ஸ்டான்லி நீர்த்தேக்கம்
ஸ்டான்லி நீர்த்தேக்கம் | |
---|---|
![]() | |
அமைவிடம் | தென் இந்தியா |
ஆள்கூறுகள் | 11°54′N 77°50′E / 11.900°N 77.833°Eஆள்கூறுகள்: 11°54′N 77°50′E / 11.900°N 77.833°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | காவிரிஆற்றின் கிளை நதிகள்:பாலாறு,சின்னாறு,மற்றும் தோப்பாறு. |
வடிநில நாடுகள் | இந்தியா |
ஸ்டான்லி நீர்த்தேக்கம் (இது மேட்டூர் அணை எனவும் அறியப்படுகிறது) இது தென்னிந்தியாவின் மிக பெரிய மீன்பிடி நீர்த்தேக்கங்களுள் ஒன்று .இதன் முக்கிய ஆதாரமான நதி காவேரி ஆகும். ஸ்டான்லி நீர்த்தேக்கம் முன்பாக மூன்று சிறிய கிளை நதிகளான பாலாறு,சின்னாறு,மற்றும் தோப்பாறு, ஆகியவை இனைந்து நீர் தேக்கத்தை அடைகின்றன. மேட்டூர் அணை, யின் மொத்த கொள்ளளவு 93,470,000,000 கன அடிக்கு மேல் ஆகும். (93.47 Tmcft).[சான்று தேவை]
ஸ்டான்லி நீர்த்தேக்கம் இந்தியாவின் மிக பெரிய நீர் தேக்கங்களில் ஒன்று.இது 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கபட்டது. இந்த நீர்த்தேக்கம் உருவாக்கபட்டதால் நீரில் மூழ்கிய இரண்டு கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மேட்டூருக்கு இடம் பெயர்ந்தனர்.[சான்று தேவை]
அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். மேட்டூர் அனையின் நீர் மின்சார திட்டம் மிகவும் பெரியதாக உள்ளது. அணை, பூங்கா, மலைகள் மற்றும்[] நீர்மின் சக்தி நிலையங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அணைக்கு 1929 முதல் 1934 வரையிலான கால கட்டத்தில் மெட்ராஸ் ஆளுநராக இருந்து பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் சர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி அவர்களின் பெயரிடப்பட்டுள்ளது.