1. புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ
மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் | |
---|---|
எழுதியவர் | அத்சுஷி மெகாவா |
இயக்குனர் | கத்சுயா வதானபே |
ஒளிபரப்பு | |
சேனல் | நிஹான் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | பிப்ரவரி 13, 2005 |
Chronology | |
முன்னர் | பகுதி-50 என்றென்றும் டெகாரெஞ்சர் |
பின்னர் | பகுதி-2 2. தைரியமாக இருங்கள் ~மாஜி மஜி மஜிக்கா |
புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ என்பது மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் தொடரின் முதல் பாகம் ஆகும்,
கதைக்கரு[தொகு]
ஓசு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாய சகோதரர்களும் தங்கள் தாய் மியுகி மூலம் தங்கள் மாய பாரம்பரியத்தை அறிந்த பிறகு பாதாள பேரரசான இன்பெரிஷியாவிற்கு எதிராக போராடத் தொடங்குகின்றனர்.
கதைச்சுருக்கம்[தொகு]
இருள் மாய சாம்ராஜ்ஜியமான இன்ஃபெரிஷியா தற்போது மீண்டும் எழுச்சி பெற்று விட்டது. அவர்களின் தலைவனாக பிராங்கென் இருந்தான். இருள் மாய வளையம் மூலம் ட்ரோல் என்ற உருளை அரக்கன் பூமிக்கு வந்தான். மியுகி பனி மாய வீராங்கனையாக மாறி அவனை அழித்தாள்.
பிறகு தன் பிள்ளைகளிடம் மாயப் போர் நிகழ்வு பற்றிக் கூறினார். கெய் சிறுவனாக இருந்ததால் அவனைத் தவிர மற்ற நால்வருக்கும் மாய தொலைபேசிகளைக் கொடுத்தார். அதன்மூலம் அவர்கள் மாய வீரர்களாக மாறி சோபில்களுடன் சண்டையிட்டனர். அதைப் புதரில் மறைந்திருந்து கெய் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது இருள் மாய மாவீரன் உல்சார்ட் அங்கு வந்தான். அவன் மாய வீரர்களை வீழ்த்தினான். பிறகு அவர்களைக் கொல்ல தன் வாளை உயர்த்தினான். அப்போது கெய் உடனே சென்று உல்சார்ட்டின் வாளை தைரியமாகத் தடுத்தான். பிறகு அவன் மேல் ஒளி வீசியது. அவன் சிவப்பு மாய வீரனாக மாறி சோபில்களை வீழ்த்தினான். பிறகு உல்சாரட் தன் இருள் குதிரை வரிகியோனுடன் இணைந்து உல்கென்டரஸ் ஆனான்.[1]