விஜயநகரம் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயநகரம் கோட்டை தென்னிந்தியாவின் வடகிழக்கு ஆந்திராவில் உள்ள விஜயநகரம் ( தெலுங்கு மொழி பொருள்: "வெற்றியின் நகரம்") நகரில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இதை 1713 இல் விஜயநகரத்தின் மகாராசாவான விஜய ராம ராஜு கட்டினார். சதுர வடிவ கோட்டையில் இரண்டு முக்கிய வாயில்கள் உள்ளன. அவற்றில் பிரதான நுழைவு வாயில் ("நகர் கானா") விரிவான கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. கோட்டைக்குள் பல கோவில்கள் மற்றும் அரண்மனைகள் மற்றும் ஒரு வெற்றி கோபுரம் உள்ளன.

இருப்பிடம்[தொகு]

இந்தக் கோட்டை வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர்கள் (11 mi) விலகியும், விசாகப்பட்டினத்தின் 40 கிலோமீட்டர்கள் (25 mi) வடமேற்கிலும் உள்ள விஜயநகரத்தில் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

விஜயநகரம் கோட்டை 1713 ஆம் ஆண்டில் [2] விஜயநகரத்தின் மகாராஜா விஜய ராம ராஜூவினால்(1671–1717) ஐந்து விஜயங்கள் (தெலுங்கு மொழி பொருள்: "வெற்றியின் அறிகுறிகள்") இருக்க வேண்டிய இடத்தில் கட்டப்பட்டது.[1] [2] [3] கோட்டைக்கான இடம் மகாராஜாவுக்கு ஒரு முஸ்லிம் துறவி மகாபூப் வள்ளி பரிந்துரைத்தார். அவர் அந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். [4] இந்து நாட்காட்டியில் விஜயா என அழைக்கப்படும் ஆண்டில், செவ்வாய்க்கிழமை விஜயதசமியின் போது கோட்டையின் அடித்தளமிட்ட விழா நடைபெற்றது.

அம்சங்கள்[தொகு]

கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 240 மீட்டர்கள் (790 அடி) பக்க சதுர வடிவத்திலும், 10 மீட்டர்கள் (33 அடி) உயரத்திலும் உள்ளது. மேலே உள்ள சுவரின் அகலம் 8 முதல் 16 மீட்டர் வரை மாறுபடும். கோட்டையின் நான்கு மூலைகளிலும் கற்களால் ஆன கொத்தளங்களின் வடிவத்தில் கோட்டைகள் உள்ளன. கோட்டைக்குள் நுழைவதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கிழக்கிலிருந்து கோட்டை நுழைவு "நகர் கானா" என்று அழைக்கப்படும் பிரதான வாயில் ஆகும். இது நேர்த்தியான கட்டடக்கலை வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. மேற்கு நோக்கிய வாயில் சிறியது ஆனால் பிரதான வாயிலை ஒத்த கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. கோட்டையைச் சுற்றி ஒரு அகழி உள்ளது. [3]

இரண்டு பிரதான வாயில்கள் தவிர, கோட்டைக்குள் பல கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. அனுமன் கோயில், மற்றும் கோட்டையின் பாதுகாவல் தெய்வமான "கோட்டா சக்டோ" என்று அழைக்கப்படும் லட்சுமி (இந்துக் கடவுள்) கோயில் ஆகியவை இங்குள்ள இரண்டு முக்கியமான கோயில்கள் ஆகும். எந்தவொரு யுத்த பிரச்சாரத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னர் அரசர் லட்சுமி கோவிலில் பிரார்த்தனை செய்தார். கோட்டைக்குள் முக்கியமான நினைவுச்சின்னங்களாக மோதி மஹால், அவத் கானா, அலகானந்த அரண்மனை, கோருகொண்டா அரண்மனை போன்றவையும், கோட்டைக்கு வெளியே கடிகார கோபுரம் என்று அழைக்கப்படும் வெற்றி கோபுரம் ஆகியவையும் உள்ளன. [3] கோட்டைக்கு வெளியே உள்ள இரண்டு முக்கியமான வரலாற்று நினைவுச்சின்னங்களான மொட்டுக்கோவில்லு கோயில் மற்றும் பெர்லா இல்லம் ஆகியவையும் நகர எல்லைக்குள் உள்ளன.

வாயில்கள்[தொகு]

கோட்டையின் இரண்டு முக்கிய வாயில்கள் நேர்த்தியான ராஜஸ்தானி பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு பிரதான வாயில் "நகர் கானா" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் மேல் ஒரு முரசு கோபுரம் உள்ளது. இது அரச உத்தரவுகளையும் அரச விருந்தினர்களின் வருகையையும் மக்களுக்கு தெரிவிக்கிறது. [3]

மேற்கு வாயில் விஜயநகர கோட்டையின் பின்புற நுழைவாயில் ஆகும். இந்த நுழைவாயில் ராஜஸ்தானி பாணியில் மேலே ஒரு கூடாரம் கட்டப்பட்டுள்ளது. இந்த வாயில் அரச கல்லறைகளுக்கான நுழைவு மற்றும் தகனத்திற்காக இறந்த உடல்களை வெளியேற்றுவதற்கான ஒரு பாரம்பரிய நுழைவாயில் ஆகும். கடந்த காலத்தில் இருந்த ஒரு அகழிக்கு பதிலாக, இப்போது மேற்கு வாசல் வரை முறையான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. [3]

மோதி மஹால்[தொகு]

மோதி மஹால் என்பது அரச நீதிமன்றம் அல்லது தர்பார் மண்டபம் ஆகும், இது 1869 இல் மூன்றாம் விஜயராம ராஜுவால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு பளிங்கு சிலைகள் உள்ளன. இது கடந்த கால மகிமையைக் குறிக்கும் ஒரு நினைவுச்சின்னமாகும், [3] மகாராஜா அலக் நாராயண் கலை மற்றும் அறிவியல் சங்கத்திற்கு (மான்சாஸ் டிரஸ்ட்) விஜயநகரத்தின் ராஜா சாகிப் [5] நன்கொடையாக வழங்கினார். இப்போது அதன் முதல் மாடியில் பெண்களுக்கான கல்லூரி ஒரு செயல்பட்டு வருகிறது. கோட்டையிலிருந்து ஆட்சி செய்த கடந்தகால மன்னர்களின் கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் இங்கு உள்ளது.

அவுத் கானா[தொகு]

விஜயநகரத்தின் அரசர்களின் செழிப்பான அரச அரண்மனைதான் அவுத் கானா. இந்த அரண்மனையின் ஒரு தனித்துவமான பகுதி அரசர்களின் பிரத்யேகக் குளியலறையாகும். இது பூல் பாக் அரண்மனையை ஒட்டிய எண்கோண கல் அமைப்பாகும். இந்த அமைப்பு 50 அடி (15 மீ) உயரத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் சுழல் படிக்கட்டும் உள்ளது. இது மேலே உள்ள நீர் தொட்டிக்குச் செல்ல வழிவகுக்கிறது. அருகிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை நீர் தொட்டிக்குள் செலுத்துகிறார்கள். [3]

அலகானந்த அரண்மனை[தொகு]

அலகானந்த அரண்மனை அரச விருந்தினர்களுக்காக நடைபாதைகளுடன் நன்கு அமைக்கப்பட்ட தோட்டத்திற்குள் பட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் உரிமையைப் பயன்படுத்தி இதன் மைதானத்திற்குள், சமீபத்திய ஆண்டுகளில் ஒரு வான்வழிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இப்போது இந்த அரண்மனையில் ஆந்திர பிரதேச ஆயுத காவல்துறையின் 5 வது படைப்பிரிவு உள்ளது. [3]

கோருகொண்டா அரண்மனை[தொகு]

அலகானந்த அரண்மனைக்கு அருகில் கோருகொண்டா அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள நிலம் (சுமார் 1,000 ஏக்கர்) விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. நன்கு வளர்க்கப்பட்ட தோட்டங்களைக் கொண்டுள்ள இந்த நிலத்தில் பாதுகாப்புப் படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு பள்ளி உள்ளது. [3]

காந்தா ஸ்டம்பம்[தொகு]

இலண்டனில் உள்ள பிக் பென் மணிக்கூண்டு வரிசையில் வடிவமைக்கப்பட்ட கடிகார கோபுரம் தான் காந்தா ஸ்தம்பம். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் போது இலண்டனுக்கு அடிக்கடி சென்ற விஜயநகரத்தின் அரசர்கள் இதைக் கட்டினர். இது நகரின் மையப்பகுதியில் கோட்டையின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. 1885 ஆம் ஆண்டில் மணற்கற்களால் கட்டப்பட்ட எண்கோண கோபுரம் 68 அடி (21 மீ) உயரத்தை எட்டுகிறது. இது கடந்த காலத்தில் மேலே வெள்ளை நிறத்தில் வரையப்பட்டிருந்தது, ஆனால் இப்போது வெளிர் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. [3]

பிற கட்டமைப்புகள்[தொகு]

கோட்டையின் எல்லைக்கு வெளியே, பிடிதள்ளி அம்மாவாரு தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டு நகர மக்களால் மிகுந்த பயபக்தியுடன் வழிபாடு நடத்தப்படுகிற ஒரு பழங்கால கோயில் உள்ளது. இந்த தெய்வம் அரச குடும்பத்தின் மகளின் மறுபிறவி என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் வழிபட்ட தேவியின் உருவம் 1752 இல் விஜயதசமி நாளில் காணப்பட்டது. இந்த நாள் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் " யாத்ரா " அல்லது "மத கண்காட்சி" என்று வருடாந்திர கொண்டாட்டத்தால் குறிக்கப்படுகிறது. இந்த கோவிலில் இரண்டு வண்ணங்களில் ஒரு இலிங்கம் உள்ளது, இது சிவன் மற்றும் பார்வதியின் சங்கமத்தை எடுத்துக்காட்டுகிறது. [3]

1895 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட "பெர்லா வாரி" என்றும் அழைக்கப்படும் பெர்லா ஹோம், நகரத்தில் நன்கு பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் மின்சார இணைப்பைப் பெற்ற முதல் கட்டிடம். இதில் வெள்ளியால் செய்யப்பட்ட படுக்கை அறைகளுடன் கூடிய படுக்கையறை இருந்தது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நூலகம் இன்னும் செயல்பட்டு வருகிறது. நேர்த்தியான ஐரோப்பிய தளவாடங்கள் மற்றும் கடந்த கால மகிமையின் சரவிளக்குகள் மற்ற கலைப்பொருட்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Visiting Places: Vizianagaram". Kendriya Vidyalaya Voziangaram, Government of India. Archived from the original on 16 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 (India) 2000.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 "Vizianagaram Fort". National Informatics Centre, Vijayanagaram. Archived from the original on 12 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. General 1961.
  5. "About Maharajah's Alak Narayana Society of Arts and Society (MANSAS) Trust". Maharaja's College of Pharmacy. Archived from the original on 30 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரம்_கோட்டை&oldid=3611128" இலிருந்து மீள்விக்கப்பட்டது