வே. பிரபாகரன் (புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலவர் வே. பிரபாகரன் (பிறப்பு: சூலை 3, 1949) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம், மறக்குளம் எனும் சிற்றூரில் பிறந்தவர். கதை, கவிதை என 25 நூல்களை எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் ஆட்சிமொழிப் பொன்விழாக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “ஒரு பைசாத் தமிழன் அயோத்தி தாச பண்டிதர்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._பிரபாகரன்_(புலவர்)&oldid=3614115" இலிருந்து மீள்விக்கப்பட்டது