விஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசேந்திரசுவாமி மடம் கும்பகோணத்தில் உள்ள மடமாகும்.

விசேந்திரசுவாமி மட நுழைவாயில்
விசேந்திரசுவாமி மடம்

அமைவிடம்[தொகு]

விசேந்திர சுவாமி மடம் எனப்படும் இம்மடம் சோலையப்பன் தெருவில் விசேந்திர சுவாமி படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ளது.

சமாதி[தொகு]

மடத்தின் நடுவில் விசேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. சற்றொப்ப இதே வடிவில்தான் மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது.மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன.

பிற மடங்கள்[தொகு]

கும்பகோணத்தில் உள்ள பிற மடங்கள் சங்கர மடம், வீர சைவ மடம் மற்றும் மௌனசுவாமி மடம் ஆகியவையாகும். இட்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

மிருத்திகா பிருந்தாவனம்[தொகு]

பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்று ஞானதீப சுடரொளியாக வீசுகின்றார். [1]அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தின் கும்பாபிசேகம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது. [2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 1985, தெய்வத்திருமலர்
  2. மிருத்திகா பிருந்தாவனத்துக்கு கும்பாபிஷேகம், தினமணி, சூன் 13, 2015