விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 22, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் கொள்ளை என்பது கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை அல்லது குற்றச்செயல் ஆகும். இந்தச் சொல் நிலத்திலோ காற்றிலோ பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது கடற்கரையிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். கொள்ளை, கடற்கொள்ளை என்பன பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. கடற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ விதிகளின்படி தண்டிக்கப்பட்டனர். மேலும்...


வெலிகமை (வெலிகாமம்) என்பது இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கிமீ தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும். மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானது ஆகும். மேலும்...