விதேகதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதேகதேசம் இமயமலையில் கங்கை உற்பத்தியாகும் இடத்தில் தெற்கிலும், ஆரட்டதேசத்தைக் காட்டிலும் ஆழமான பூமியாகவும், கோசலதேசத்திற்கு நேர்கிழக்கிலும், அங்கதேசத்திற்கு வடக்கிலும், பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்திற்கு மேற்கில் கண்டகீ நதிக்கு கிழக்கில் மலதம் என்றும், கரூசம் என்றும் இரு சிறு தேசங்கள் உண்டு. விதேகதேசம்|விதேகதேசமும் மலதம் கரூசம் ஆக இருதேசங்களும் சேர்ந்து ஒரு பெரிய அழகிய தேசமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசம் கோசலதேசத்திற்கு சமமாய் செழிப்பான தேசமாகும். இமயமலையை அடுத்து இருந்த போதும் பெரிய மலைகளோ, அடர்ந்த காடுகளோ, இல்லை. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த ஆரட்டதேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கண்டகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 201 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதேகதேசம்&oldid=2076852" இலிருந்து மீள்விக்கப்பட்டது