கூழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூழை என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு[தொகு]

செய்யுளின் அடியில் ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 3 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கூழைத்தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்ப வகைகள்[தொகு]

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. கூழை மோனைத் தொடை
  2. கூழை இயைபுத்தொடை
  3. கூழை எதுகைத்தொடை
  4. கூழை முரண் தொடை
  5. கூழை அளபெடைத்தொடை

எடுத்துக்காட்டுகள்[தொகு]

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை" (411-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், கேள்வி)

மேற்கண்ட குறளில் முதலடியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சீர்கள் "செ" என்று தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் கூழை மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழை&oldid=1397686" இலிருந்து மீள்விக்கப்பட்டது