வீடூர் அணை
வீடூர் அணை என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீடுர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு அணையாகும். 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசரால் 28. திசம்பர். 1959 அன்று திறந்துவைக்கப்பட்டது.
அணை குறிப்புகள்
[தொகு]அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. [1][2] அணைக்கு அருகில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பூங்கா அமைக்கபட்டுள்ளது.
எப்படி செல்வது
[தொகு]விழுப்புரத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் வீடூர் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து வி்க்கிரவாண்டி, சித்தணி பேருந்து வழித்தடத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் செல்லலாம். அதேபோல விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி, கபதிபட்டு, அங்கினிக்குப்பம் வழியாகவும் வீடூருக்குச் செல்லலாம். திண்டிவனத்தில் இருந்து இந்த அணை 20 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து கூட்டேரிப்பபட்டு, மயிலம், பாதிராப்புலியூர் வழியாக செல்லலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1324854.ece
- ↑ http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2015/11/20/4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/article3137629.ece