உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 3, 2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். ரைட்டியா என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த மரமானது இந்தியா, தெற்காசியா, ஆத்திரேலியா முதலிய நாடுகளில் வறண்ட மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இது பழந்தமிழகத்தில் பாலை மரம் என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தன் தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டைகளைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். எனவே இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. இத்தாவரத்தின் பல்வேறு பகுதிகள் மரபார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாகவோ பாதுகாப்பானதாகவோ இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. மேலும்...