விநயபிடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விநயபிடகம் திரிபிடகத்தின் மூன்றாவது நூல் ஆகும். இது பௌத்த சங்கத்தின் பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பிரமாணங்கள் இதில் விவரிக்கப்படுகின்றது. இதனைத் தொகுத்தவர் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி ஆவார்.[1] [2]

சூத்திரபிடகம், பாதிமோக்கம் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது விநயபிடகம். விநயபிடகத்துக்கு சமந்த் பாஸாதிகா என்னும் உரையையும், பாதிமோக்கத்திற்கு கங்காவிதரணீ என்னும் உரையையும் ஆச்சாரியர் புத்தகோசர் பாளி மொழியில் எழுதியுள்ளார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vinaya Piṭakaa
  2. Vinaya Pitaka - The Basket of the Discipline

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விநயபிடகம்&oldid=3319051" இலிருந்து மீள்விக்கப்பட்டது