மருமக்கதாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கேரளப் பண்பாடு சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:உறவுமுறை]]
[[பகுப்பு:உறவுமுறை]]
[[பகுப்பு: சொத்துரிமைகள்]]
[[பகுப்பு: சொத்துரிமைகள்]]
[[பகுப்பு:கேரளப் பண்பாடு]]

17:31, 7 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20 ம் நூற்றான்டுகளில் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆடவனின் சகோதரியின் குழந்தைகளே அவனது வாரிசுகளாகக் கருதப்பட்டனர். ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.[1] நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறை (Sambhandam System), பல கணவர் முறை (Polyandry) ஆகியவையே இதற்கு காரணம். மருமக்க தாய முறையைப் பின்பற்றும் குடும்பம் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டது. ஒரு தாயினுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களைக் குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.[2] அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ, விற்கவோ முடியாது.[3] மருமக்க தாய முறையை கடைபிடித்தன் மூலம் குடும்பச் சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம், விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் அதிக செல்வாக்குடனும், உரிமைகளுடனும், பாதுகாப்புடனும் வாழ இம்முறை உதவியது.[4].நாஞ்சில் நாட்டில் தோவாளை, அகத்தீசுவரம் ஆகிய தாலுகாக்களில் வாழ்ந்து வந்த வெள்ளாளர் சமுதாய மக்களும் நாயர்களைப் போன்றே மருமக்கதாய முறையை கடைபிடித்து வந்தனர். இவர்கள் மருமக்கள் வழி வெள்ளாளர்கள் எனப்பட்டனர்.[5]

இவற்றையும் பார்க்க

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

மேற்கோள்கள்

  1. A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165
  2. A. Sreedaramenon, Social and Cultural History of Kerala, Page. 88
  3. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347
  4. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347
  5. T.K. Velu Pillai, The Travancore State manual, Vol I, Trivandrum, 1940, Page 866
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருமக்கதாயம்&oldid=1016042" இலிருந்து மீள்விக்கப்பட்டது