வாஸ்கோ ட காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: yi:וואשקו דא גאמא
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11: வரிசை 11:
}}
}}


'''வாஸ்கோ ட காமா''' (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு [[போர்ச்சுக்கல்|போர்ச்சுகீசிய]] நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக [[ஐரோப்பா|ஐரோப்பாவிலிருந்து]] [[இந்தியா|இந்தியாவிற்குக்]] கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய இந்தியாவின் ஆளுனர் ஆனார்.
'''வாஸ்கோ ட காமா''' (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு [[போர்ச்சுக்கல்|போர்ச்சுகீசிய]] நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக [[ஐரோப்பா|ஐரோப்பாவிலிருந்து]] [[இந்தியா|இந்தியாவிற்குக்]] கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் [[வைசிராய்]] என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுனர் ஆனார்.


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
வாஸ்கோ ட காமா 1460இலோ<ref>[http://www.fordham.edu/halsall/mod/1497degama.html Modern History Sourcebook: Vasco da Gama: Round Africa to India, 1497-1498 CE], fordham.edu, Retrieved June 27, 2007</ref> 1469இலோ<ref>[http://www.newadvent.org/cathen/06374a.htm Catholic Encyclopedia: Vasco da Gama] Retrieved June 27, 2007</ref> போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
வாஸ்கோ ட காமா 1460இலோ<ref>[http://www.fordham.edu/halsall/mod/1497degama.html Modern History Sourcebook: Vasco da Gama: Round Africa to India, 1497-1498 CE], fordham.edu, Retrieved June 27, 2007</ref> அல்லது 1469இலோ<ref>[http://www.newadvent.org/cathen/06374a.htm Catholic Encyclopedia: Vasco da Gama] Retrieved June 27, 2007</ref> போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
[[படிமம்:Sines06 edit1.jpg|thumb|upright|வாஸ்கோ ட காமாவின் பிறப்பிடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது]]
[[படிமம்:Sines06 edit1.jpg|thumb|upright|வாஸ்கோ ட காமாவின் பிறப்பிடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது]]
வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.<ref name="ames">{{cite book|title=The Globe Encompassed|author=Ames, Glenn J.|page=27|isbn=0131933884|year=2008|accessdate=2008-01-10}}</ref> டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார்.
வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.<ref name="ames">{{cite book|title=The Globe Encompassed|author=Ames, Glenn J.|page=27|isbn=0131933884|year=2008|accessdate=2008-01-10}}</ref> டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார்.

15:12, 27 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

வாஸ்கோ ட காமா
பிறப்பு1460 அல்லது 1469
சைன்ஸ் அல்லது விடிகுவெய்ரா, அலென்டெஜோ, போர்ச்சுக்கல்
இறப்பு24 திசம்பர் 1524 (வயது 64)
இந்தியா கொச்சி
பணிநாடுகாண்பயணி
கையொப்பம்

வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுனர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

வாஸ்கோ ட காமா 1460இலோ[1] அல்லது 1469இலோ[2] போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.

வாஸ்கோ ட காமாவின் பிறப்பிடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது

வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.[3] டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார்.

எஸ்டெவா ட காமா டோனா இசபெல் சாட்ரெவை மணந்தார். இவர் ஜாவோ சாட்ரெவின் மகள் ஆவார். ஜாவோ சாட்ரெ இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார்.[4]

வாஸ்கோ ட காமாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் குறைவாக மட்டுமே தெரிந்திருக்கிறது. போர்ச்சுக்கீசிய வரலாற்றறிஞர் டெய்க்செய்ரா டி அரகாவோவின் கூற்றுப்படி வாஸ்கோ ட காமா உள்ளூர் நகரான எவோராவில் கணிதவியலும் பயணவியலும் படித்ததாகக் கூறுகிறார். இது காமாவிற்கு வானியல் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வானியலாளர் ஆபிரகாம் சாகுட்டோவிடம் வாஸ்கோ ட காமா வானியல் பயின்றிருக்ககூடும்.[5]

1492இல் போர்ச்சுகல் அரசர் ஜான் II காமாவை செட்டுபால் துறைமுகத்திற்கும், லிஸ்பனின் தென்பகுதிக்கும் அல்கார்வேக்கும் ஃபிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்றுவதற்காக அனுப்பி வைத்தார். இப்பயணத்தின் போது காமா சிறப்பாகச் செயலாற்றினார்.

வாஸ்கோ ட காமாவிற்கு முந்தைய தேடல்கள்

பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஹென்றி த நேவிகேட்டரின் கடல்சார் பள்ளி (Nautical school) ஆப்பிரிக்கக் கடற்கரைப்பகுதியைக் குறித்த தனது பார்வையை அதிகரித்து வந்தது. 1460களில் இருந்து இதன் முதன்மைக் குறிக்கோளானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையைத் தாண்டி இந்தியாவின் வளங்களை (முதன்மையாக மிளகு இதர பிற மசாலா வகைகள்) எளிமையாக அணுகுவதே ஆகும். மேலும் அதற்கேற்றாற்போல் ஒரு நம்பக்கத்தகு கடல் வழியைக்கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினர்.

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும் கட்டுப்பாட்டை வெனிஸ் குடியரசே பெற்றிருந்தது. போர்ச்சுக்கல் பார்த்தலோமியா டயாசின் மூலம் கண்டறியப்பட்ட வழியை வெனிசின் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தத் திட்டமிட்டது.

வாஸ்கோ ட காமா பத்து வயதாக இருந்த பொழுது இந்த நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பார்த்தலோமியா டயாஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து மீண்டும் ஐரோப்பா திரும்பினார். அவர் அங்கு மீன் ஆற்றையும் நவீன கால தென்னாப்பிரிக்காவையும் கண்டறிந்து தெரியாத மற்றொரு கடற்கரை வடகிழக்காகச் செல்வதை அறிந்து வந்தார்.

மேலும் இந்தியாவை அட்லாண்டிக் கடல் மூலம் அடைய முடியும் என்ற கொள்கை ஜாவோ IIஇன் ஆட்சிக்காலத்தில் ஆதரிக்கப்பட்டது. பெரோ ட கோவில்காவும் அஃபோன்சோ டி பைவாவும் பார்சிலோனா, நேப்பிள்ஸ், ரோட்ஸ் வழியாக அலெக்சாண்டிரியாவிற்கும் பிறகு ஏடெனுக்கும் ஆர்மசு துறைமுகத்திற்கும் பின் இந்தியாவிற்கும் அனுப்பப்பட்டனர். அது அவர்களது கொள்கைக்கு மேலும் வலுவூட்டியது.

ஆனால் பார்த்தலோமியா டயாஸ் கண்டறிந்த வழித்தடத்திற்கும் மேற்குறிப்பிட்ட இருவர் கண்டறிந்த வழித்தடத்திற்கும் இடையிலிருந்த தொடர்பை இந்தியப் பெருங்கடல் வழியே கண்டறிவதிலேயே அனைவரும் முனைப்புடன் இருந்தனர். அப்பணியானது உண்மையில் வாஸ்கோ ட காமாவின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மானுவெல் I இப்பணியை வாஸ்கோ ட காமாவிற்கு வழங்கினார். இதனை அவர் ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்களை ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்துக் காப்பதில் காமாவின் சிறந்த பணியைக் கருத்தில் கொண்டு வழங்கினார்.

மேற்கோள்கள்

  1. Modern History Sourcebook: Vasco da Gama: Round Africa to India, 1497-1498 CE, fordham.edu, Retrieved June 27, 2007
  2. Catholic Encyclopedia: Vasco da Gama Retrieved June 27, 2007
  3. Ames, Glenn J. (2008). The Globe Encompassed. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0131933884. 
  4. Subrahmanyam 1997, p.61
  5. Subrahmanyam 1997, p.62
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்கோ_ட_காமா&oldid=1244442" இலிருந்து மீள்விக்கப்பட்டது