கேப்ரியெலா மிஸ்திரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்ரியெலா மிஸ்திரெல்
பிறப்புலூசில்லா டெ மாரியா டெல் பெர்பெச்சுவொ சோகோர்ரொ கோடொய் அல்கயாகா
(1889-04-07)ஏப்ரல் 7, 1889
விகுனா, சிலி
இறப்புசனவரி 10, 1957(1957-01-10) (அகவை 67)
எம்ப்சுடெட், நியூயார்க்
தொழில்கல்வியாளர், பேராளர், கவிஞர்
தேசியம்சிலிக்காரர்
காலம்1914–1957
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1945
கையொப்பம்

கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral, எசுப்பானியம்: [ɡaˈβɾjela misˈt̪ɾal]; 7 ஏப்ரல் 1889 – 10 சனவரி 1957) என்பது சிலி நாட்டு கவிஞரும் கல்வியாளரும் பெண்ணியலாளருமான லூசிலா கோடொய் அல்கயாகாவின் (Lucila Godoy Alcayaga) புனைபெயராகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இலத்தீன் அமெரிக்கரும் முதல் இலத்தீன் அமெரிக்க பெண்மணியும் ஆவார்; 1945ஆம் ஆண்டில் "தமது கவிதை வரிகள் மூலமாக இலத்தீன அமெரிக்க உலகத்தின் எதிர்பார்ப்புகளின் சின்னமாக விளங்கும் " இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இவரது பாடல்களின் மையக்கருத்தாக இயற்கை, ஏமாற்றம், காதல், அன்னையின் அன்பு, சோகமும் மீட்பும், பயணம், தாயக முதுகுடிகள் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளாலான , இலத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவற்றை கொண்டிருந்தது. இவரது உருவப்படம் சிலி நாட்டின் 5,000 பெசொ வங்கித்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியெலா_மிஸ்திரெல்&oldid=3811501" இலிருந்து மீள்விக்கப்பட்டது