விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லை நாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட யோகிசிவம், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பம்மனேந்தலைச் சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013‎இலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். நில அளவை (தமிழ்நாடு), அயிரை மலை, ஆலம் ஆரா, திராவிடதேசம், பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர், எஸ். வி. சகஸ்ரநாமம், கே. முத்தையா போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.