விரோசனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரோசனன்
தகவல்
துணைவர்(கள்)தேவாம்பை
பிள்ளைகள்மகாபலி சக்கரவர்த்தி

விரோசனன் (Virochana) (சமக்கிருதம்: विरोचन), அசுர குல மன்னரான இரணியகசிபின் பேரனும்; பிரகலாதனின் மகனும் ஆவர்.

அதர்ண வேதத்தில் (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.[1] சாந்தோக்கிய உபநிடதத்தின் படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், தேவர்களின் தலைவன் இந்திரனும் ஆத்ம தத்துவத்தை அறிய பிரம்மனிடம் 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.[2] விரோசனனின் மகன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார்.[3]

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

மகாபாரதத்தின், உத்தியோகப் பருவத்தில், கேசினி என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில், பிரகலாதன் நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Griffith, Ralph T.H. (1895). "Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10". The Internet Sacred Text Archive website. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
  2. "Chandogya Upanishad" (PDF). Maharishi University of Management website. pp. 151–2. Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
  3. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 75. https://archive.org/details/indiathroughages00mada. 
  4. பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ
முன்னர்
பிரகலாதன்
தைத்தியன்
அறியப்படவில்லை
பின்னர்
மகாபலி சக்கரவர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரோசனன்&oldid=3824063" இலிருந்து மீள்விக்கப்பட்டது