ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27: வரிசை 27:


[[படிமம்:Jj-thomson2.jpg|thumb|ஜெ.ஜெ. தாம்சன்]]
[[படிமம்:Jj-thomson2.jpg|thumb|ஜெ.ஜெ. தாம்சன்]]
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான னின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]] குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]] குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
==இளமை==
==இளமை==
1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />
1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />

11:57, 18 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஜெ. ஜெ. தாம்சன்
பிறப்பு18 December 1856
Manchester, Lancashire, UK
இறப்பு30 ஆகத்து 1940(1940-08-30) (அகவை 83)
Cambridge, UK
தேசியம்British
துறைPhysics
பணியிடங்கள்University of Cambridge
கல்வி கற்ற இடங்கள்University of Manchester
University of Cambridge
Academic advisorsJohn Strutt (Rayleigh)
Edward John Routh
குறிப்பிடத்தக்க மாணவர்கள்Charles Glover Barkla
Charles T. R. Wilson
Ernest Rutherford
Francis William Aston
John Townsend
J. Robert Oppenheimer
Owen Richardson
William Henry Bragg
H. Stanley Allen
John Zeleny
Daniel Frost Comstock
Max Born
T. H. Laby
Paul Langevin
Balthasar van der Pol
Geoffrey Ingram Taylor
அறியப்படுவதுPlum pudding model
Discovery of electron
Discovery of isotopes
Mass spectrometer invention
First m/e measurement
Proposed first waveguide
Thomson scattering
Thomson problem
Coining term 'delta ray'
Coining term 'epsilon radiation'
Thomson (unit)
விருதுகள்Nobel Prize for Physics (1906)
கையொப்பம்
குறிப்புகள்
Thomson is the father of Nobel laureate George Paget Thomson.
ஜெ.ஜெ. தாம்சன்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.

இளமை

1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை, ஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimenral Physics) கேவண்டிஷ் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார். ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் 'ஜார்ச் பேஜட் தாம்சன்' மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் நோபல் பரிசையும் வென்றார்.

ஆய்வுப்பணிகள்

தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து " நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு" (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886-ல்'இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம்'(Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.

தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார். இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார். மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் துகள்கள்(Corpuscles) என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார்.

பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார்.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Joseph John Thomson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ஜெ._தாம்சன்&oldid=1027246" இலிருந்து மீள்விக்கப்பட்டது