விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 3, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடிய இலக்கியம் எனப்படுவது மிகப் பழமையான காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளதாக அறியப்படும் கம்போடிய இனமக்களின் இலக்கியம் ஆகும். பெரும்பாலான தென்கிழக்காசியாவின் இலக்கியங்கள் போலவே கம்போடியர் இலக்கியத்தின் சொற் தொகுதியும் இரண்டு வேறுபட்ட அம்சங்களை அல்லது நிலைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, பெரும்பாலும் அரசவை அல்லது புத்த மடங்களால் கட்டுப்படுத்தப்பட்ட எழுதப்பட்ட இலக்கியமும் உள்ளூர் நாட்டுப்புறவியலை அடிப்படையாக கொண்ட வாய்மொழி இலக்கியமுமாகும். இரண்டாவது, கம்போடிய சமுதாயத்தினரிடம் மேம்பட்டிருந்த பௌத்தக் கொள்கைகளும், இந்து சமயக் காவியங்களான இராமாயணம், மகாபாரதம் என்பனவற்றின் கருத்துகளும் இவ்விலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தின. மேலும்...


நரகத்திற்கான கதவு என்பது மத்திய ஆசியா நாடான துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் கருப்பு மணல் பாலைவன பகுதியில் மெத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் உருசியா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்காக 230 அடி (70.104 மீ) சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். பணி நிறைவடையும் முன்பே 66 அடி (20.1168 மீ) ஆழ புதைகுழிபோல் உள்வாங்கி வாயுக்கள் கசியதுவங்கியதாகவும் வளிமண்டலத்தில் கொடிய மெத்தேன் வாயுக்கள் கலப்பதை தடுப்பதற்காக உருசியா விஞ்ஞானிகளே தீ மூட்டியதாகவும் எதிர்பாராதவிதமாக சுரங்கம் முழுவதும் தீப்பிடித்ததாக அறியப்படுகிறது. மேலும்..