தினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: zh:杂谷 |
சி தானியங்கி இணைப்பு: simple:Millet |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[ru:Пшено]] |
[[ru:Пшено]] |
||
[[sh:Proso]] |
[[sh:Proso]] |
||
[[simple:Millet]] |
|||
[[sl:Proso]] |
[[sl:Proso]] |
||
[[sn:Rukweza]] |
[[sn:Rukweza]] |
23:27, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
தினை ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆயிரம் ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
தினை உற்பத்தியில் இந்தியா முதலிடம்
1,06,10,000 டன்கள் தினை உற்பத்தி செய்து உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. நைச்சீரியா, சீனா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
திணை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட், எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது.
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை. தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.
தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு