வேளிர் (தமிழகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளிர்
நாடுஇந்தியா
விருதுப்
பெயர்கள்
சத்யபுத்ரா
பிற குடும்பங்கள்ஆய்
அதியமான்
மலையமான்
பாரி
இருக்குவேள் அரசர்கள்
நன்னன்
பேகன்

வேளிர் (Velir) என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள் ஆவர். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும்.[1] எனவே, இவர்களை கொடையாளிகள் என்று சொல்லலாம். சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.[2] அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,

பாண்டிநாட்டு வேளிர்கள்

  1. ஆய் ஆண்டிரன்
  2. பொதியிற் செல்வன் திதியன்
  3. பாரி வேள்
  4. இருங்கோவேள்

சோழநாட்டு வேளிர்கள்

  1. நெடுங்கை வேண்மான்
  2. நெடுவேளாதன்
  3. செல்லிக்கோமான் ஆதன் எழினி
  4. வாட்டாற்று எழினியாதன்
  5. அழுந்தூர்வேள் திதியன்
  6. வேளேவ்வி
  7. வீரைவேண்மான் வெளியன் தித்தன்
  8. நன்னன்சேய் நன்னன்
  9. பொருநன்

சேரநாட்டு வேளிர்கள்

  1. நெடுவேளாவி
  2. வேளாவிக் கோமான் பதுமன்
  3. வையாவிக் கோப்பெரும் பேகன்
  4. நன்னன் வேண்மான்
  5. வெளியன் வேண்மான் ஆய் எயினன்
  6. வெளிமான்
  7. எருமையூரன்

வேளிர் வாழ்ந்த இடங்கள்

  • முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.[3][4]
  • வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.[5]
  • குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.[6]
  • குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர். [7]

வேளிர் போர்கள்

இதனையும் பார்க்க

ஒப்புநோக்குக

மேற்கோள்கள்

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' திருக்குறள்
  2. சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258
  3. மாங்குடி கிழார் - புறநானூறு 24
  4. குப்பை = குவியல்
  5. இங்குள்ள உப்புக்குவியல் பெருமழையில் உருகுவது போலத் தலைவியின் தாள் தலைவன் பிரிந்தபோது உருகிப் போயிற்றாம். மதுரை மருதன் இளநாகனார் - அகநானூறு 206
  6. பரணர் - நற்றிணை 280
  7. மாங்குடி மருதனார் - குறுந்தொகை 164
  8. மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி பாடலடி 55
  9. பாலைக்கௌதமனார் - பதிற்றுப்பத்து 30-30
  10. பரணர் - பதிற்றுப்பத்து 49
  11. அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 75
  12. பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88
  13. கறை படியாத அவன் வாள் போல் பாலைநில வழி இருந்ததாம். மாமூலனார் - அகநானூறு 331
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளிர்_(தமிழகம்)&oldid=3457089" இலிருந்து மீள்விக்கப்பட்டது