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவரது ஆக்கங்கள்

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.

இவரது நூல்கள்

  • அடியும் முடியும்
  • பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்
  • தமிழ் நாவல் இலக்கியம்
  • இலக்கியச் சிந்தனைகள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கைலாசபதி&oldid=127543" இலிருந்து மீள்விக்கப்பட்டது