வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி பகுப்பு:1826 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat |
சி பகுப்பு:இசைக் கலைஞர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள் சேர்க்கப்பட்டத... |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]] |
[[பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள்]] |
||
[[பகுப்பு:1826 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1826 பிறப்புகள்]] |
06:16, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
வேதநாயகம் பிள்ளை | |
---|---|
வேதநாயகம் பிள்ளை | |
பிறப்பு | 11 அக்டோபர் 1826 குளத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 21 சூலை 1889 | (அகவை 62)
தொழில் | கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - ஜூலை 21 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை யாத்தார்.[1]
வாழ்க்கை
ஆரம்பக் கல்வியை தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கல்வியை தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள்,விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.[1]
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல தரங்கம்பாடி யில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார்.மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார்.வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.[1]
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை,இராமலிங்க வள்ளலார்,திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி அண்மித்திருந்தார்.
ஆக்கங்கள்
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
- 1862ல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
- 1869ல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
- 1873ல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
- 1878ல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1878ல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
- 1887ல் சுகுண சுந்தரி புதினம்
- 1889ல் சத்திய வேத கீர்த்தனை
- பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
உசாத்துணை
கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.