விலங்கு விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரவிளையாட்டில் விருப்பமுற்ற தமிழர் உள்ளம் விலங்குப் போர்களிலும் விருப்பமுற்றது.

யானைப்போர்[தொகு]

மதயானைகள் ஒன்றோடு ஒன்று போரிடக் கண்டு மகிழ்ந்தனர் தமிழ் மன்னரும் செல்வேந்தர்களுமாவர். குன்றேறி நின்று யானைப்போர் காணும் செய்கையைக் குறிதுள்ளார் திருவள்ளுவர். மதுரை மாநகரில் அரசாண்ட நாயக்க மன்னர் யானைப் போர் விளையாடடைக் காண்பதற்காக அமைத்தது அவ்வசந்த மாளிகை. தமக்கம் என்னும் பெயர் வாய்ந்த அம்மாடம் தற்போது மாவட்ட ஆட்சியர் குடியிருப்பாக விளங்குகின்றது.

ஆட்டுப்போர்[தொகு]

இந்நாளிலும் நாட்டு மக்கள் விருப்பமுடன் கண்டு களிப்பது ஆட்டுப்போர். ஆட்டுக்கடாக்களைப் போட்டிக்காகவே வளர்ப்பர் சிலர். அவற்றைப் பொருதகர் என்பர் திருவள்ளுவர்.

      ஊக்கம் முடையான் ஒடுக்கம் பொருதகம்
      தாக்கற்குப் பேரும் தகைத்து

என்பது அவர் அருளிய திருக்குறள். போரிடும் ஆடுகள் ஒன்றையொன்று உருத்து நோக்கும். எழுந்து தாக்கும். பின் வாங்கும். முன்னேறும். குதித்துப் பாயும். குதித்து முட்டும். விலக்னாலும் விடாது. வெம்போர் விளைக்கும்.

சேவற்போர்[தொகு]

பறவையினத்திலும் போர் உண்டு. கொழுமையான கோழிகள் செய்யும் போரும், கடுமையான காடைகள் புரியும் போரும் கண்டு மகிழ்ந்தனர் பண்டைத்தமிழர். இன்னும் தமிழ்நாட்டில் பல இடங்களில் சேவல் போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சோழ நாட்டில் பழைய தலைநகராகிய உறந்தையில் வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்ற பெயர் அதற்கு அமைந்துள்ளது என்பர்.

வீரவிளையாட்டுகளில் பங்கு பெற்று வீரத்தையும் பெருமையையும் நிலைநாட்டியவர்கள் தமிழகர்கள். தாம் மட்டுமின்றி தம்மிடம் வளரும் விலங்குகள், பறவைகள் போன்றவற்றையும் வீரத்திற்கு பறைசாற்றும் விதமாக வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்குறள் 758
  2. ஆராய்ச்சித் தொகுதி - மு.இராகவையங்கார் - பக்.298
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_விளையாட்டு&oldid=3177877" இலிருந்து மீள்விக்கப்பட்டது