வே. இலெ. எத்திராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே. இலெ. எத்திராசு
பிறப்பு18 சூலை 1890 (1890-07-18) (அகவை 133)
வேலூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 ஆகத்து 1960(1960-08-18) (அகவை 70)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுபாரிஸ்டர் & எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
கத்திரின்
பிள்ளைகள்எத்ரிட்ஜ்

வேலூர் இலெட்சுமணசுவாமி முதலியார் எத்திராசு (Vellore Lakshmanaswamy Mudaliar Ethiraj, 18 ஜூலை 1890- 18 ஆகஸ்ட் 1960) இந்திய வழக்கறிஞர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் இந்தியாவின் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார். இவர் மெட்ராஸ் பார் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

எத்திராசு ஜூலை 18 1890ஆம் ஆண்டு வேலூரின் வளமான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவர் லெட்சுமணசாமி மற்றும் அம்மாயி அம்மாளின் ஒரே குழந்தையாவார். எத்திராசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றார்[சான்று தேவை] .

எத்திராசின் வழக்கறிஞர் தொழில் வழக்கு வெற்றிகளில் ஒன்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இவர் தமிழ் நடிகர்கள் எம்.கே. தியாகராஜா பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பாதுகாப்பதற்காக வெற்றிகரமாகப் போராடினார்.[2] இவரது வாதத்தை சே. ப. இராமசுவாமி "20ஆம் நூற்றாண்டின் அற்புதம்" என்று விவரித்தார்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Madras Bar Association. Archived from the original on 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. "கொலை வழக்குகள்". Scribd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  3. . 11 August 1990. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._இலெ._எத்திராசு&oldid=3572504" இலிருந்து மீள்விக்கப்பட்டது