அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:பதினோராம் திருமுறை சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16: வரிசை 16:
[[பகுப்பு:அந்தாதிகள்]]
[[பகுப்பு:அந்தாதிகள்]]
[[பகுப்பு:பதினோராம் திருமுறை]]
[[பகுப்பு:பதினோராம் திருமுறை]]
[[பகுப்பு:6 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]

23:15, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம்

அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இதனைக் காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இது 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.

அற்புதத்திருவந்தாதியில் ஒரு பாடல்:


உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொற் - பருவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்புதத்_திருவந்தாதி&oldid=1110762" இலிருந்து மீள்விக்கப்பட்டது