விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 19, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சுஸ்ரீ (சீனம்: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; ஜப்.: மோஞ்சு; திபெத்: ஜம்பெல்யாங்;), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, புத்திக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.

ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.


ரெக்காவின் நெருப்பு (ஃப்ளேம் ஆஃப் ரெக்கா) (烈火の炎 ரெக்கா நொ ஹோனோ?) என்பது நொபுயுகி அன்ஸாய் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு மங்கா தொடர். இதனுடைய தொலைக்காட்சி தழுவலாக இதே பெயரில் ஒரு அனிமே தொடரையும் உருவாக்கினர். இந்த மங்கா "ஷோனென் சண்டே" என்ற இதழில் 18 அக்டோபர் முதல் 18 ஏப்ரல் 2002 வரை 33 அத்தியாயங்களாக வெளி வந்தது. இத்தொடரை தழுவி இரண்டு வீடியோ கேம்களை கேம்பாய் அட்வான்ஸ் நிறுவனம் விறபனையில் விட்டுள்ளது.

ரெக்காவின் நெருப்பு என்ற இத்தொடர், ""ரெக்கா ஹானிபீஷீ" என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது சகவயதினரிடன் எப்போதும் சண்டையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண், மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணருகிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் ம்கன் என்பதையும், மாய ஆயுதங்களான மடோகுவை குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை உபயோகிப்பவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும்.