விரோசனன்
Appearance
விரோசனன் | |
---|---|
தகவல் | |
துணைவர்(கள்) | தேவாம்பை |
பிள்ளைகள் | மகாபலி சக்கரவர்த்தி |
விரோசனன் (Virochana) (சமக்கிருதம்: विरोचन), அசுர குல மன்னரான இரணியகசிபின் பேரனும்; பிரகலாதனின் மகனும் ஆவர்.
அதர்ண வேதத்தில் (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.[1] சாந்தோக்கிய உபநிடதத்தின் படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், தேவர்களின் தலைவன் இந்திரனும் ஆத்ம தத்துவத்தை அறிய பிரம்மனிடம் 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.[2] விரோசனனின் மகன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார்.[3]
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]மகாபாரதத்தின், உத்தியோகப் பருவத்தில், கேசினி என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில், பிரகலாதன் நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Griffith, Ralph T.H. (1895). "Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10". The Internet Sacred Text Archive website. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
- ↑ "Chandogya Upanishad" (PDF). Maharishi University of Management website. pp. 151–2. Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 75.
- ↑ பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ