மட்டக்களப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jackie (பேச்சு | பங்களிப்புகள்)
fix URL prefix
வரிசை 26: வரிசை 26:
| unlocode =
| unlocode =
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
| இணையத்தளம் = http://www.batticaloamc.com
| இணையத்தளம் = www.batticaloamc.com
}}
}}
'''மட்டக்களப்பு''' ({{lang-en|Batticaloa}}, {{lang-si|මඩකලපුව}}) [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்ட]]த்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக [[திருகோணமலை]], [[பொலன்னறுவை]], [[அம்பாறை]] ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>[http://www.leansigmasl.com/Road.html Road Distance in Sri Lanka]</ref>
'''மட்டக்களப்பு''' ({{lang-en|Batticaloa}}, {{lang-si|මඩකලපුව}}) [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்ட]]த்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக [[திருகோணமலை]], [[பொலன்னறுவை]], [[அம்பாறை]] ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>[http://www.leansigmasl.com/Road.html Road Distance in Sri Lanka]</ref>

17:29, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

மட்டக்களப்பு
மட்டக்களப்புப்பின் ஒரு தோற்றம்.
மட்டக்களப்புப்பின் ஒரு தோற்றம்.
மேலிருந்து இடதுபுறமாக: கல்லடிப் பாலம், மட்டக்களப்பு வெளிச்ச வீடு, மட்டக்களப்புக் கோட்டை, மட்டக்களப்பு வாவி, பேரூந்து தரிப்பிடம், மீன்பிடிப் படகுகள், உன்னிச்சைக் குளம்

மட்டக்களப்பு
மாகாணம்
 - மாவட்டம்
கிழக்கு மாகாணம்
 - மட்டக்களப்பு
அமைவிடம் 7°43′N 81°41′E / 7.71°N 81.69°E / 7.71; 81.69
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 5 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2007)
515,857[1][2]
நகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்
துணை நகர முதல்வர்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 30000
 - +065
 - EP
இணையத்தளம்: www.batticaloamc.com

மட்டக்களப்பு (ஆங்கில மொழி: Batticaloa, சிங்களம்: මඩකලපුව) இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3]

சொல்லிலக்கணம்

மட்டக்களப்பு மான்மியம் கூறுவதன்படி மட்டக்களப்பு எனும் பெயர் காரணப் பெயராக அமைந்துள்ளது. இலங்கைமீது படையெடுத்த வட இந்திய முற்குகர், கிழக்குப் பக்கம் தமது ஓடத்தைச் செலுத்தி, மட்டக்களப்பு வாவியின் எல்லை வரை சென்று, அதற்கு அப்பாற் செல்ல வழியில்லாததால் இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர்.[4] மட்டக்களப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Batticaloa' (பற்றிக்கலோ) போர்த்துக்கீச சொல்லிலிருந்து உருவாகியது.

மீன் பாடும் தேன் நாடு - பெயர்க் காரணம்

கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.

கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் (Fr. Lang) என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.[5][6][7]

அண்மைய காலங்களில் இவ்விசையை கேட்டதாக தகவல் இல்லை. உள்நாட்டு யுத்தமும் இது பற்றிய ஆர்வமின்மையும் இதற்கான காரணங்கள் எனலாம்.

மீனிசை பற்றி பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது மீன் பாடும் தேன் நாடு என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது கடற்கன்னி உருவம் கொண்டதாக காணப்படுவது மட்டக்களப்பிற்கும் 'மீன் பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

மட்டக்களப்பு வரலாறு

இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது.

புவியியல்

புவியியல்

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,கடல், அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், குளம் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும்.

காலநிலை

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரமுடையாகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி (அல்லது வாகரை வாவி). இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது[8]. இது சிறு நிலப்பரப்புக்களையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடல்நீரேரி ஆகும்.

கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும். கோட்டைமுனை நிலப்பரப்பை கல்லடி என்ற இடத்துடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்ததொன்றாகும்.

மட்டக்களப்பானது இயற்கை எழில் நிறைந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை. பாசிக்குடா கடற்கரையின் ஒரு பகுதி, அலைகள் குறைவான, மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களைக் கவரும் அழகிய அமைப்புடையதாகும்.

மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டதாக காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை “செல்சியஸ்“ அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை “செல்சியஸ்“ வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.[9]

தட்பவெப்ப நிலைத் தகவல், Batticaloa(1961-1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.8
(82)
28.6
(83.5)
30.0
(86)
31.6
(88.9)
33.0
(91.4)
34.0
(93.2)
33.4
(92.1)
33.1
(91.6)
32.2
(90)
30.9
(87.6)
29.3
(84.7)
28.1
(82.6)
31.0
(87.8)
தாழ் சராசரி °C (°F) 23.2
(73.8)
23.6
(74.5)
24.3
(75.7)
25.3
(77.5)
25.7
(78.3)
25.6
(78.1)
25.3
(77.5)
25.1
(77.2)
24.8
(76.6)
24.3
(75.7)
23.8
(74.8)
23.5
(74.3)
24.54
(76.17)
பொழிவு mm (inches) 210.3
(8.28)
128.4
(5.055)
89.0
(3.504)
55.0
(2.165)
39.3
(1.547)
23.9
(0.941)
41.4
(1.63)
48.5
(1.909)
67.0
(2.638)
180
(7.09)
349.6
(13.764)
418.5
(16.476)
1,650.9
(64.996)
ஆதாரம்: WMO

தற்கால மட்டக்களப்பு நகரும் சூழவுள்ள இடங்களும்

நான்கு முக்கிய பகுதிகள் மட்டக்களப்பு நகரின் முக்கிய செயற்பாடுகளில் அங்கம் பெறுகின்றன.

  • புளியந்தீவு: மட்டக்களப்பு வாவியில் ஓர் தீவாக இது அமைந்து, ஏனைய பகுதிகளுடன் பாலங்கள் ஊடாக இணைப்பினை ஏற்படுத்துகின்றது. இங்கு அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், சமய வழிபாட்டு நிலையங்கள், பொது வைத்தியசாலை, மட்டக்களப்புக் கோட்டை, மட்டக்களப்பு பொது நூலகம், விளையாட்டரங்கு, கடைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன காணப்படுகின்றன.
  • கோட்டைமுனை: கல்முனை (அம்பாறை) - திருகோணமலை சாலையில் காணப்படும் இப்பகுதியில் பாடசாலைகள், வங்கிகள், மட்டக்களப்பு புகையிரத நிலையம், டெலிகொம் பிராந்திய அலுவலகம், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், கடைகள் ஆகியன காணப்படுகின்றன. இங்குள்ள இரு பாலங்கள் முறையே கோட்டமுனைப் பாலம் (பெரிய பாலம்), புதுப் பாலம் என்பன தீவுப் பகுதியான புளியந்தீவை நிலப்புகுதியுடன் இணைக்கின்றன.
  • கல்லடி: பல அரச கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன காணப்படும் இப்பகுதிலுள்ள கல்லடிப் பாலம் போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • புதூர்: புளியந்தீவை மேற்குத் தரைப்பகுதியுடன் பாலம் மூலம் இணைக்கும் இப்பகுதியில், இலங்கை வான்படைக்குச் சொந்தமான மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானத்தளம் ஒன்று உள்ளது.

மக்கள் தொகையியல்

மட்டக்களப்பானது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 314 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், மற்றும் முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் ஆகிய இனத்தவர்களும் வசிக்கின்றனர். மத ரீதியாகவும் பல மதத்தவரும் இங்கு வசிக்கின்றனர். உள்நாட்டுப் போரும், இடம்பெயர்வும் அடிக்கடி இடம்பெறும் இம்மாவட்டத்தின் குடித்தொகை புள்ளிவிபரங்களை மிகத் திருத்தமானதாக கருத முடியாது. 2007 புள்ளி விபரவியலின்படி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.[10]

இல இனம் சனத்தொகை மொத்த %
1 இலங்கைத் தமிழர் 381,841 74.0
2 இலங்கைச் சோனகர் 128,964 25.0
3 சிங்களவர் 2,397 0.5
4 இலங்கையின் இந்தியத் தமிழர் 143 0.0
5 மற்றவர்கள் 2,512 0.5
6 மொத்தம் 515,857 100

பொருளாதார நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அரிசி உற்பத்தியினையும், மீன்பிடிக் கைத்தொழிலினையும் குறிப்பிடலாம். தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த போதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்குப் பயிர்ச்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது.

உட்கட்டமைப்பு

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உட்கட்டமைப்பு காணப்படுகின்றது. இங்கு மின் இணைப்பு வசதி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் வசதி, மின் விளக்கு கம்பங்கள், பாலங்கள், நெடுஞ்சாலை போன்ற பல உட்கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்து சேவை இலங்கையின் ஏனைய முக்கிய நகரங்களுக்கான இணைப்பை வழங்குகின்றன. தனியார் பேரூந்து சேவையும் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேவையினை வழங்குகின்றன. மட்டக்களப்பிலிருந்து தலைநகரை நகரை அடைய கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது.

சாலைகள்
பேரூந்து

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட்ட முக்கிய நகரங்களுக்கு அரச, தனியார் சேவைகள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நெடுஞ்சாலைகளாக ஏ-4, ஏ-5, ஏ-9, ஏ-15 ஆகியன விளங்குகின்றன.

தொடருந்து

மட்டக்களப்பு புகையிரத நிலையம் ஊடாக திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களுக்கு நேரடி தொடருந்து சேவைகள் உள்ளன. பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு மட்டக்களப்பு - கொழும்பு சேவைகள் உள்ளன:[11]

புறப்படும் இடம் சென்றடையும் இடம் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம்
மட்டக்களப்பு கொழும்பு 6.00 மு.ப -
மட்டக்களப்பு கொழும்பு 11.00 மு.ப -
மட்டக்களப்பு கொழும்பு 5.00 பி.ப -
மட்டக்களப்பு கொழும்பு 8.10 பி.ப (கடுகதி) -
வான் வழி

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பயணிகள் விமான சேவை உள்ளது.[12]

வைத்தியசாலை

மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. அவற்றின் பிரதான பங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வகிக்கின்றது. 2008இல் 64,843 உள்ளக நோயாளர்களும் 145,495 வெளி நோயாளர்களும் மருத்துவ சேவையினைப் பெற்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான இதில் 900 கட்டில்கள் (2010ம் ஆண்டு) காணப்பட்டன.[13]

கல்வி நிறுவனங்கள்

படிமம்:EUSL SJBlock-1.JPG
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் - வெள்ளி விழா மண்டபம்

பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 கி.மீ தொலைவில் மட்டக்களப்பு-திருகோணமலை ஏ-15 நெடுஞ்சாலையில் உள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயங்கள் மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்று என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 233 பாடசாலைகளில்[14] இந்நான்கு கல்வி வலயங்களில் 106 பாடசாலைகள் காணப்படுகின்றன.[15] மட்டக்களப்பு நகருக்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி வலய 41 பாடசாலைகளில் ஏழு "1AB" தர தேசியப் பாடசாலைகள் காணப்படுகின்றன. அவ் தேசியப் பாடசாலைகள் கிறித்தவ நற்செய்தி அறிவிப்பாளர்களினால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட புனித மிக்கேல் தேசியப் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, வின்சன்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும், சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி என்பனவாகும்.[16] 2008ம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி, இவ்வேழு தேசிய பாடசாலைகளிலும் 11,895 மாணவர்கள் கல்வி கற்றனர்.[11] இது தவிர சில முஸ்லிம் வித்தியாலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியியற் கல்லூரி, சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம் போன்றவும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும். இவற்றைத் தவிர தனியார் நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளில் தகவல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி மூலமாக கல்வியூட்டல், ஆங்கிலக் கல்வி போன்றன குறிப்பிடத்தக்கன. இந்திய பல்கழைக் கழகங்களில் தொலைக்கல்வி பாடநெறிகளும் இடம் பெறுகின்றன.

கலாச்சாரம்

இங்கு பெரும்பாலும் தமிழர் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயம் என இதன் தாக்கம் உள்ளது. தமிழர் ஆடற்கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து (வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முசுலிம்கள் அதிகமாகம் வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கமும் காணப்படுக்கின்றது. இதில் போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு "கத்தோலிக்க பறங்கியர் ஒன்றியம்" என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தை பின்பற்றும் அமைப்பு காணப்படுகின்றது. இலங்கையில் அதிகளவில் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி பேசுவோர் இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[17]

சமயம்

மட்டக்களப்பு மாநகர சபையினுள் சமயங்களை பின்பற்றுவோர், 2008[11]

இந்து, இசுலாம், கிறித்தவம், பெளத்தம் ஆகிய நான்கு சமய நம்பிக்கை கொண்டவர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர். இவர்களில் இந்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இச்சமயங்களைப் பிற்பற்றுவோர் இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், பெளத்தர், ஏனையோர் முறையே 64.6%, 25.5%, 8.8%, 1.1%, 0.0% என்ற அடிப்படையில் 2012ம் ஆண்டில் இலங்கை குடித்தொகை, புள்ளிவிபர திணைக்கள கணக்கெடுப்பில் காணப்பட்டனர்.[18] மட்டக்களப்பு மாநகர சபையினுள் வசிப்போர் வீதம் பின்வரும் விளக்க வரைபடத்தில் உள்ளது போன்று காணப்படுகின்றனர்.

மட்டக்களப்பு வரலாற்றுடன் சமயங்களின் முக்கியத்துவமும் அங்கு காணப்பட்டது. இதற்கு சான்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன இந்து ஆலயங்கள் பலவற்றைக் காணலாம். இராமாயணத்துடன் தொடர்படுத்தப்படும் மாமாங்கம் முதல் பல புராதன இந்து ஆலயங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு கண்ணகி வழிபாடு வேறுபகுதிகளில் இல்லாதவாறு முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் வருகையுடன் இங்கு உருவாகிய கிறிஸ்தவம், பல வரலாற்று கிறிஸ்தவ ஆலயங்களை கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பெரிய இசுலாமிய பள்ளிவாயில்கள் முசுலிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் காணப்படுகின்றன. நகரத்தில் இந்நான்கு சமயங்களின் முக்கிய வணக்க நிலையங்கள் காணப்படுகின்றன.

விளையாட்டு

துடுப்பாட்டம், காற்பந்தாட்டம் என்பன பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகவுள்ளது. ஆனாலும் தேசிய அளவில் மட்டக்களப்பிற்கு புகழ் தேடித் தந்த விளையாட்டாக கூடைப்பந்தாட்டம் அமைந்துள்ளது.[19][20] இங்கு பதிவு செய்யப்பட்ட 25 விளையாட்டுக் கழகங்கள் காணப்படுகின்றன. நகரில் "வெபர் அரங்கு" எனும் பிரதான விளையாட்டு அரங்கு காணப்படுகின்றது.

மட்டக்களப்பு வரலாற்று நூல்கள்

இயற்கை அழிவுகள்

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்று. இதில் 35,000 க்கு மேற்பட்டோர் இறந்தும், கிட்டத்தட்ட 450,000 பேர் இடம்பெயர்ந்தும் இன்னலுக்குட்பட்டனர்.[11]

புகழ்பெற்ற மட்டக்களப்பவர்

மட்டக்களப்பில் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களில் பன்முகத் தமிழறிஞர்களான ஈழத்துப் பூராடனார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வி. சீ. கந்தையா, விபுலாநந்தர், வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை போன்ற பலர் வாழ்ந்துள்ளனர்.

இவற்றையும் பார்க்க

படக் காட்சியகம்

மேற்கோள்கள்

மட்டக்களப்பின் சில இடங்களின் நிகழ்படம்
  1. 2007 Estimate - Department of Census & Statistics Special Enumeration 2007
  2. Demographic Changes by the LTTE Peace Secretariat, April 2008 (via Sangam)
  3. Road Distance in Sri Lanka
  4. மட்டக்களப்பு மான்மியம் - நாமவியல் (பக்கம் 7)
  5. Batticaloa's 'Singing Fish' still in business
  6. Batticaloa: The Land Of The Singing Fish
  7. About Batticaloa
  8. Shanmugaratnam, N. (1995) The need for and steps towards a master plan for suitable utilization of the Batticaloa lagoon, Report to NORAD
  9. Weatherbase
  10. Number and percentage of population by ethnicity
  11. 11.0 11.1 11.2 11.3 புள்ளி விபரம்
  12. கெலிருவர்ஸ்
  13. "Under Line Ministry Beds 2010" (PDF). Ministry of Health, Sri Lanka.
  14. Number of schools by type of school and district, 1972 - 2002
  15. மட்டக்களப்பு கல்வி வலயங்கள்
  16. மண்முனை வடக்கு கல்வி வலயம்
  17. http://books.google.com/books?id=i7gPAQAAMAAJ&q=%22Catholic+Burgher+Union+%22&dq=%22Catholic+Burgher+Union+%22&hl=en
  18. Background Note: Sri Lanka - Population by religion according to districts, 2012
  19. Reason for remembering Father Eugene John Hebert S.J
  20. The Golden Era of Basketball in Batticaloa
  21. மட்டக்களப்பின் ஆட்சியதிகாரங்களும் காலக் கணிப்புகளும்

வெளி இணைப்பு

  • Battinews மட்டக்களப்பு மற்றும் இலங்கை கிழக்கு மாகான செய்திகள் இணையத்தளம்
  • infobatticaloa
  • batticaloa.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்களப்பு&oldid=1234287" இலிருந்து மீள்விக்கப்பட்டது