1990 பேங்காக் வாயு வெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1990 பேங்காக் வாயு வெடிப்பு (1990 Bangkok gas explosion) என்பது தாய்லாந்து நாட்டிலுள்ள பேங்காக் நகரின் புது பெட்சாபுரி சாலையில் ஏற்பட்ட வாயு வெடிப்பு பேரழிவைக் குறிக்கிறது. 1990 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24 அன்று புதிய பெட்சாபுரி சாலையில் ஒரு திரவ பெட்ரோலிய எரிவாயு வாகனக் கொள்கலன் எக்சுபிரசுவே வாயிலில் வெளியேறும்போது விபத்துக்குள்ளானது, இதனால் பெரிய வெடிப்பும் தீ விபத்தும் ஏற்பட்டு 38 கடைகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்தன. 90 நபர்கள் இறந்தனர். 121 நபர்கள் காயமடைந்தனர். 43 கார்கள் அழிக்கப்பட்டன, இவ்விபத்து தாய்லாந்து நாட்டில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "รถก๊าซระเบิด : ถนนเพชรบุรี". Relief and Community Health Bureau, Thai Red Cross Society. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)