1971 கோலாலம்பூர் வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1971 கோலாலம்பூர் வெள்ளம் (1971 Kuala Lumpur floods) மலேசியாவில் 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு பேரழிவு நிகழ்வாகும். கடுமையான பருவ மழையின் விளைவாக இவ்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1] இதனால் கிளாங்கு, பாட்டு, மற்றும் கோம்பாக் நதிகளில் அபாய அளவைத்தாண்டி வெள்ளம் பெருகியது.[2] 32 பேர் இப்பேரழிவினால் கொல்லப்பட்டனர். 180,000 பேர் பாதிக்கப்பட்டனர்.[3][4] மலேசியப் பிரதமர் துன் அப்துல் இரசாக் மேற்கு மலேசியாவில் தேசிய பேரிடர் நிலையை அறிவித்தார்.[4]

1926 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் என 1971 கோலாலம்பூர் வெள்ளம் கருதப்பட்டது.[5] இவ்வெள்ளத்தின் விளைவாக கோலாலம்பூர் வெள்ளத் தணிப்புத் திட்டம் அமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

  • Chronicles of Malaysia (1957-2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1971_கோலாலம்பூர்_வெள்ளம்&oldid=3620927" இலிருந்து மீள்விக்கப்பட்டது