விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 20, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காச நோய் அல்லது டியூபர்க்குலோசிசு என்பது மைக்கோபாக்டீரியா என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை. சில மருந்துகள் மூலம் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக இல்லாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை


தாலந்துகள் உவமை இயேசு கடவுள் ஒவொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளைச் சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட மக்களுக்கு கூறினார். "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது புனித் விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.