ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2001
கல்வி பணியாளர்
12
மாணவர்கள்1593
அமைவிடம், ,
வளாகம்பொன்னேரி
சேர்ப்புசென்னை பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

ஸ்ரீதேவி கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீதேவி கல்வி அறக்கட்டளையினால் 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சுயநிதி கலைக் கல்லூரியாகும்.[1] இந்த கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்துடன்[2] இணைந்த ஒரு இணை கல்வி நிறுவனம் ஆகும்.

அறிமுகம்[தொகு]

ஸ்ரீ தேவி கலை அறிவியல் கல்லூரியில் நிர்வாக அறங்காவலர் திரு பி.ரமேஷ் ஆவார். திருமதி ஏ. ஸ்ரீதேவி, மற்றும் திருமதி ஜே. சுஜாதா கல்லூரி நிர்வாகிகள் ஆவர்.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி - தட்சூர் கூட்டு சாலையில் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது. இது பொன்னேரி நகரத்திலிருந்து 2 கி. மீ. தூரத்தில் உள்ளது. இந்த கல்லூரி சென்னை நகரம் மற்றும் அருகிலுள்ள பிற இடங்களுடன் தொடருந்து மற்றும் சாலை போக்குவரத்து சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், ஆங்கிலம் என 13 பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]