விசாகப்பெருமாள் ஐயர்
தோற்றம்
விசாகப்பெருமாள் ஐயர், திருத்தணியில் வீரசைவ மரபில், கச்சியப்ப முனிவரின் சீடரான கந்தப்பையருக்கு 1799ஆம் ஆண்டில் பிறந்தவர்.. இவருடன் இரட்டையாக பிறந்தவர் சரவணப் பெருமாள் ஐயர் ஆவர்.. இவர் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்று, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். தமிழறிஞராக விசாகப் பெருமாள் ஐயர் வட மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.
படைப்புகள்
[தொகு]இவர் அச்சில் ஏற்றிய நூல்கள் வருமாறு:
- அணி இலக்கண வினாவிடை
- நன்னூல் விளக்க உரை
- பாலபோத இலக்கணம்[1]
- திருக்கோவையார் விளக்க உரை
- திருவள்ளுவமாலை (அச்சுப் பதிப்பு) . (சரவணப் பெருமாள ஐயருடன் இணைந்து)
- சந்திராலோகம் (வடமொழி அணி இலக்கண நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு).