வெ. குருமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெ. குருமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பழங்குடியினர் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றவர். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் சமூகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தேசிய மற்றும் பன்னாட்டளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். இவரும் ஷீலா ஈசுவரமூர்த்தி என்பவரும் இணைந்து எழுதிய “நிறுவன அமைப்பில் வளர்ச்சி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._குருமூர்த்தி&oldid=3614054" இலிருந்து மீள்விக்கப்பட்டது