கோ சொக் டொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ சொக் டொங்

கோ சொக் டொங்  (Goh Chok Tong 20 மே 1941)  என்பவர் சிங்கப்பூரின் அரசியலாளர் ஆவார். இவர் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர். லீ குவான் யூ விற்குப் பின்  சிங்கப்பூரின் இரண்டாவது  பிரதமராக 1990 ஆம் ஆண்டில் நவம்பர் 28 இல் பதவியேற்றார். 2004 ஆகத்து வரை அப்பதவியில் இருந்தார்.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை மூத்த அமைச்சர் என்ற பதவியில்  இருந்தார். சிங்கப்பூர் நிதியத் துறை தலைவராகவும் ஆனார். எமெரிடசு மூத்த அமைச்சர் என்ற மதிப்புமிகு பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இளமைக் காலம்[தொகு]

கோ சொக் டொங்கின் தந்தை சீனாவைச் சேர்ந்தவராக இருப்பினும் கோ சொக் டொங் சிங்கப்பூரில் பிறந்தார். 1955 முதல் 1960 வரை ராஃபிள்ஸ் நிறுவனத்தில் படித்தார். இளம் அகவையில் நீச்சலில் வல்லவராக இருந்தார்.[1][2]

அரசியல் பணிகள்[தொகு]

1976 இல் சிங்கப்பூர்  பொதுத் தேர்தலில் தமது 35 ஆவது அகவையில் வெற்றி பெற்று நாடாளுமன்ற  உறுப்பினர் ஆனார். அப்போது நிதித் துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில், வர்த்தகத்  துறை;அதன் பின்னர் நலத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஆனார்.[3] 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஆனார்.

மேற்கோள்[தொகு]

  1. "闽籍华侨华人社团". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-15.
  2. 吴作栋 新加坡前总理吴作栋盛赞千岛湖开元]
  3. Goh Chok Tong, Cabinet of Singapore
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_சொக்_டொங்&oldid=3551929" இலிருந்து மீள்விக்கப்பட்டது