சிலையெழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சிலையெழுபது(கம்பர் நூல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சிலையெழுபது''' என்பது [[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் ஒன்றாகும். [[கலிங்கப் போர்]] வெற்றிக்குப் பிறகு, [[சோழர்|சோழருக்கு]] அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதற் குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] குலமாகிய [[வன்னியர்]] பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. |
|||
சிலையெழுபது(கம்பர் நூல்கள்) |
|||
{{விக்கிமூலம்}} |
|||
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. |
|||
[[பகுப்பு:தமிழ் இலக்கிய நூல்கள்]] |
|||
பாயிரம் |
|||
கணபதி துதி |
|||
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப |
|||
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத் |
|||
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந் |
|||
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொழுவாம். 1 |
|||
நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல் |
|||
முந்துநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற் போந்த |
|||
சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப |
|||
இந்தணி சடிலத் தெம்மா னீணைக்கழல் பராஅ யிசைத்தான் |
|||
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். 2 |
|||
நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு |
|||
மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் |
|||
தலங்கண் மிகவெனினும் |
|||
இச்சித் தவர்குங் குறைவெயின்முன் னிமம்போற் |
|||
கடிதற் கியலாவே |
|||
பச்சை வண்ணத் திருமாலும் பவளவண்ணச் |
|||
சோதியும் வாழ் |
|||
கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் |
|||
தலங்கள் காணேமால். 3 |
|||
சம்புகோத்திரச் சிறப்பு |
|||
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர் |
|||
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர் |
|||
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு |
|||
கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4 |
|||
குலோற்பவச் சிறப்பு |
|||
திங்கண்மும் மழைபிலிற்றச் செழித்துயிர்க ணனிமல்க |
|||
அங்கமோ ராறுமாறை யந்தணரா குதியோங்கத் |
|||
துங்கமனு நெறிதழைப்பத் துகளறுவன் னியினின்றும் |
|||
பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தானால். 5 |
|||
வன்னியர் குலச் சிறப்பு |
|||
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி |
|||
உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத் |
|||
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும் |
|||
நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6 |
|||
வன்னியர் குலச் சிறப்பு |
|||
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர் |
|||
நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம் |
|||
முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி |
|||
இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7 |
|||
குலத்தலைவர் படைச் சிறப்பு |
|||
விடையுடையார் வரமுடையார் |
|||
வேந்தர்கோ வெனலுடையார் |
|||
நடையுடையார் மிடியுடைய |
|||
நாவலர்மாட் டருள்கொடையார் |
|||
குடையுடையார் மலையன்னர் |
|||
குன்றவர்பல் லவர்மும்முப் |
|||
படையுடையார் வனியர்பிற |
|||
ரென்னுடையார் பகரீரே. 8 |
|||
நூல் |
|||
விசயதசமி நாட்கோடற் சிறப்பு |
|||
சொன்மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும் |
|||
நன்மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும் |
|||
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவலசர் |
|||
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே. 1 |
|||
வில் வலிமையால் வாழும் உலகம் |
|||
கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் |
|||
கவின்கொண் டமைந்தவென்றிச், |
|||
சிலையா லன்றோ வேழ்புயலுஞ் சேணிற் |
|||
பொலியுந் திவாகரனும், |
|||
அலையார் கடலுங் கடையனலு மடன்மா |
|||
ருதமு மடங்கியொரு, |
|||
நிலையாய் நின்ற மனுநீதி நெறியு |
|||
நின்ற தறியீரோ. 2 |
|||
வன்னியர் ஏந்திய வில்லே, வில் |
|||
மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி |
|||
மலைமற் றுண்டோ |
|||
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் |
|||
கலைமற் றுண்டோ |
|||
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி |
|||
யலைமற் றுண்டோ |
|||
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச் |
|||
சிலைமற் றுண்டோ ? 3 |
|||
விற்போரில் மகிழ்பவர்கள் |
|||
அமரரொரு புறமரிய முனிவரொரு புறம்விசயை |
|||
யரிவை யொரு புறமடலுறுஞ் |
|||
சமனுமொரு புறம்விரவு கழுகுமொரு புற |
|||
நெடிய தருமமொரு புறமுடைகொள்வாய் |
|||
ஞமலியொருபுற மெரிக ணலகையொரு |
|||
புறமிடர்செய் நரிகளொரு புறமகிழவெஞ் |
|||
சமர்செய்திடு மணிமவுலி யணிவனிய |
|||
குலவரசர் தமதுகர மருவுசிலையே! 4 |
|||
வில்லின் வளைவுகள் |
|||
முட்டரை யறிஞராக்கும் முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும் |
|||
சிட்டருக்கரசு நல்கும் சேர்ந்தவர்க் குரம்பாலிக்கும் |
|||
மட்டறு தெவ்வர்தம்மை வலிதபவச் சுறுத்தும் |
|||
துட்டரைத் தொலைப்பவன்னி தோன்றுபொற் சிலையொன்றம்மா. 5 |
|||
விற்பிடித்தல் சிறப்பு |
|||
மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம் |
|||
அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர் |
|||
படிபுரக்க வவதரித்த பண்ணாடர் கரத்தமைவிற் |
|||
பிடியுரத்தி னாலன்றோ பெருஞான முரமுறலே. 6 |
|||
வில்லால் விளைந்த நன்மை |
|||
மைப்படியு முடலவுணர் வருக்கமாய் வுற்றதுவும் |
|||
இப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும் |
|||
நெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின் |
|||
கைப்பிடியாண் மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே. 7 |
|||
வில்மணிச் சிறப்பு |
|||
பணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி |
|||
துணியிறைவர் பண்ணாடர் சோதிமணி முடிவனியர் |
|||
அணியிறையேந் தியவயிர மாஞ்சிலையி லடருநவ |
|||
மணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே. 8 |
|||
நாணின் சிறப்பு |
|||
கன்னாணும் புயமுடையார் கடனாணு மருளுடையார் |
|||
மன்னாண்மைப் பொலிவுடையார் மணிமுடிவன் னியர்தாங்கும் |
|||
வின்னாணின் வலியாலே வியனிலம்வாழ் வதுமடையார் |
|||
தந்நாண மிழந்துவலி தாழ்ந்துகரங் குவிப்பதுமே. 9 |
|||
வில்லேந்துதற் சிறப்பு |
|||
உலகறிமும் முரசொலிப்ப வுரைவில்கலி வெருண்டொளிப்ப |
|||
நிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம்பின் புறந்தவிப்ப |
|||
இலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப |
|||
அலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா. 10 |
|||
உலகம் செழிப்பது வில்லாலே |
|||
அலையை யெடுக்கா விடிற்பரவைக் |
|||
காற்ற லேதவ் வரவரசன் |
|||
தலையை யெடுக்கா விடிற்பொலிவு |
|||
தரணிக் கேது விதுவளரும் |
|||
கலையை யெடுக்கா விடிற்காட்சி |
|||
கங்குற் கேது வன்னியர்செஞ் |
|||
சிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச் |
|||
செழிப்பங் கேது செப்பிடினே. 11 |
|||
விற்போர் சிறப்பு |
|||
வட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின் |
|||
மட்டறவி டித்தெதிரெயிற் |
|||
கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல் |
|||
கெட்டுருட ரக்கு ருதிநீர் |
|||
கொட்டநுரை கட்டிடமி கச்சுழிசு ழித்தலைகொ |
|||
ழித்துநதி யிற்புகவழி |
|||
விட்டுறுமி நெட்டையிடுமக் கினி குலத்தரச |
|||
விக்ரமரெ டுத்த சிலையே! 12 |
|||
படை எழுந்தால் அரக்கர் அழிவர் |
|||
குடைகொண் டெழுந்தான் மாயனெடுங் குன்றந் |
|||
தனையான் குரங்களிக்கப் |
|||
புடைகொண் டெழுந்து பொழிந்தபெரும் புயல்க |
|||
ளிரிந்த வன்னியர்விற் |
|||
படைகொண் டெழுந்தார் புவிசெழிக் கப்பதறி |
|||
யவுணர் தென்பதிக்கே |
|||
விடைகொண் டெழுந்தே யொரு நாளுமீளா |
|||
வகைசென் றடைந்தனரே! 13 |
|||
வில்வளைத்தற் சிறப்பு |
|||
தனுவணங்கொண் டுலகளிப்பத் |
|||
தார்வேந்த ரெனவுதித்தோர் |
|||
தனுவணங்க சனும்வெள்கித் |
|||
தாள்வணங்கு மெழின்மிக்கோர் |
|||
தனுவணங்க கலவெவர்க்குந் |
|||
தாய்போனன் றாற்றும்வன்யர் |
|||
தனுவணங்கத் தரியலர்கள் |
|||
தஞ்சமென வணங்காரோ! 14 |
|||
நாணேற்றுதற் சிறப்பு |
|||
ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார்த |
|||
மைப்புறங்கண் டுலகங் காக்கத் |
|||
தாங்குவரி சிலைவணக்கிச் சரோருகக்கை |
|||
யாற்றீண்டித் தனிநாண் பூட்டப் |
|||
பாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத்தோண் |
|||
மடநல்லார் பசும்பொன் வண்ணப் |
|||
பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல்போன் |
|||
மெய்ப்புளகம் போர்ப்பர் மன்னோ? 15 |
|||
குணத்தொனிச் சிறப்பு |
|||
நெடியதிரை யெழுகடலி னொலியுமழை |
|||
முகிலொலியு நிகழும்யுக முடிவின் முடுகும் |
|||
ஒடிவில்பெரு வளிபொலியு முருமொலியு |
|||
மிணையிலென வுரகர்விழிபிதிர வெருவிக் |
|||
கொடியதிது கொடியதென விபுதர்நிலை |
|||
கெடவவுணர் குடர்குலைய வடர்திசையுடன் |
|||
படியிதிர வனியர்சிலை தழுவுகுண |
|||
வொலியினிலை பகர்வதெவனரித ரிதரோ. 16 |
|||
அம்பறாத்தூணிச் சிறப்பு |
|||
உம்பர்யா மென்றிறுமாந் துறைதுண்டவ வமரர்யாங் |
|||
கம்பரா மென்றேத்தக் கவியரசாய் வாழ்வதுமுண் |
|||
டிம்பரா ருஞ்சொல்வன் யரேலாருக் கிடரிழைக்கும் |
|||
அம்பறாத் தூணியுண்டே லாவியங்கத் தெவர்க்குமுண்டே. 17 |
|||
பிரமாத்திரச் சிறப்பு |
|||
வரமிகுவன் னியர்வணங்கா முடியரசர் |
|||
வண்மைதனை வரைய வேண்டிற் |
|||
சிரமகுட மன்னவராய்ப் பற்பலதே |
|||
யங்களினுந் திகழ்வோர் தம்முள் |
|||
விரவலரைப் பொன்னிலத்து மித்திரரை |
|||
யிந்நிலத் தும்வீற வாழ்வான் |
|||
விரமசிரத் தானிறுவும் பெற்றிமைகண் |
|||
டாய்ந்தெவர்தாம் பேசற் பாற்றே. 18 |
|||
நாராயணாத்திறச் சிறப்பு |
|||
காரியலுங் காதலவன் னியவீர ரடுசமரிற் |
|||
கனன்றே யுய்க்கும் |
|||
பேரியனா ராயணாத் திரத்தினுக்கிந் |
|||
திராதிபிர மாதியோரும் |
|||
நேரியல வுட்குவரே லியாவரெதிர் |
|||
வாழ்த்தியதை நின்றுதாழ்வோர் |
|||
பாரியர்மங் கலநாண்பன் னாளுநிலை |
|||
பெறவரம்பா லிக்குமம்மா. 19 |
|||
பாசுபதாத்திரச் சிறப்பு |
|||
உருத்திரவின் வயங்குதிங்க ளுதயனெதி ரொளிர்தருங்கொல் |
|||
உருத்திரளும் வயிரவரை யுறழ்தோளார் வன்னிமன்னர் |
|||
உருத்திரத மிவர்ந்திகலோ ருரஞ் சாய்ப்பத் தொடுக்குமழல் |
|||
உருத்திரவன் படைக்குமற்ற வும்பர்படை யொப்பாமோ. 20 |
|||
அபிமந்திரித்தற் சிறப்பு |
|||
அக்கரமொன் றக்கரமன் றக்கரமைந் |
|||
தக்கரமெட் டாதியாய |
|||
எக்கடவுண் மந்திரமு மெண்ணிலுருச் |
|||
செபித்துநினை வெய்தினோரும் |
|||
மிக்கதிது வெனவியப்ப விறல்வன்ய |
|||
குலவரசர் விடுங்கோல் சென்று |
|||
தக்கவபி மந்திரமாட் சியினமர்வென் |
|||
றிறைவனிடஞ் சார்தலாலே. 21 |
|||
நாணிறங்குதற் சிறப்பு |
|||
பூதலத்தோர்க் கிடரியற்று மரக்கருடல் |
|||
பிளந்துவெற்றிப் புனைந்த வோலை. |
|||
மீதலத்தோர்க் குணரவிடுத் தவர்பயந்தீர்த் |
|||
தாக்கியர்கள் வெரீஇத்தோ டோ ய்ந்த, |
|||
காதலர்தா ரணிவனியர் தனிச்சிலை |
|||
நாண் களித்திறங்கித் தயங்குமாதோ. 22 |
|||
வீரவாட் சிறப்பு |
|||
விண்ணவர்க்கு விருந்தினராய் மேவியர மாதரின்பம் |
|||
மண்ணின்மரு வலர்மருவ வாழ்விக்கும் பண்ணாடர் |
|||
திண்ணமுறு வன்னிமன்னர் திருக்கரத்தி லேந்தியமர் |
|||
நண்ணும்வய வாண்மகிமை நாமெங்ங னவில்வதுவே. 23 |
|||
வேலேந்திய காலாட்படைச் சிறப்பு |
|||
செய்யகத்து வளநாடு தேர்புலவர்க் கினிதளிப்பார் |
|||
மெய்யகத்து வன்னியர்செவ் வேள்பலவா முருக்கொளல்போல் |
|||
கையகத்து வேலேந்து காலாளின் படையினன்றி |
|||
வையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே. 24 |
|||
யானைப்படைச் சிறப்பு |
|||
ஓரானை முகத்தானை யுலகத்தோர் முன்னிறுத்திப் |
|||
பேரான கருமமெலாம் பிறழாது முற்றுகிற்பார் |
|||
காரான வுடலவுணர் கலங்குறமுன் னிறுத்திவன்யர் |
|||
போரானைப் படையானே போர்வயங்கோ டலினன்றே. 25 |
|||
குதிரைப்படைச் சிறப்பு |
|||
பூவேறி நான்முகனும் புள்ளேறித் திருமாலும் |
|||
சேவேறிக் கண்ணுதலுஞ் செய்வதென்னே தீஞ்சுவைகொள் |
|||
பாவேறிப் புகழ்பெற்றுப் பாராளும் வனியர்தழல் |
|||
மாவேறிப் பகைவென்று மாநிலங்காத் தருள்வாரே. 26 |
|||
தேர்ப்படைச் சிறப்பு |
|||
பார்விழாப் பெறக்காக்கும் பண்ணாடர் பதமலரில் |
|||
போர்விழாப் புரிவேந்தர் பொன்னவிர்மா முடிவணக்கி |
|||
யார்விழா திருப்பார்க ளமரர்மலர் மழைசொரியத் |
|||
தேர்விழா வுறவுகைக்கிற் றிருவிழாத் தினமென்றே. 27 |
|||
பிறர் தேரும் இவர் தேரும் |
|||
செங்கதிரோ னோராழித் தேரேறித் திகழ்வதுவும் |
|||
அங்கசன்மா ருதத்தேரூர்ந் தடலாண்மை செலுத்துவதும் |
|||
துங்கமனு நெறிபிழையாத் துகளறுவன் னியவீரர் |
|||
அங்கிரத மிவர்திறத்துக் கணுவளவு மிணையாமோ. 28 |
|||
அகழியின் சிறப்பு |
|||
பேராழிச் செலுத்திவயம் பெறவனியர்க் கிடமாகிக் |
|||
கூராழிப் பரனகரைக் குறைசொல்கம்பை நகருடுத்திட் |
|||
டோ ராழித் தேரிருபா லொதுங்கவய ரெயிற்புடைசூழ் |
|||
சீராழி யாமகழின் சிறப்பெவரே யுரைப்பவரே. 29 |
|||
அரண் சிறப்பு |
|||
சரண்புகுந்தீ சனைச்சான்றோர் தம்முயிரைக் காப்பரெனும் |
|||
வரம்புளதங் கதுவியப்பின் மருவியதோர் வழக்கன்றால் |
|||
முரண்புகதோட் செருநர்வரின் மூதுலகோர் வன்னியர்தம் |
|||
அரண்புகுந்து தம்முயிர்காத் தமர்ந்திருப்ப ராதலினே. 30 |
|||
கொடிச் சிறப்பு |
|||
சுடர்க்கொடியும் வனக்கொடியுந் துகளில்வெற்றிப் புலிக்கொடியும் |
|||
அடற்புவிமூன் றினுந்தாமே யரசியற்றும் படிதாவக் |
|||
கடற்புவியி னிரந்தரமுங் கருணைபுரி தாயேபோல் |
|||
இடர்ப்பகையீ லாதுவன்ய ரெவ்வுயிரும் வளர்ப்பாரே. 31 |
|||
அரசாட்சி மண்டபச் சிறப்பு |
|||
அண்டர்மலர் மழைசொரிய வந்தணர்பல் லாண்டிசைப்பத் |
|||
தண்டனிட்டுப் பொன்வேய்ந்து சயங்கூற வண்ணிமன்னர் |
|||
கொண்டபசும் பொன்வேய்ந்து குலவுபல மணிகுயிற்றும் |
|||
மண்டபத்தில் வீற்றிருக்கை மண்டபம்பெற் றிடுபேறே. 32 |
|||
சிங்காதனத்திருத்தற் சிறப்பு |
|||
தங்காத னன்பனிறை யென்ன மாதர் |
|||
சந்ததமுந் தொழுதெழுவார் சலியா தாகம் |
|||
தங்காத னனையநட்பிற் சிறந்தே யாவுந் |
|||
தகுபுலிய மோர்துறையிற் றண்ணீர் மாந்தும் |
|||
சிங்காத னம்பசும்பொன் மணிதூ சாதி |
|||
தெளிவுறுவே தியர்க்கு தவும்வன் னிமன்னர் |
|||
சிங்காத னத்தின்மிசை யமர்ந்து நாளுந் |
|||
திகழரசு செயுங்கருணைச் செயலா லன்றோ. 33 |
|||
முடிதரித்தற் சிறப்பு |
|||
தன்முடிமேற் புவிதாங்குந் தனியரவிற் றுயில்வோற்கும் |
|||
சொன்முடிவாம் பரமனுக்குந் தோன்றுமினைப் பொழுத்திடுவார் |
|||
பொன்முடிசென் னியிற்றாங்கிப் புகழ்வனிய வரசரொன்னார் |
|||
முன்முடியக் குடிதழைய மூதுலகம் புரத்தலினே. 34 |
|||
மகுடங்கள் நிலைப்பது இவர் மகுடத்தாலே |
|||
தேவர்முடி திங்கண்முடி சேணாரு மிரவிமுடி |
|||
மூவர்முடி முனிவர்முடி மும்மையுல கினில்வாழ்வோர் |
|||
யாவர்முடி யும்விளங்கு மென்றுமொரு முடிவில்லாக் |
|||
கோவிறைவன் னியர்முடிமேற் குலவுமுடி விளங்கலினே. 35 |
|||
புயகேயூர கிரீடச் சிறப்பு |
|||
இயனடுநீண் டிருபுடைதாழ்ந் திடவமைத்த வணைமூன்றின் |
|||
அயன்முதன்மூ வருந்தொழின்மூன் றாங்கியற்ற வமர்ந்ததுபோல் |
|||
வயமுறுவன் னியவரசர் வடவரைபோல் வீறியதின் |
|||
புயமுடியு மணிமுடியும் பொருந்தியது புதுமைத்தே. 36 |
|||
குடைச் சிறப்பு |
|||
படையுடைய படிவேந்தர் பணிந்திடுவோர் மனுநீதி |
|||
நடைவருணாச் சிரமநெறி நழுவாது காத்தெவர்க்கும் |
|||
விடையவன்ற னருள்பெற்ற வீரவன்னி மன்னர்கொற்றக் |
|||
குடைநிழலைத் தந்துகலிக் கோடைதணித் திடுவாரே. 37 |
|||
செங்கோற் சிறப்பு |
|||
வெங்கோப மதம்பொழியும் விண்ணவர்கோ |
|||
னும்பனிகர் வேழ முண்டோ |
|||
பைங்கோலஞ்சேர்கனகப் பஞ்சதரு |
|||
வனையபா தபமற் றுண்டோ |
|||
இங்கோத வான்சுரபிக் கிணையுண்டோ |
|||
வன்னிமன்ன ரெனுமேன் மக்கள் |
|||
செங்கோலுக் கெதிராங்கோல் செகதலத்தி |
|||
லொன்றுண்டோ செப்புவீரே. 38 |
|||
செங்கோல்வண்மைச் சிறப்பு |
|||
வீரசம்பு முனிவேள்வி விளங்கவரு முடிவேந்தர் |
|||
சீர்மருவு கரத்தேந்து செங்கோலன் றிறத்தானே |
|||
நேரறுதீக் கடைகோலு நிறைகோலு நீடுலகில் |
|||
ஏரடரு முழுகோலு மிடரின்றி யிருப்பதுவே. 39 |
|||
செங்கோல்நடத்தற் சிறப்பு |
|||
சீராரும் வன்னிமன்னர் செங்கோன்மை செலுத்துதலால் |
|||
சோராது சுரர்க்கும்பூ சுரர்க்குமிகு சிறப்புண்டாம் |
|||
நீராரும் புவியின்மனு நெறிதவறா தென்பதன்றி |
|||
ராலும் பழுதுரைக்க லாமோசொல் வல்லீரே. 40 |
|||
அறநெறியின் சிறப்பு |
|||
தாரேந்து புயவேந்தர் தழலிடைவந் |
|||
தவதரித்தோர் தனுவான் மிக்க |
|||
சீரேந்து மறத்தினெறி திறம்பாது |
|||
நிற்கின்ற செயலா லன்றோ |
|||
காரேந்திச் சொரிமழையுங் கலைமறையும் |
|||
வாணிபமு மடவார் கற்பும் |
|||
ஏரேந்து மவர்வாழ்வு மிடரின்றி |
|||
நிற்பதன்றி யென்கொண் டம்மா. 41 |
|||
ஆக்கினைச் சக்கரச் சிறப்பு |
|||
ஊழிக் கிறைதண்கடல்வீழ்ந்தான் |
|||
உம்பர்க் கிறையந் தரமானான் |
|||
கோழிக் கிறைதன் றாதைவரை |
|||
குறுகி னானெஞ் சறநாணி |
|||
மேழிக் கிறைமூ விரணடினொன்று |
|||
மேவப் பெறுவன் னியர்செலுத்தும் |
|||
ஆழிக் கிறைநா டொறுமாறா |
|||
தகிலமுழுதுங் காத்தல் கண்டே. 42 |
|||
தொழில்நெறி பிறழாமைச் சிறப்பு |
|||
கற்பத் தொழியா மறைபயிலுங் |
|||
கவின்மே வியவந் தணர்தொழிலும் |
|||
சிற்பத் தொழில்வை சியர்தொழிலுந் |
|||
தினமுமுயர்முக் குலத் தோரைப், |
|||
பொற்பத் தொழஞ்சூத் திரர்தொழிலும் |
|||
புகலெத் தொழிலுமுறை பிறழ்ந்தே |
|||
அற்பத் தொழிலா காதரசாள் |
|||
வதுபண் ணாட்டார் தந்தொழிலே. 43 |
|||
முத்திரைமோதிரச் சிறப்பு |
|||
எத்திசைமன் னவராணு முத்திரிக்கு மீதன்றிப் |
|||
பத்திமையி லார்க்கந்தப் பரனுலகு முத்திரிக்கும் |
|||
சத்தியம்பொய் யாதுவைகிச் சகம்புரக்கும் வன்னியர்கைம் |
|||
முத்திரையா ழிக்குநிகர் மூதக்கீர் மொழியீரே. 44 |
|||
துட்டநிக்கிரகச் சிறப்பு |
|||
தீட்டா தமையுஞ் சிவநிந்தை |
|||
செய்வோ ரையுஞ்செங் கோன்முறையேர் |
|||
பூட்டார் தமையும் பொய்யரையும் |
|||
போர்வெங் களத்துப் போந்துபுறங் |
|||
காட்டார் தமையுங் கள்வரையுங் |
|||
கலிதீர்ந் திடக்காட் டியவறத்தை |
|||
நாட்டார் தமையு நானிலத்தி |
|||
னாட்டார் நவில்பண் ணாட்டாரே. 45 |
|||
வாயில்மேவுதற் சிறப்பு |
|||
கடிந்தாரைக் களைவனியர் காப்பாளர் சமர்க்களத்தில் |
|||
மடிந்தாலுஞ் சுவர்க்கமுண்டாம் வாயில்காத் தவரடியில் |
|||
படிந்தாலு மரசுண்டாம் பகர்வதெவன் பாரிடத்தில் |
|||
விடிந்தால்வேந் தன்வாயின் மேவாதார் யாருளரே. 46 |
|||
தொழுதல் முதலிய சிறப்பு |
|||
அணங்காற் றருவில் லேந்திமுறை |
|||
யரசாள் வன்னிச்சயதரரை |
|||
வணங்கார் யார்கை கூப்பார்யார் |
|||
வாரிசூழும் வையமிசை |
|||
இணங்கார் யார்நின் றேத்தார்யா |
|||
ரேவற் பணிசெய் யார்யார் |
|||
மணஞ்சார் முற்றங் காத்திருந்து |
|||
வாழ்நாண் மகிழார் யார்யாரோ. 47 |
|||
செல்வாக்கின் சிறப்பு |
|||
பாவசையு நாவலர்பால் பத்திமிக வைத்துதவும் |
|||
பூவசையு மணிமார்பர் புகழினுக்கோர் நிகரின்றால் |
|||
மாவசையாப் பெருஞ்செல்வர் மாதிரங்காக் கும்வனியர் |
|||
நாவசைய நிரந்தரமும் நாடசையா திருந்திடுமோ. 48 |
|||
வன்னியரின் புகழ் |
|||
ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார் |
|||
போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழ்தற் |
|||
கேந்துகர மிரண்டினும்பொன் னிலக்கமறச் சொரியினுமிவ் |
|||
வேந்தர்புகழ்க் கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால். 49 |
|||
திருமங்கை ழ்வாரால் பாடப்பெற்றோர் |
|||
வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல் |
|||
லவராயன் மரபிற் றோன்றிக் |
|||
களமருவு கறையுடைய கண்ணுதல்கச் |
|||
சியின் வாழே கம்பரேசற் |
|||
குளமருவு மன்பினரா யொளிர்மகுட |
|||
மணிப் பொற்றே ருதவிமேனாள் |
|||
தளமருவு தாமரைபோன் முகவனியர் |
|||
படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ. 50 |
|||
மாசு அகற்றற் சிறப்பு |
|||
மின்னு மிரவிதனிற் றோன்றும் வேந்தர் குலத்தில் வருமாசும் |
|||
மன்னு மதியந் தனிற்றோன்று மன்னர் குலத்தில் வருமாசும் |
|||
துன்னுந் திரைத்தண் கடலுலகிற் றொலைக்குந் தூய்தாங் கடற்றோன்றும் |
|||
பன்னுபுகழ்கொ ளரசர்களே பார்க்கின்மாசு தீர்ந்தாரே. 51 |
|||
எல்லாவிதத்திலும் சிறந்தோர் |
|||
கலையான் மிக்கோ ருலகளிக்குங் |
|||
கருத்தான் மிக்கோர் கனகமணி |
|||
மலையான் மிக்கோர் நிலவுகுடை |
|||
வளத்தான் மிக்கோர் ருடைமாறா |
|||
நிலையான் மிக்கோர் இனிதோங்கு |
|||
நெறியான் மிக்கோ ரிகல்வெல்லுஞ் |
|||
சிலையபன் மிக்கோர் வன்னிமன்னர்க் |
|||
கெவர்தான் மிக்கோர் தெளிதரினே. 52 |
|||
குணச் சிறப்பு |
|||
ஆக்கமுன் னிடினுய ரறத்தை யாக்குவர் |
|||
போக்குமுன் னிடிற்பொருந் தாரைப் போக்குவர் |
|||
காக்கமுன் னிடிற்கட னிலத்தைக் காப்பர்நல் |
|||
லூக்கமுன் னிடுகுணத் தோர்பண் ணாடரே. 53 |
|||
இதயவண்மைச் சிறப்பு |
|||
சமய வளமுஞ் சிவனுமைமால் |
|||
தலத்தின் வளமுங் குலவளமும் |
|||
அமையு நிலத்தின் வளமுமுழு |
|||
வாளர்வளநல் லறவளமுந் |
|||
தமையொப் பிலர்கற் புறுவளமுஞ் |
|||
சகலவளமுந் தமிழ்வேந்தர் |
|||
இமையப் பொருப்பர் பண்ணாட |
|||
ரிதயவளத்தின் நிறத்தானே. 54 |
|||
இராஜசமூகச் சிறப்பு |
|||
வானோர் வியக்குஞ் சமூகமுது |
|||
மறையோர் வாழ்த்துஞ் சமூகமலர்த் |
|||
தேனார்ந் திருக்குஞ் சமூகமன்னர் |
|||
திறைகளளக்கும் சமூகம்விழி |
|||
மானார் நடிக்குஞ் சமூகமதி |
|||
வல்லோர் துதிக்குஞ் சமூகமொன்னார் |
|||
ஆனா திறைஞ்சுஞ் சமூகம்வன்னி |
|||
யரசர் சமூகமதுதானே. 55 |
|||
பதியிருத்தற் சிறப்பு |
|||
பண்ணாடர் தமதுபெரும் பதியிருப்ப தாலிமையோர்க் |
|||
கொண்ணார்ந்த சிறப்பிருக்கும் இம்பர்மனு முறையிருக்கும் |
|||
கண்ணாமுத் தமிழிருக்குங் கற்றோர்க்குப் புகழிருக்கும் |
|||
விண்ணார்ந்த மழையிருக்கு மிடியிருக்க மாட்டாதே. 56 |
|||
மன்னர்சூழ்தற் சிறப்பு |
|||
பொன்னணைய மரதனம்போற் புகழணையும் பெருநிதிபோன் |
|||
மன்னணையு நெடும்படையோன் மலரணையு மளியினம்போற் |
|||
றன்னிகரா ரெனத்தழலிற் சகலகலை யுடனுதித்த |
|||
மன்னரையே மன்னரெலா மதித்தணைந்து வாழ்வாரே. 57 |
|||
மொழிதவறாமைச் சிறப்பு |
|||
விண்ணொளிர்வெங் கதிரொளியும் |
|||
விதுவொளியும் விளக்கொளியுந் |
|||
தண்ணொளிகாண் மணியொளியுந் |
|||
தகைசான்ற வொளியாமோ |
|||
கண்ணொளியா யுறைவனியர் |
|||
காத்தருள்பொய் யாவொளியே |
|||
மண்ணொளியா வொளியெனமா |
|||
மறையொளியா வழுத்தலினே. 58 |
|||
சாந்தம் முதலிய பண்புகளாற் சிறப்பு |
|||
சாந்தமிரட் சகத்தாலுந் தகைபெறுவை பவத்தாலும் |
|||
ஆர்ந்தபுய பலத்தாலும் அழகமைந்த திறத்தாலும் |
|||
ஏந்துபுக ழரன்மாலிந் திரன்குகன்வே ளெனவன்னி |
|||
வேந்துசிறந் திருப்பதையிம் மேதினியே விளம்பிடுமால். 59 |
|||
கொடைவளத்தின் சிறப்பு |
|||
வையந் தழைப்ப மறைதழைப்ப |
|||
மறையோர் புரிய மகந்தழைப்பச் |
|||
செய்யுமுனிவர் தவந்தழைப்பச் செங்கோ |
|||
றழைப்பச் சீர்தழைப்பப், |
|||
பெய்யு முகில்போற் றுங்கவன்யர் |
|||
கைம்மா றுகவா மற்பெறுவோர், |
|||
கையுந் தழைப்ப மெய்தழைப்பக் |
|||
கனகம் பொழி வார்காணீரே. 60 |
|||
வள்ளல்தன்மைச் சிறப்பு |
|||
புள்ளிபல வாயினும்புன் பூசைபுலி யாகாவே |
|||
வெள்ளிபல வாயினும்வான் வெண்மதியொன் றாகாவே |
|||
துள்ளல்பல வாயினுமோர் தூய்கருட னாகாவே |
|||
வள்ளல்பல ராயினுநல் வன்னியர்க்கொப் பாகாரே. 61 |
|||
அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல் சிறப்பு |
|||
மேருவினைச் சார்ந்தவரை மிடியணுகு மோதேவ |
|||
தாருவினைச் சார்ந்தவரைத் தழற்பசிவந் தணுகிடுமோ |
|||
நேருரைசெ யாவனிய நிருபர்நெடுங் கழலிணையைச் |
|||
சாருமவர் தமையிறையுந் தாழ்வென்ப தணுகுறுமோ. 62 |
|||
உமை முதலியோரின் அருள்பெற்றோரெனற் சிறப்பு |
|||
கலைமகடன் மைந்தரெனக் கலைஞானம் |
|||
பெறுகையினால் கடல் சூழ்பூமித் |
|||
தலைமகடன் மைந்தரெனச் சகமுழுது |
|||
மரசாளுந் தன்மை யானீ |
|||
டலைமகடன் மைந்தரென வாக்கத்தாற் |
|||
றழலிலவ தரித்த றன்னால் |
|||
மலைமகடன் மைந்தரென வரமளிக்கப் |
|||
பெறும்வனியர் மகிமை யென்னே. 63 |
|||
அஷ்ட ஐசுவரியச் சிறப்பு |
|||
சாகரத் துலகினிட்டைச் சம்புமா முனியியற்றும் |
|||
யாகவுற் பவராம் வன்யரியாவையும் புரக்குமாறு |
|||
வாகன மக்கள்சுற்ற மடிமைபொன் மணிநெல் லேகம் |
|||
ஆகர சாட்சி யோடெட் டயிச்சுவரியம்பெற் றாரே. 64 |
|||
தசாங்கச் சிறப்பு |
|||
வளங்குலவு பண்ணாடு மதக்களிறான் புலித்துவசம் |
|||
விளங்குமக மேருமனோ வேகரத மும்முரசு |
|||
களங்கறுகங் காநதிவெங் கனற்பரிவா டாமாலை |
|||
துளங்கலிற்பொற் சிலைபெற்றோர் துதிபெற்ற வன்னியரே. 65 |
|||
அரசின் சிறப்பு |
|||
நாடுபல வினுக்கரசு பண்ணாடு நகர்க்கரசு |
|||
நலஞ்சேர் கச்சி |
|||
நீடுவரை களுக்கரசு மாமேரு நதிக்கரசு |
|||
நிறைநீர்க் கங்கை |
|||
பூடுபெறு சிலைக்கரசன் வுருத்திரன்வெஞ் |
|||
சிலையகிலம் பெரிதுகாக்கச் |
|||
சூடுமணி முடியரசுக் கரசுவன்னி யரசன்றிச் |
|||
சொலவே றுண்டோ . 66 |
|||
வில்லின் புகழ்கூறுதற் சிறப்பு |
|||
மேவரு மேரு வொத்த வீரபண் ணாடர்வில்லைத் |
|||
தேவரே கூறல்வேண்டுந் திசைமுக னாதியாய |
|||
மூவருங் கூறல்வேண்டு முனியகத் தியனனந்தன் |
|||
வாய்வளங் கூறல்வேண்டு மற்றெவர் கூறுவாரே. 67 |
|||
பரிசுதரற் சிறப்பு |
|||
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந் |
|||
தருள்வன் னியரை யாம்புகழ்ச் |
|||
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச் |
|||
சிந்தையுவந்து சீர்தூக்கிப் |
|||
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப் |
|||
பொற்றண் டிகபூடணத்தோடு |
|||
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான் |
|||
கருணாகரத்தொண்டை வன்னியனே. 68 |
|||
இதுமுதல் மூன்று கவிகள் - வாழ்த்துச் சிறப்பு |
|||
தனுமறை யெனுமி வளர்கவே |
|||
தரணியி லறநனி விளைகவே |
|||
மனுநெறி வகையுயிர் பெறுகவே |
|||
மணிமுதலியவள நிறைகவே |
|||
கனமுறை மையின்மழை பொழிகவேகளையிற |
|||
வுயர்பயிர் தழைகவே |
|||
இனமொடு சுரபிகள் பெருகவே |
|||
யிணையறுபுலிவிரு துயர்கவே 69 |
|||
அவிசொரி வேள்வியைப் பாடினமே |
|||
யயோநிசம் பவர் தமைவாழ்த்தினமே |
|||
அவனிக் கிறைவரைப் பாடினமே |
|||
யறமெண் ணான்குற வாழ்த்தினமே |
|||
தவளக் கவிகையைப் பாடினமே |
|||
தழல் வெம்புரவியை வாழ்த்தினமே |
|||
தவமிகு வணியரைப் பாடினமே |
|||
தனி நெடுஞ்சிலையினை வாழ்த்தினமே. 70 |
|||
பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி |
|||
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி |
|||
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி |
|||
கோவாழி யிவர்தணிச்செங் கோல்வாழி வாழியவே. 71 |
|||
சிலையெழுபது முற்றிற்று |
23:57, 27 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
சிலையெழுபது என்பது கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.