கொத்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: ne:धनियाँ
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: af:Koljander
வரிசை 53: வரிசை 53:
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]


[[af:Koljander]]
[[ar:كزبرة]]
[[ar:كزبرة]]
[[az:Keşniş]]
[[az:Keşniş]]

12:33, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம்

கொத்தமல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: Apiaceae
பேரினம்: Coriandrum
இனம்: C. sativum
இருசொற் பெயரீடு
Coriandrum sativum
L.
Coriander leaves, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்95 kJ (23 kcal)
4 g
நார்ப்பொருள்3 g
0.5 g
புரதம்
2 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(42%)
337 μg
உயிர்ச்சத்து சி
(33%)
27 mg
Percentages are roughly approximated using US recommendations for adults.

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.


வரலாறு

கொத்தமல்லி பூக்கள்

இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.


பயன்கள்

உணவு

அதன் விதைகள், விதைப்பொடி மற்றும் உலர்ந்த இலைகள்

கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

மருத்துவ குணங்கள்[மேற்கோள் தேவை]

  • உடலை சமநிலைப்படுத்தும்பொருள் விளங்கவில்லை. விளக்குக!.
  • வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்தும்
  • வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு, மருந்தாகப் பயன்படும்.
  • சீரண (செரிமான) சக்தியை அதிகரிக்க
  • புளித்த ஏப்பம் நீங்கும்
  • கண்கள் பலப்படும் - மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
  • பித்தத் தலைவலி நீங்கும் - பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
  • மூக்கடைப்பு குணமாகும் - சளிப் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
  • தலைச்சுற்றல் நீங்கும். - கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
  • பித்தம் குறையும் - சுக்கு, மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு குவளைத் தண்ணீரில் 1 தேக்கரண்டி பொடியைப் போட்டு கசாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
  • நாள்பட்ட புண்கள் ஆறும். மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்றுப் போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.
படிமம்:Coriander.JPG
கொத்தமல்லி செடி

பயிரிடல்

கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தமல்லி&oldid=1113710" இலிருந்து மீள்விக்கப்பட்டது