வீரேந்திர சிங்
வீரேந்தர் சிங் (Virender Singh)(பிறப்பு 7 அக்டோபர் 1954) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
தொழில்
[தொகு]சிங், ரோத்தக்கின் அரசுக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று, சகாரன்பூரில் உள்ள ஜே.வி. ஜெயின் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். சிங் சூன் 1978 முதல் ரோத்தக்கில் பயிற்சியைத் தொடங்கினார். சிங் 1995-ல் அரியானாவின் துணை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சூலை 2 2002-ல் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு 19 ஏப்ரல் 2007 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 2012 முதல் 8 சூன் 2012 வரை ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிங் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1 நவம்பர் 2014 அன்று பதவியேற்றார். பின்னர் அக்டோபர் 2016 அன்று ஓய்வு பெற்றார்.[1] சிங் பணி ஓய்வு பெற்ற பிறகு சனவரி 3, 2017 அன்று ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble The Chief Justice Virender Singh". jharkhandhighcourt.nic.in. Retrieved 25 February 2019.
- ↑ "Former Jharkhand HC Chief Justice". Retrieved 25 February 2019.
- ↑ "Justice Virender Singh appointed AFT chairperson". indianexpress.com. Retrieved 25 February 2019.