ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சேலம்
குறிக்கோளுரை | Education is the manifestation of perfection already in man - சுவாமி விவேகானந்தர் |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 1961 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.srisaradacollege.ac.in/ |
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை நிர்வாகத்தின் கீழ் 1961ல், மகளிர் கல்வி மேம்பாட்டிற்காக, சேலத்தில் நிறுவப்பட்டது.[1] 1998ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்படுகிறது.
அமைவிடம்[தொகு]
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சேலம் மாநகரில் நகர்ப் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பெண்களுக்கான கல்லூரிகளில் ஒன்றாகும்.
வரலாறு,[தொகு]
மகளிர் மேம்பாட்டிற்காக 1961ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி, 1998 இல் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது.
துறைகள்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- தாவரவியல்
- வேதியியல்
- வர்த்தகம்
- கணினி அறிவியல்
- பொருளியல்
- புள்ளியியல்
- மனையியல்
- வரலாறு
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
மேலும் பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "History and Development". Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.