வித்தியா சரண் சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தியா சரண் சுக்லா
இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
21 நவம்பர் 1990 – 20 பிப்ரவரி 1991
பிரதமர் சந்திரசேகர்
முன்னவர் ஐ. கே. குஜரால்
பின்வந்தவர் மாதவசிங் சோலான்கி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 ஆகஸ்டு 1929
ராய்ப்பூர், சத்தீஸ்கர், பிரித்தானிய இந்தியா
இறப்பு 11 சூன் 2013(2013-06-11) (அகவை 83)
மேதாந்த் மெடிசிட்டி, குர்காவுன், அரியானா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
ஜனதா தளம்[1]

ஜன் மோர்ச்சா
தேசியவாத காங்கிரசு கட்சி
பாரதிய ஜனதா கட்சி

வித்தியா சரண் சுக்லா அல்லது வி. சி. சுக்லா (Vidya Charan Shukla) (பிறப்பு: 2 ஆகஸ்டு 1929 – இறப்பு: 11 சூன் 2013) 60 ஆண்டு கால இந்திய அரசியல்வாதியும், இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.

அரசியல்[தொகு]

1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில் மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுக்லா தொடர்ந்து ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]

1966-இல் இந்திரா காந்தி அமைத்த முதல் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் 1966 முதல் 1977 முடிய ராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] ராஜிவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றிய[3] சுக்லா, பின்னர் ராஜிவ் காந்திக்கு எதிராக 1980ஆம் ஆண்டின் நடுவில் அருண் நேரு, வி. பி. சிங் மற்றும் ஆரீப் முகமது கான் ஆகிய தலைவர்களுடன் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி ஜன் மோர்ச்சா எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.[3] 1989-1990களில் வி. பி. சிங் அமைச்சரவையிலும், 1990-91களில் சந்திரசேகர் அமைச்சரவையிலும் அமைச்சராக பதவியில் இருந்தார்.[3] 9ஆவது மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் காங்கிரசு கட்சியில் இணைந்து 1991- 1996 இல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] பின்னர் 2003-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரசு கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராக இருந்தவர்.[4] 2003-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் வேட்பாளர் அஜித் ஜோகியிடம் தோற்றார். 2004-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி [3] 2007-இல் மீண்டும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியா_சரண்_சுக்லா&oldid=3743790" இருந்து மீள்விக்கப்பட்டது