விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 15, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலனை காப்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதிலும், எல்லை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதிலும், பயங்கரவாத எதிர்ப்பு பணிகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், இயற்கை சீற்றங்களின் போது மீட்புப்பணி மற்றும் மனிதாபிமான பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. 1,130,000 படைவீரர்களைப் பணியில் கொண்டும், 1,800,000 பேரை இருப்பில் கொண்டும், இந்திய தரைப்படை உலகில் இரண்டாவது பெரிய தரைப்படையாகும். .


எலிக்குடும்பம் அல்லது முரிடீ (Muridae) என்பது பாலூட்டிகள் வகுப்பில் உள்ள குடும்பங்கள் யாவற்றினும் மிகப்பெரிய குடும்பம். இக் குடும்பத்தில் ஏறக்குறைய 650 இனங்கள் உள்ளன. இவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா ஆகிய இடங்களில் இயற்கையாக வாழ்கின்றன. எலி இனங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு எங்கும் பரவி உள்ளன. இந்தக் குடும்பத்தை சேர்ந்த சில இனங்கள், சுண்டெலி, வயல் எலிகள், கெர்பில் என்னும் எலி வகைகள் ஆகும். அறிவியற் பெயராகிய முரிடீ (Muridae) என்பதன் பொருள் இலத்தீனில் எலி என்பதே.