விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.