விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 16, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராசிரியர் சி. இலக்குவனார் (1909 - 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நூல்கள் இயற்றியுள்ளார். இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.


ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் (Hong Kong International Airport) உலகின் பரப்பான விமான நிலையங்களில் பன்னிரண்டாவது விமான நிலையமாகும். இதனை பேச்சு வழக்கில் செக் லப் கொக் விமான நிலையம் என்றும் அழைப்பர். அதற்கான காரணம் இவ்விமான நிலையம் அமையப்பட்டிருக்கும் தீவின் பெயர் செக் லப் கொக் என்பதாகும். இவ்விமான நிலையம் ஹொங்கொங்கின் முன்னால் விமான நிலையமான கை டக் விமான நிலையத்திற்கான மாற்றீடாக கட்டப்பட்டதாகும். இவ்விமான நிலையம் 1998 ஆம் ஆண்டு சேவையை தொடர்ந்தது. இது 1998 ஆம் ஆண்டிலிருந்து ஸ்கைடெக்ஸ் நிறுவனத்தினரால் வழங்கப்படும் உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை (Skytrax World Airport Awards) ஏழு தடவைகள் தட்டிக்கொண்டன.