விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:10koodal/review

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற கூடல் நிகழ்வு மற்றும் பண்பாட்டு சுற்றுலா பற்றிய பயனர்கள் மற்றும் பிறரது கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. தங்களுடைய கருத்தினையும் சேர்க்க விரும்புவோர் கட்டுரையின் இறுதியில் சேர்க்க வேண்டுகிறோம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (29-09-2013) அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். தவிர்க்க முடியாத சில அவசர வேலைகள் காரணமாக சனிக்கிழமை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே போல் இன்றும் தாமதமாகவே கூட்டத்திற்கு செல்ல முடிந்தது. இருந்தாலும் கூட்டம் முடியும் வரை அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இருந்தாலும், என் மனதிற்கு தோன்றிய சிலவற்றை இங்கே எழுதுவது உசிதம் என எண்ணுகிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு குரோம்பேட்டை எம்.ஐ.டியில் நடைபெற்ற ஆங்கில விக்கிப்பீடியாவின் 10 ஆண்டு விழாவிற்கும் சென்றிருந்தேன். அப்போது ஒரு வகுப்பறையில் கூட்டம் நடைபெற்றது. ஒரு ஐம்பது பேர் வந்திருந்தார்கள். நண்பர் தேனி சுப்ரமணியம் அவர்களின் விக்கிப்பீடியா நூல் அப்போது வெளியிடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஒரு டி-சர்ட் கொடுத்தார்கள். (எனக்கும் ஒன்று கொடுத்தார்கள் இன்றும் என்னிடம் உள்ளது)

நிற்க... நேற்று நடைபெற்ற விழாவில்...

பரிணாம வளர்ச்சி என்று பார்த்தால்... - குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் நடைபெற்றது. - சுமார் 100 பேர் வந்திருந்தனர். - மாலை கொடுக்கப்பட்ட கொழுக்கட்டை, கட்லெட் அருமை - பேச்சாளர்கள் மிகச் சுருக்கமாக பேசி, சரியான நேரத்தில் விழாவை முடித்தார்கள்.

குறைகள்...

விழா நடைபெறும் டேக் அரங்கின் பெயரை மறந்து விட்ட எங்களுக்கு விக்கிப்பீடியா விழா நடைபெறும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது. இத்தனைக்கும் நான் அண்ணா பல்கலை வளாகத்தில் தங்கி தான் M.Phil. படித்தேன். யாரைக் கேட்டாலும் அப்படி ஒரு விழா நடைபெறுவதாகவே தெரியவில்லை. வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு சிறு பேனர் வைத்து இடது புறம் சென்று வலது புறம் திரும்பினாலே அரங்கு வருகிறது... ஆனால் அதைச் சொல்வதற்கும் ஆள் இல்லை... வழிகாட்டியாக ஒரு சிறு பேனர் கூட இல்லை. விழா ஏற்பாட்டாளர்களின் முதல் சொதப்பல் இது... அரங்கத்திற்கு வெளியே பெரிய பேனர் வைத்து என்ன பயன்.. மாணவர் கூடும் இடங்களில் சிறு சிறு பேனர்கள் வைத்திருக்கலாமே... உள்ளே விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குக் கூட தெரியாமலேயே ஒரு விழா நடப்பதற்கு அண்ணா பல்கலை எதற்கு?... அதற்கு எதாவது இலவசமாகக் கிடைக்கும் சத்திரத்தில் நடத்தியிருக்கலாமே...

விழாவில் பேசியவர் எந்த பல்கலையும்... கல்வி நிறுவனங்களும் தமிழ் விக்கிப்பிடியாவை கண்டு கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள் யாருக்கு நீங்கள் பத்தாம் ஆண்டை கடந்தது தெரியும்?... ஒரு விழா எடுக்கிறீர்கள் அழைப்பிதழ் அச்சிட்டீர்களா? எந்த கல்வி நிறுவனத்திற்காவது அனுப்பி வைத்தீர்களா? இல்லையே... மின்னஞ்சலிலாவது அனுப்பினீர்களா? கேட்டால் தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் போட்டிருக்கிறோமே என்கிறீர்கள்?... அப்படியென்றால் அந்த தளத்துக்கு வருவோருக்கு மட்டும் தான் தெரியும்? மற்றவர்களுக்கு?

அரசியல்வாதிகள் வேண்டாம்... அரசுத் துறை சார்ந்த எவருக்காவது அழைப்பு அனுப்பினீர்களா? தமிழ்த் துறைக்கு, உயர் கல்வி துறைக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு நீங்கள் விழா நடத்தியது தெரியுமா?...

அவ்வளவு ஏன் மேடையில் நீங்கள் நடத்தும் விழாவின் பேனரையாவது நடுநாயகமாக வைத்தீர்களா? அதை ஏன் ஓரத்தில் கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் எந்த புகைப்படத்திலும் அது பதிவாகாத வகையில் வைத்தீர்கள். இதைக் கூட யாரும் சுட்டிக் காட்டவில்லையா? அல்லது அவ்வாறு சுட்டிக்காட்டியும் ஏற்கும் மனம் விழா ஏற்பாட்டாளர்களுக்கு இல்லையா?

விழாவிற்கு எல்லோரையும் கூட்டி வாருங்கள் என்றீர்கள். வந்தவர்களுக்கு ஒரு பத்து பக்கம் அளவில் விக்கிப்பீடியா குறித்த கையேடாவது கொடுத்தீர்களா?

அதை விட கேவலம் உங்களுக்கு நீங்களே ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்து அதில் கையெழுத்துக் கூட யாரிடம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த திரு மயூரநாதனின் ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்...

அரங்கம் மட்டும் நன்றாக இருந்து பயனில்லை... அதில் விழா ஏற்பாடு செய்யும் திறன் கொண்டவர்கள் விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்...

கடைசியாக ஒன்று ஆங்கில் விக்கிப்பீடியா விழாவில் நிறைய டிசர்ட் கொண்டு வந்திருந்தார்கள் ஆனால் வந்தவர்கள் குறைவு... இங்கு நடைபெற்ற விழாவில் ஒன்றும் அதிகம் பேர் வந்துவிடவில்லை. வந்த 100 பேருக்கு கூட கொடுக்க உங்களிடம் டிசர்ட் இல்லை... அல்லது கொடுக்க மனம் இல்லை...

மொத்தத்தில் தடை செய்யப்பட்ட குழுக்கள் கூட்டம் நடத்துவது போல் விழா ரகசியமாக நடைபெற்று முடிந்தது... நல்லவேளையாக இன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலில் செய்தி வந்திருந்தது... (மற்றதிலும் வந்திருக்கும்...) விழா முடிந்த பிறகு செய்தி வந்து என்ன பிரயோஜனம்...

வாழ்க விழா ஏற்பாட்டாளர்கள். வளர்க தமிழ் விக்கிப்பீடியா...

பின்குறிப்பு: கவலைப் படாதீர்கள் 15 ஆம் ஆண்டு விழாவிற்கு இதைவிட ரகசியமான ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாமல் நடத்துங்கள் அப்போது கூட 200 பேர் வருவார்கள். அதுவே மிகப்பெரிய சாதனை என்று முழங்கலாம்... (என்னுடைய கட்டுரையை இங்கிருந்து அகற்றினாலும் எனக்கு கவலையில்லை... எனது முகநூல் பக்கத்திலும், எனது வலைதலங்களிலும் இதனை வெளியிட இருக்கிறேன்... அப்படியாவது நாலு பேர் இப்படி ஒரு விழா ரகசியமாகவேனும் நடைபெற்றதே என்று அறியட்டும்)


புருனோ கருத்து

சார், உங்கள் மொழி நடை சரிதானா என்று நீங்கள் மற்றொரு முறை சரி பார்த்துக்கொள்ளவும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:55, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அருண்தாணுமாலயன் அவர்களின் கருத்து

பேரன்படைய பாவலர் அவர்களுக்கு ,
வணக்கம். 10 ஆம் ஆண்டு நிறைவு விழாப் பற்றி இத்தனை கடுமையான விமரிசனம் தேவைஅற்றது. பங்களிப்பாளர் கூடுகை என்றும் அவர்கள் மேலும் சிறப்பாக எவ்வாறு உதவ முடியும் என்பதனை சிந்திக்கவும் ஆன ஒரு கூடுகையே இது. ஆர்வமுள்ளவர்கள் இவ்வளவு பேர் வந்திருந்தது தமிழுக்குக் கிடைத்த வெற்றி என நான் கருதுகிறேன்.
விழா பேனர் அரங்கின் நடுவாகவே அமைக்கப்பட்டு இருந்தது.விளக்கங்களுக்காக Slides பயன் படுத்ததுவதற்காக பேனரை நலர்த்த வேண்டிய நிலையில் ஓரமாக வைக்கப்பட்டது.விழாவின் தொடக்கத்தியே

அரங்கில் இருந்தவர்கள் இதனை அறிவர். .

யாரும் எதையும் எதிர்பார்த்து வரவில்லை.மதிய உணவுகூட வருகைதருபவர் பொறுப்பு என்று முன்பே தகவல்

கொடுக்கப்பட்டுள்ளது.புதிதாவும் ஆர்வமுடைய சிலர் வந்திருந்தனர்.

அமைப்பாளர்களின் நோக்கம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.
இருப்பினும் நீங்கள் சுட்டிக் காட்டியவைகளை மறுமுறை நடத்துபவர்கள் கவனத்தில் கொள்வர் என நம்புகிறேன்
அருண்தாணுமாலயன்.

இரவியின் மறுமொழி

சேகரன், நிகழ்வு அரங்கு குறித்து இன்னும் தெளிவான வழிகாட்டலைத் தந்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன். நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உங்களின் மற்ற கருத்துகள் குறித்து இன்னும் ஓரிரு வாரத்தில் விரிவாக மறுமொழி அளிக்கிறேன். அதுவரை மற்ற பயனர்களும் இவ்விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றாமல் பொறுத்திருக்க வேண்டுகிறேன். மற்றபடி, தங்களின் தனிப்பட்ட கருத்துகள், விமரிசனங்கள், பரிந்துரைகளைத் தனியே இதன் கீழே தாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 20:43, 30 செப்டம்பர் 2013 (UTC)

29 செப்டம்பர் 2013, சென்னை. தமிழ் விக்கிபீடியாவின் பத்து ஆண்டு நிறைவு விழாவை கொண்டா டும் விதமாக பலநாடுகளை சேர்ந்த பங்களிப்பாளர்கள் நேற்று சென்னை அண்ணாபல்கலைகழகத்தில் ஒன்று கூடினர். நேற்றைக்கு முந்தைய நாள் பங்களிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர். மேலும் இதுபற்றி பங்களிப்பாளர் ரவிசங்கர் கூறும்போது. இதில் 935 பங்களிப்பாளர்கள் எட்டியுள்ள தமிழ் விக்கிபீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களை கொண்ட 55,475கட்டுரைகள் பதிவேற்றம் செய்துள்ளோம் என்றும், பலநாடுகளை சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் எழுதிவருவதாக கூறினார். நாளொன்றுக்கு 1,75,00 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப் பீடியா படிக்கப்படுகிறது. தமிழ் விக்கிபீடியாவை செறிவாக்குவதற்கு கட்டுரை ஆக்குநர்கள் தவிர வரைகலையாளர்கள், ஒளிப்படக்காரர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள் பல்வேறு பிண்ணனியில் உள்ளவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. முதன்மையான கோரிக்கையாக தமிழ் விக்கிபீடியா அறிமுகத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்திய விக்கிப்பீடியா கிளை மேலாளார் திருமூர்த்தி, கனடா வாட்டர்லு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் செல்வக்குமார், மொழி பெயர்ப்பு குறித்து ஆழிப்பதிப்பகத்தின் சே.ச.செந்தில்நாதன், ஒளிப்படக்கலைக் குறித்து ஹரிபிரசாத், கட்டற்ற மென்பொருள் இயக்கம் குறித்து அருண்குமார் ஆகியோர் பேசினர். தமிழ் விக்கிபீடியாவின் நிறைவுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு ரூ30000 வழங்கப்பட்டது.

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்களைக் கொண்டாடி முடித்திருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி குறித்த என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்.

பாராட்டுகள்

நிகழ்ச்சியினை வடிவமைத்து செயல்படுத்திய இரவியின் செயல்பாட்டுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். அவருக்கு உதவிய அனைத்துப் பயனர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

சிறப்புகள்

  1. தமிழ் விக்கிப்பீடியர்கள் பலரையும் ஒரே இடத்தில் ஒன்றாகச் சந்தித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது.
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனர்கள் பலருக்கும் நல்ல தங்குமிட வசதி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாகப் பெண் பங்களிப்பாளர்களுக்கு பாதுகாப்பான இட வசதி செய்யப்பட்டிருந்தது.
  3. மாமல்லபுரம் பயணத்திற்குச் செல்ல என்னைப் போன்றவர்கள் ஏற்படுத்திய காலதாமதத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் பார்வையிடல் போன்ற மாற்று வழிகளில் பயன்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைத்துப் பின்னர் மாமல்லபுரம் அழைத்துச் சென்றது.
  4. மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கப் போதுமான நேரத்தை அளித்து ஒத்துழைப்பு நல்கியது.
  5. மாமல்லபுரம் சுற்றுப் பயணத்தின் இடைவெளியில் வெளிநாட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
  6. மாமல்லபுரத்தில் கடற்கரை மணலில் பயனர்களின் கருத்துகளை அறிய வாய்ப்புகளை அளித்தது.
  7. சென்னையின் வெப்பம் தணிக்கும் வகையில் இயற்கைச் சூழலுடன் அமைந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் குளிரூட்டப்பட்ட அரங்க வசதி செய்யப்பட்டது.
  8. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து இலங்கைப் பயனர் சிவகோசரனின் நேரடிச் செயல்முறை விளக்கம், மாலையில் சூரியப் பிரகாஷ் செயல்முறை விளக்கம் போன்றவை.
  9. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக்கான இனிப்பு வெட்டிக் கொண்டாடப்பட்டது. இளைய பயனர் அபிராமி நாராயணன், கட்டுரைப் போட்டி வெற்றியாளர் நந்தினி கந்தசாமி இனிப்பு வெட்ட, இரவியின் ஒரு வயதுக் குழந்தைக்கு முதல் இனிப்பு வழங்கியது சிறப்பு.
  10. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் (அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மட்டும்) விக்கிப்பீடியா இலச்சினை இடப்பட்ட சாவிக்கொத்து வழங்கப்பட்டது.
  11. இலங்கைப் பயனர்கள் மயூரநாதன், சஞ்சீவி சிவக்குமார், சிவகோசரன் ஆகியோருக்குச் சிறப்புப் பரிசாக பட்டுச்சேலை பரிசளிக்கப்பட்டது.

குறைகள்

  1. நிகழ்ச்சி நிரல்படி நிகழ்ச்சிகளை நடத்திட எந்தவிதமான திட்டமிடலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. (தன்னிச்சையாகச் செயல்பட விரும்பியது போன்று இருந்தது. முதல் நாளே கலந்துரையாடி, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளைப் பகிர்ந்தளித்திருக்கலாம்)
  2. காலையில் நடத்தப் பெற்ற சில பயிற்சிகளுக்கான நேரத்தைக் குறைத்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்துப் பயனர்களையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம். (இதுவரை மேடையேற்ற வாய்ப்பு கிடைக்காத, தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்)
  3. அரங்கில் நடத்தப் பெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பணி சிறப்பாகச் செய்யப்படவில்லை. (நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரையாவது முன் கூட்டியே நியமித்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் தங்களைத் தவிர வேறு யாரும் மேடை ஏறிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்பட்டதாகவே தோன்றுகிறது)
  4. குறிப்பிட்ட சில பயனர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. (விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்பாளர்களும் சமம் என்கிற நிலை தோல்வியடைந்தது)
  5. மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கத்தின் மேடையில் இருக்கைகள் போடப்பட்டு, அந்த இருக்கைகளை நிரப்பாமல் காலியாகக் கிடக்க, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்ற வேடிக்கை. (தமிழ் விக்கிப்பீடியாவின் வயதான சில முக்கியப் பயனர்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையாவது முன்னிலைப்படுத்தி இருக்கலாம்)
  6. தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கான சட்டை காலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முன்கூட்டியே வழங்கப்பட்டது. மற்ற பயனர்களுக்குச் சட்டை அளிக்கப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. மதியச் சாப்பாட்டிற்குப் பின்பு பாதுகாப்பின்றி அவரவர் எடுத்துக் கொள்ளும் முறையில் முன் நாற்காலியில் குவிக்கப்பட அவரவர் எடுத்துக் கொள்ள வேண்டியதானது. எப்படியோ எனக்கும் ஒரு சட்டை கிடைத்து விட்டது. (இதைக் காலை வேளையில் முறைப்படி கையொப்பமிட்டு பெற்றுக் கொள்ளச் செய்திருக்கலாம்)
  7. இலங்கைப் பயனர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பரிசளிப்பை ஒரு பயனரே மூன்று இலங்கைப் பயனருக்கும் வழங்கியதைத் தவிர்த்து, மேலும் இரு பெண் பயனர்களைக் கொண்டு வழங்கி இருக்கலாம். (பார்வதிஸ்ரீ அவர்களுடன் பூங்கோதை, நந்தினி கந்தசாமி போன்று வேறு இரு முனைப்பான பெண் பயனர்களையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்)
  8. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்புக்கு முதன்மைத் தேவையாகக் கருதப்படும் மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக சென்னையிலுள்ள முக்கியக் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருக்க வேண்டும் (அழைப்பிதழ் அச்சிட்டு அனுப்பி இருந்தால் ஈடுபாடுடைய சில மாணவர்களையாவது வரச் செய்திருக்கலாம்)
  9. ஊடகத்துறையினர் அனைவருக்கும் அழைப்பிதழ் அவசியம் அனுப்பி இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி ஊடகச் செய்தியாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. (தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாகச் செய்தி வெளியாகி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்)
  10. சிறப்பு விருந்தினர் யாரையாவது அழைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். (தமிழ் விக்கிப்பீடியா குறித்த தகவல் மேலும் பல ஊடகங்களின் வழியாகப் பலரையும் சென்றடைய உதவியாக இருந்திருக்கும். அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகளாகக் கருத வேண்டியதில்லை)
  11. காலையிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை அரங்கத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல இயக்குநராக இருந்த வி. சுந்தரேசுவரன் அவர்களை மேடையில் ஒருவராகப் பங்களிக்கச் செய்திருக்கலாம். (நிகழ்ச்சிக்கான அரங்கம் கிடைக்க, முன்னாள் மாணவர்கள் தங்கும் விடுதியில் அறைகள் கிடைக்க சுந்தரேசுவரன் அவர்கள் உதவியதாகப் பயனர் சூரியப் பிரகாஷ் நிகழ்ச்சி தொடக்கத்தில் குறிப்பிட்டதை நினைவில் கொண்டாவது அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவாவது அவரை மேடையில் அமரச் செய்திருக்கலாம். இவர், நாகர்கோவிலில் ஜனவரி மாதம் (2013) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் அவர்கள் மூலம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப் பெற்ற விக்கிப் பீடியா பயிற்சிப் பட்டறை (விக்கி கன்யா) நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்த பயனர் எனும் அடிப்படையிலாவது மேடையேற்றம் செய்திருக்கலாம். காலியாகக் கிடந்த இரு இருக்கைகளில் ஒன்று நிரம்பியிருக்கும். அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்)

கருத்து

இங்கு சுட்டிக்காட்டியிருப்பது போல் மேலும் சில குறைகள் இருக்கலாம். இந்தக் குறைகள் எல்லாம் இங்கு சுட்டிக்காட்டிருப்பது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. இது போன்று அடுத்து ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்யும் நிலையில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க உதவும் என்கிற எண்ணத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:23, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனியார் கூறியபடி தங்கும் இடம் அற்புதம்.குடிநீர் வசதி,குறைந்த செலவில் அருமையான உணவு கிடைக்கும்படி அண்ணா பல்கலைகழகத்தில் தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தது , குளிரூட்டப்பட்ட அறை , சுகாதாரமான இடம் , பாதுகாப்பான இடம் என சிறு குறை கூட சொல்ல முடியாது.இப்படிபட்ட ஏற்பாட்டை செய்த இரவி அவர்களுக்கு மிக்க நன்றி.மேடையில் மட்டும் சில சொதப்பல்கள் இருந்தன . தெளிவான ஒருங்கிணைப்பு இல்லை.எல்லோரும் ஒரே நேரத்தில் மேடை ஏறுவது இல்லையேல் யாருமே இல்லாமல் இருப்பது என்பது மட்டும் குறை.

சோடாபாட்டில்

ஞாயிரன்று நடந்த நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தன. முழுத்திட்டம், நோக்கு என்பதை நான் சரிவர அறியவில்லை என்பதால், அரங்கில் என்ன செய்திருக்கலாம் என்று தோன்றியதை மட்டும் கீழே தருகிறேன்:

அரங்கின் வெளியில் சில மேசைகளிட்டு அங்கு ஒரு நான்கு பயனர்கள் எப்போதும் கணினி + இணையத்துடன் அமர்ந்து புதியவர்களுக்கும், ஐயமிருப்பவர்களுக்கும் நேரடிப் பட்டறை போன்று எடுத்திருக்கலாம். கட்டும்படியான விலையில் வைஃபை கிட்ட வில்லையென நினைக்கிறேன். 2010 இல் செம்மொழி மாநாட்டு அரங்கில் இரவி ஏற்பாடு செய்தது போல கிண்டிக் கல்லூரி மாணவர்களை மடிக்கணினியோடு (தினப்படி அளித்து) ஏற்பாடு செய்திருந்தால், ஒரு தொடர் பட்டறை போன்று முன் ஏதாவது நடந்து கொண்டிருக்கும். அவர்களுடன் நாம் ஒரு நான்கைந்து பேர் முன் அமர்ந்து ஒரு “விக்கி உதவி மேசை” (live helpdesk) போட்டார் போல இருந்திருக்கும். --சோடாபாட்டில்உரையாடுக 03:56, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புருனோ

விமர்சனங்கள் என்பது உரையாடல் தானே எனவே உரையாடல் பக்கத்தில் நடத்துவது பொருத்தம் என்பது என் கருத்து

#

1. இந்த நிகழ்ச்சியை மேலும் மேம்படுத்த கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்குகிறேன் 2. இந்த நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட குறைகள் உள்ளன

இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்ட வாக்கியங்கள்

இரண்டும் ஒன்று தான் என்று நினைப்பவர்கள், தயவு செய்து உங்கள் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்

-oOo-

1. I propose the following suggestion to improve this program 2. The program has following flaws

The meaning of both these sentences are not the same If you think that they are same, it is time to improve your language, please !

புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:26, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உண்மையிலேயே எமக்குப் புரியவில்லை. தயவு செய்து தமிழிலும் தந்துவுங்கள். நண்பர் தேனீ சுப்பிரமணியம் கொடுத்துள்ள பெரும் பட்டியலின் சுருக்கமாகத் தங்கள் ஆங்கில வரிகளை எடுத்துக்கொள்லலாமா? - சங்கர இராமசாமி.
சார், நான் தமிழில் கூறிய விஷயங்களைத்தான் ஆங்கிலத்தில் கூறியுள்ளேன். எனவே நண்பர் தேனீ சுப்பிரமணியம் கொடுத்துள்ள பெரும் பட்டியலின் சுருக்கமாகத் தங்கள் ஆங்கில வரிகளை எடுத்துக்கொள்ள முடியாது. நான் தமிழில் எழுதியிருப்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் ஆங்கில வரிகள் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:32, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

##

எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அங்கு சுட்டிக்காட்டப்படும் குறைகள் குறித்த விமர்சணங்களை நான்கு விதமாக பகுக்கலாம்

1. முதல் வகை : அந்த நிகழ்ச்சி குறித்து சரியான புரிதலோடு, அடுத்த முறை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கூறப்படும் ஆலோசனைகள். (suggestion to improve this program) உதாரணமாக : மகாபலிபுரம் செல்லாமல் சென்னையில் இருக்கும் எழூம்பூர் அருங்காட்சியகம் சென்றிருக்கலாம், முதல் நாள் நிகழ்ச்சியும் இரண்டாவது நாள் சுற்றுலாவும் செல்லலாம் . . .

2. இரண்டாவது வகை : அந்த நிகழ்ச்சி குறித்து சரியான புரிதலோடு, அடுத்த முறை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கூறப்படும் குறைகள். (program has following flaws) உதாரணமாக : Master of Ceremony இல்லை. Compere செய்ய ஆள் இல்லை. பல்கலைகழக வாயிலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை கோடு போட்டிருக்கலாம்

முதலிரண்டு வகைகளையும் ஆங்கிலத்தில் இவற்றை Constructive Criticism என்று அழைப்பார்கள்

3. மூன்றாவது வகை : அந்த நிகழ்ச்சி குறித்த புரிதலின்றி, தாங்களாகவே இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு, கற்பனையின் அடிப்படையில் கூறப்படும் குறைகள் முதலில் இது பொதுக்கூட்டமோ, பொதுக்குழுவோ, மாநாடோ அல்ல. இது விக்கிபயனர்களில் கூடல். அவ்வளவே. ஒரு சர்தார்ஜி கடைக்கு கோபமாக வந்து. “என்னை ஏமாற்றி விட்டாய், இதில் டி டி ஸ்போர்ட்ஸ் தெரியவில்லை” என்று கத்தினாராம், கடைக்காரர் சொன்னாராம் “இது ரேடியோ, டி டி ஸ்போர்ட்ஸ் பார்க்க வேண்டுமென்றால் டிவி வாங்க வேண்டும்” இங்கும் இதை போல் பல குறைகளை காண முடிகிறது இது Unconference முறையில் நடத்தப்பட்ட ஒரு family reunion (ரேடியோ) . இதை ஒரு மாநாடாக (டிவி) பாவித்து, மாநாடு இப்படி நடக்கவேண்டும். இந்த நிகழ்வு அதன்படி நடக்கவில்லை (டிடி ஸ்போர்ட்ஸ் தெரியவில்லை) என்று கூறுவது புரிதல் குறைவையே காட்டுகிறது என்பது என் கருத்து

4. நான்காவது வகை : புரிதல் இருக்கிறதோ, புரிதல் இல்லையோ, குறை சொல்லவேண்டும் என்பதற்காக காரணங்களை அடுக்குவது :) :) இதை மேலாண்மை வகுப்புகளில் Steam Boat Testing Critics என்பார்கள். அதாவது என்ன செய்தாலும், அதை விடுத்து மற்றொரு குறையை கூறுவது first the critics told The boat won't start , - Engine started . Then they told it won't move - The boat start to move , They told it won't go fast - Its gained speed and was going very fast , finally they told " He can't stop it " - so critics are always critics. what ever evidence you show, they won't mind, they just want to criticize .

என் வேண்டுகோள் இது தான் : மூன்றாவது மற்றும் நான்காவது வகை குறைகளை புறந்தள்ளிவிட்டு, முதலிரண்டு வகை குறைகளை மட்டும் கணக்கில் எடுங்கள். அப்படி செய்தால் தான் அடுத்த முறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 23:01, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:26, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:51, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-மயூரநாதன் (பேச்சு) 08:07, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர்

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மதிப்பிடும் முன்னர் அதன் நோக்கத்தையும் சூழலையும் மனதிற்கொண்டு செய்ய வேண்டும். அவ்வகையில் என்னுடைய கருத்துகள் கீழே. -- சுந்தர் \பேச்சு 08:03, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நோக்கம்

முன்னுரிமை வரிசையில் இந்த நிகழ்வின் நோக்கங்கள்:

  1. விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவது
  2. பல நாடுகளிலும் இருந்து பங்காற்றும் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடுவது
  3. ஒன்றுகூடும் வாய்ப்பைப் பயன்படுத்தி நமது திட்டமிடலை முடுக்குவது
  4. நிகழ்வையொட்டியும் அதை முன்வைத்தும் நமது வளர்ச்சிக்காகப் பிற நிறுவனங்களின் உதவியைப் பெறுவது
  5. தமிழ்நாட்டில் பரவலான அறிமுகத்தைப் பெறுவது

சூழல்

  1. விக்கிப்பீடியர்களின் ஆர்வம்
  2. சென்னையில் சிறிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் (விக்கிக்கு வெளியே பங்களிக்க வாய்ப்புடையவர்கள்)
  3. நல்கை வசதி

கருத்துகள்

  • கொண்டாட்டம் (8/10)
மாமல்லபுரத்தில் தமிழ் விக்கிப்பீடியர்கள்

இனிதே நிகழ்ந்தது. முதல் முறையாக இத்தனை பயனர்கள் ஒன்றுகூட முடிந்ததே பெரிய வெற்றி. நல்கைத் தொகையும் கிடைத்ததால் எவருக்கும் செலவு பெரிய சிக்கலாக இல்லை. நேரம் வாய்க்காததால் நற்கீரன், கார்த்திக்பாலா, சிவக்குமார் போன்ற சில பயனர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. சோடாபாட்டிலும், பூவும் இரண்டாவது நாள் மட்டும் வரமுடிந்தது. ஒரு அரங்குக்குள்ளேயே இரு நாட்கள் இருப்பதைக் காட்டிலும் மாமல்லபுரம் சென்றுவந்தது ஒரு நல்ல மாறுதல், நட்புறவுகளைப் பேண வாய்ப்பு. பல சுவையான தகவல்கள் தெரிய வந்தன. கபிலன் கூறுகையில் அவரது மாணவர் ஒருவர் வீட்டுப்பாடத்தை விக்கியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருந்தார் என்றும் அதில் [தொகு] என ஒவ்வொரு பத்திக்கு அருகிலும் இருப்பதைக் கொண்டே அவர் தமிழ் விக்கிப்பீடியாவைக் கண்டுபிடித்தார் என்றும் சொன்னார். :) பேருந்தில் வட்டமாக அமர்ந்து பேச வாய்ப்பில்லாததால் கடற்கரையில் இதற்கென நேரம் ஒதுக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்குமிடமும் நல்ல வசதியாக அமைந்தது. நிகழ்ச்சி நடந்த இடமும் சென்னையில் எளிதில் அணுகக்கூடிய இடம். கட்டுரைப்போட்டியும் ஒரு நல்ல தொடர்முயற்சி. சட்டைகள் வடிவமைப்பு நன்றாக இருந்தது. நம்பிக்கை அடிப்படையில் கையெழுத்து எதுவும் வாங்காமல் சட்டைகளைக் கொடுத்தபடியால் விக்கிப்பீடியர் அல்லாத சிலர் எடுத்திருக்கும் வாய்ப்பும், சிலருக்குக் கிடைக்காமல் போன வாய்ப்பும் ஏற்பட்டது. யாராவது ஒருவர் அந்தப் பொறுப்பைத் தாமாக முன்வந்து ஏற்றிருக்கலாம். மதியத்துக்குப்பிறகு சட்டைகள் அங்கேதான் இருந்தன. மயூரநாதன் தானாக அனைவருக்கும் சாவிக்கொத்து ஒன்றை வழங்கியது நல்ல நினைவுப்பரிசு.

  • தமிழ் விக்கி வருங்காலத் திட்டமிடலுக்கான வாய்ப்பு (7/10)
நிகழ்வு முடிந்தபின் விக்கிப்பீடியர்கள் கூடியபோது அதை வருங்காலத் திட்டமிடலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

சனிக்கிழமை இரவு தற்செயலாக விசுணுவர்தன் (CIS A2K), சௌமியன் (விக்கிமீடியா இந்தியா) போன்றோருடன் ஒரு சில பங்களிப்பாளர்கள் சந்தித்துப் பேச முடிந்தது. இவர்கள் இருநாட்களிலும் மேலும் பல விக்கிப்பீடியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இது இருவழியுறவை மேம்படுத்தும். தெலுகு விக்கிப்பீடியர் இரஃகீம் கூடவே தங்கியிருந்து நிறைய தகவல்களைப் பகிர்ந்தார். மேடையிலும் சிறிது பேசினார். நிகழ்வு முடிந்தபிறகு நமக்கு ஓர் அறிய வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலை நெறிப்படுத்தி முதலில் தொலைநோக்குத் திட்டங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். மொழிநடை பற்றிய சிக்கல்களைப் பற்றிய பேச்சு நீண்டுவிட்டதால் அந்த வாய்ப்பில்லாமல் போனது சிறு குறை. வருங்காலத்தில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • பிற நிறுவன உறவு (9/10)
இந்திய விக்கிமீடியா மேலாளர் சௌமியன், இராம.கி. ஐயா, உத்தமத்தின் தலைவர் மணி. மு. மணிவண்ணன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் முனை.ப.அர.நக்கீரன், தமிழி நிறுவனத்தின் நாக.இளங்கோவன்

விக்கிமீடியா நிறுவனத்திடம் முன்வைத்த பரிந்துரை மிகச் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் காலம் குறைவாக இருந்ததால் பணம் கைக்கு வரும்வரை ஈடுகட்ட இரவி சற்று சிரமப்பட வேண்டியதாயிற்று. தெலுங்கு விக்கிப்பீடியா, CIS A2K, விக்கிமீடியா இந்தியா தவிர செல்வாவின் நண்பரும், தமிழ் விக்கிப்பீடியாவின் நலம்விரும்பியுமான முனை.ப.அர.நக்கீரனுடன் (தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குனர்) நிகழ்வுக்கு முன்னால் நிறைய பேச முடிந்தது. மயூரநாதனும் செல்வாவும் இரவியும் நானும் ஓரிரு நாட்கள் முன்கூட்டியே வந்தபடியால் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடிந்தது. அதன்வழியாக சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவரே தானாக முன்வந்து த.இ.கழகத்தில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க உதவும் கணி வசதியைச் செய்து தருவதாகச் சொல்லியுள்ளார். செல்வாவின் முன்னெடுப்பில் முனை.நக்கீரனின் துணையுடன் பேரா.வா. செ. கு. அவர்களைச் சந்தித்துப் பேசி தமிழ் வளர்ச்சிக் கழகக் கலைக்களஞ்சியத் தொகுப்பை கொடையாகப் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எத்தகைய பெரிய விளைவு என்பது கூடிய விரைவில் தெரிய வரும். உத்தமம் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டம் நடத்தி அதில் செல்வா உரையாற்றினார். தொடர்ந்து நடந்த உரையாடலில் பலரும் மிகமிக ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். நம்முடன் ஒத்த நோக்குடைய இலினக்சு மற்றும் கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் நல்ல உறவு மேம்பட்டுள்ளது. சீனிவாசன் நிறைய உழைத்தார், நாமும் கலந்துரையாடலின்போது அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றோம்.

  • பரவலான அறிமுகம் (8/10)
இந்து நாளிதழின் கார்த்திக் சுப்பிரமணியன் முனைவர் நக்கீரனுடனும் விக்கிப்பீடியர்களுடனும் உரையாடுகிறார். இது போல ஆங்காங்கே பலரையும் நிருபர்கள் சந்தித்தனர்.

புதன்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பையடுத்து மிகப்பல செய்திக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பி.பி.சி. தமிழோசையிலுங்கூட செவ்வி வந்திருந்தது. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. நிகழ்ச்சியன்றும் பல ஊடகங்களில் இருந்து வந்திருந்தனர். விக்கி முறைப்படி அவரவர் அங்கிருந்த விக்கிப்பீடியர்களிடம் பேசினர். அதனால் பல்வேறு விக்கிப்பீடியர்களை அவர்கள் சந்தித்துள்ளனர். இருப்பினும் ஊடகங்கள் சில சுவையான அல்லது ஊடகக்கவர்ச்சியான கதைகளைச் சொல்லவே விரும்புவதால் நம்மால் வெளியாகும் செய்தியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஊடக அறிக்கையின் அச்சடித்த தாள்களை ஞாயிறன்றும் கொடுத்திருக்கலாம், அடுத்தமுறை கவனமாக இருக்க வேண்டும். ஊடகத் தொடர்புகளைத் தந்த விசுணுவரதன், சேசன் ஏழுமலை (செல்வாவின் நண்பர்) ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் நன்றிகள்.

எவ்வித சிறப்பு அழைப்பும் இல்லாமல் முக்கிய வலைப்பதிவர்கள், முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள் எனப்பலர் வந்திருந்தது என்னைப் பொருத்தவரை பெருஞ்சிறப்பு. வழக்கமான சிறப்பு அழைப்பாளர் என்ற மெனக்கெடல், பரிசு கொடுத்தல், பொன்னாடை போர்த்தல் என எதுவும் இல்லாமல் தாமாக அக்கறையுடனும் அன்புடனும் நம் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் வந்தது ஒரு புதிய போக்கை நிறுவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. வந்தவர்களில் நாம் கண்டு பேசியிருக்கவோ, மேடையில் பேச அழைக்கவோ வேண்டியவர்கள் (எ.கா. திரு.வி. சுந்தரேசுவரன்) இருந்தது தெரிந்த விக்கிப்பீடியர்கள் அவர்களாக முன்னே வந்து அவர்களை அறிவிப்பாளரிடம் அறிமுகப்படுத்தும் முறையை வருங்கால நிகழ்வுகளில் கையாள வேண்டும்.

  • ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நிரல் (7/10)
ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன் உரை சிறப்பாக அமைந்தது.

முதலில் நிகழ்வு தொடங்கும்போது தமிழ் விக்கிப்பீடியர்கள் பலரும் இல்லாதது ஒரு குறை. அதனால் சில பணிகளுக்கு ஆளில்லாமல் இருந்ததும் வருந்தத் தக்கது. அதற்கு என்ன செய்யலாம் என்பதைக் கீழே தனியாகச் சொல்கிறேன். முதலில் சிவகோசரனும் சூரியாவும் தந்த பட்டறை நன்று. ஆழிப் பதிப்பகத்தின் செந்தில்நாதன் உரை மிகமிகப் பொருத்தமான ஒன்று. மொழிபெயர்ப்பு பற்றிய துறையறிவையும் பட்டறிவையும் பகிர்ந்தது பயனுள்ளது. முதல்முறையாக விக்கிக்கு வெளியே ஒரு குரல் நமது நடைத் தேர்வையும் சொல்லாட்சிக் கொள்கையையும் ஏற்றது மகிழ்ச்சி. பிறகு தனியாகப் பேசும்போது அவருக்கு இருக்கும் வணிகக் கட்டாயம் நமக்கு இல்லாததால் நாம் இதைத் தொடர வேண்டும் எனத் தோன்றியது. பரப்புரை பற்றிய பல பார்வைகள் நமது ஒத்த அமைப்புகளிடம் இருந்து வந்தது சிறப்பு. அது கலந்துரையாடலாக அமையாவிட்டாலும் பல கருத்துகள் வெளிவந்தன. சீனிவாசன், சிபி, அருண் ஆகியோரின் பேச்சிலிருந்து மாணவர்களை அணுகுவதைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டோம். இரண்டாவதாக நடந்த கூட்டுரையில் முனை.நக்கீரன் பல சிறப்பான அறிவிப்புக்களை வெளியிட்டார். (அதில் பல நாம்கூட கேட்டிராதது, உணவு இடைவேளையின்போது அவராகவே இது இருந்தால் உங்களுக்குப் பயனாக இருக்குமல்லவா எனக் கேட்டுக் கொண்டார்!) வாழ்த்திப் பேசிய மணி மணிவண்ணன் (உத்தமத்தின் தலைவர்), நாக.இளங்கோவன் போன்றோர் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தனர். இராம.கி. ஐயா தனது ஆதங்கத்தைக் காட்டினார், அதற்கான விளக்கத்தை மேடைக்கு வெளியே செல்வா தந்தபடியால் அவரும் தெளிவுபெற்றார். பார்வதி, அபிராமி, நந்தினி ஆகியோர் மேடைக்குக் கீழே இருந்து உதவினர். பங்களிப்பாளர் அறிமுகம் சிறப்பு. அதை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவாகவும் வந்திருந்தவர்களை மேடைக்கு அழைத்தும் செய்ய முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு இனிமேல் பல வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். மயூரநாதனின் தொலைநோக்கு உரை மிக மிக நன்று. சாலப் பொருத்தம். நிகழ்ச்சியில் பேச விரும்பும் விக்கிப்பீடியர்கள் ஒரு விக்கிப் பக்கத்தில் விருப்பத்தை இடும் முறையைக் கையாளலாம். இதற்கென திறமூல வலைமென்பொருளும் உள்ளது. விக்கிமேனியாவில் பயன்படுத்தக் கண்டிருக்கிறேன். இருந்தாலும் நிகழ்வின்போது திட்டமிடாமல் பேச வேண்டியது இருக்கும். நான் பரப்புரை பற்றிய கலந்தாய்வில் விடுபட்டவற்றைக் கூற வேண்டும் என்றேன், இரவி பேசுங்கள் என்றார். பார்வதி ஒரு தலைப்பில் பேச விரும்பினார், அவரும் பேசினார். அப்படி நிகழ்வது விக்கி முறைதான். நிறைய பயனர்கள் பேச விருமபினால் பார்கேம்பு, விக்கிமேனியா போல பல அரங்குகளில் ஒரே நேரத்தில் நிகழ்வை நடத்தலாம். பார்வையாளர்களும் விரும்பும் பேச்சைக் கேட்கலாம்.

  • படங்கள்

ஊடகப்போட்டியில் வென்றவரின் நிழற்பட நிறுவனத்தைப் பணியமர்த்தியது சிறப்பு. படங்கள் சிறப்பாக வந்திருக்குமென நம்புகிறேன்.

  • ஒருங்கிணைப்பு (7/10)

ஒருங்கிணைப்பில் இரவிக்கு சில நேரங்களில் சுமை மிகவும் கூடுதலாக இருந்தது. சீனிவாசனும் மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாதவரும் மிகவும் உதவியதால் இது சற்று குறைந்தது. இது நம் நிகழ்வு தானே? திருமண நிகழ்வு போல அல்லாமல் ஊர்த்திருவிழா போலவும் கல்லூரி விழா போலவும் தான் இதை அணுக வேண்டும். நடுவில் ஒருவரோ ஒரு குழுவோ நெறிப்படுத்தி கட்டுப்பாட்டு அறை வைத்துச் செய்யும் முறை நமக்கு ஒவ்வாது. மாறாக, இனி வரும் unconference கூட்டங்களில் ஒரு சிறு பங்களிப்பாளர் அறையும் வெள்ளைப்பலகை ஒன்றையும் போட்டு ஒரு நிகழ்வாழ்வு விக்கி போலச் செய்யலாம். ஒருவர் உள்ளே வந்து பலகையில் எழுதிவிட்டு, சட்டைகளை நான் அரங்ககுக்குக் கொண்டு செல்கிறேன் எனலாம். வேறொருவர் நான் தண்ணீருக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று எழுதலாம். ஒருவர் அறிக்கையின் பிரதிகள் உள்ளனவா? எனக் கேள்வியை எழுதி வைக்கலாம். இவ்வாறு நடந்தால் ஒருங்கிணைப்பாளரின் பணிச்சுமை குறையும், அனைவராலும் பங்காற்ற முடியும். இருந்தாலும் நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்னமே கூட உள்ளூரில் போதிய பணிக்குழு வலு இல்லாமல் இருந்துள்ளது தெரிகிறது. சில பணிகளை விக்கியில் இட்டிருந்தாலும் பலருக்கு ஏற்றுச்செய்யவியலாமல் போய்விட்டது. (அவரவர் சூழலின் காரணமாகத்தான்.) இனி வரும் காலத்தில் நமது பங்களிப்பாளர் எண்ணிக்கை கூடும் என்பதால் இது சரியாகும். இயன்றவரை பணிகளை முன்கூட்டியே விக்கியில் பகிர்ந்து கொள்ள முடியுமா பார்க்க வேண்டும். அவ்வகையில் நற்கீரன், அன்ரன், பார்வதி, மணியன் போன்றோரும் (இன்னும் பலர் உதவியிருப்பார்கள், எடுத்துக்காட்டுக்கு மட்டுமே.)

இங்கு சுந்தர் போட்டிருக்கும் மதிப்பீடுகள் (10க்கு) எதை அடிப்படையாகக் கொண்டு போடப்பட்டிருக்கின்றன? --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:46, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி சுப்பிரமணி, மேலேயுள்ள மதிப்பெண்கள், இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கங்களாக நான் மேலே குறிப்பிட்டுள்ளவற்றையும், நமது சூழலையும் கருத்திற்கொண்டு என்னுடைய மதிப்பீட்டில் நான் இட்டவை. -- சுந்தர் \பேச்சு 13:35, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன்

தேனியார் மற்றும் சோடாபாட்டிலின் கருத்துகளையே வழிமொழிகிறேன். முன்னிரவு பேருந்திலோ, அல்லது கடற்கரையிலோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பற்றி விவாதித்திருந்தால் சீர்படுத்தியிருக்கலாம். எங்கிருந்து தொடங்குவது என்ற ஐயத்தாலேயே பல விசயங்கள் என்னால் தொடங்க முடியவில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 07:28, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

யோகிசிவம்

தேனியாரின் 11 சிறப்புகள் அப்படியே... ஏற்கிறேன். இரவி அவர்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு பாராட்டு!!!. ஒருவரே அனைத்தையும் செய்து சோர்ந்து போனார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பற்றி விவாதித்திருந்தால் சீர்படுத்திருக்கலாம்?! திட்டமிடலில் சறுக்கலா? அல்லது திட்டமிடவில்லையா? வேலைப் பங்கீடு இல்லை. இது குறித்து இரவி அவர்களிடம் குறைந்த பட்சம் பேசியிருக்க வேண்டும். மல்லைக்கு பேருந்தில் செல்லும் போது தான் இரவி அவர்களை சந்தித்தேன். புதிய இடம், புதியகளம், அதனால் அமைதி காத்தேன். போகட்டும் எதிர்காலத்தில் மிக மிக நேர்த்தியாக தேனீயாரின் குறைகள் (11) மேலும் இன்றி அனைவரும் பங்கெடுக்கும் கற்றட்ட கலைக்களஞ்சியம் என்பதை செயலில் காட்டலாம் அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 08:08, 1 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்-மயூரநாதன் (பேச்சு) 08:12, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணியன்

தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப்பெரிய கூடலை நாம் இப்போது தான் முதலில் நடத்துகிறோம் என்பதை நினைவில் வைத்து சில விடயங்களை கூறுகிறேன். அடுத்துவரும் கூடல்களில் தான் நாம் குறைகள் ஏதும் வராமல் செய்ய இயலும் என்பது என் கருத்து. மேலே அனைவர் கூறிய நல்ல விடயங்களையும் நானும் வழிமொழிகிறேன். முதல் கூடலிலேயே குறைகள் இல்லாமல் செய்ய முடியும் என்றால் எப்படி? அதனால் குறைகள் என்ற பெயரில் நான் எதையும் கூறவில்லை. அதனால் எல்லாமே ஆலோசனைகள் தான்.

  1. நான் கூடலுக்கு வந்தது அனைவரையு நேரடியாக பார்ப்பதற்கு தான். அதனால் எனக்கு கூடலை பொறுத்தவரை மன நிறைவே.
  2. சாவிக்கொத்து பற்றிய மேட்டரே எனக்கு தெரியாமல் போயிற்றே! இராதாகிருஷ்னா டென்சன் டென்சன். இதுக்கு பார்சல் வசதி உண்டா? :)
  3. கூடலில் சில பயனர்கள், விருந்தினர்கள் பேசியது விக்கிப்பீடியாவுடன் தொடர்புடையதாக இல்லை. இனிமேல் மேடை ஏறப்போகிறவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை ஒரு சுருக்கமாக எழுதிக் கொடுக்கச் சொல்லிவிட்டு அதில் சர்ச்சைக் கூறிய கருத்துக்களை நீக்கிவிட்டு பேசச் சொல்லலாம். அடுத்த கூடலில் சிறியவர் முதல் பெரியவர் வரை மேடை ஏற வேண்டும் என்பதால் இதை கவனத்தில் கொள்ளவும்.
  4. கூடலைக் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில் ஐந்து கட்டங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எது மிக அருமை. எது பிடிக்கவில்லை என்பது தரப்படவில்லை. அதாவது ஒன்றாவது எண்ணை டிக் செய்தவர் கூடல் நன்றாக இருந்தது என்று கூறுகிறாரா? அல்லது மோசமாக இருந்தது என்று கூறுகிறாரா என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம். அதனால் அடுத்த முறை ஒன்று என்பதை குறித்தால் என்ன என்பதையும் சர்வே தாளில் கொடுத்துவிடுவது நன்று.
  5. கூடலுக்கான அறிவிப்புகள் சில பல்கலையில் வலப்பக்கம் ஒட்டப்பட்டிருந்தது. இந்தியாவில் இடப்பக்கம் தானே ஒட்ட வேண்டும்.
  6. சோடாபாட்டில் கூறிய ஹெல்ப் டெஸ்க் யோசனை சூப்பர். அடுத்த முறை அவரையே அதை செய்யச் சொல்லலாம்.
  7. அடுத்த முறை கூடலுக்கான முந்தைய நாள் சுற்றுலா செல்லாமல் திட்டமிடலில் இறங்கலாம்.
  8. இவை எல்லாத்தையும் விட முக்கியமானது, அடுத்த நிகழ்வு நடக்கும்போது அதற்கான விக்கிப்பீடியாப் பக்கத்தில் இந்த பக்கத்தை இணைப்பு கொடுக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:53, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


ஸ்ரீனிவாசன்

குறைகளுக்கான எனது கருத்துகள்

  1. முதல் முதலாய் விக்கி அன்பர்கள் அனைவரும் சந்திப்பதால், அனைவரும் உரையாடி மகிழவே, அதிக வேலைகளை பிரித்தளிக்கவில்லை. (என்ன வேலை உள்ளது என எத்தனை பேர் கேட்டோம்?) நிகழ்ச்சி நிரல்படி நிகழ்ச்சி நடப்பது, பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
  2. காலையில் நடத்தப் பெற்ற சில பயிற்சி, பல புதியவர்களுக்கு பயன் தந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்துப் பயனர்களையும் மேடையில் அறிமுகம் செய்வது மிக்க் கடினம்.
  3. அரங்கில் நடத்தப் பெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பணி சிறப்பாகச் செய்யப்படவில்லை என்பது சரியல்ல. நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரையாவது முன் கூட்டியே நியமித்திருக்கலாம் தான். யார் அந்த யார்?
  4. விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட நேரம் இல்லை. எனவே, குறிப்பிட்ட சில பயனர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது.
  5. மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கத்தின் மேடையில் இருக்கைகள் போடப்பட்டு, அந்த இருக்கைகளை நிரப்பாமல் காலியாகக் கிடக்க, யாராவது, மேலே ஏறி, அவற்றை நீக்கி இருக்கலாம். அதுதானே விக்கி மரபு.
  6. சட்டை வழங்கலை, முறைப்படுத்தியிருக்கலாம். (ஆள் பலம் மிகவும் குறைவு. )
  7. இலங்கைப் பயனர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பரிசளிப்பை ஒரு பயனரே மூன்று இலங்கைப் பயனருக்கும் வழங்கியதைத் தவிர்த்து, மேலும் இரு பெண் பயனர்களைக் கொண்டு வழங்கி இருக்கலாம். கடைசி நேரத்தில் எடுத்த அவசர முடிவு இது. பரவாயில்லை.
  8. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்புக்கு முதன்மைத் தேவையாகக் கருதப்படும் மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக சென்னையிலுள்ள முக்கியக் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் அழைப்பிதழ் ஒரு வாரத்திற்கு முன் அனுப்பியிருக்க வேண்டும். அழைப்பிதழ் 15 நாட்களுக்கு முன் தயாராகி, 10 நாட்களுக்கு முன் அச்சிட்டிருக்க வேண்டும். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை. (ஆள் பலம் மிகவும் குறைவு. )
  9. ஊடகத்துறையினர் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினோம். பத்திரிக்கையாளர் சங்கத்தில் உரையும், தொலைக்காட்சி ஊடகங்கள் சந்திப்பும் நடந்த்து.
  10. சிறப்பு விருந்தினர் யாரையாவது அழைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். யாரை? எப்படி?
  11. காலையிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை அரங்கத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல இயக்குநராக இருந்த வி. சுந்தரேசுவரன் அவர்களை மேடையில் ஒருவராகப் பங்களிக்கச் செய்திருக்கலாம். இதை நிகழ்ச்சியின் போதே சொல்லியிருக்கலாமே. அவர் பற்றி எனக்கு தெரியாது.

இந்த 'லாம்' களை அடுத்த முறை நீக்க, அதிக ஆள் பலம் தேவை. முதலில் ஆட்களை தந்துவிட்டு, பின் (திட்ட)மிட வேண்டுகிறேன்.

--Tshrinivasan (பேச்சு) 14:08, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனி மு. சுப்பிரமணியின் பதில்

நான் முதலில் குறைகள் அடுத்து வரும் நிகழ்வுகளில் இல்லாமல் இருக்கட்டும் என்பதற்காகவே தெரிவித்திருந்தேன். ஸ்ரீனிவாசன் பதிலைப் பார்த்த பின்புதான் பல உண்மைகள் தெரிய வருகின்றன.

  1. முதல் முதலாய் விக்கி அன்பர்கள் அனைவரும் சந்திப்பதால் வேலைகளைப் பிரித்தளிக்கவில்லை என்று சொல்வதே மிகப் பெரும் குறைதான். நிகழ்ச்சி நிரல் தயாரிப்பின் போதே, திட்டமிடலும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுபவர்களால் மட்டுமே நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த முடியும். நிகழ்ச்சி எந்தவிதமான திட்டமிடலுமின்றி, செய்யப்படுவது நிகழ்வு முடிந்த பின்புதானே பார்வையாளர்களாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தெரிந்தது.
  2. காலையில் நடந்த விக்கிப் பயிற்சியை வேண்டுமானால் சிறப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் புதியவர்களுக்கு விக்கியில் பங்களிப்பது எப்படி என்கிற பயிற்சிதான் அவசியம். பிற உரைகள், பயிற்சிகள், கலந்துரையாடல் போன்றவைகளால் புதியவர்களுக்கு எவ்விதப் பயனுமில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயனர்கள் 100 பேர் என்று வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வழியில் மேடையேற்றி அறிமுகம் செய்திருக்கலாம். இதற்கு அன்றைய நிகழ்ச்சி முழுவதையும் திட்டமிட்டு ஒவ்வொருவருக்கும் மேடையேற்ற வாய்ப்பை வழங்கியிருக்க முடியும்.
  3. நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று ஒருவரை நியமித்து அவரைக் கொண்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்க முடியும். காலையில் ஒருவர், மாலையில் ஒருவர் என்று இருவரைக் கூடத் தொகுப்பாளர்களாக நியமித்துத் தொகுத்தளித்திருக்கலாம். நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பணியை யார் செய்ய முடியும் என்பதை தெரிந்து செய்திருக்க வேண்டும்.
  4. விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட நேரம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. முதல் நாள் சுற்றுலாப் பயணத்திற்கு வந்திருந்தவர்களைக் கொண்டாவது ஒருங்கிணைத்திருக்க வேண்டும். சுமார் ஏழு பயனர்களை மட்டுமே அடிக்கடி முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது வருத்தத்திற்குரியது.
  5. மாலை நிகழ்வில் இருக்கைகள் காலியாகக் கிடக்கிறது என்பதற்காக, பயனர்கள் யாராவது தாங்களாகவே மேடையிலேறி அமர்ந்து கொள்ள வேண்டும் என்கிற தங்களின் பதில் வேடிக்கையாக இருக்கிறது. யாருக்கும் மேடை வாய்ப்பை அளிக்க விரும்பாத தங்களைப் போன்றவர்களாவது அந்த இருக்கையை நிரப்பி இருக்கலாம் என்று நானும் சொல்ல முடியும். இதில் மட்டும் எங்கே வருகிறது விக்கி மரபு?
  6. அப்பாடா! ஒரு குறையை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பணிக்கு ஆள் பலமில்லை என்பது ஏற்புடையதல்ல. யாருக்கும் இந்தப் பணியை அளிக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளலாமே...!
  7. இலங்கையைச் சேர்ந்த பயனர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி அவசரமாக எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு வந்திருந்த பிற பெண் பங்களிப்பாளர்களையும் கவனித்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பயனரும் தான் பரிசளிப்பது போல், அடுத்த இரு பரிசுகளுக்கு மற்ற இரு பெண் பயனர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும்.
  8. அழைப்பிதழ் என்றால் அச்சிட்டு மட்டுமே அனுப்ப வேண்டியதில்லை. தட்டச்சு செய்து கூட அனுப்பி இருக்கலாம். இதையும் கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் வழியாக அனுப்பி இருக்கலாம். எதை நாம் முதன்மையாகக் கருதுகிறோமோ? அதற்கு முக்கியத்துவமளித்து முன்னுரிமை கொடுத்து முன்பே அச்சிட்டு தபாலில் அனுப்பச் செய்திருக்கலாமே...!
  9. ஆமாம்! சந்திப்பு நடந்தது. மாவட்டத் தலைநகராக இருக்கும் தேனி நகரிலேயே நாற்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகை, ஊடகச் செய்தியாளர்கள் இருக்கும் பொழுது, மாநிலத் தலைநகரான சென்னையில் தினகரன், Indian Express உள்ளிட்ட ஏறத்தாழ பத்து ஊடக நிறுவனங்களில் இருந்து செய்தியாளர்கள் வந்திருந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
  10. சிறப்பு விருந்தினர் யாரை வேண்டுமானாலும் அழைத்திருக்கலாம். ஊடகச் செய்திகளில் அதிகம் வர வேண்டும் என நினைத்திருந்தால் தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்புத்துறைச் செயலாளர் (தமிழ் வளர்ச்சித் துறைக்கான செயலாளரும் கூட)அல்லது தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்புத்துறை இயக்குநரை அழைத்திருக்கலாம். தமிழ் வளர்ச்சி எனும் நோக்கில் நினைத்திருந்தால், யாராவது தமிழறிஞர் ஒருவரை அழைத்திருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மாணவர்களைக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்திருந்தால் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் என்று யாராவது கல்வியாளர்களை அழைத்திருக்கலாம். சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா? எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் இல்லை என்கிற முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அந்தக் கலந்துரையாடலில் ”நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை” என்றார் இரவி. அது உண்மையாகிப் போய்விட்டது. மேடையில் உட்காரக் கூட ஆளில்லை.
  11. அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல இயக்குநராக இருந்த வி. சுந்தரேசுவரன் அவர்களை எனக்கும் தனிப்பட்ட முறையில் தெரியாதுதான். ஆனால் அவர் தமிழ் இணையக்கல்விக் கழக இயக்குநர் நக்கீரன் உடன்தான் அமர்ந்திருந்தார். முந்தைய கலந்துரையாடலில் “நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை” என்கிற இரவியின் பதிலால் யாரைப் பற்றியும் எதுவும் சொல்ல முடியவில்லை. (தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், யார் யார் பங்கேற்கிறார்கள் என்கிற விவரம் இங்கு இல்லையே... வந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட நிகழ்வில் வி. சுந்தரேசுவரன் அவர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கலாமே என்பதுதான் எனது கருத்து. (அவருடைய மாணவரான சூரியப் பிரகாஷ் இதைச் செய்திருக்கலாம்)

நான் பொதுவாகத் தெரிவித்திருந்த சில குறைகள் என்கிற தலைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று ஸ்ரீனிவாசன் பதிலளித்ததாலேயே நானும் எனது பதில்களைத் தொடர வேண்டியதாகி விட்டது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:06, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க தனியாக ஒருவரை (அல்லது காலை ஒருவர், மாலை ஒருவர் என்று இரண்டு பேரை) நியமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை நானும் கூறுகிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 09:21, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
<<மாலை நிகழ்வில் இருக்கைகள் காலியாகக் கிடக்கிறது என்பதற்காக, பயனர்கள் யாராவது தாங்களாகவே மேடையிலேறி அமர்ந்து கொள்ள வேண்டும் என்கிற தங்களின் பதில் வேடிக்கையாக இருக்கிறது.>> சார். அவர் கூறியது யாராவது அந்த இருக்கையை நீக்கி, ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்திருக்கலாம் என்று. நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் :( புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:36, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:45, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

துரை மணிகண்டன்

நடந்து முடிந்த தமிழ் விக்கிப்பீடியா 10 ஆம் ஆணடு நிறைவு விழா இனிதே நடந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு.ரவி அவர்களுக்குப் பாராட்டுக்கள். நிகழ்வில் என்போன்ற தமிழ் விக்கிப்பீடியாவில் அறிமுக நிலையில் இருப்பவர்களுக்கு இது போதுமானதாகக் இருக்கும் என்று கருதுகின்றேன். மேலும் இலங்கையைச் சார்ந்த திரு.சிவகோசரன் விளக்கம் தெளிவு. அடுத்து திரு.இ.மயூரநாதனின் உரை மிகவும் என்னை கவர்ந்தது. மொத்ததில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதற்கு நான் பெருமையடைகின்றேன்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 14:28, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


பார்வதி ஸ்ரீ

  • விக்கிப்பீடியார்கள அனைவரையும் முதன் முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. முதல் நாள் மாமல்லபுரம் பயணம் விக்கியர்களை ஒருவருக்கொருவர் அளவளாவ ஏதுவாக இருந்தது. இது போன்ற கூடல்கள் அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சிவகோசரனின் விக்கியில் உலாவுதல் பற்றிய பயிற்சி, புகைப்பட பயிற்சி ஆகியவை நன்றாக இருந்தது. மயூரநாதன் உரை அருமை. இவை புதியவர்களுக்கும் புரியும்படி அமைந்தது.
  • தங்குமிடம் குளிரூட்டப்பட்ட அறைகளுடன் மிகவும் பாதுகாப்பாக இருந்தது.
  • மேடையில் எத்தனை விக்கியர்களை அறிமுகம் செய்வது. முதலில் எத்தனை விக்கியர்கள் (நான் உட்பட)குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக அரங்கத்தில் இருந்தனர்? அனைவருமே முக்கியப் பங்களிப்பாளர்களே. யாரை முன்னிலைப்படுத்துவது. அரங்கம் காலியாக இருந்தது எனில் அது கலந்துகொள்ளாத விக்கிப்பீடியர்களின் குறையே தவிர விழா ஏற்பாட்டாளர்களின் குறையல்ல.
  • பத்தாண்டுகள் குறித்த நிகழ்வுகள் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு பின்பே தீர்மானிக்கப்பட்டது. அப்போழுது ஏன் இந்தக் கருத்துகளை முன்வைக்கவில்லை. அதற்காகத் தானே தனிப்பக்கம் தொடங்கப்பட்டது.
  • மாணவர்கள் வரவில்லை என யார் சொன்னது. நான் நிறைய கல்லூரி மாணவர்களை அரங்கத்தில் கண்டேன்.
  • இரவி அவர்கள் உதவ ஆள் தேவை என பேச்சுப்பக்கங்களில் கேட்ட போது அவரவர் சொந்த வேலை காரணமாக விலக நேர்ந்தது. மேலும் கூடலில் கலந்து கொண்ட விக்கியர்கள் தங்களாகவே முன்வந்து ஏன் எந்த பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இல்லை நீங்கள் கேட்டு இரவி மறுத்தாரா? மேலும் ஒருவொருக்கொருவர் அன்றுதான் முகத்தையே பார்த்துக்கொள்கிறோம். விக்கியர்களை விட வெளியிலிருந்த விக்கி நண்பர்கள் இந்தப் பொறுப்புகளை ஏற்றுச் செய்துள்ளதனை ஏன் யாரும் பாராட்டவில்லை.
  • அரங்கத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல இயக்குநராக இருந்த வி. சுந்தரேசுவரன் அவர்களைத் தெரிந்தவர்கள் ஏன் அவரை அறிமுகப்படுத்தவில்லை? ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளத்தானே இந்தக் கூடல் நிகழ்வே ஏற்பாடு செய்யப்பட்டது.
  • கல்யான வீடு என்றால் பந்தி பரிமாற யார் பக்கெட் தூக்குகிறார்களோ அவர்கள் தானயா உன்மையான உறவுகள். அதை விட்டுட்டு சாம்பார்ல உப்பில்லன்னா எப்படி?
  • ஒருங்கிணைப்பில் சில குறைகள் இருந்தன. குறிப்பாக சட்டை விநியோகம், நிகழ்ச்சி அறிவிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். குறிப்பாக அரங்கத்திற்கு வழிகாட்ட யாரேனும் தானாகவே முன்வந்திருக்கலாம். அல்லது அங்கு ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கலாம். சோடாபாட்டில் சொன்ன யோசனையும் நன்று. ஆள்பலம் குறைவான பொழுது இது போன்று நிகழ்வது வழமைதான். அடுத்தமுறை அணைவரும் இடம்பெறும் வகையில் பொறுப்புகளை பிரித்துக் கொடுக்க ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட வேண்டும். குறைகளையும் ஏற்று அடுத்த நிகழ்வுகளில் இது போன்ற விமரிசனங்களை ஆய்ந்து கவனத்தில் கொள்ளவேண்டும்.
சேகரனின் கருத்து மிகவும் கடுமையாக உள்ளது. அது அவர் இந்நிகழவை எந்தக் கண்ணோட்டத்தில் கண்டார் என்பதையே இது தெரிவிக்கிறது.

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஜெகதீஸ்வரன்

கூடல் என்பது இத்தனை இன்பமயமானதாக இருக்கும் என்று இதுவரை அறிந்ததில்லை. முதலில் சந்தித்த ஹரீஸ் முதல் இறுதியாக சந்தித்த சோடாபாட்டில் வரை அனைத்து பயனர்களும் அன்பாக இருந்தார்கள். முகம் முழுவதும் தவழுகின்ற மகிழ்வோடு வரவேற்று உரையாடினார்கள். மல்லை சுற்றுலா இல்லையென்றால் பலருடன் அளவுளாவ நேரம் கிடைத்திருக்காது. நிகழ்வுக்கு முன்பே சௌமியன், விஷ்ணுவரதன், ரகீம், சஞ்சீவி சிவகுமார் போன்றோருடன் பேசினேன். பேருந்தில் ரீதர் ஐயா அருகில் அமரவைத்து ஒரு மகனைப் போல என்னை பாவித்து ஆசி வழங்கினார். மயூரநாதன், சிவகோசரன், ஹப்துல்லா, நீச்சல்காரன், சண்முகம், ஹரீஸ் என பலருடன் பேருந்திலேயே அளவளாவ முடிந்தது. மல்லையில் யோகிசிவம் அவர்கள் தன்னுடைய உடல்நலத்தினையும் பெரியதாக கருதாமல் எங்களுக்கு வழிகாட்டியதை குறிப்பிட்டே ஆகவேண்டும். துரை மணிகண்டன், மணிகண்டன், தேனியார், செல்வா, தகவல்உழவன் போன்றோருடன் ஐந்துரதத்திற்கு செல்லும் போது அளவுளாவும் வாய்ப்பு கிடைத்தது. செங்கை ஐயா, அம்மா, தமிழ்பரிதி போன்ற பலருடன் மல்லையின் கடற்கரையில் அளவுளாவினேன். (எனக்கு சற்று ஞாபகமறதி வியதி இருப்பதால் பெயர் விடுப்பட்டிருப்பவர் மன்னிக்கவும்) விக்கி கூடலன்று பூங்கோதை அம்மாவின் ஆசிகள் கிடைத்தன. சோடபாட்டில், தென்காசியார், தினேஷ்குமார் பொன்னுசாமி போன்றோருடன் பேசினேன். நிகழ்வினை காணுவதற்கு அமர்ந்துவி்ட்டதால் கூடலன்று வெகுசிலருடன் மட்டுமே பேசும் வாய்ப்பு கிடைத்தது. இரவி, பார்வதி, சுந்தர், சூரியபிரகாஸ் மற்றும் பலரை நேரில் கண்டும் உரையாட வாய்ப்பு கிடை்ககவில்லை. (நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை) ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட விக்கிப்பயனர்களை காணவும், உரையாடவும் கிடைத்த நல்வாய்ப்பினை என்னும் நினைவில் வைத்திருப்பேன். அனைவருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:05, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நான் உங்களிடம் உரையாடினேன். நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வலைப்பூ பற்றியெல்லாம் கேட்டேனே! மறந்துவிட்டீரா? :) //எனக்கு சற்று ஞாபகமறதி வியதி இருப்பதால்// உண்மைதான் ஜெகதீஸ் :) :) :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:15, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அப்படிப்பார்த்தால் இரவி, சுந்தர், பார்வதி என அனைவருடனும் நான் உரையாடியிருக்கிறேன். சில வழக்கமான விசாரிப்புகளுடன் நம்முடைய பேச்சு முடிவடைந்துவிட்டது நண்பரே. மற்றவர்களுடன் விசாரிப்புகளைத்தாண்டி உரையாடியமையால் உங்களை மற்றொரு பட்டியலில் சேர்க்க வேண்டியதாகப் போயிற்று. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:05, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வத்சன்34

மிகவும் அருமையான நிகழ்ச்சி! செல்வா அவர்களுடன் நான் ஃபேஸ்புக் தமிழாக்கத்தில் பணியாற்றிய காலங்களில் ,தமிழ் மொழி அல்லாது பல்வேறு மொழிகளில் அவரது புலமையை கண்டு வியந்துள்ளேன்.அவரை நேரில் சந்தித்ததோடு அல்லாமல், அவரே என் பெயரை கேட்டதும் ஆச்சரியப்பட்டது, எனக்கு பெருமையாக இருந்தது. பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதே போல் விக்கிப்பீடியர்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கவும், வருடத்தில் ஒரு முறை, இவ்வாறு கூடலாம். மற்றும் இலங்கை தமிழருடன் பேசியது இதுவே எனக்கு முதல் முறை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரவி, சுந்தர் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி.-Vatsan34 (பேச்சு) 17:01, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாஷ்

கருத்துகள் வளர்முகமாக (பூனை தன் குட்டியைத் தூக்குவது போல) இன்றி மிகவும் விலகிச் செல்வதால் (புலி எலியைத் தின்பது போல) நான் சில (கூறக்கூடாத) விளக்கங்களையும் நிகழ்வுகளையும் கூறவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதனை நான் சில பிரிவுகளாகக் கூற விரும்புகிறேன்.

  • சென்னை
சென்னையில் நடத்தியதற்கு முதன்மைக் காரணம், பன்னாட்டுப் பங்களிப்பாளர்களும் வந்து சேர எளிமையான/அணுகத்தக்க இடம் என்பதுவே ஆகும். திட்டப் பணிகள் தொடங்கும்போதே வேறு எங்கேனும் நடத்த உரிய காரணங்கள் கூறி அணுகியிருந்தால் வேறெங்கு வேண்டுமென்றாலும் நடந்திருக்கக் கூடும். ஆனால், இந்த அளவு பங்களிப்பாளர்களும் நண்பர்களும் வந்திருப்பார்களா என்று தெரிந்திருக்காது.
  • கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்
நமது பல பங்களிப்பாளர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னை மாணவர்கள் மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறையைத் தெரியாதவர் பல்கலைக்கழகத்தில் யாரும் இருந்திருக்கமுடியாது. மேலும், தென்சென்னையில் இருந்ததால் பல நகரப்பகுதிகளையும் எளிமையாக பலராலும் அணுக முடிந்தது. இயந்திரவியல் பொறியியல் துறை அருகில் நடைபெறுகிறது என்று கூறித்தான் அனைத்து இடங்களிலும் பரப்புரை செய்யப்பட்டது. மேலும், தொடர்புக்கு எண்களும் தரப்பட்டிருந்தன. மூன்று நாட்களுக்கு முன்னதாக என்னுடைய எண்ணும் நான் கொடுத்திருந்தேன். மதுரையிலிருந்து எனக்கு அழைப்புகளும் வந்தன. சரியான முறையிலேயே வழிநடத்தினேன். குறிப்பிடத்தக்கவர் கைபேசியில் கூப்பிட இயலாமல் போனதற்கும் வெளியூரில் செல்லும் இடத்தின் முகவரியைச் சரியாக குறித்து வைக்காமல் போனதற்கும் தாக்கிப் பேசுவது என்பது சரியான தீர்வாகாது.
  • டேக் அரங்கம்
நான், நான்காமாண்டு படித்து வருவதாலும் வளாக வேலைவாய்ப்புத் தேர்வுகளாலும் என்னால் சரியாக வேலை பார்க்க முடியாது என்று நான் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவனாக என் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால், என்னால் எதுவும் செய்ய முடியாமல் போகிறதே என்ற ஏக்கம் என்னைத் தொடர்ந்து உருத்தியது. இந்த ஏக்கம் ஏற்பட்டவர்கள் (புதுப் பயனர்களோ பழையவர்களோ) மட்டுமே தாங்களாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றனர். தொடர்ந்து தினந்தோறும் இரவியிடம் (நல்கை விண்ணப்பம் வழங்கியதால் அவர் முதன்மை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்) பேசிய பொழுது அவரது அரங்கம் தொடர்பான வருத்தம் தெளிவாகப் புரிந்தது. கல்லூரியில் அரங்கம் எளிதாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் (அரங்கம் கடைசி வாரமே முடிவானது. அதுவரை அரங்கத்திற்கு உதவியவர்கள் பலர்; அவர்களது உதவியால் ஐஐடி, எஸ்.ஆர்.எம், சில மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவை விருப்பத்தில் இருந்தன; ஆனால், அனைவராலும் எளிதில் அணுகத்தக்க/விரும்பத்தகு இடம் அண்ணா பல்கலைக்கழகம் என்பதால் இரவி அரங்கம், தங்கும் இடம் தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் என்னிடம் கொடுத்தார்/நானே பெற்றேன்) நான் அப்பொறுப்பை ஏற்றேன். பின்னர்தான் பல சிக்கல்கள் இருப்பது தெரிந்தது. அரசியல் பேசக்கூடாது, அரசை எதிர்த்துப் பேசக்கூடாது, அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்துப் பேசக்கூடாது, முன்னாள் அரசுகளை ஆதரித்து, இந்நாளவரை இலக்காரமாகப் பேசக்கூடாது, அரங்க நாகரிகம் கடைபிடிக்க வேண்டும் என 1008+ நிபந்தனைகள் விதித்தனர். எப்படியோ கல்லூரியின் தமிழ்மன்றம் வழியாக மிகவும் கடினப்பட்டு பல வகுப்புளைப் புறக்கணித்து அரங்கம், விருந்தினர் மாளிகை, முன்னை மாணவர் மையத் தங்குமிடம் ஆகியவற்றைச் செய்து முடித்தேன். அனைத்துக்கும் இரவி இல்லாமையால் (மீண்டும் அவர் பெயர் ஏனெனில், நல்கை வாங்கியது அவராகையால்) என்னிடம் இருந்த பணத்திலும் நண்பர்களிடம் வாங்கியுமே இவற்றைச் செய்தேன். பின்னர் இரவியிடம் திருப்பி வாங்கிக் கொண்டேன். (இதனைச் சொல்லிக்காட்டுவதற்கு என் மனம் முழுதும் ஒப்பவில்லை, இருப்பினும் இவ்வளவு உழைத்ததற்கு வாழ்த்த வேண்டாம், கேவலமாகத் திட்டி குறைந்தபட்சம் விக்கிநாகரிகம் (ஐந்து தூண்கள்) கூடப் பாராமல் சம்மந்தம் இல்லாதவர்களைக் கடிந்துரைத்ததாலேயே இதனைச் சொல்லிக் காட்டுகிறேன்).
உண்மையாகவே அக்கறை உள்ள பலரும் என்னிடம் நிகழ்வு குறித்த விபரங்களைக் கேட்டறிந்தனர். அவர்களுள் பலரும் இங்கு கருத்து கூறியிருக்கும் நல்ல பார்வையாளர்களுள் இருப்பவர்களேயன்றி ஒருங்கிணைப்பாளர்களில்லை.
  • நிகழ்ச்சி நிரல்
இது பலரும் கூறும் ஒரு குறை. ஆனால், நம்மில் யாவரும் தொழில்முறை நிகழ்ச்சி நடத்துனர்கள் இல்லை. சில வழுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அப்படியொரு மகிழ்வான தருணத்தில் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. குறிப்பிட்ட "எதையோ" எதிர்பார்த்து வந்தவர்களுக்குத்தான் அது கிடைக்காததால் குறைகள் மட்டும் கண்ணில் பட்டது போலும். இரவியும் சுந்தருமே மேடையில் இருந்ததைச் சுட்டிப் "பிறரை மேடையேற்றாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்" என்று ஒரு அடிநாதமற்ற கருத்து எழுப்பப் பட்டுள்ளது. நான் பேசிய குழுப்பேச்சில் (panel discussion) ஆதாரங்களற்ற அதே வேளையில் ஊடகங்கள் கூடியிருக்கும் ஒரு பொதுவிழாவில் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தும் தலைப்பிற்குத் தொடர்பற்ற சில கருத்துகள் முன்வைத்து அவற்றுக்கு எதிர்க்கருத்துகள் கூறப்பட்டு வளர்முகமாக நடைபெற வேண்டிய குழுப்பேச்சு பலரது முகத்தேய்வுகளுடன் நடந்தேறியது. தரப்பட்ட குழுப்பேச்சுத் தலைப்பு "பொதுவெளிக்கு கட்டற்ற மென்பொருள்களை எடுத்துச் செல்வது எப்படி?" என்பது. ஆனால், அதற்கு அணுவளவும் தொடர்பற்ற "சொந்த ஆதங்கங்களும் பொதுமையாக்கப்பட்ட (generalized) கருத்துருக்களும் வெறும் கவர்வுக்காக முன்வைக்கப்பட்டன." அவையும் பார்வையாளர்களால் மறுக்கப்படாமல் தொடர்ந்தது. குறைகூறும் நல்லோர் பலரும் அங்கிருந்தது நினைவிருக்கலாம். அவர்கள் குறைந்தது தலைப்பு ஒருங்கின்றிச் செல்கிறது என்று வழிநடத்தியிருக்கலாம் (moderate). ஒரு குழுப்பேச்சின் பார்வையாளர்களுக்கு அதற்கான முழு உரிமை உள்ளது. இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து இவ்வளவு குறைகளை எண்வரிசையிட்டுக் கூறுபவர்களுக்கு இது தெரியவும் வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன். (செல்வா மொழிபெயர்ப்பு குறித்த உரையின்போது குறுக்கிட்டு சில கருத்துகளை கூறியது நினைவிருக்கலாம்; நிகழ்வினைக் கவனித்திருந்தால்) எனவேதான், ஏற்கனவே அவற்றைப் பற்றிய சிறிய புரிதல் உள்ளவர்களைப் பேச அழைத்ததே தவிர, குறிப்பிட்டவர் மேடையேறக்கூடாது என்ற இல்லை.
மேலும், சொன்ன நேரத்தை விட சிறிது நேரம் அதிகம் எடுத்துக் கொண்ட விருந்தினர்களாலும் இந்த சிறு சிறு தொய்வுகள் என்று நீங்கள் கூறும் தொடர்பறு போக்குகள் ஏற்பட்டன.
  • டி-சட்டைகள்
டி-சட்டைகள் வந்தோருக்கு ஒரு நினைவுப் பொருளாக இருக்கும் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. ஆனால், அவை சிலருக்குக் கிடைக்காமல் போனதே வருத்தம். இதனை முன்கூட்டியே வருகையாளர் எண்ணிக்கை தெரிந்திருந்தால் முழுமையாகச் செய்திருக்கலாம். அதிகமாக அடித்து வீணாவதைத் தடுக்கவே குறைவாக அடிக்கப்பட்டது.
  • உணவு
உணவு தங்கள் பொறுப்பு என்று முன்பே கூறியாகிவிட்டது. இனி, இதில் கூற ஒன்றுமில்லை. நீர்ச் சிக்கல், என்னுடைய தவறான புரிதலின் காரணமாக ஏற்பட்டது. வெகுநாட்களுக்கு முன்னர் அவ்வரங்கில் நடந்த நிகழ்வில் நீர் அங்கேயே குழாயில் வந்ததை நினைவிற்கொண்டிருந்துவிட்டேன். ஆனால், பின்னர் நம் நண்பர்கள் இருவர், மிகுந்த சிரமப்பட்டு நீர் வாங்கிவந்தனர். அவர்களுக்கு என் நன்றியும் என் பிழைக்கு மன்னிப்பும். இவ்வெண்ணம் (நமது நிகழ்வு நாம்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களின் அறைகூவலாகவே நான் இப்பக்கத்து வளர்முகமற்ற வசைபாடல்களைப் பார்க்கிறேன்).
  • பாராட்டுச் சான்றிதழ் ஒப்பச் சச்சரவு
விக்கியில் ஏற்கனவே, தங்களுக்குப் பிடித்தவர்களிடம் ஒப்பம் வாங்குவதற்குப் பக்கம் அமைக்கப்பட்டு பலரும் அதில் விருப்பம் தெரிவித்திருந்தனர். இங்கு எனவே, அவர்களது ஆசை நிறைவேறாமல் போகக்கூடாது என்றே அவ்வாறு செய்யப்பட்டது. மேலும், இதனை ஒரு பெரிய விடயமாக எடுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் அளவு மயூரநாதன் அவர்கள் புரிதல் இல்லாதவர் இல்லை. அவருக்கு இவ்விடயம் நன்கு தெரியும். மேலும், அதனைப் பாராட்டவும் செய்தார். (அனைத்துப் பயனர்களும் சமமே). இப்புரிதல் தன்மை இல்லாதவரே இதனைப் பெரிதாகப் பார்த்தனர். என்னிடம் ஒப்பம் வாங்க சிலர் வந்தபோது நான் மறுத்தது கண்டு வெகுண்ட பொதுவன் "குடும்பத்திற்குள் பாகுபாடு என்ன? அனைவரிடமும் வாங்குவதுதான் சிறப்பு, பத்திரத்தில் இடமில்லாதது கண்டுதான் வருத்தம்" என்று கூறினார்.
இது போன்ற விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், பிற மனிதர்களை மதிக்கும் மாண்பும் இருப்பவர்களுக்கு அது ஒரு பொருட்டாகக் கூட இருக்கவில்லை. பிறருக்கு எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.
  • சுந்தரேசுவரன் ஐயா குறித்து
என் ஆசிரியர் பேச விருப்பமில்லை என்றும் அதிகப்படியான பயணத்தால் நலக்குறைவு குறித்தும் முன்னாள் இரவே கூறிவிட்டார். வேறேதேனும் விபரம் தேவைப்படுபவர்கள் அவரது எண் தருகிறேன் கேட்டுக்கொள்ளவும்.
  • வேறேதேனும்?
வேறேதேனும் சாட நினைப்பவர்கள் சாடலாம். கூறிப் புரியவைக்கக்கூடாத சிலவற்றைக் கூற அணியமாகத்தான் உள்ளேன். அதனைப் புரிந்துகொள்ள மனமிருப்பவர்கள் சாடலாம் அன்புடன் என்னை வினவலாம். என் எண்: எட்டு ஒன்று நான்கு எட்டு நான்கு நான்கு ஆறு இரண்டு ஒன்று மூன்று.
என் குடும்பத்துடன் உறவாட ஒரு வாய்ப்பளித்து கல்லூரி வந்தும் மாமல்லபுரம் வந்தும் நிகழ்வைச் சிறப்பித்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய மட்டற்ற மகிழ்வின் அளவை என்னுடன் கதைத்தவர்கள் அறிவர். வேறு சில எண்ணத்திற்காக வந்தவர்களுக்கு இந்நிகழ்வு ஏமாற்றமளித்திருக்கக் கூடும். ஆனால், பல நாள் கழித்து உடன் பங்களிப்போரைச் சந்தித்ததில் அடைந்த மகிழ்வு பலருக்கும் எளிதில் மறக்காது. அதுவே, சொத்து; அல்லாதவை சொத்தை என்று விலக்கிக் கொள்ளவும்.
நன்றி! -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:10, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தினேஷ்குமார் பொன்னுசாமி

தமிழ் விக்கியின் பத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. சனிக்கிழமையன்று தேர்வு இருந்ததால், ஞாயிறன்று மட்டும் கலந்துகொண்டேன். நான் பங்குபெறும் விக்கி சார்ந்த முதல் கூடல் இதுவே. ஆரம்பத்தில் சற்று தயக்கத்துடன் ஓரிரு விக்கிப்பீடியர்களிடம் பேசத்துவங்கினேன். முதல்முறை தன்னலமற்ற, கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்காக பங்களிக்கும் பல பயனர்களை ஓரிடத்தில் கண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. இன்னும் ஒரு நாள் முன்னரே வந்து அனைவரிடமும் பேசியிருக்கலாம் என்றே எண்ணினேன். மயூரநாதன், செல்வா, நக்கீரன் (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்), பூங்கோதை, அவர்களுடைய மகன் சோடாபாட்டில் (:D), நீச்சல்காரன்,சண்முகம், தகவலுழவன், பார்வதிஸ்ரீ, அபிராமி, நந்தினி, துரை மணிகண்டன், மணி. மணிவண்ணன், ஜெகதீஸ்வரன், சூர்யபிரகாஷ், தென்காசி சுப்ரமணியன், தேனி எம். சுப்ரமணி, போன்றோரிடம் சற்று அதிக நேரமும், இரவி, சுந்தர், சிவகோசரன், யுவராஜ் பாண்டியன், கிருஷ்ணபிரசாத், v.b.மணிகன்டன், ஸ்ரீதர், விஷ்னுவர்தன், சௌமியன், ரகீம் (தெலுங்கில் :D), சஞ்சீவி சிவகுமார் ஆகியோரிடம் சற்று குறைவான நிமிடங்களும், புருணோவிடம் என்னை அறிமுகம் செய்துகொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. குறைகளென்று எதுவும் எனக்கு தெரியவில்லை.. நிறைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமே உள்ளது. அடுத்த முறை நடைபெறும் கூடலில் இரண்டு அல்லது மூன்று நாட்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்விழாவினை சிறப்பாக நடத்திய, நடைபெற நேரடியாக, மறைமுகமாக, உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. எனக்குத் தெரிந்து, தமிழை மையமாகக் கொண்டு இணையத்தில் பங்குபெறும் அனைவரும் கூடிய மிகப்பெரிய நிகழ்வு இதுவே..! வாழ்க தமிழ்! வளர்க விக்கிப்பீடியா! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:25, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதல்வா கருத்து

விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளூம் வாய்ப்பை முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் எனக்கு ஏற்படுத்திகொடுத்தமைக்காக அவருக்கு முதலில் நன்றியைத்தெரிவித்துகொள்கிறேன்.இந்த நிகழ்வு ஒரு முறையான தமிழ் விழவுபோல் அல்லாமல் மிக இயல்பாக அமைந்தது தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. இது ஒரு நல்ல துவக்கம்.பழமையை விடுத்து காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய சிந்தனைகளையும்,புதிய முயற்சிகளையும் புகுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது. விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நிகழ்வின் இறுதியில் கேக் வெட்டிக்கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.சில பங்களிப்பாளர்கள் குறிப்பிடுவதுபோல் பெரிதாக ஒன்றும் குறைகூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இது ஒரு தன்னார்வ அமைப்பு. இதில் ஒவ்வொருவரும் விரும்பி வந்து பணிகளைத் தானே ஏற்கவேண்டும். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் விழைவாக எங்கள் பல்கலையில் நான் செல்லும் வகுப்புகளில் மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளையும் அதில் பங்கெடுத்துச் செல்பவர்களையும் குறிப்பிட்டு மாணவர்களும் இதில் பங்கெடுக்க முயற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் அடுத்த வார இறுதிக்குள் சுமார் 230 கட்டுரைகளை வழங்க எனது மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற்ற 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் எங்களது பல்கலைக்கழகத்திற்கு உத்தமம் மாணவர் அமைப்பு தொடங்க அனுமதி பெற்றுள்ளேன். அதன் தொடக்க விழா விரைவில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன். அந்த விழாவிலும் விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டு சில முன்னெடுப்புகளை தொடங்கிவிட்டேன். இது போன்று தன்னார்வ முனைப்பில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் விக்கிப்பீடியர்கள் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டுமாய் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்கொண்டாட்டத்தை சிறந்த முறையில் அமைத்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிற்றெறும்பு செங்கைப் பொதுவன்

  • "தமிழ் தழைக்க உதவுவேன்" எனத் தற்றுடுத்திக்கொண்டு முன்வந்துள்ள இளைஞரின் எழுச்சியைக் கண்டேன். [1]
  • கனடா, அரேபியா, ஈழம் ஆகிய நாடுகளின் இணைய-விழா தமிழகத்தில் எழுச்சியுடன் பொங்கிப் பொலிவுற்றது.
  • நிறை, குறை எல்லாரும் கூறலாம். கூறியுள்ளனர். பாராட்டுகள். நடந்துகொள்ளும்போதும், நடத்தும்போதுந்தான் படவேண்டிய பாடு புரியும்.
  • விக்கி-நடை எப்படி இருக்கவேண்டும் எனக் கூறிய இரவி விளக்கம் என்னை இளகவைத்தது.
  • தொய்வில்லாமல் துழனியோடு முன்னேறிய மயூரநாதன் கூறிய தன் வரலாற்றுக் குறிப்புகள் எனக்கு வழித்தடம் போட்டிருக்கிறது.
  • செல்வாவின் செந்தமிழ் உணர்வு என்னைத் திக்குக்காடச் செய்த்து.
  • மேடை உரையில் கருத்து மாறுபாடு வந்தபோது சுந்தர் கூறி நடுவுநிலைமை விளக்கங்கள் அரங்கை ஊமையாக மாற்றியிருக்கவேண்டும்.
  • தகவலுழவன் போன்ற பற்பல உழைப்பாளிகளின் தன்னடக்கத்துக்குத் தலைவணங்குகிறேன்.
  • யாரைச் சொல்வது, யாரை விடுவது, ஒவ்வெருவரிடமும் ஒவ்வொரு வகையான தனித்திறன். [2] [3]
  • உணர்வுகள் நம்மை ஒன்றிணைக்கட்டும்.--Sengai Podhuvan (பேச்சு) 00:28, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  1. குடி சொய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடித்தற்றுத் தான் முந்துறும் (திருக்குறள்)
  2. நீச்சல்காரன் உருவாக்கியுள்ள தமிழ் ஒற்றுப்பிழை திருத்தி
  3. வான்குருவியின் கூடு, வல் அரக்குத் தொல் கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்வு அரிதால் - யாம் பெரிதும்
    வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது,

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் நடத்திப்பார் என்பார்கள். பம்பரமாகச் சுழன்ற மாணாக்கர் - பயனர்கள் ஊதா பனியனை முதலிலேயே அணிந்திருந்ததால் என்ன ஐயப்பாடு எழுந்தாலும் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எளிதாய் இருந்தது. பெயர் மட்டும் தெரியும் முகம் தெரியாது என்ற நிலையில் ஒருவரை ஒருவர் விரைவாகப் புரிந்துகொள்ள அவர்களின் உதவி பெருந்துணையாய் அமைந்தது. எனவே பிற்பகலில் பனியன் வழங்கியதைப் பெருங் குறையாகப் பட்டியலிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

நிகழ்ச்சி நிரலை எழுதி வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில் கூட திணறல்கள் ஏற்படும். அமைப்பாளர்கள் திட்டமிட்ட வரிசையில் குறிப்பிட்ட நேரப்படி நிகழ்ச்சியைத் தொடர்ந்தது பெரிதும் பாராட்டத்தக்கது. மதியம் காலம் சில நிமிடங்களைக் கடந்தபோது அதற்கான காரணத்தையும் கூறிவிட்டு பேசியதில் என்ன தவறு இருக்க முடியும் ?

விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை கல்லூரி உணவகத்தைத் திறக்கச் செய்து குறைந்த விலையில் மதிய உணவினை ஏற்பாடு செய்ததை மறக்கவே முடியாது. இவ்வசதி இல்லை என்றால் உணவிற்காக அடையாறு வரை சென்றிருக்க வேண்டும்.

தனித்தனியாகப் பயனர் அறிமுகம் மேடையில் செய்திருந்தால் குழப்பமே முடிவாக இருந்திருக்கும். ஏனெனில், சிலர் காலையிலும், தாமதமாகவும், சிலர் மாலையிலும், வந்திருந்த சிலரும் சொந்த வேலையாக வெளியே சென்று வந்த சூழலே நிலவியது.

பிற்பகலில் கூட்டத்தைத் துவங்கியபோது காலை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக எடுத்துரைத்ததும் போற்றத்தக்கது. எந்தவிதமான தொய்வுமின்றி விழாவைத் தொடர்ந்து நடத்தியதும் பாராட்டுக்குரியது.

வருகை தந்தவர்கள் பலர் பல்வேறு வகைகளில் முக்கியமானவர்கள். மேடை ஏற்றினால் எல்லோரையுமே மேடையில் அமரச் செய்திருக்க வேண்டும். முடிந்தவரை தக்கோருக்கு உரியவகையில் சிறப்பளிக்கவே செய்தனர். மாலை போடல் / துண்டு அணிவித்தல் போன்ற அபத்தங்கள் இல்லாதது பெருஞ் சிறப்பெனவே கூறிட விழைகின்றேன்.தேவைப்பட்ட நேரங்களில் மட்டும் நாற்காலிகளை மேடையில் போட்டிருந்தால் யாரும் குறை சொல்லியிருக்க இயலாது.

ஈரோட்டிற்கு கவிஞர் தமிழன்பன், மதுரைக்குப் பெரியவர் தமிழண்ணல் என்பதுபோல் சென்னைக்கு முதுபெரும் தமிழறிஞர் செங்கைப் பொதுவன் அவர்கள மூலமாக, தமிழில் விக்கிப்பீடியாவைத் துவக்கிய மயூரநாதன் கையெழுத்திட்ட சான்றிதழை உரியோருக்கு வழங்கிய மாண்பினை பங்கேற்றோர் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அவர் விக்கிப்பீடியாவிற்கு ஆற்றிவரும் பணிக்காகவே தனியாக ஓர் விழா எடுக்கவேண்டும். அதுவே ஓர் சிறந்த பயிற்சிப் பட்டறையாகவும் இருக்கும்.

இந்நிகழ்சியையைக் குறைமட்டுமே சொல்வோர்க்கு, செங்கைப் பொதுவன் பேசியதன் கருத்தை மட்டுமே பதிலாகக் கொள்ள வேண்டுகின்றேன்.

செங்கைப் பொதுவன் பேசியது :- "நான் வழங்கிய சான்றிதழ்களை ஒவ்வொருவரிடமிருந்தும் நானே பெற்றுக்கொண்டதாக எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.". கூட்டு முயற்சிக்குத் தேவையான தன்னடக்கம்.

வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஏதேனும் நிகழ்ச்சிகள் / போட்டிகள் / வேறு எதையாவது :) செய்ய முடிந்தால் நல்ல பரப்புரை வாய்ப்பாக இருக்கும். பரிந்துரைகள் தேவை. பொறுப்பேற்பவர்களும் தேவை :)--இரவி (பேச்சு) 07:32, 9 மே 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் அறிவிப்பு தொடக்கம் முதல்
  • விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை நிகழ்வு துவக்கம் வரை உள்ள பல உரையாடல்களில், தங்கள் ஆலோசனைகளை வழங்க போதிய அவகாசம் இருந்தது.
  • நிகழ்வு நேரமும் இடமும் அறிவிப்பில் உள்ளபடி சரியாக துவங்கியது.
  • பலர் தாமதமாக வந்தனர்.
  • கருத்துகள் போர்வையில் சூடான விவாதங்கள், தன் சார்ந்த குறைகளை வெளிப்படுத்துவது போன்ற தோற்றத்தை தவிர்க்கலாம்.
  • ஒருங்கிணைப்பாளர்கள் பலர் இருக்க ஒருவரையே குறிவைக்கும் விமர்சனங்களைத் தவிர்கலாம்.
  • நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைவால், இருந்த ஒருசிலர் நிகழ்வு ஏற்பாடுகள், மற்றும் தொலைபேசி அழைப்புகளை கவனிப்பதில் மிகவும் களைப்புற்றதை கண்டேன்.
(பி-கு) *நாகர்கோவில் விக்கிப்பீடியா அறிமுகம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம் மாணவர்களுக்காக நடத்திய வெவ்வேறு தலைப்பிலான போட்டி அறிவிப்பு நிகழ்வு. விக்கிபீடியா ஒரு தலைப்பு மட்டுமே.
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் பயனர்கள் கூடல்கள் நிகழ்வினை முந்தயதுடன் ஒப்பிட கூடாது.
  • சிறப்பு விருந்தினர் அழைப்பு இருந்தால் யாரை அழைப்பது யாரை விடுவது அவர்களை கவனிக்கவே நேரம் போதாது, விக்கிப்பீடியா பயனர்களின் நிலை?
குறை ஒன்றும் இல்லை
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு
இதை நினைவு கூர்ந்தால் நலம் --ஸ்ரீதர் (பேச்சு) 06:02, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார்

ஒரு பாரிய நிகழ்ச்சியை நடாத்துவதில் உள்ள பழுவும் வலியும் பெரியது. பலரும் தனிப்பட்ட பணிச்சுமையுடன் குமையும் இக்கால கட்டங்களில் வெற்றி தரக்கூடிய, தமிழ் விக்கியின் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வை நடாத்தியுள்ளோம் என்பதே என் முடிபு. இதில் பலரும் பலவகைப் பங்களிப்பை செய்துள்ளனர். ஆயினும் அதிக பணிகளை முன்னின்று தொடர்ந்த இரவி, சூரிய பிரகாசு முதலானவர்கள் மனங்கொள்ளப் படவேண்டும். பாராட்டப் படவேண்டும்.

கூடலை ஒட்டி பல வெற்றிதரக்கூடிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. அவை த.விக்கியின் எதிகால வளர்ச்சிக்கு மிகத்துணையாக அமையும் என நம்புகின்றேன், கூடிப்பயிரிடுவோம்; மிளிர்க நலம்.

குறைகள் இருந்தது தான். பார்வையாளர் அரங்கில் அமர்ந்துகொள்ளாமல் மேடை ஒழுங்கில் நானும் பங்குபற்றியிருக்கலாம் என திரும்பும் பயணிப்பின் போது எனக்குள் ஒரு குற்ற வருடலும் இருந்தது. பொறுப்புக்களை யாரும் பகர்ந்து தந்தால் தான் செய்யலாம் என நினைப்பது சரியல்ல.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:42, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தகவலுழவன்

நண்பர் சேகரனுக்கு!

மிகவும் வெளிப்படையாக தங்கள் எண்ணங்களை, புகுபதிகை செய்து வெளிப்படுத்தியமைக்கு, முதலில் நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில், இச்சமூகம் வளர்ச்சியை நோக்கியது. சமூகம் என்பதை விட குடும்பம் என்றே நான் கூறுவேன். இக்குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே இருந்த எங்களுக்கு, நேரில் பார்த்துக் கொண்ட போது ஏற்பட்ட மனத்துள்ளலுக்கு, எல்லைகளே இல்லை. இத்தகைய மனத்துள்ளல் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரிந்து இருந்தால், இன்னும் பலர் இதற்காக உழைத்திருப்பர். எதிர்காலத்தில் உங்களது பல சுட்டல்கள் இருக்காது. இது முதல் கூடல். முதல் கொண்டாட்டம். கட்டற்ற குடும்பம் என்பதால், கட்டுபாடுகளற்றவர்கள் என்பது பொருளல்ல. இங்குள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டிருந்தால் ஓடோடி வந்து உதவியிருப்பர். ஒரு அழைப்புக்கு பலர் ஓடி வந்து உதவும் குடும்பத்தவர் நாங்கள். நீங்களும் தொடர்ந்து வருக. பங்களிப்பு தருக. இங்குள்ள பல உரையாடற்பக்கங்களில் கவனித்தீர்கள் என்றால், எங்களுக்குள்ளே நடந்த சூடான விவாதங்கள் தெரியும். இங்கு தொடர்ந்து இருப்பவர்கள், அனல் பரக்க பேசியவர்கள் மட்டுமல்ல. பிறருக்கு, அணையாக மாறியவர்களும் ஆவர். நீங்களும் தொடர்ந்து வந்தால், எங்களின் இடர்களை உணர்ந்தால், தடைகளை உணர்ந்தால், அவ்விதம் மாறுவீர்கள் என்றே நம்பிக்கைக் கொள்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விருப்பம். நான் ஆத்தூரில் வசிக்கிறேன். எனது எண்:9095343342. பலரின் மேலாண்மை தேவை. வருக. மதிப்பிடுதல் மட்டுமே வளர்ச்சியைத் தராது. இணையத்தமிழுக்கு தங்களின் இணையற்ற படைப்புகளைத் தருக.

நண்பர்களே!

  • அதிகாலை 4 மணிக்கே உதித்து, அருமையான தங்குமிடம் அமைத்துக் கொடுத்த சூரியனை(இரவியை) மறக்க இயலாது. அனைவரும் ஒரே இடத்தில் இருந்திருந்தால், இரவிக்கும் அலைச்சல் இருந்திருக்காது. எது எப்படியோ, சூர்யாவின் திறனால் இக்கூடல் இனிதானது. யார் யாரெல்லாம் உதவினார்கள் என்று இந்த இரண்டு சூரியன்களுக்கே தெரியும். அவர்களை வெளிச்சமிட்டு காட்டுக. படமெடுத்த குழுவினரை அவர்கள் ஒப்புதலோடு, அவர்கள் கருவிகளிலேயே, படமெடுத்து விட்டேன். அதுபோல அனைத்து ஒத்துழைப்பாளர்களின் படங்களையும், ஆவணப்படுத்துக.
  • உதவித்தொகையை 29ந்தேதி இரவு வாங்கியதால், அதுவரை தடுமாறினேன். 28ந்தேதி காலை, இரவு பார்வதிஶ்ரீயும், நண்பகல் உணவை முனைவர்.மணிகண்டனும், தேனி சுப்பிரமணியும் 29ந்தேதி தென்காசி சுப்பிரமணியமும், தினேசும், ..மூக்குபுடைக்க கவனித்தனர்.
  • பலருடன் மிகவும் மகிழ்ச்சியாக உரையாட முடிந்தாலும், நேரம் போதவில்லை. பலரும் பலவித திட்டங்களை வளர்த்தெடுக்க திடமாகி இருப்பர்.
  • உடல் நலம் குன்றி இருப்பினும், முனைவர் பரிதி வழக்கம் போல சுழன்று, சுழன்று படமெடுத்துக் கொண்டு இருந்தார்.
  • வழக்கமாக ஓரிரு வரிகள் பேசும் சுந்தர், தமிழ்விக்கியின் பல்வேறு சூழல்களை பேருந்திலும், மேடையிலும் விரிவாக்கியது மலைப்பாக இருந்தது.
  • புருனோவின் மாமல்லபுர சிற்ப வர்ணனை வரலாற்று அறிவை அகலமாக்கியது. மாமல்லபுரத்தில் கீழே படுத்து படுத்து படமெடுத்த படக்குழுநண்பரை மறக்கவே இயலாது. நம்மவர் நிமிர்ந்து நிற்க, ரொம்ப குனிஞ்சிட்டார் இல்லிங்களா!
  • குழந்தை மனத்துள்ளலுடனும், உற்சாகத்துடனும் இரு நாட்களும் திகழ்ந்த மயூரநாதன், செங்கை பொதுவன், செல்வா, போன்றவரின் அணுகுமுறை மனஎண்ணங்களை அகலமாக்கி, மென்மையாக்கியது.
  • இலங்கை நண்பர்களின் மென்மையும், மொழியறிவும் கண்டு மகிழ்ந்தேன். இருவரையாவது காண முடிந்ததே என்று மனம் அமைதியடைந்தது.
  • நிறைய சொல்லலாங்க! அடுத்த முறை இது போல கூடல், என்று நடக்குமோ என்று மனம் ஏங்குகிறது. அப்படி நடக்கும் போது, தொழில்நுட்ப உதவி அணி(சுந்தர்,சண்முகம், தினேசு,நீச்சல்காரன்,...), பங்களிப்பாளர்கள் அணி என இரு பிரிவுகள் அமர்ந்து கலந்துரையாடல் நிகழ்ந்தால் பலருக்கும் பல பயன்கள் கிடைக்கும். வருடா வருடம் பொங்கலன்னு கூடல் நடத்தினால், பலருக்கும் அதிக விடுமுறை கிடைக்கும்.
  • இருக்கிற இடமே தெரியாம, வந்துட்டு போன லினக்சு நிரலர்கள் (ilugc,fsftn) அசத்திட்டாங்க. அவர்களுடன் உரையாடி பேறு பெற்றவர் எத்தனை பேரோ!

இறுதியாக, ஏதாவது ஒரு குறை சொல்லணும். அது தானே இப்ப தமிழக 'டிரண்டு'. இதுக்காகவே, ஒரு 'ரூம்' போட்டு யோசிக்கிறேன்.('ரூம்ல' போட்டு இல்ல.!)அவற்றை அடுத்த கூடலில் சொல்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 19:41, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மயூரநாதன்

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக் கூடல் வெற்றிகரமாக நடைபெற்று அது தொடர்பிலான நிறைகள் குறைகள் குறித்த உரையாடல்களும் உடனடியாகவே தொடங்கியிருப்பதை ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன். இந்த நிகழ்வை ஒரு மாநாடாகவோ அல்லது ஒரு பெரிய பொது நிகழ்வாகவோ நடத்த முயலவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். அதனாலேயே இதற்குக் கூடல் என்று பெயரும் வைத்தோம். நமது நோக்கம் பெருமளவுக்கு நிறைவேறியது என்பதே எனது கருத்து. இதற்காக இந்நிகழ்வை முன்னின்று ஒழுங்கு செய்த இரவிக்கும், தனது கல்லூரி வேலைகளுக்கு மத்தியிலும் இதற்கும் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிய சூரியப்பிரகாசுக்கும், சளைக்காது பல்வேறு தேவைகளுக்காகவும் வடிவமைப்புக்களை உருவாக்கி வழங்கிய அன்டன், தாரிக் ஆகியோருக்கும், இந்தியாவில் இருந்தும், இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் பல்வேறு வகைகளில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ச்சியாகப் பயனர்களுக்குத் தகவல்களை வழங்குவது முதற்கொண்டு, பரப்புரை, பத்திரிகையாளர் தொடர்பு, நிதி ஒழுங்குகள், வெளியில் இருந்து வந்தவர்களை வரவேற்று வேண்டிய வசதிகளைச் செய்தல் என மூன்று நாட்களுக்கு மேலாகப் போதிய தூக்கமும் இன்றி உழைத்த இரவியின் பங்களிப்பு கூடலின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது.

கூடலின் இரண்டு நாட்களும் தமிழ் விக்கிப் பயனர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு, பழகிப் புரிந்து கொள்வதற்குப் போதிய அளவு நேரமும், வாய்ப்பும் கிடைத்தது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் ஏற்பட்ட நெருக்கம் தமிழ் விக்கியின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது எனது நம்பிக்கை. இது மட்டுமன்றி, தமிழ் விக்கிப் பங்களிப்பாளர் சமூகத்துக்கு வெளியில் தமிழ் விக்கியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரையும் நிகழ்வின்போதும் நிகழ்வுக்கு வெளியிலும் சந்தித்துத் தொடர்புகளைப் பேணிக்கொள்ளவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. தவிர, இந்திய விக்கிமீடியாப் பிரிவைச் சேர்ந்த சௌமியன், CIS A2Kஐச் சேர்ந்த விஷ்ணுவர்தன், தெலுங்கு விக்கிப்பீடியர் ரகீம் ஆகியோர் நமது பயனர்களோடு இரண்டு முழு நாட்களும் தங்கியிருந்தது, தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், நமது தேவைகள், ஆற்றல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும், அவர்கள் எவ்வாறு நமக்கு உதவ முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளவும் பெரு வாய்ப்பாக அமைந்தது. பல முக்கியமான ஊடகங்களில் ஒரே நாளில் பத்தாண்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளிவந்தன. பிபிசி தமிழோசை இரவியின் பேட்டியை ஒலிபரப்பியது. அனைத்திந்திய வானொலியிலும் நமது பேட்டியை ஒலிபரப்பவிருக்கிறார்கள். எதிர் காலத்திலும் நமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தர ஒத்துக்கொண்டுள்ளனர். இவற்றுக்கும் மேலாக நிகழ்வுக்காகப் பயனர்கள் ஒன்று சேர்ந்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்டு மறுபதிப்புக் காண முடியாமல் இருக்கும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை விக்கிமூலத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இம்முயற்சி வெற்றி பெற்றால் அது தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சிக்குப் பெரும் உந்து சக்தியாக அமையும்.

இவ்வாறான ஒரு பரந்த நோக்குப் பின்னணியின் அடிப்படையில்தான் நிகழ்வின் வெற்றி தோல்விகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். டீசர்ட் கிடைத்ததா இல்லையா, மேடையில் இருக்கைகளில் ஏன் எவரும் இருக்கவில்லை, விக்கிப்பீடியா பதாகை ஏன் நடுவில் இருக்கவில்லை, சான்றிதழ்களில் யார் கையொப்பம் இடுவது போன்ற முக்கியத்துவம் குறைந்த விடயங்களில் கவனம் செலுத்தித் தலையை உடைத்துக்கொள்வதில் எவ்வித பயனும் கிடையாது. இவை எல்லாம் சாப்பாட்டுக்குப் போடும் "பிளேவர்" போல. இருந்தால் நல்லது ஆனால் உடல் ஆரோக்கியத்துக்குக் கட்டாயம் இல்லை. எனவே இவ்வாறான சிறு சிறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தி பெரிய நோக்கங்களில் இருந்து திசைதிரும்பவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு பயனர், நான் முதலில் கையொப்பம் இட்டபின்னர் விரும்பினால் மற்றவர்களிடமும் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு எனக்கு அவமானம் என்ற வகையில் ஒரு குறிப்பை இட்டிருக்கிறார். என்மீது மதிப்பு வைத்துள்ள அவருக்கு எனது நன்றி. ஆனால், அந்த மாதிரி எண்ணும் அளவுக்கு நான் இல்லை. நானும் எனது சான்றிதழில் முடிந்த அளவுக்குப் பல பயனர்களின் கையெழுத்துக்களை வாங்கியுள்ளேன். வாங்க விரும்பிய சிலரிடம் வாங்க முடியாமலும் போய்விட்டது. என்னோடு சேர்ந்து உயர்ந்த நோக்கமொன்றை அடைய உழைக்கும் பலருடன் சேர்ந்து இன்னொரு பயனரை அங்கீகரிப்பதில் எனக்கென்ன அவமானம். அது எனக்குப் பெருமையே.

அடுத்த தடவை நமது செயற்பாடுகளை மேம்பட்ட முறையில் செய்வதற்கான கருத்துக்களை முன்வையுங்கள். ஆனால், தன்னார்வமாக உழைப்பவர்களின் ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள்.

---மயூரநாதன் (பேச்சு) 19:54, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன்

நான் இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒருங்கிணைப்புப் பணிகள் சிலவற்றை செய்ததன் அடிப்படையில் எனது கருத்துக்கள் சில.

சிறப்பாகச் செய்யப்பட்டவை

  • பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பாக விக்கியில் பரந்த கருத்தொற்றுமை, கூட்டுச் செயற்பாடு இருந்தமை.
  • முன்மொழிவு திறனாக எழுதப்பட்டு, கேக்கப்பட்ட கேள்விகளுக்கு வேகமாக, விரிவாக, பொருத்தமாக பதில் கூறியமை. விக்கிமீடியா நிறுவனம் மிக வேகமாக பதில் தர இந்த வேகமாக பதில்கள் மிகவும் உதவின.
  • கூடல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நகர்வுகள்: பங்களிப்பாளர்கள் சந்திப்பு, பரவலாக்கல், தமிழ் கல்விக் கழகத்துனூடான சந்திப்பு போன்றவை. இதில் "தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்" படைப்பாக்கப் பொதும உரிமையின் கீழ் வருவதே இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்ந்தற்கான ஒரு மிகச் சிறந்த சான்றாக அமைகிறது.
  • நிகழ்வை முறையாக ஆவணப்படுத்தியது. கருத்துக் கோரல், முன்மொழிவு, அழைப்பு விடுதல், செலவுகள் ஆவணப்படுத்தல், தொழில்முறை ஆவணப்படுத்தல், அறிக்கைகள் என்று எல்லாமே விக்கியில் திறந்த முறையில் மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
  • வரைகலைப் பங்களிப்புகள், மேற்சட்டை அச்சடிக்க முன்னெடுக்கப்பட்ட பணி ஒழுங்கு, கட்டுரைகள் எழுதல், கையேடு எழுதல் போன்றவற்றுக்கு பரந்த பயனர்களிடம் இருந்த ஆர்வமும் பங்களிப்பு மிகவும் மெச்சத்தக்கது.

மேலும் சிறப்பாக செய்திருக்கக் கூடியவை

  • பின்-களப் பணிகளை ரவியிடமே மிகுந்து குவிந்துவிட்டது. தெளிவாக அவர் கூடிய பயனர்களை ஈடுபட வைக்க முனைந்தார். ஆனால் விக்கி பயனர்கள் சிதறி இருப்பதால் இது முழுமையாகக் கைகூடவில்லை.
  • ஊடகம் ஊடாகப் பரவலாக்கல் வெற்றி. குறிப்பாக பிபிசி. ரைம்சு ஒப் இந்தியா போன்ற மைய நீரோட்ட ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறோம். எனினும் பரப்புரை/பரவலாக்கலுக்கான கால அவகாசம் சற்று நெருக்கமாக அமைந்துவிட்டது.
  • பள்ளி/கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தல் தொடர்பாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சில கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கலாம்.

நன்றிகள்

  • முதல் எண்ணக் கருவில் இருந்து, முன்மொழிவு, பின்னணி வேலைகள் என்று ரவியின் தனிப்பட்ட வேலை, குடும்ப அலுவல்களுக்கு இடையூறாக தமிழ் விக்கிப் பணிகளை மிகத் திறனாகச் செய்துள்ளார். குறைந்தது இரண்டு கிழமைகள் முழுநேரமாக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளார். நன்றிகள்.
  • கலந்து கொண்ட, தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும். பெயர் குறிப்பிடாத பலர் உதவியுள்ளார்கள். பெரும்பாலான பயனர்கள் பல்வேறு பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். நன்றிகள். கடந்த மாதம் கலைகட்டி ஒரே கலகலப்பு.

--Natkeeran (பேச்சு) 00:27, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குறைகள் என்றில்லாமல் ”மேலும் சிறப்பாக செய்திருக்கக் கூடியவை” என்று நீங்கள் பயன்படுத்திய சொற்களை ரசிக்கிறேன், கற்றுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:44, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பவுல்

நண்பர்களே, தமிழ் விக்கியின் பத்தாம் ஆண்டு விழாவைச் சென்னையில் கொண்டாடியபோது அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் அக்கூடலில் கலந்துகொண்டு தமிழ் விக்கியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை முன்மொழிந்து, செயலாற்ற முன்வந்தோர் அனைவரையும் உளமார பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் விக்கி என்பது ஒரு பொதுத் திட்டம். அதன் வளர்ச்சிக்கு உதவுவோர் யாவருமே தமிழ் வளர்ச்சியையும் மக்களின் பொது நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றவர்கள். எனவே, சென்னையில் நடந்த கூடலை ஒருங்கிணைத்து, நடத்திச் சென்றதில் கூடுதல் குறைவுகள் இருந்தது பற்றி நாம் வியப்புறத் தேவையில்லை. யாரையும் குற்றப்படுத்துவதிலும் அர்த்தமில்லை. ஆனால், கடந்த காலம் என்பது வருங்காலத்திற்கு வழிகாட்டி என்பது உண்மையென்றால், நடந்து முடிந்த நிகழ்விலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளும் பாடங்கள் பல இருக்கக் கூடும். அவற்றைத் தமிழ் விக்கி சமூகமாக நாம் அனைவருமே பொறுப்பேற்று, கற்றறிந்து முன்னேறுவதே பலன் தரும் செயலாகும். எனவே,

"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்" (குறள் 504)

என்னும் வள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப, நடந்து முடிந்த கூடலில் நலமானதைப் போற்றுவோம், குறையானதை அடையாளங்கண்டு நிறைவு நோக்கி நடைபோடுவோம். காழ்ப்புணர்வைக் களைந்து கூட்டுறவை வளர்த்தால் தமிழ் விக்கியும் வளரும், தமிழும் வளரும். அதுவே நம் குறிக்கோளாகட்டும். பாராட்டும் வாழ்த்தும் கூறி அமைகின்றேன்.--பவுல்-Paul (பேச்சு) 02:26, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இரவி

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடலாமா, எப்படிச் செய்யலாம் என்று மே 9, 2013 அன்று ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன்.

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் , விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு88

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு செப்டம்பர் 29, 2013 அன்று சென்னையில் விக்கிப்பீடியர் கூடி தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளோம். இது வரை நடந்துள்ளவை குறித்து எனது தனிப்பட்ட நோக்கில் ஒரு இடைக்கால அறிக்கையை இங்கு முன்வைக்கிறேன்.

இப்பக்கத்தில் உள்ள கருத்துகள் அனைத்தும் செப்டம்பர் 29, 2013 ஒரு நாள் நிகழ்வைப் பற்றிய கருத்துகளாகவே பெருமளவு இருந்தாலும், ஒரு சிலர் மே மாதம் தொடங்கி, நல்கை பெற்றது முதல் இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நமக்கு இப்போது தேவைப்படுவது பெரு நோக்கும் தொலை நோக்கும் தான்.

மே 9 உரையாடலைத் தொடர்ந்து அனைவரும் நமது பத்தாண்டுகள் நிறைவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கருதி பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்கள். இவற்றை முறையாக, வெளிப்படையாக உரையாடி பெரும்பான்மையானவற்றைச் செய்யப்படுவது என முடிவெடுத்தோம். இங்கு யார் யோசனையை முன்வைத்தார்கள், யார் இதனைச் செயற்படுத்தப் போகிறார்கள் என்று எண்ணாமல் எதனைச் செய்வது சரி, எப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அனைத்துச் செயற்பாடுகளும் கூட்டு முயற்சியாகவே செய்யப்பட்டது. இதுவே விக்கி மரபு.

நோக்கம்

முதலில் இந்தக் கொண்டாட்டங்களின் நோக்கங்களாக சுந்தர் சுட்டி எழுதியிருந்தனவற்றை வழிமொழிகிறேன்.

  1. விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவது
  2. பல நாடுகளிலும் இருந்து பங்காற்றும் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடுவது
  3. ஒன்றுகூடும் வாய்ப்பைப் பயன்படுத்தி நமது திட்டமிடலை முடுக்குவது
  4. நிகழ்வையொட்டியும் அதை முன்வைத்தும் நமது வளர்ச்சிக்காகப் பிற நிறுவனங்களின் உதவியைப் பெறுவது
  5. தமிழ்நாட்டில் பரவலான அறிமுகத்தைப் பெறுவது

நல்கை வேண்டல் பக்கத்தில் இதனைச் சுருக்கமாக

To commemorate 10 years of Tamil Wikipedia and strengthen Tamil Wikipedia community and its outreach efforts.

என்று குறிப்பிட்டுள்ளோம்.

தாக்கம்

நமது கொண்டாட்டங்களின் வெற்றியை அகவயமாக ஒவ்வொருவர் பார்வையில் இருந்தும் அளவிடுவதை விட நாம் ஏற்கனவே திட்டமிட்டு ஆவணப்படுத்திக் கொண்ட இலக்குகளை முன்வைத்து அளவிடுதல் நன்று. என்னைப் பொருத்த வரை இது வரையிலான கொண்டாட்டங்கள் பெரு வெற்றி.

எப்படி?

நல்கை வேண்டல் பக்கத்தில் நாம் வெற்றியின் அளவீடுகளாப் பின்வருவனவற்றைக் குறித்துள்ளோம்.

  • at least 100 active Wikipedians and enthusiasts attend the conference, including participants from Sri Lanka and Malaysia;
  • at least 15 mainstream media articles are published highlighting Wikimedia projects;
  • a detailed documentation of ideas/issues/strategies/policies discussed at the conference is produced;
  • the active contributor count is maintained around 300 or above consistently;
  • 500 important articles that should be present in each Wikipedia are expanded from their current stub form.

இந்த அளவீடுகளை எந்த அளவு எட்டிப் பிடித்துள்ளோம்?

  • 100 பங்கேற்பாளர்கள் என்பது நல்கைப் பக்கத்தில் வைத்த இலக்கு. இதில் சென்னைக் கூடல் நிகழ்வுக்கு ஏறத்தாழ 40 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளிட்ட 150 முதல் 200 வரையிலான பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். காலை பத்து மணி வரையிலான வருகைப் பதிவேட்டில் 100+ கையெழுத்துகள் உள்ளன. அதற்குப் பிறகும் நாள் முழுவதும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அரங்குக்கு வெளியேயும் பல்வேறு விக்கிப்பீடியர்களும் பொதுமக்களும் கூடிப் பேசியவாறே இருந்தனர். மாலையில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகள் கிட்டத்தட்ட 175 தட்டுகள் சென்றன. எனவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அரங்குக்குள் இருந்தவர் தொகையை வைத்து மட்டும் பங்கேற்பை அளக்க முடியாது.
  • ஊடக வெளிச்சத்தைப் பொருத்த வரை சென்னையில் உள்ள அனைத்து ஆங்கில நாளிதழ்கள், இந்து, தினமணி உள்ளிட்ட தமிழ் நாளிதழ்கள் முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழ் ஊடகத் துறையில் பெரு மதிப்பு வாய்ந்ததும் பன்னாட்டு ஊடகமுமா பிபிசு தமிழோசை வானொலியில் செய்தி வெளிவந்திருப்பது அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமன்று உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வை விதைக்கவல்லது. சென்னை அனைத்திந்திய வானொலியில் வெளியான நேர்காணல் அரச ஊடகங்களும் நம்மைக் கவனிப்பதைச் சுட்டுகிறது. இன்னும் ஓரிரு இதழ்களில் செய்திகளை வெளியாவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் பெரிய கருத்து / தகவற் பிழைகள் ஏதுமின்றி, தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத் தேவைகளையும் வலியுறுத்தும் செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிக்கான தேவை, அரசு ஆக்கங்களைப் பொது உரிமத்தில் வெளியிடுதல் போன்ற கொள்கைச் செயற்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • கூடலில் பேசிய கருத்துகள், உரையாடல்களைத் தொகுத்து எழுதும் பணி அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும்.
  • தொடர்ந்து 300க்கு மேற்பட்ட பயனர்களைத் தக்க வைக்கிறோமா என்பது உடனடியாகத் தெரியாது. தவிர, மே 2014 வரை கட்டுரைப் போட்டி உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன என்பதால் அதற்குப் பிறகே இந்தப் புள்ளி விவரத்தின் மீதான தாக்கம் தெரியும். 2010 கட்டுரைப் போட்டிக்கு 1200 கட்டுரைகள் மட்டுமே வந்தன. அவற்றில் பெருமளவு வலையற்றுவதற்கு உரிய தரத்தில் இல்லை. இருந்தாலும், அதன் மூலமாக ஒரு சோடாபாட்டில் கிடைத்தார். அவரது வரவு தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாம் தலைமுறைப் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அவரது அம்மாவான பூங்கோதையின் பங்களிப்புகள் மட்டுமே கூடி தனித்துச் சிறப்பாக எடுத்துரைக்கவல்லது. http://geohacker.github.io/indicwiki/new-editors பார்த்தால் 2010 கட்டுரைப் போட்டி ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியும். எனவே, ஒரு நிகழ்வின் வெற்றியை குறிப்பிட்ட நாளின், திட்டத்தின் தரவுகளை வைத்து மட்டுமல்லாது தொலைநோக்கிலும் பெரு நோக்கிலும் பார்க்க முனைய வேண்டும்.
  • கட்டுரைப் போட்டி நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் 300+ கட்டுரைகளை விரிவாக்கி முடித்திருக்கிறோம். எஞ்சியுள்ள எட்டு மாதங்களில் நிச்சயம் 500 என்ற இலக்கைத் தாண்டி விடுவோம். கட்டுரைப் போட்டியின் வடிவமைப்பை புதுமையாகவும் முன்மாதிரியாகவும் செய்துள்ளோம். இதே பாணியில் பல்வேறு போட்டிகளை நடத்த முடியும். 12 மாதங்களுக்கு போட்டி, வாகையாளர் பட்டம் என்பதன் மூலம் தொடர் பங்களிப்பை உறுதி செய்துள்ளோம். முதல் சில மாதங்களுக்கு வந்த கருத்துகளை அடுத்து போட்டியை மேம்படுத்தியுள்ளோம். நடுவர்கள் தேவைப்படாமல், அதற்கான பணிச்சுமை இல்லாமல், நிகழ்நேரத்தில் போட்டி நிலவரத்தை அறிந்து முனைப்பாக ஈடுபடுமாறு போட்டியை வடிவமைத்துள்ளோம்.

நல்கைப் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

We are planning a two day meetup of Tamil Wikipedians during September 28 and 29. So far there has been no single major international event that brought all Tamil Wikimedians under one roof. This gathering can be thought of as a WikiConference for Tamil Wikimedians. We expect around 40 core Tamil Wikimedians from India, Sri Lanka, Malaysia, UAE and Canada to attend this event besides fellow Wikimedians from other Indian language communities, Wikimedia India chapter and organizations like CIS A2k which work towards a common goal. More than hundred participants are expected to attend the 2nd day evening event. A good number of these will be like-minded people from the academia, press and other FOSS projects. The first day of this gathering will be marked by a tour to places of cultural interest in and around Chennai. The objective is for the participants to get to know each other, engage in informal brainstorming and also to capture as many snapshots for Wikimedia Commons as possible. The second day will have two sessions. In the morning, there will be tutorials for Tamil Wikimedians. In the evening, there will be a public event to celebrate the 10 years of Tamil Wikimedia.

இந்தக் குறிப்பின் பெரு நோக்கம் நிறைவேறியது என்பது உறுதி.

சிறப்பாகச் செய்தவை

  • அருமையான அரங்கம், தங்குமிடம், வளாகச் சூழல், பயிற்சிகள் / உரைகள், பங்களிப்பாளர்கள் நட்புடன் கூடிப் பேசுவதற்கான நேரம், ஊடக வெளிச்சம்.
  • ஒரு விக்கிப்பீடியா நிகழ்வு எப்படி புதிய மரபுகளைப் பின்பற்றும் என்று முற்காட்டுகளை உருவாக்குவது நோக்கிய முயற்சி.
  • இந்திய விக்கிமீடியா கிளை, CIS-A2K, தெலுங்கு / மலையாள விக்கிப்பீடியர்கள் நிகழ்வுக்குச் சிறப்பாக பங்கேற்க அழைக்கப்பட்டமை, பிற விக்கிப்பீடியா சமூகங்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டமை மூலம் விக்கிமீடியா உலகில் தமிழ்த் திட்டங்களுக்கு என்று ஒரு நல்லுறவையும் நன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்திய விக்கிமீடியா கிளை, CIS-A2K ஆகியவற்றுடன் எப்படி இன்னும் சிறப்பாக இணைந்து பங்காற்றலாம் என்பது தொடர்பான ஒரு கூட்டம் சனி இரவு 10.00 முதல் நள்ளிரவு வரை நீண்டது. அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் இருந்த தமிழ் விக்கிப்பீடியர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
  • தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்கான அறை, கணினி, இணையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அளிப்பதாக அறிவித்துள்ளது. வருங்காலத்தில் நாம் பெரும் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இது மிகப் பெரும் உதவியாக இருக்கும். தொடர்ந்து சென்னையில் பட்டறைகள் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதியும் இதன் மூலம் கிடைக்கிறது.
  • நிகழ்வு முடிந்த மறுநாள் கிண்டி பொறியியல் கல்லூரி தலைவரைப் பார்த்து நன்றி கூறி ஊடகங்களில் வந்திருந்த செய்தியைச் சுட்டிக் காட்டினோம். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழக வசதிகளை இது போன்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாய்மொழியாகத் தெரிவித்துள்ளார். இது நிகழ்வு சிறப்பாக நடந்தேறியதற்கான வெற்றி. வருங்கால நிகழ்வுகளைத் திட்டமிடுவதை இலகுவாக்கும்.
  • செப்டம்பர் 24 அன்று தமிழிணையக் கல்விக் கழகத்தில் செல்வா ஆற்றிய உரை, சென்னையின் அறிவுசார் வட்டங்களில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று கூறலாம். அங்கு செல்வா ஆற்றிய உரை அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு அரசு / உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டு அதனை ஒரு பேராசிரியர் முன்வந்து செய்தது தமிழ் விக்கிப்பீடியா திட்டத்துக்கான ஒரு முறையான ஏற்பாக கருதலாம். அன்று மாலை நடந்த உரையாடல் தொடர்ந்து பல திட்டங்களை முன்னெடுக்க வழி செய்துள்ளது.
  • மேற்கண்ட செல்வாவின் உரையைத் தொடர்ந்து சில பெரும் தமிழ் ஆக்கங்களை கிரியேட்டிவ் காமன்சு முறையில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உயர் அலுவலர்களைச் சந்தித்து 3 கூட்டங்கள் நடந்தன. இதில் செல்வா, சுந்தர், மயூரநாதன், நான் கலந்து கொண்டோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் போது, அது தமிழ்நாட்டில் கட்டற்ற உள்ளடக்க இயக்த்தை முன்னெடுப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கும்.
  • நிகழ்வைத் தொழில்முறையாக ஒளிப்பதிவு செய்தது. இதில் இருந்து கிடைக்கும் படங்கள் வருங்காலத்தில் நமது பரப்புரையைக் கூடிய வீச்சுடன் முன்னெடுக்க உதவும்.
  • இந்த நிகழ்வுக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம் மூலம் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம் சார்பாக ஆர்வம் காட்டும் பல ஊடகக்காரர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனை நமது வருங்கால நிகழ்வுகளுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • பண்பாட்டுச் சுற்றுலா மூலம் சென்னைக்குப் புதியவர்கள் சற்று ஊர் சுற்றிப் பார்க்க நேரம் தந்தது.
  • நிகழ்வுக்கு வந்திருந்த சில பார்வையாளர்கள் இப்போதே புதிதாக பங்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்தோர் தத்தம் கல்லூரிகளில் விக்கிப்பீடியா சார்பான முன்னெடுப்புகளை எடுக்க முயன்று வருகின்றனர்.


நாம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடியவை

நல்கை

  • நிகழ்வை இன்னும் முன்கூட்டியே திட்டமிட்டு நல்கைத் தொகையை முன்கூட்டியே பெற்றிருக்கலாம். இதன் மூலம் இறுதி நேர நிதி நெருக்கடி, மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டி வந்ததைத் தவிர்த்திருக்கலாம்.
  • எவ்வளவு நிதி தேவைப்படும் என்று தோராயமாக தெரிய வந்த பிறகும் முறையான நல்கை வேண்டலை அனுப்பி வைப்பதற்கு காலமானது. எனது தனிப்பட்ட பணிப்பளு, ஒத்திப்போடல் இதற்கு ஒரு காரணம் என்றாலும், காலம் கடப்பதைக் கவனித்து வேறு எவரேனும் பொறுப்பெடுத்து இதனைச் செய்து முடித்திருக்கலாம். அல்லது, உதவி வேண்டும் என்று நானாவது உறுதியாக கோரி இருக்கலாம்.
  • ஏற்கனவே ஊடகப் போட்டிக்காக நல்கை பெற்றிருந்தாலும், அதற்கான வழிமுறைகள், சிக்கல்களை தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்தப்படவில்லை. அல்லது, ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அவற்றை அறிந்து கொள்ள முனையவில்லை. சோடாபாட்டிலிடம் நல்கை குறித்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொண்டேன் என்றாலும், முழு நடைமுறையையும் துருவித் துருவிக் கேட்டுப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். இதனால், ஒரு நல்கை கிடைப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும், வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை முன்கூட்டியே அறியவில்லை. இதனை இனி முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு திட்டத்துக்கு நல்கை பெறும் போது ஒவ்வொருவரும் தனித்தனியே வங்கிக் கணக்கு ஏற்பாடு செய்யும் நடைமுறையில் சிக்காமல் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு என்று பொதுவான ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் செயற்பட முடியுமா என்று பார்க்கலாம். முறைப்படுத்திய அமைப்பாக நாம் பதிவு செய்து அதற்கான ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொள்வதில் ஏகப்பட்ட நடைமுறை, சட்டச் சிக்கல்கள் உள்ளன. எனவே, நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு, மூன்று தமிழ் விக்கிப்பீடியர்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக அலுவல் முறையற்ற கணக்காளர்களாக பொறுப்பேற்கச் சொல்லி அனைத்து நல்கைத் திட்டங்களுக்கும் அவர்களைப் பொருளாளர்களாகச் செயற்பட வேண்டலாம்.

புரவலர் ஆதரவு

  • சென்னை நிகழ்வுக்கு நாம் இன்னும் கூடுதலான புரவலர்களைப் பெற்றிருக்க முடியும். அரங்கு முடிவானதற்குப் பிறகு புரவலர்களை அணுகுவதற்கான காலம் குறைந்து விட்டது. அல்லது, அதற்கு முன்பாகவாவது நிறைய பேரை அணுகியிருக்கலாம். இதனைப் பொறுத்தவரை பொத்தாம் பொதுவான அறிவிப்புகளைப் பார்த்து யாரும் பணம் தர முன்வர மாட்டர்கள் என்பதால் ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் முயல வேண்டும். தவிர, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு அளிப்பதால் அவர்களுக்கு என்ன இலாபம் என்பதை நாம் முறையாகச் சிந்தித்து அதற்கான வாய்ப்புகளைத் தர வேண்டும். பெரும்பாலும் கூடல் போன்ற நிகழ்வுகளை முன்வைத்தே நிதி ஆதரவாளர்களைப் பெற முடியும். அவ்வாறான நிகழ்வுகள் இல்லாத காலத்திலும் எவ்வாறு புரவலர்கள் ஆதரவைப் பெறுவது என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, கட்டுரைப் போட்டி - புதிர்ப் போட்டி வெற்றியாளர்களுக்கு புத்தகப் பரிசுகளை அனுப்பி வைக்க இயலும். இது போல் நேரடியாக நிதியாக அல்லாமல் வேறு வழிகளில் ஆதரவைப் பெறுவதற்கான வழிவகைகளையும் தொடர்புகளையும் ஆராய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, நிகழ்விடம் வழங்கல், wifi சேவை வழங்கல், பேருந்து வழங்கல் முதலியன.

பிற

  • அரங்கில் wifi ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், பெரும் தடையாக இல்லை. wifi பெறுவதற்கான நிதி ஒதுக்கீடு நம்மிடம் இருக்கவில்லை. அரங்கில் wifi பெற முடியுமா என்று பல்கலைக்கழக அளவில் முயன்று பிறகு வெளியாட்களை அணுகுவதற்குள் காலம் கடந்து விட்டது.
  • நல்கைப் பணத்தை முதல்நாளே வழங்கியிருக்கலாம்.
  • இதே அண்ணா பல்கலையில் ஒரு வாரம் முன்பு கட்டற்ற மென்பொருள் நாள் கொண்டாட்டங்கள் இதை விட பெரிய அரங்கில் நடந்தது. அதற்கான அரங்கம் இலவசமாக வழங்கப்பட்டது. ஏன் என்றால், அப்பல்கலையில் இலினக்சு பயனர் குழு முனைப்பாகச் செயற்பட்டு வருகிறது. இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் எவ்வாறு கல்லூரிகள் தோறும் ஒரு வலையமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று சிந்திக்க முடியும். இது போன்ற நிகழ்வுகளை நடத்த இந்த வலையமைப்பு இன்றியமையாதது.

படிப்பினைகள்

  • நிகழ்வு நடக்கும் நகர் அல்லது அதற்கு அருகில் உள்ளவர்கள் நிகழ்வின் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும். குறிப்பாக, நேரில் சென்று பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியவை, நிகழ்வு நடக்கும் நாளுக்கான பின்னணி வேலைகளுக்கான ஆதரவும்.
  • தனித்தனியாக செய்யக்கூடிய வேலைகளை ஒரு நிகழ்வுடன் இணைக்கக்கூடாது. இது வேலைப்பளுவையும் அழுத்தத்தையும் கூட்டும். எடுத்துக்காட்டுக்கு, சட்டை, சான்றிதழ் போன்றவற்றை நிகழ்வில் தருவது நன்றாக இருக்கும். ஆனால், தனியே அஞ்சல் வழியேயும் செய்திருக்கலாம்.
  • நிகழ்வில் கட்டாயம் செய்ய வேண்டியவை என்று சில முன்னுரிமைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இயலாத போது, மற்றவற்றை ஒத்தி வைக்கத் தயங்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, கையேட்டை நிகழ்வுக்குக் கொண்டு வர முடியாத போது அதன் வெளியீட்டைத் தள்ளி வைத்து வேலைப்பளுவைக் குறைத்துக் கொண்டது.
  • எதைச் செய்கிறோம் என்பது மட்டும் திட்டமிடல் அன்று. எதைச் செய்யாமல் விடுகிறோம் என்பதும் திட்டமிடலே. நிகழ்வு இடத்துக்கு அருகிலேயே தங்குமிடம் ஏற்பாடு செய்ததன் மூலம் போக்குவரத்துக்கான ஏற்பாடு, நேரம், செலவு மிச்சப்படுத்தப்பட்டது. உணவு வழங்குவதில்லை என்ற முடிவு செலவை மிச்சப்படுத்தியதுடன் நடைமுறைச் சிக்கல்களையும் தீர்த்தது. எனக்குத் தெரிந்த 2 நாள் நிகழ்வில் சாப்பாடு ஏற்பாடு செய்யாமல் விடுவதை வேறு எங்கும் பார்த்தது இல்லை. அதே வேளை, நிகழ்வு இடத்துக்கு அருகிலேயே உணவகம் இருப்பது போல் பார்த்துக் கொண்டது திட்டமிடல்.
  • ஒரு பெரு நிகழ்வுக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாவது திட்டமிட வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பாவது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு நிகழ்வைப் பற்றிய அறிவிப்புகளைச் செய்வது பரப்புரைக்கு போதுமான காலத்தைத் தரும். கடைசி நேர நெருக்கடிகளையும் தவிர்க்கும்.
  • கையில் நல்கைப் பணம் கிடைத்த பிறகு திட்டங்களை உறுதி செய்வது நல்லது.
  • கடைசி நாள் வரைக்கும் புதுப் புது யோசனைகளைச் சேர்த்துக் கொண்டே போவதைத் தவிர்க்க வேண்டும். இது அனைவரின் பரிந்துரைகளையும் உள்ளடக்கிச் செய்வது போல் இருந்தாலும் திட்டமிடலைக் குழப்பும். நல்ல பரிந்துரைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த நிகழ்வில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • எவ்வளவு நல்ல யோசனையாக இருந்தாலும், அதனை முன்மொழிபவரே அதனைச் செயற்படுத்துவதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரால் இயலாத போது, அவர் வேறு ஒருவரின் ஒருங்கிணைப்பு உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இறுதி நாள் நிகழ்வு முடியும் வரை அதனைச் செயற்படுத்துவதற்கான பொறுப்பு இருக்க வேண்டும். அதனைச் செய்து முடிக்க இயலாத போது, பாதியிலோ கடைசியிலோ மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் இணைவதைத் தவிர்க்க வேண்டும். திட்டத்தைக் கைவிடவோ ஒத்திப் போடவோ தயங்கக்கூடாது. இது பல்வேறு மட்டங்களில் பொறுப்புணர்வை வளர்ப்பதுடன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும்.
  • நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபடும் ஒவ்வொருவரின் உழைப்பும் ஒவ்வொரு நாளும் ஆவணப்படுத்த வேண்டும். இதற்கு என்று திட்டப்பக்கத்தில் ஒரு துணைப்பக்கம் உருவாக்கி அங்கு நாட்குறிப்பு போல் எழுதலாம். இதன் மூலம் யார், யார் எவ்வளவு உழைக்கிறார்கள், என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது வெளிப்படையாக பதிவாகும். அதனைக் கவனிக்கும் மற்றவர்கள் தாமாகவே இணைந்து உதவ இயலும்.
  • நிகழ்வு நடக்கும் நாள் அன்று ஒரு மணி நேரம் முன்பாவது விக்கிப்பீடியர்கள் நிகழ்வு இடத்தில் கூடுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே, நிகழ்வு நாளன்று உள்ள கூடுதல் பணிச்சுமைகளைத் திட்டமிட்டுப் பிரித்துக் கொள்ள முடியும். உணவு இடைவேளைக்குப் பிறகும் மற்றவர்கள் நிகழ்வுக்கு வருவதற்கு முன் ஒரு அரை மணி நேரமாவது நாம் கூடிப் பேசித் திட்டமிட வேண்டும்.
  • நிகழ்வு நடக்கும் இடத்தில் ஒரு வெள்ளைப் பலகை வைத்து, அனைவரின் கருத்துகளையும் உடனுக்குடன் அறிந்து சீராக்குவதோடு வேலைகளையும் பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • நிகழ்வு தொடர்பாக பல இடங்களுக்கு நேரில் சென்று ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடச் செலவையும் உள்ளடக்கி நல்கைத் தொகை பெற வேண்டும்.
  • போதுமானத தன்னார்வலர்கள் இல்லை என்பது முன்கூட்டியே தெரிந்தால் சரியான நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களிடம் இருந்து தொழில்முறை உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதத் தான் பணம் தரக்கூடாதே தவிர, இது போன்ற நிகழ்வுகளைப் பணம் கொடுத்து உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. இதற்கான எடுத்துக்காட்டுகள் விக்கிமேனியா முதற்கொண்டு பல நிகழ்வுகளில் உண்டு.
  • Unconference போன்ற தமிழகச் சூழலுக்குப் புதுமையான முயற்சிகளைப் பற்றி நிகழ்வின் தொடக்கத்தில் விளக்கிச் சொல்ல வேண்டும். Unconference செய்வது பிழை இல்லை. ஆனால், அதனைப் பற்றி போதிய புரிதலை ஏற்படுத்தாமல் விடுவது தேவையற்ற எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது.
  • கலந்துரையாடல் நிகழ்வுக்குக் கண்டிப்பாக ஒரு மட்டுறுத்துனர் தேவை.

பிற நிகழ்வுகளுடனான ஒப்பீடுகள்

நமது நிகழ்வுக்கு மிக அருகில் வருவது மலையாள விக்கிப்பீடியர்களின் பத்தாண்டு கொண்டாட்டங்களும் தெலுங்கு விக்கிப்பீடியர்கள் அண்மையில் நடத்திய மகோத்சவமும் ஆகும்.

இவர்களின் இரு நாள் நிகழ்வுக்கு முன்வைத்துள்ள நல்கை வேண்டலை இங்கும் இங்கும் காணலாம்.

நமது நிகழ்வுக்கு வந்திருந்த தெலுங்கு விக்கிப்பீடியர் தெரிவித்த ரகீம் சுட்டியபடி, மகோத்சவம் நிகழ்வுக்கு 30 விக்கிப்பீடியர்கள் பொதுவான நிகழ்வுக்கு ஏறத்தாழ 50 பேரும் வந்திருந்தார்கள். இதற்கான செலவு தோராயமாக இரண்டு இலட்சம் இந்திய உரூபாய். ஒருவருக்கு 4000 இந்திய உரூபாய் என்று கணக்கு வருகிறது.

நமது நிகழ்வுக்கு நாம் செலவு செய்தது தோராயமாக 1,75,000 இந்திய உரூபாய். 150 பயனர்கள் கலந்து கொண்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பயனருக்கான செலவு 1160 இந்திய உரூபாய்.

மலையாள விக்கிப்பீடியர்களின் பத்தாண்டு கொண்டாட்டங்களுக்குச் செலவு செய்த தொகை தோராயமாக 27,000 இந்திய உரூபாய். அவர்களைப் போல் தங்குமிடம், பயண உதவி, பண்பாட்டுச் சுற்றுலா, தொழில்முறை ஒளிப்பதிவு இல்லாமல் நாமும் செய்தால் இதனை விடக் குறைவான தொகைக்கும் நிகழ்ச்சி நடத்த முடியும்.

2011ல் நடந்த இந்திய விக்கிப்பீடியா மாநாட்டுக்கு 600+ பேர் வந்தனர். 24 இலட்சம் இந்திய உரூபாய் செலவானது. இதற்கு எத்தனைக் குழுக்கள் பணியாற்றின என்பதை இங்கு காணலாம். அதைத் தாண்டியும் அந்த நிகழ்வில் எத்தனைச் சர்ச்சைகள் இருந்தன, சொதப்பல்கள் இருந்தன, பணிச்சுமை இருந்தது என்பதனை அதில் ஈடுபட்ட சோடாபாட்டிலையும் logicwikiஐயும் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

இவ்வளவு ஏன், 2010ல் தமிழ்நாட்டின் மொத்த அதிகார இயந்திரமும் குவித்துச் செய்யப்பட்ட செம்மொழி மாநாட்டோடு இணைந்த தமிழிணைய மாநாட்டில் கூட எத்தனைப் பிரச்சினைகள் இருந்தன என்பது கலந்து கொண்டவர்களுக்குத் தெரியும். இதே நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மூன்று நாட்கள் நான் பொறுப்பேற்று நடத்தி பயிற்சிப் பட்டறைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதற்கு ஏன செலவு வெறும் 16,500 இந்திய உரூபாய் மட்டுமே.

ஒவ்வொரு நிகழ்வும் குறிப்பிட விதமாக நடைபெற ஆயிரம் காரணங்கள் உள்ளன. நம்மால் இயன்றது அதில் பங்கேற்பதற்கான வாய்ப்பைத் திறந்த முறையில் தருவதும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுமே ஆகும்.


நிகழ்ச்சி நிரல் திட்டமிடல்

ஒவ்வொரு பெரு நிகழ்விலும் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட Programme committee என்று ஒன்று இருக்கும். இது நிகழ்வின் காலை செய்யப்படுவது இல்லை. பல வாரங்கள் முன்பு திட்டமிட வேண்டியது. நமக்கு அவ்வாறு செய்ய எவரும் முன்வரவில்லை என்பது நிகழ்வின் நோக்கத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு முன்கூட்டியே விக்கியில் அறிவித்து விட்டேன். அதற்கு மாற்றுக் கருத்து ஏதும் வரவில்லை.

நிகழ்வில் என்னென்ன பயிற்சிகள் வேண்டும், யார் யார் பயிற்சிகள் அளிக்க விரும்புகிறார்கள் என்று இங்கு கோரப்பட்டது. யாரும் பயிற்சியளிக்க விரும்புவதாக பெயர் தரவில்லை. பயிற்சியின் காலம், தலைப்புகள் குறித்து நற்கீரன் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டிருந்தார். அது கணக்கில் கொள்ளப்பட்டது.

புதியவர்களுக்கும் பழகியவர்களுக்கும் தனித்தனியாக இரு வகுப்புகளில் பயிற்சிகள் தரத் தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். எனினும், ஞாயிறு அன்று வகுப்பறைகள் கிடைக்காது என்று தெரிய வந்த பிறகு, ஒரே அரங்கத்துக்குள் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி வந்தது. அதற்கு ஏற்ப அனைவருக்கும் ஏற்ற பயிற்சிகள், உரைகள் முடிவு செய்யப்பட்டன. தானியங்கிகள் போன்ற விசயங்கள் வந்திருந்த பெரும்பான்மை கூட்டத்துக்கு ஏற்ற தலைப்பில்லை என்பதால் கைவிடப்பட்டது.

12.30 வரை பயிற்சிகள் தரலாம் என்று கோரிக்கை. அந்தக் கோரிக்கையையும் தாண்டி 1.30 வரை அந்த அமர்வு நீடித்தது.

மாலை நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் துல்லியமாக நிமிடக் கணக்கு அளவு முதற்கொண்டு முன்பே திட்டமிடப்பட்டு இங்கு அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏதும் உரையாடல் பக்கத்திலோ மற்ற வழிகளிலோ வந்து சேரவில்லை.

மாலை அமர்வுக்கு அனைவரும் தாமதமாக வந்ததால் சில மணித்துளிகள் வீணாகின. நேரமின்மையால் வாழ்த்துரை பகுதி கைவிடப்பட்டது. மாலை 5 மணி வரை அரங்கத்துக்கு நேரம். 6 மணிக்கு நிகழ்வு முடிந்து கூட்டம் கலைய மாலை 7 ஆனது. அது வரை அரங்க ஊழியர்கள் பொறுமை காத்தனர். இவ்வளவு நெருக்கடியாக கால அளவில் பங்களிப்பாளர் அறிமுகம் போன்ற புதிய தலைப்புகளை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வாய்ப்பில்லை. அதற்கான கோரிக்கையும் எழவில்லை.

நிகழ்ச்சியைத் திட்டமிட்ட இடத்தில், நேரத்தில், வரிசையில் செய்து முடித்திருக்கிறோம்.


தன்னிச்சையாக செயல்படுகிறேனா?

  • தலைமைத்துவப் பண்புடன் செயல்படுவதற்கும் தலையைக் காட்டிக் கொண்டே இருக்க நினைற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும் தன்னந்தனியே எடுத்துக் கொண்ட பணியை இறுதி வரை நின்று போராடி முடித்துக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு. முன்முயற்சி எடுப்பதற்கும் முந்திக் கொண்டே இருக்க நினைப்பதற்கும் வேறுபாடு உண்டு.

உலக விக்கிப்பீடியா திட்டங்களிலேயே தமிழ் விக்கிப்பீடியா போல் பங்களிப்பாளர் படங்களை முதற்பக்கத்தில் இட்டு அறிமுகப்படுத்தியது நாம் நான். அத்திட்டத்தை முன்மொழிந்தது நான் தான். 10,000க்கு மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட விக்கிப்பீடியா திட்டங்களில் நாம் மட்டும் தான் ஆகக் கூடுதலாக 30 நிருவாகிகளைக் கொண்டுள்ளோம். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களையாவது நான் தான் முன்னின்று பரிந்துரைத்தேன். எல்லாரும் கட்டுரை எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படும் போது, கூடுதல் பங்களிப்பாளர்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விக்கித்திட்டம் 100ஐ முன்னெடுத்து வருவதும் நான் தான். இங்கு நான் நான் என்று சொல்லிக் கொள்வதற்குக் கூசுகிறேன். இருந்தாலும், எந்த அளவுக்கு மற்ற பங்களிப்பாளர்களுக்கான இடத்தை அளிப்பதற்கு முயன்று வருகிறேன் என்பதற்கு இத்திட்டங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இணையத்திலும் சரி நேரிலும் சரி எங்கெல்லாம் கூடிச் செயற்பட்டு பணிகளைப் பிரித்துக் கொள்ள முடியுமோ அங்கெல்லாம் பிரித்துக் கொண்டே செய்தோம். வெளிப்படையாக கலந்துரையாடிச் செய்தோம். என்னிடம் அனுமதிகளை சிலர் எதிர்பார்த்த வேளையிலும் கூட நீங்களே இதனை எடுத்துச் செய்யுங்கள் என்றே கூறினேன். எங்கெல்லாம் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள ஆட்கள் முன்வந்தார்களோ அங்கெல்லாம் அதற்கான ஆதரவை அளிக்கவே செய்தேன். எல்லா வேலையையும் நானே செய்தேன், நானே முடிவு எடுக்கிறேன் என்ற தோற்றம் வரக்கூடாது என்பதைக் கருதியே பயண / தங்குமிட உதவி போன்ற பணிகளுக்கு உதவிகளைக் கோரினேன். கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் எப்படியும் உதவி கோரினாலும் கிடைக்கப்போவதில்லை என்ற சூழ்நிலை புரிந்து பிறகு என்னால் முடிக்கக்கூடிய பணிகளை நானே விரைந்து முடித்தேன். அதற்கு உதவி கேட்டுக் காத்திருக்கும் நேரத்தை விட பணியை முடித்து விடுவது இலகு. அல்லது, அவர்கள் ஒரு வேலையாக கருதியதைச் செய்வதற்கு உதவி தேவைப்படவில்லை. அல்லது, குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிப்பதற்கான ஆட்கள் இல்லை. இன்னொன்று, வேலைப் பங்கீடு இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படிச் சொல்பவர்களுக்கு என்னென்ன வேலைகள் பின்னணியில் நடந்தன என்பது தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பான அரங்க ஏற்பாடுகளைச் சுந்தர் பார்த்துக் கொண்டார். பதாகைகளைக் கட்டும் பணியைச் சிலர் பார்த்துக் கொண்டார்கள். அரங்கம் திறந்த பிறகு தான் அங்கு தண்ணீர் இல்லை என்பது தெரியும். அதற்காக ஒரு பெயர் சொல்ல விரும்பாத விக்கிப்பீடியரும் நிகழ்ச்சிக்கு எனக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த தம்பியும் அலைந்து திரிந்தார்கள். உரிய நேரத்தில் cakeஐ வாங்கிக் கொண்டு வந்தார்கள். சான்றிதழ்களை எழுத அபிராமி உதவினார். நீச்சல்காரனும் சௌமியனும் அவர்களது கருத்துக் கேட்புப் படிவத்தை எடுப்பதற்கான மின்பிரதிகளை எடுத்து வர போக்குவரத்து உதவி செய்யப்பட்டது. இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து தான் ஒரு பணியைப் பிரித்தளிக்க முடியும். சென்னைக்குள் சுற்றித் திரிய அதன் தெருக்கள் தெரிய வேண்டும், வண்டி ஓட்டத் தெரிய வேண்டும், அதற்கான வண்டி வேண்டும், சிறிய வேலைகளைச் செய்வதற்கான மனமும் வேண்டும். சரியான நேரத்துக்குச் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. உதவித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களின் பெயர் பதியப்பட்டது. வந்திருந்த ஊடகக்காரர்களுக்கு உரிய வழி காட்டி யாரிடம் பேசலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. பயனர்களின் கருத்துகளை ஒளிப்பதிவு செய்து வந்த Jasan Picturesக்கான குறிப்புகள் தரப்பட்டன. நாம் அனைவரும் மாமல்லபுரம் சென்றிருந்த போது பெயர் சொல்ல விரும்பாத விக்கிப்பீடியர் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்து பதாகைகளை அச்சடித்துக் கொண்டும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டும் வந்தார். அதற்கு இரண்டு நாட்கள் முன்பு விருந்தினராக வந்திருந்த ரகீமும் இலங்கையில் இருந்து அப்போது தான் வந்திருந்த சஞ்சீவி சிவக்குமாரும் சட்டைகளை வாங்கி வரச் சென்றார்கள். நிகழ்வுக்கு நான்கு நாட்கள் முன்பே சென்னை வந்த சுந்தர் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டதோடு, கட்டற்ற உள்ளடக்கங்களைப் பெறுவதற்கான பல்வேறு கூட்டங்களிலும் இணைந்து சிறந்த பங்களிப்பைச் செய்தார். இவை எல்லாம் பின்னணியில் நடந்தவை. இவற்றை எல்லாம் ஒப்பிடும் போது ஒரு சில சட்டைகளை வழங்குவது ஒரு பெரிய வேலை இல்லை. அதனால், உதவி கோரவில்லை.

நாற்காலியில் உட்கார ஆள் இல்லையே, மேடையில் நம்மைப் பேச அழைக்கவில்லையே என்று அதை மட்டும் ஒரு வேலையாக நினைத்துக் கொண்டு இருந்தால் மேற்கண்ட வேலைகள் கண்ணுக்குப் புலப்படாது.

நிகழ்ச்சித் தொகுப்புப் பணியை இன்னொருவர் செய்திருக்கலாம், இரண்டு பேர் பிரித்துச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்து வருகிறது. அப்படிச் செய்வதற்கு இது எழுதியதை மட்டும் அறிவிக்கும் அறிவிப்பாளர் பணி இல்லை. ஒட்டு மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆளுமை தேவை. பின்னணியில் என்னென்ன பணிகள் எந்த அளவு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப நிகழ்ச்சியின் நேரத்தையும் போக்கையும் கொண்டு செல்ல வேண்டும். விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுடனும் சரி வந்திருந்த விருந்தினர்களுடனும் சரி ஓரளவாவது புரிதலும் நட்பும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனம் கோணாமல் உரிய இடத்தில் குறுக்கிட முடியும். முக்கியமாக, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு வரலாற்றையும் தொடர்ச்சியையும் விளம்ப வேண்டும். பெரும்பாலான இடங்களில் பெருமளவு ஒருங்கிணைப்பைச் செய்தவர்களுக்குத் தான் இது சாத்தியப்படும். பின்னணித் தகவல் என்னிடம் இருக்க மேடையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரை ஒவ்வொரு முறையும் பின்னிருந்து தொடர்பு கொண்டு இயக்கிக் கொண்டிருக்க முடியாது.

என்னைப் பொருத்தவரை தொகுப்புப் பணியும் ஒரு பணி. நிகழ்வுக்கு முந்தைய இரண்டு மூன்று வாரங்களாக அலைந்து திரிந்து பணிகளை முடித்ததைப் போல் இதுவும் ஒரு பணி. இது என்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதான ஒரு தோற்றம் வரும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை.

மேடையில் எனக்கான உரை என்று எதையும் நான் ஆற்றவில்லை. நாற்காலிகளில் அமரவில்லை. அரங்கில் கூட உட்கார நேரம் இல்லாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். இவ்வளவு ஏன், முதல் முறை சந்தித்த பல விக்கிப்பீடியர்களுடன் பேசிக் கொண்டிருக்கக் கூட நேரம் இல்லை. மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்ட குழுப்படங்களில் எத்தனைப் படங்களில் நான் இருக்கிறேன்? ஏன் என்றால் அன்று முழுதும் பங்களிப்பாளர்களின் நேர்காணல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். மேடையில் விருந்தினர்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தியதோடு சரி. மாலை நிகழ்வில் பார்வதியின் உரையின் தொடர்ச்சியாக எஞ்சிய பயனர்களைப் பற்றிய அறிமுகம் கோரப்பட்டதால் அதனை முடித்துக் கொடுத்தேன். ஏன் அதனைச் செய்தேன் என்றால் பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்துவது என்ற செயற்பாட்டைத் தமிழ் விக்கிப்பீடியாவில் முன்னெடுத்ததே நான் தான். துரை மணிகண்டனின் நூலைப் பெற்றுக் கொள்ள வருமாறு அவரே அழைத்தால் கலந்து கொண்டேன்.

தொகுப்புப் பணியை நான் எடுத்துச் செய்தேன் என்பதை ஒரு பிரச்சினையாக காண்பதை விட, தொகுப்புப் பணியில் என்ன குறையைக் கண்டீர்கள், எப்படி மேம்படுத்தலாம் என்று மேம்பாடுகளைத் தெரிவித்தால் அடுத்த முறை தொகுத்து வழங்குபவருக்கும் உதவும். யார் செய்கிறார்கள் என்பதை விட என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். ஏனெனில், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனைவரும் சமமே. என்னுடைய தொகுப்புப் பணியில் குறைகள் இருந்திருந்தால் வருந்துகிறேன். மற்ற பொறுப்புகளின் சுமை குறைந்திருந்தால் ஒரு வேளை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.

ஒரு சிலர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா?

முதலில் இது தமிழ் விக்கிப்பீடியர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இல்லை. அப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடலில் எங்கும் யாரும் கோரவில்லை. சில தலைப்புகளில் பேச இருக்கிறோம் என்று நிகழ்ச்சி நிரல் இருந்தது. அதற்குப் பொறுப்பெடுத்துப் பேச விரும்பியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வுக்குப் பலரும் கால தாமதமாக வந்ததால் சற்று காலத்தைக் கடத்த விக்கிப்பீடியா அறிமுகத்தைப் பேசத் தொடங்கினேன். அடுத்து செயல்முறை விளக்கத்தை யார் தருகிறீர்கள் என்று வெளிப்படையாக திறந்த அழைப்பாகவே கேட்டேன். அப்பொழுது யார் வேண்டுமானாலும் மேடைக்கு வந்திருக்கலாம். ஒருவரும் முன்வராத போது சிவகோசரனிடம் கேட்டேன். அவர் முன்வந்தார். ஏன் அவரை அழைத்தேன் என்றால் அவர் அடுத்த மாதம் இலங்கையில் இதுபோன்ற ஒரு நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பயிற்சியாக இருக்கும். ஏன் முன் கூட்டியே பேச்சாளரை முடிவு செய்யவில்லை என்றால், விக்கிப்பீடியர்களைத் தூக்கத்தில் உலுப்பிக் கேட்டாலும் விளக்கிச் சொல்லக்கூடிய ஒரு விசயத்துக்கு முன்கூட்டியே பேச்சாளரைத் தேர்ந்தெடுப்பது தேவையற்றதாக இருந்தது. தவிர, இது unconferenceஐ நோக்கிய ஒரு முயற்சி.

அடுத்து மொழிபெயர்ப்புகள், ஒளிப்படக்கலை பற்றிய பயிற்சிகள், உரையாடல்கள் நடந்தன. இதில் ஏதும் சர்ச்சை இருக்கும் என்று தோன்றவில்லை.

அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவைக் கட்டற்ற மென்பொருள்கள் போல் எப்படி கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பரவலாக்கலாம் என்பது பற்றிய கலந்துரையாடல். ஏன் இந்தத் தலைப்பு என்றால், அதற்கான தேவை நமக்கு இருக்கிறது. ஒரு பல்கலையில் நிகழ்வு நடத்த அரங்கம் வாங்கவே நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆனால், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தவர்கள் தமிழ்நாடு முழுக்க வலுவான வலையமைப்பை வைத்திருக்கிறார்கள். இலவசமாக வேண்டிய வளங்களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. எனவே, அவர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று உரையாடலாம். தவிர, நிகழ்வுக்கு வந்திருந்த கட்டற்ற மென்பொருள் இயக்கத்தாருடன் நமது பிணைப்பை வெளிப்படுத்தவும் இந்த உரையாடல் உதவும். ஆனால், இந்த உரையாடலின் நோக்கம் சரியாக உள்வாங்கப்படாமல் சற்று திசை மாறியது உண்மை. இது போன்ற சறுக்கல்களை எப்படித் தவிர்க்கலாம் என்று சிந்திக்க வேண்டும். இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக சூரியாவும் தமிழ்ப்பரிதி மாரியும் கலந்து கொண்டார்கள். ஏன் சூரியா என்றால் அவர் ஒரு மாணவர், எந்த கல்லூரிகளுக்குள் நாம் நுழைய வேண்டும் என்று நினைக்கிறோமா அந்த நோக்கில் இருந்து கருத்துகளை எடுத்துரைக்கவல்லவர். தவிர, அண்மையில் தான் விக்கிப்பீடியாவை முன்னிறுத்தி வேலை வாய்ப்பைப் பெற்றார் என்ற முக்கியமான விசயத்தை மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.

ஏனெனில், தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பது என்றாலே தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழர் நலம் என்றே பேசி வருகிறோம். இனியும் இதனை முன்னிறுத்தி நம்மால் பெரிய பாய்ச்சல்களைச் செய்ய முடியுமா என்ற ஐயம் உள்ளது. விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மேம்பாடுகள் என்ன, பயன்கள் என்ன என்பதை இனங்கண்டு அவற்றை முன்னிலைப்படுத்தியே நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.

தமிழ்ப்பரிதி மாரியை ஏன் அழைத்தேன் என்றால் அவர் பல கல்லூரிகளில் விக்கிப்பீடியா பட்டறைகள் நடத்தி வருகிறார். கல்லூரிகளின் நோக்கில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வாய்ப்புகள் என்ன என்று புரிந்து வைத்திருக்கக்கூடியவர்.

அடுத்து இனிப்புகள் வழங்கினோம். இதில் இளையவர்கள், புதியவர்கள், மாணவிகள், பெண்கள் என்ற முறையில் நந்தினியையும் அபிராமியையும் விளக்கேற்றச் சொன்னோம். நாளை தலைமுறைக்கான நம்பிக்கையாக இருக்கட்டும் என்று எனது குழந்தைக்கு இனிப்பூட்டச் செய்தேன். ஒளிப்பதிவுகளில் இது போன்றவற்றை sentimentஆக காட்ட முடியும் என்பதும் ஒரு எண்ணம் :)

மாலை நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பங்களிப்பாளர் என்ற முறையில் மயூரநாதன் பேசினார். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுந்தர் 4 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய Tamil Wikipedia: A case study என்ற அருமையான கட்டுரை இன்றவும் உலகளவில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான அறிமுகத்தைத் தருகிறது. இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினர், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நிருவாகி என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய முழுமையான பார்வையைத் தர வல்லவர், தமிழ் விக்கிப்பீடியாவை மற்ற பல திட்டங்களோடு ஒப்பிட்டுப் பேச வல்லவர் என்பதால் அவரைப் பேசுமாறு அழைத்தேன்.

ஏற்கனவே பல ஊடகங்களில் பேசி தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நல்ல முறையில் எடுத்துரைத்து வருகிறார் என்று முறையிலும் பெண்களை முன்னிறுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் பார்வதி பேசினார். முதலில் இவ்வாறு பேச முடியுமா என்று பூங்கோதையைக் கோரி அவர் மறுப்பு தெரிவித்தார் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். அதன் பிறகே பார்வதி முன்வந்தார். எஞ்சிய பெண்கள் இருவரும் புதியவர்கள்.

மயூரநாதனும் செங்கைப் பொதுவனும் சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என்ற பொதுவான புரிந்துணர்வு ஏற்கப்பட்டது. கைநடுக்கம் காரணமாக செங்கைப் பொதுவனால் கையெழுத்திட முடியாது என்பதால் அவரை வைத்தே சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த மற்றவர்களுக்கும் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழிணையக் கல்விக்கழக இயக்குநரும் பெங்களூரில் உள்ள இணையத்திற்கும் சமூகத்திற்குமான மையத்தின் திட்ட இயக்குநருமான விசுணு வர்த்தனும் சான்றிதழ்களை வழங்கினர். சான்றிதழ்களை யாரேனும் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் மூலம் வாங்கினால் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஒரு சிலர் கருதியது என் கவனத்துக்கு வந்திருந்தது. அதையும் இங்கு நிறைவேற்றித் தந்தாயிற்று.

இறுதியாக, இலங்கைப் பயனர்களுக்குப் பரிசு தந்தது. முதலில், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நல்கைப் பணத்தில் தரப்பட்ட பரிசு அன்று. தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப் பெரும் பங்களிப்பு நல்குபவர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் இருந்து இந்நிகழ்வுக்காக மெனக்கெட்டு வந்திருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாகவே, செருமனி, நெதர்லாந்து தொடங்கி இலங்கை வரை இணையத்திலும் நேரிலும் பல இலங்கைத் தமிழர்கள் எனக்கு மிகச் சிறப்பான விருந்தோம்பலை நல்கியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது பரிசு தரலாமே என்று எண்ணி இந்தப் பட்டுச் சேலை தரும் சிந்தனையைச் சிலரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களும் நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தப் பட்டுச் சேலைகளை வாங்கித் தந்து உதவ முடியுமா என்று பார்வதியிடம் கேட்டிருந்தேன். இதற்கான தொகையை அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், தானே இதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக பார்வதி முன்வந்த போது அதனை மறுக்க முடியவில்லை. இந்தப் பரிசைப் பேருந்திலோ நிகழ்வுக்குப் பின்போ கூட கொடுத்திருக்கலாம். மேடையில் தருவது இலங்கைத் தமிழர் - தமிழகத் தமிழர் ஒற்றுமைக்கும் பிணைப்புக்கும் ஒரு சான்றாக இருக்கும் என்று கருதி செய்தேன். ஆனால், இதில் கூட ஏன் ஒருவரே பரிசு தந்தார் என்று கேட்டால் எப்படித் தான் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது? பூங்கோதை முன்பே மேடை ஏற மறுத்திருந்தார். எஞ்சியிருப்பது நந்தினியும் அபிராமியும் தான். அபிராமியை வைத்துத் தந்தால் கூட அம்மாவும் மகளும் முன்னிறுத்தப்பட்டார்கள் என்று விமரிசிக்க ஆட்கள் இருக்கிறார்கள் :)

ஊடகங்களில் ஏன் குறிப்பிட்ட சில பெயர்களும் முகங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன என்பதற்கான விளக்கம் இங்கு உள்ளது.

இப்படி ஒவ்வொன்றுக்கும் அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஒன்றையும் செய்ய இயலாது. எந்த உள்நோக்கமும் இன்றி இதனை இவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நேர்மையுடனும் துணிவுடனும் முடிவுகளை எடுத்துச் செய்தோம். அதற்கான உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். BE BOLD என்று தான் விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது. நிகழ்வில் பேசப்பட்ட தலைப்புகள், பேசப்பட்ட விதம் ஆகியவற்றில் குறை இருந்தால் தெரிவியுங்கள். அடுத்த முறை மேம்படுத்துவோம். இன்னாரை ஏன் பேச அழைக்கவில்லை என்று கேட்பதெல்லாம் ஒரு குறையில்லை.

இறுதியாக சில எண்ணங்கள்

பிரியாணி போட்டு கடற்கரையில் கூட்டம் கூட்டி வெற்றி முரசு கொட்ட இது கட்சி மாநாடு அன்று. மாநாடு, பேரணி போன்று திரளும் மக்களின் கூட்டம், செயற்பாடு குறித்த எதிர்பார்ப்பு வரக்கூடாது என்பதற்காகவே மிகவும் கவனமாக கூடல் / கொண்டாட்டம் என்ற பெயரைப் பயன்படுத்தினோம். கூடினோம். கொண்டாடினோம். எத்தனைப் பேர் வந்தார்கள் என்பதை விட யார் வந்தார்கள், அவர்களால் என்ன பயன் என்று பார்ப்பது நல்லது. அழைப்பிதழ், சிறப்பு விருந்தினர், பொன்னாடை மரியாதை போன்ற சடங்குகளைத் தவிர்த்ததால், உண்மையிலேயே தமிழ் விக்கிப்பீடியாவின் பால் அக்கறை உள்ளவர்கள் தாமாகவே வந்தார்கள். தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர், உத்தமம் என்னும் தமிழ் நல தகவல் தொழில்நுட்ப அமைப்பின் பொறுப்பாளர்கள், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தவர்கள், இந்திய விக்கிப்பீடியா கிளை மேலாளர், பெங்களூரில் உள்ள இணையத்திற்கும் சமூகத்திற்குமான மையத்தின் திட்ட இயக்குநர் என்று பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள், தமிழ் விக்கிப்பீடியாவுடன் சேர்ந்து இயங்கவல்லவர்கள் வந்திருந்தார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரில் தமிழ் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக இதனை ஒரு வழக்கமா தமிழ்நாட்டு விழாவாகவோ, தமிழ் மொழி சார்ந்த விழாவாகவோ, தமிழ்நாட்டின் அரசு, கல்வி சார்ந்த அதிகார வர்க்கங்களின் விழாகவோ முன்னெடுக்கத் தேவையில்லை. விக்கிப்பீடியா ஒரு உலகளாவிய கட்டற்ற இயக்கம். இந்த இயக்கத்துக்கு என்று சில நடைமுறைகள், மரபுகள் உள்ளன. இவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கிப்பீடியா எப்படி ஏற்கனவே உள்ள அறிவுருவாக்க மரபுகளை உடைத்தெறிந்த வெற்றி நடைபோடுகிறதோ அதனைப் போல் நாம் நடத்தும் விழாவும் வழமையான சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து நல்ல முற்காட்டுகளை வைக்க முனைவதில் தவறில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து தொடங்கி, சிறப்பு விருந்தினர் பேருரைகள்,பொன்னாடை மாலை மரியாதைகள், நினைவுப் பரிசுகள், புகழ்ச்சி உரைகள், நாட்டுப் பண் என்று தான் முடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த மாற்று மரபை நோக்கிய முன்னகர்வு தான் முக்கியமே தவிர, அதனை 100% சிறப்பாகச் செய்தோமா என்பது முக்கியமில்லை. இந்த நிகழ்வின் படிப்பினைகள் இதை விடச் சிறப்பாக அடுத்தடுத்த நிகழ்வுகளைச் செய்ய உதவும்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 10 ஆண்டுகள் ஆனாலும் நமது திட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்று நமக்குத் தெரியும். அதற்காக நமது திட்டத்தை வெளியில் விட்டுக் கொடுப்பதில்லை. நமது பங்களிப்பாளர்களை மட்டம் தட்டுவதில்லை. விக்கிப்பீடியா என்ற கூட்டு முயற்சியின் பயன் இடர்களை உணர்ந்து அவற்றை எடுத்துச் சொல்லி தொடர்ந்து இத்திட்டத்தை மேம்படுத்த முனைகிறோமா இல்லையா? அதே போன்ற அணுகுமுறை தான் நமது அனைத்துச் செயற்பாடுகளிலும் தேவை. இந்நிகழ்வுக்கு வரும் கருத்துகள் என்பன, "அடடா, இதைக் கவனிக்காமல் விட்டு விட்டோமே, கட்டாயம் அடுத்த முறை இதனைச் சரியாகச் செய்து விட வேண்டும்" என்று நிகழ்வுக்காக உழைத்தவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, "ஏனடா இதற்காக உழைத்தோம்" என்று வருந்தும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாது. இவ்வாறான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவது அதே பங்களிப்பாளர்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் பங்கேற்பதை மனத்தடை உருவாக்குவதாகவும் வேறு எவருமே "இத்தனை வசைகளை வாங்கிக் கொண்டு இதில் ஈடுபடத்தான் வேண்டுமா" என்று அச்சமூட்டுவதாகவும் இருக்கக்கூடாது. விமரிசனங்களே கூடாது என்று சொல்லவில்லை. அதனை நமது இயக்கத்துக்கு வெளியில் உள்ளவர்கள் சொன்னால் புரிந்து கொள்ளலாம். ஆனால், முழுக்க வெளிப்படையாக திட்டமிடப்பட்டு நிகழ்வுக்கு முன்பும் நிகழ்வு நடந்த அன்றும் நிகழ்ச்சியை மேம்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தந்த பிறகு, எளிதாக சரி செய்திருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கூட அன்றே பொறுப்பெடுத்துச் செய்ய முனையாமல், திரைப்பட விமரிசகர் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு குதறுவது போல் குற்றம் சாட்டி இங்கு கருத்துகளைப் பதிவது நேர்மையான செயற்பாடு அன்று. விக்கி மரபுக்கு உட்பட்டதும் அன்று. நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்ளுங்கள் என்பது விக்கியில் கட்டுரை எழுதுவதற்கு மட்டும் உரித்தான ஒன்று அன்று. நமது அனைத்துச் செயற்பாடுகளிலும் தேவை. தன்னார்வக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பொறுப்பு என்பது கொடுக்கப்படுவது அன்று. எடுக்கப்படுவது. இந்தக் கொண்டாட்டங்களை முன்னின்று செய்யுமாறு என்னை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. அரங்க ஏற்பாடுகளைச் செய்து தருமாறு சூரியாவை யாரும் கேட்கவில்லை. சனியன்று நான் களைத்திருந்த போது பண்பாட்டுற் சுற்றுலாவை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பை சீனிவாசன் முன்வந்து கேட்டு வாங்கி எடுத்துக் கொண்டார். நிகழ்வுக்கு முன்பும் பின்பும் பல முறை ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டு உதவினார். இது போல் உதவியோர் பலர். பல்வேறு தேவைகளுக்காக குறிப்பிட்டவர்களின் பக்கங்களில் உதவி கேட்டுப் பெற்றிருந்தாலும் அவர்களாக விரும்பினால் தான் செய்ய முடியுமே தவிர யாரையும் வற்புறுத்த முடியாது.

மே மாதம் தொடங்கி நிகழ்வு முடியும் வரை உரையாடல் பக்கங்களிலும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் நேரிலும் தொலைப்பேசியிலும் மின்மடலிலும் எடுத்துரைக்கப்பட்ட நல்ல ஆலோசனைகள் யாவுமே செயற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் இருந்தவர்களுக்குத் தெரியும். பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினால் தான் சரி செய்ய முடியுமே தவிர, "எல்லாமே சிறப்பாக உள்ள நிகழ்ச்சியில் எதனையாவது குறை கண்டுபிடித்தே ஆக வேண்டுமே என்ற நோக்கில் சிறு சிறு குறைகளைப் பட்டியலிட்டு ஒருங்கிணைப்பாளர்கள் திறம் வாய்ந்தவர்கள் இல்லை, திட்டமிடல் இல்லை" என்று நிறுவ முனைவதின் உள்நோக்கம் என்ன?

முதலில் திட்டமிடல் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? ஒருங்கிணைப்பு என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?

மே 9 தொடங்கிய திட்டமிடலில் ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கி இருந்தால் கூட நிகழ்வு குறித்த நாளில் குறித்த அரங்கில் நடைபெற்றிருக்க முடியாது. நிகழ்ச்சியை முடித்து அனைவரும் ஊர் போய் சேர்ந்திருக்க முடியாது.

நிகழ்ச்சியின் பல்வேறு பணிகளைப் பல்வேறு குழுக்கள் செய்ய அவற்றை இணைப்பது தான் ஒருங்கிணைப்பாளரின் பணி. சுமார், 600 பேர் வரை பங்கு கொண்ட விக்கிமீடியா இந்திய மாநாட்டிற்கு எத்தனை ஒருங்கிணைப்புக் குழுக்கள் உள்ளன என்று இங்கு பார்க்கலாம். ஆனால், நமது நிகழ்வில் நடந்தது என்ன? நல்கை வேண்டல், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல், அரங்க ஏற்பாடு, தங்குமிட ஏற்பாடு, வெளியூரில் இருந்து வந்தவர்களை வரவேற்கும் குழு, சட்டை-சான்றிதழ்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வாங்கி வரும் குழு, பண்பாட்டுச் சுற்றுலா குழு, கணக்கு வழக்குகள், நிகழ்வு அரங்கில் தண்ணீர் - உணவு ஏற்பாடு செய்தல் என்று அனைத்துப் பணிகளையும் ஓரிருவரே பொறுப்பேற்றுச் செய்தனர்.

சென்னையில் இந்நிகழ்வை நடத்துவதற்கு முக்கிய காரணமே அங்கு மற்ற ஊர்களைக் காட்டிலும் கூடிய பங்களிப்பாளர்கள் உள்ளார்கள், நிகழ்வுக்கு உதவுவார்கள் என்பதற்காகவே. ஆனால், எதிர்பாராத விதமாக, பலரும் ஏற்பாடுகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று திறந்த அழைப்பு விடப்பட்ட ஊடகச் சந்திப்புக்குக் கூட பெங்களூரில் இருந்து சுந்தரும், கோவையில் இருந்து நானும், கனடாவில் இருந்து செல்வாவும், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் இருந்து சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். வந்துள்ள ஊடகக் காரர்களுக்கு உணவு வழங்கி கவனிக்கக் கூட ஆள் இல்லை என்று எனது மாமாவின் அறைத்தோழரை அழைத்துக் கொண்டு சென்றேன்.

செப்டம்பர் 10 அன்று அரங்க ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக சென்னை வந்த நான் செப்டம்பர் 30 வரை நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியதாயிற்று. ஒரு நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளப் பணம் மட்டும் தான் போகும். ஆனால், என்னைப் போல் தொழில் செய்பவர்கள் இவ்வாறு தொழிலை அந்தரத்தில் விட்டுத் திரிந்தால் தொழிலையே பணயம் வைத்தது போலத் தான். மீண்டு வர பல மாதங்கள் ஆகும். சனிக்கிழமை காலையில் 4 மணிக்கு எழுந்து தகவலுழவனை வரவேற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். எழுந்தேன் என்பது தவறு. தூங்கவேயில்லை என்பது சரி. வியாழன் காலை 9 மணிக்கு எழுந்தது முதல் சனிக்கிழமை இரவு 12 மணி வரையிலான 63 மூன்று மணி நேரத்தில் இடையில் தூங்கியது 3 மணி நேரம் மட்டுமே.

ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் அரங்கை ஏற்பாடு செய்து விட்டு அருகில் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் அறை போட ஒரு மணி நேரம் கூட போதும்.

ஆனால், அண்ணை பல்கலையில் நிகழ்வை நடத்துவது நமது இயக்கத்துக்கு ஒரு பெரும் அடையாள முக்கியத்துவத்தைத் தரும், வந்திருக்கும் பங்கேற்பாளர்களுக்கு உரையாட ஒரு நல்ல சூழலைத் தரும் என்ற காரணத்துக்காக அங்கு நிகழ்வு நடத்த முனைந்தோம். பலரும் சுட்டியபடி குளிரூட்டப்பட்ட அரங்கு என்பது ஒரு சிறப்பாக என் கண்ணுக்குப் படவில்லை. அண்ணா பல்கலையின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசியிருந்தாலும் அதே அடையாள முக்கியத்துவம் இருக்கும். அரங்கைப் பெறுவதற்காக பட்ட பாடுகளை சூரியா ஏற்கனவே விளக்கியுள்ளார். இதற்காக அவர் வகுப்புகளை எல்லாம் விட்டு விட்டுச் சென்றார் எனக்குக் கூட இப்பொழுது தான் தெரியும். இது போன்ற உழைப்பு ஆவணப்படுத்தப்பட்டால் தான் ஒருங்கிணைப்பாளர்களின் மீது நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொள்வதற்கான சூழல் வாய்க்கும்.

ஒரு வேளை அண்ணா பல்கலை அரங்கு கிடைக்காதிருந்தால் கட்டற்ற மென்பொருள் நண்பர்கள் மூலம் சென்னை IIT அரங்கைப் பேசி வைத்திருந்தோம். அதுவும் இல்லையென்றால் SRM பல்கலையிடம் செல்வா மூலம் பேசி வைத்திருந்தோம். இது போல் ஒவ்வொருவருக்குப் பின்னும் கடும் உழைப்பு உள்ளது. ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று, அதுவும் இல்லாவிட்டால் இன்னொன்று என்று திட்டமிடல் உள்ளது. ஒரு விசயத்தில் குறை என்றால் ஏன் அவ்வாறு ஆனது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. இது எதையுமே புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முனையாமல் கல்லெறிவதில் மட்டும் குறியாக இருக்க வேண்டாம்.

சனியன்று விடிகாலை வந்திறங்கிய அனைவரையும் நேரில் சென்று வரவேற்று விடுதியில் அறை எடுத்துக் கொடுத்து வந்தேன். ஒரு தானியைப் பிடித்து நீங்களே போய் விடுங்கள் என்று சொல்ல அதிக நேரம் ஆகாது. ஆனால், சென்னை பழகியவர்களுக்கே மிரட்சியளிக்கும் ஊர். வெளியூரில் வந்தவர்களை நம் வீட்டுக்கு வந்தவர்களைப் போல் வரவேற்க வேண்டும் என்று இறங்கிச் செய்தேன். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல் பல நாட்கள் முன்பே திட்டப்பக்கத்தில் இடப்பட்டது. திட்டமிட்ட நிகழ்ச்சியைத் திட்டமிட்டாவறு குறித்த நேரத்தில் நடத்தி முடிப்பதே ஒருங்கிணைப்பாளரின் திறன். ஒவ்வொருவரின் மன ஆசைக்கும், மேடை விளம்பரப் பித்துக்கும் இடம் கொடுத்து நிகழ்ச்சி நிரலில் இல்லாத விசயங்களைச் செய்து கொண்டிருப்பது அன்று. மேடையில் அனைத்துப் பங்களிப்பாளர்களையும் அறிமுகப்படுத்துவோம் என்று நிகழ்ச்சி நிரலில் இருந்ததா? இப்படி செய்யலாம் என்று உரையாடல் பக்கத்திலாவது கூறி இருந்தீர்களா? இல்லாத நிகழ்ச்சியை நடத்தாமல் விட்டதை எப்படித் தன்னிச்சையான செயல்பாடு என்கிறீர்கள்? மேடையில் ஒரு சிலரை மட்டும் முன்னிறுத்தினோம என்கிறீர்கள்.

9:00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு எத்தனை பேர் முன்கூட்டிய வந்தார்களா என்று சொல்ல முடியுமா? பொடி நடை தொலைவில் உள்ள உணவகத்துக்குச் சென்று விட்டு 3.00 மணிக்கு முன்பு அரங்கத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்களைக் கணக்கில் கொண்டு எப்படி அன்றைய நாளில் திட்டமிட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? சனியன்று பேருந்திலோ கடற்கரையிலோ திட்டமிடலுக்கான சூழலோ பயனர்களிடம் தெம்போ இருக்கவில்லை. நிகழ்ச்சிக்கான திட்டமிடல், கருத்து கோரல் என்பது விக்கியிலேயே முன்பே முடிந்து விட்டது. அதற்குப் பின் தேவைப்பட்ட இடங்களில் இருக்கிற வளங்களைக் கொண்டு முடிவெடுத்து இயன்ற அளவு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். இன்னும் திட்டமிட வேண்டும், வேலைப் பங்கீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த முறை முதலில் இருந்தே விக்கியிலேயே திட்டமிடலில் கலந்து கொள்ளுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா இணையத்தளத்தில் நாம் செய்யும் பங்களிப்புகள் யாவும் முறையாக ஆவணப்படுத்தப்படுவதால் யாரும் தங்களுக்கான அங்கீகாரம் விட்டுப் போனதாக எண்ணும் நிலை இல்லை. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடு போன்ற இணையத்துக்கு வெளியேயான செயற்பாடுகளில் இவ்வாறு பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் கட்டமைப்பை நாம் இன்னும் உருவாக்கிக் கொள்ளாததால், ஒரு நிகழ்ச்சிக்குப் பின் உழைப்பு என்ன, என்ன சூழ்நிலையில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று அறிய இயல்வதில்லை.

ஓர் இணைய ஊடகமான நாம் இயன்ற அளவு இணையத்தைப் பயன்படுத்திப் பரப்புரைகளை மேற்கொள்வதே திறம் வாய்ந்ததும் செலவுகள் ஏதுமின்றி வருங்காலத்திலும் பலரைச் சென்றடையக்கூடிய வழிமுறைகளை உருவாக்குவதும் ஆகும். அழைப்பிதழ்களை அச்சிட்டு அஞ்சலில் அனுப்புவது நடைமுறைக்கு ஒத்து வராது. அவர்களுக்கு ஏன் அழைப்பதிழ் அனுப்பவில்லை இவர்களுக்கு ஏன் அனுப்பவில்லை என்று கேட்பவர்களை யாராவது அவர்களை அழைக்க விடாமல் தடுத்தார்களா? முகநூலிலும் துவிட்டரிலும் ஆர்வமுடைய விக்கிப்பீடியர்கள் தொடர்ந்து தாமாகவே பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அண்ணா பல்கலை இயந்திரப் பொறியியல் துறை அருகே அரங்க இடம் உள்ளது என்ற குறிப்பு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவிக்கு தொலைப்பேசி எண்கள் தரப்பட்டிருந்தன. இதையும் தாண்டி அரங்கைக் கண்டடைவதில் சிக்கல் என்றால், நிகழ்வுக்கு வந்திருந்த ஒரு சில விக்கிப்பீடியர்களே பொறுப்பெடுத்து இச்சிக்கலை சில மணித்துளிகளில் தீர்த்திருக்க முடியும். அரங்கில் நாற்காலிகள் வெற்றாக இருக்கின்றன என்பது ஒரு குறையாக தோன்றியோர் மேடையேறி நாற்காலியை நீக்கி இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒருங்கிணைப்புக் குழுவே சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது.

ஞாயிறு நிகழ்வு என்பதால் பட்டறை நடத்த வகுப்பறைகள் கிடைக்கவில்லை. ஏன் மேசைகள் கூட கிடைக்கவில்லை. மாணவர் விடுதிகளில் அழைப்பிதழ் ஒட்ட வேண்டும் என்றால் கல்லூரித் தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரக் காத்திருக்க வேண்டும். இது போல் ஆயிரம் பற்றாக்குறைகளுக்கு இடையே தான் நிகழ்வு நடந்தது.

நிகழ்வுக்கு வந்திருந்த பல அறிஞர்கள், பெரியவர்கள் நிறைகுடமாக, அமைதியாக நிகழ்வைக் கண்டு களித்துப் பாராட்டிச் சென்றார்கள். பல தமிழ் விக்கிப்பீடியர்கள் மற்ற நண்பர்களுடன் நிகழ்வு அரங்குக்கு வெளியே உரையாடிக் களித்ததைக் காண முடிந்தது. இப்படிப் பலரும் நிறைவாக இருக்க, மேடையையும் நாற்காலியையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மற்றவர்களுக்காக பேசுகிறேன் என்ற போர்வையில் சிண்டு முடியும் வேலையை நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்புக்கான அங்கீகாரம் என்பது விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு வரலாற்றுப் பக்கத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு மேல் எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள கட்டற்ற இயக்க நிகழ்வுகளுக்கு ஒரு முறை போய் பார்த்து வாருங்கள். எவ்வளவு பெரிய பங்களிப்பாளர்கள் என்றாலும் பேசுவதற்குரிய தலைப்பில் அழைக்கப்பட்டிருந்தால் மேடையேறுவார்களே தவிர, அனைத்துப் பங்களிப்பாளர்களையும் மேடையில் அறிமுகப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

சில மாதங்களுக்கு முன்பு மலேசியா வானொலியில் விக்கிப்பீடியா அறிமுகம் வெளியான போது, அதைக் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய வேளையில் ஏன் தனது பெயரைக் குறிப்பிடவில்லை என்பதை ஒரு பிரச்சினையாக்கி ஏனடா பேட்டி கொடுத்தோம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதன் பிறகு தமிழ் விக்கிப்பீடியா சார்பாக பேசுகிறவர்கள் சரியாகத் தான் பேசுகிறோமா யார் பெயரையாவது விட்டு விட்டோமா என்று தயங்கித் தயங்கித் தான் பேசுவதைக் காண முடிகிறது. இங்கும் இவ்வளவு பெரிய கொண்டாட்ட நிகழ்வு முடிந்த மறு நாளே குறைகளை அடுக்கி கொண்டாட்ட மனநிலையைக் குலைப்பது அவசியம் தானா? இதன் மூலம் புதிதாகப் பொறுப்புகளை ஏற்கத் துணிவோருக்கு இந்த விக்கிச் சமூகம் தரும் செய்தி என்ன? குறைந்தபட்சம், நிகழ்வுக்குப் பணியாற்றிக் களைத்துப் போன பங்களிப்பாளர்கள் ஓய்வெடுக்க ஒரு வார காலமாவது தாருங்கள். அதன் பிறகு உங்கள் விமரிசனங்களை அடுக்குங்கள்.

பேருந்தில் இனிப்புகள் வழங்கியதையும் சாவிக் கொத்து வழங்கியதையும் எல்லாம் ஒரு சிறப்பாக நான் எண்ணவில்லை. இவை மயூரநாதன் கொண்டு வந்து மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொண்டவை. ஒருவருக்கு ஒருவர் பகிர்வது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதல் ஏதும் தேவை இல்லை. இது போல் ஒவ்வொரு பயனரும் தான் எப்படி இந்நிகழ்வைச் சிறப்பாகலாம் என்று எண்ணியிருந்தால் கூட இந்நிகழ்வு இன்னும் பத்து மடங்கு சிறப்பாக நடந்திருக்க முடியும். எல்லாவற்றுக்கும் ஒருங்கிணைப்புக் குழு தான் பொறுப்பு என்ற கீழிருந்து மேலை எதிர்நோக்கும் மனப்பான்மை தேவையில்லை. இது நமது கொண்டாட்டம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் கட்டுரைகள் எழுதுவது பற்றி கவலைப்பட்டோம். அடுத்து பங்களிப்பாளர்களைப் பெறுவது பற்றி கவலைப்பட்டோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த பாய்ச்சலுக்கு, இணையத்துக்கு வெளியேயான கூட்டு முயற்சிகளிலும் எவ்வாறு விக்கி மரபுகளைப் பேணுவது, பங்களிப்பாளர்களிடையே விக்கிப் பண்புகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்துச் சிந்திப்பது நல்லது. நாற்காலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட்டு பெரு நோக்குகளுக்கும் தொலை நோக்குகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஒரு திருமணத்தின் வெற்றி என்பது மணமகனும் மணமகளும் இறுதி வரை மனமொத்து வாழ்வது தான். பந்தியில் பாயாசம் கிடைக்கவில்லை, பாயாசத்துக்கு அப்பளம் கிடைக்கவில்லை, மாமன் மச்சானுக்கு மாலை போடவில்லை என்பது எல்லாம் ஒரு குறை இல்லை.

நடந்து முடிந்த கொண்டாட்டங்கள் நல்ல விளைவைத் தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருக்கிற வளங்களைக் கொண்டு எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறோம் என்று நம்புகிறேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்புகளை முதலில் இருந்தே விக்கியில் வெளிப்படையாகத் தாருங்கள்.

இந்நிகழ்வுக்கான பல்வேறு பங்களிப்புகளை அளித்த அன்டன், தாரிக், செகதீசுவரன், சூரியா, சுந்தர், மயூரநாதன், சீனிவாசன், நற்கீரன், செல்வா, பெயர் குறிப்பிட விரும்பாத விக்கிப்பீடியர், மணியன், சிவகுரு சார்பாகவும் தவறுதலாக பெயர் விட்டுப் போயிருக்கக்கூடிய அனைவர் சார்பாகவும், இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறோம் என்பதற்குப் பெருமைப்படுகிறேன். இறுதிவரை நின்று போராடி நிகழ்வைச் சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறோம் என்பது உடனிருந்த பார்த்த அனைவருக்கும் தெரியும்.

நிகழ்வு குறித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நேர்மறையான, வளர்முகமான ஆலோசனைகள் யாவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்வோம். எனது இந்த மறுமொழியையே அனைவரின் கருத்துகளுக்குமான பொதுவான மறுமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.

பி.கு. 1. காழ்ப்புணர்வும் வயிற்றெரிச்சலும் கொண்டோர் நல்ல மருத்துவரை நாடுவது உங்கள் உடல்நலத்துக்கு நல்லது.. கூடல் பற்றி சிலர் முன்வைத்துள்ள கருத்துகளின் பின்னணி என்ன என்பதை விக்கிச் சமூகத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

பி.கு. 2. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான உள்ளாற்றலின் மேல் நின்று கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அரசு, கல்வி, அதிகார மட்டங்களின் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பரப்பிக் காட்டலாமே என்று துடியாய் துடிப்பவர்கள் தமிழ் விக்கிப்பீடியர் என்ற போர்வையின் மூலம் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தான் நாடுகிறார்கள் என்பதும் தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை அடகு வைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதும் என் கணிப்பு. இத்தகையோரின் நோக்கம் அறிந்து தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தைக் காத்துக் கொள்வது நல்லது. அல்லது, வழக்கமான அரசியல் கலந்த தமிழ்நாட்டுச் சங்கங்களில் ஒன்று போல் தமிழ் விக்கிப்பீடியாவும் சிக்கிச் சீரழிந்து போவது உறுதி.

மயூரநாதன்-2

எந்தவொரு விடயத்தை முன்னெடுக்கும்போதும் அது குறித்த புகழ் மாலைகள் மட்டும் அது சிறப்பாக அமைவதற்குக் காரணமாவது இல்லை. முன்னெடுப்புக்களின் குறைகள் குறித்த விமர்சனங்களும் மிகமிக அவசியமானவை. இந்த அடிப்படையில், பல பயனர்களும் தமிழ் விக்கியின் பத்தாண்டு நிறைவுக் கூடல் குறித்த குறை நிறைகளை இங்கு முன்வைக்கக் காரணமாக அமைந்த பயனர் சேகரனுக்கு எனது நன்றிகள். இங்கு கூறப்பட்ட குறைகளும் விமர்சனங்களும் இக்கூடலை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்த சில பயனர்கள் மீது வைக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இக்கூடலை ஒழுங்கு செய்வதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட பயனர்கள் மற்றவர்களுடன் போட்டிபோட்டு இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்ல. பிற பயனர்கள் ஈடுபடமுடியாத நிலை இருந்ததால் அவர்களுக்காகத் தமது நேரத்தையும் சில சமயங்களில் தமது பல்வேறு தனிப்பட்ட கடமைகளையும் ஒத்தி வைத்து மேற்படி செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். எனவே இங்கு முன்வைக்கப்பட்ட குறைகள் விமர்சனங்கள் அனைத்தும் முழுத் தமிழ் விக்கிச் சமூகத்தையுமே சாரும் என்பதை நாம் உணர்ந்து கொண்டு அடுத்த கட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம்.

இக்கூடலினால், தமிழ் விக்கியை மேலும் மேம்படுத்திச் செல்வதற்கான பலவகையான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பயனர்கள் மத்தியில் புதிய ஊக்கம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதில் பெருமளவு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் விக்கிச் சமூகத்துக்கு வெளியில் இருந்தும் நமது முன்னெடுப்புக்களுக்கு அங்கீகாரமும் உதவிகளும் கிடைத்துள்ளன. எனவே இவ்வாய்ப்புக்களையும், ஆற்றல்களையும் சரியான முறையில் புரிந்து கொண்டு ஒற்றுமையாக அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டியது அவசியம். எங்களோடு பேசிய பல ஊடகத்தினர் தமது தேவைகளுக்காகத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பள்ளிகளில் விக்கிப்பீடியாவைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் பல பயனர்கள் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் அறிஞர்கள் பலரும் கூட நமது செயற்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்து வருவது தெரியவந்துள்ளது. இவை எல்லாம் நாம் தமிழ் விக்கியின் தரத்தையும் அதன் நம்பகத் தன்மையையும் மேம்படுத்துவதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றன. நமது அடுத்த கட்ட முயற்சிகள் இவற்றை முன்னிலைப்படுத்தி அமையவேண்டியது அவசியம். இதற்காக நமக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பயனரும் மற்ற எல்லாப் பயனர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கூடலின் போது வெளிப்பட்ட, நாம் அறிந்து கொண்ட பல விடயங்கள், நாமெல்லாம் வெட்டியாகக் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் அல்ல என்பதை மிகத் தெளிவாகவே உணர்த்தியுள்ளன. சமுதாயத்துக்கான சேவை என்பதற்கும் அப்பால் தனிப்பட்ட முறையிலும் கூடப் பல பயனர்களது உலகியல் சார்ந்தனவும், உளவியல் சார்ந்தனவுமான பல்வேறு தேவைகளைத் தமிழ் விக்கிப்பீடியா மூலம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றியும் நாம் அறிந்து கொண்டோம். பிற மொழி விக்கிச் சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல இயல்புகள் தமிழ் விக்கிச் சமூகத்தில் இருப்பதையும் தனிப்பட்ட முறையில் என்னால் உணர முடிந்தது. செங்கைப் பொதுவன் போன்றோரின் இளைய தலைமுறையினரை அரவணைத்துச் செல்லும் பண்பு, இளைய தலைமுறையை வழிகாட்டுவதிலும் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகத் தனது தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் செல்வா போன்றோருடைய ஆளுமை, தங்கள் சூழலில் என்னென்ன விடயங்களைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் தாமாகவே சிந்தித்துச் செயலாற்றும் பல பயனர்களின் தொலை நோக்கு, எதையும் துணிவுடனும் வேகத்துடனும் செய்யும் இளைய தலைமுறையினரின் ஊக்கம் என்பன பல விக்கிச் சமூகங்களுக்குக் கிடைக்காத வளங்கள். இவற்றையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் தமிழ் விக்கிப்பீடியாவைத் உலகத் தமிழரின் மிகப் பெரிய சொத்தாக மாற்றிக் காட்ட முடியும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தாமல் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டியது அவசியம். இங்கே எழுதும் அனைத்தையும் நாம் மட்டுமன்றி எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பார்க்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

---மயூரநாதன் (பேச்சு) 10:58, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அனைவருக்கும் வணக்கம்!

விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு குறித்த எனது கருத்துக்கள் (கீழே உள்ளவை) மிகவும் கடுமையாக இருந்தது என்று பலரும் சொல்லியிருந்தீர்கள். என்ன செய்வது பாகற்காய் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது தானே உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

எனது கல்லூரி நாட்களில் இரு ஆண்டுகள் அண்ணாமலை பல்கலையில் மாணவர் தலைவனாக இருந்து பல்வேறு நிகழ்வுகளை எனது தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடத்தியவன் நான். அதுவும் எந்த விதமான நிதியுதவியும் இல்லாமலேயே.

அந்த வகையில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில அடிப்படை செயல்பாடுகள் காட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய அடிப்படை தேவைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ விழா நடத்துகிறோம் என்று நடத்துவது போல் இவ்வரிய வரலாற்று சிறப்புமிக்க விழா அமைந்தது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.

என்னுடைய கருத்துக்கள் கடுமை என்று சொன்னவர்களுக்காக சிலவற்றை எளிய நடையிலேயே இப்பொழுது கேட்கிறேன். இதற்கு பதில் சொல்வீர்கள் அல்லவா?...

1. விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டதா? அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட்டதா? பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டதா? கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதா?... இதற்கு அதிகம் செலவாகாதே?

2. விக்கிப்பிடியா விழா குறித்து சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்திருக்கலாமே?

3. விழாவின் போது விக்கிப்பீடியா குறித்த நூல் அச்சடித்து கொடுப்பதாக முன்னர் பேச்சு இருந்தது என நினைக்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு பக்க அளவில் கூட எதுவும் அச்சடித்து கொடுக்காதது ஏன்.

4. ஏற்கனவே திரு.தேனி மு.சுப்பிரமணி அவர்கள் எழுதிய விக்கிப்பீடியா நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. (அதுவும் அவர் அவ்விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கரங்களிலிருந்தே பெற்றார் அவர்.) இருப்பினும் அது குறித்த செய்தியையோ, அந்த படத்தையோ இருட்டடிப்பு செய்யும் வகையில், எதையுமே யாருமே குறிப்பிடவில்லையே அது ஏன்? அவர் விக்கிப்பீடியா குறித்து தானே எழுதியிருந்தார் அப்புறம் ஏன் இந்தப் பாகுபாடு...

5. உண்மையில் சொல்லப்போனால் திரு.தேனி மு.சுப்பிரமணியத்தை அந்த நூலுக்காக மட்டுமின்றி செல்லும் இடம் தோறும் விக்கிப்பீடியா குறித்து பேசி வரும் அவரின் அயராத முயற்சிக்காகவும், அவரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவரின் செயலைக் குறித்து தெரிவித்திருந்தால் கூட, அனைவரும் இது போன்று பணியாற்ற தூண்டுகோலாக இருந்திருக்குமே. ஏன் செய்யவில்லை. (இதை நான் பொறாமை என்று சொன்னால் நீங்கள் அனைவரும் என் மீது கோபப்படுவீர்கள் கடுமையான வார்த்தை சொல்கிறேன் என்று எழுதுவீர்கள். நீங்களே சொல்லுங்கள் இந்த இருட்டடிப்புக்கு பெயர் என்ன?)

6. விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளரும் தேவையில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டு விழா நடத்தினீர்கள். (பீடங்களை அலங்கரிக்க யாரும் தேவையில்லை- என்று கூறியிருந்தீர்கள் என நினைக்கிறேன்). இது உண்மையிலேயே சரி தானா என்று நீங்களே யோசியுங்கள். எத்தனையோ நல்லவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள், தமிழார்வம் கொண்டவர்கள், அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் இருக்கும் இந்த தமிழ்கூறும் நல்லுலகில், அப்படி யாருமே தேவையில்லை என்று விழா நடத்தியது ஏன்? நீங்கள் அழைத்திருந்தால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களே வந்து விழாவை சிறப்பித்திருப்பாரே. அப்படிச் செய்திருந்தால் அது எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்.

7. அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்புவது என்பது ஒரு மரபு. அப்படி அனுப்பும் போது அவர்கள் மூலம் நமக்கு விழா நடத்த உதவிகள் கிடைக்கவோ, விக்கிப்பீடியாவுக்கு மேலும் அந்தந்த துறை சார்ந்த உதவிகள் கிடைக்கவோ ஏதுவாக இருந்திருக்குமே. இவ்விழா குறித்து நான் எனக்குத் தெரிந்த அரசுத் துறை சார்ந்தவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் விழாவிற்கு தாங்கள் அழைக்கப்படாதது குறித்து மிகவும் மனம் வருந்தினர். விருந்தினர்களாக அழைக்காவிட்டாலும், இப்படி ஒரு விழா நடைபெறுகிறது என்று அறிவிக்கும் வகையிலாவது அழைப்பிதழ் அனுப்பியிருக்கலாமே. இதற்கெல்லாம் நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்வது மிகவும் தவறு. ஏனெனில் அழைப்பிதழ் அச்சிட ஒரு நாள் போதும். அனைவரும் அஞ்சலிலேயே அனுப்ப ஒரு நாள் போதாதா?

8. நான் குறைகளை மட்டுமே கூறினேன் என்று எண்ணும் அனைவரும் நான் பாராட்டிய நிகவுகளை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் விழா அரங்கம் அருமையாக இருந்தது. அதே போல் விழாவில் வழங்கிய சிற்றுண்டி மிகவும் அருமை. விழாவில் பேசியவர்கள் கனகச்சிதமாக பேசினார்கள். பெரும்பாலான விழாக்களில் இந்த மூன்றும் ஒருசேர அமையாது. இப்படி நல்ல நிகழ்வுகளை பாராட்ட நான் தயார்.

9. மற்றொன்றை அவசியம் சொல்லியாக வேண்டும். விழாவில் ஒரு சிலர் தங்களை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பெயர் சொல்லி அவர்களின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. அவர்கள் மனசாட்சியே அதை சுட்டிக் காட்டும். இது ஒரு பொது விழா. இருந்தும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது கூட தனித்தனியாக அழைத்து சென்று பேட்டி அளித்துள்ளீர்கள். இதற்கு என்று ஒரு குழு அமைத்திருக்கலாம். அல்லது விழா குறித்த ஒரு செய்தியறிக்கை தயாரித்து அதனை எல்லா ஊடகங்களுக்கு அளித்திருக்கலாம். இம்மாதிரியான விழாக்களில் இது தானே நடைமுறை.

10. விழாவில் மாணவர்களும் பங்கேற்றார்கள் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எத்தனை பேர் என்பது தான் என் கேள்வி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலையிலேயே தங்கி பயிலும் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழும் இந்நிகழ்விற்கு எத்தனை பேர் வந்தார்கள். எத்தனை பேருக்கு இப்படியொரு நிகழ்வு அங்கு நடப்பது தெரியும் என்பதுதான். மாணவர்கள் தானே அடுத்த தலைமுறைக்கு விக்கிப்பீடியாவை எடுத்துச் செல்பவர்கள்.

11. இந்த விழாவுக்கு எவ்வளவு செலவாயிற்று, எவ்வளவு நிதி கிடைத்தது எதுவும் எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசிவது முற்றிலும் தவறு. ஆனால் உண்மையில் இருபதாயிரமோ முப்பதாயிரமோ இருந்திருந்தால் கூட என்னால் இதைவிட அழகாகவும் அருமையாகவும் தனியொருவனாகவே இவ்விழாவை நடத்தியிருக்க முடியும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். இதன்மூலம் நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையையோ நேரமின்மையையோ சாக்காக கூறாதீர்கள் என்பதுதான். மனமிருந்தால் எதனையும் சாதிக்கலாம். அதுவும் இந்த பரந்து விரிந்த சென்னை மாநகரில் விக்கிப்பீடியா விழாவுக்கு உதவி கிடைக்காமலா போய்விடும் (பண உதவியை நான் கூறவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும்.)

கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் சொன்னது எதையும் குறையாக நினைப்பதை விட சொன்னதில் உள்ள உண்மைகளைப் பாருங்கள். விழாவில் என்னை ஒருசிலர் தவிர யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முகம் தெரியாத ஒரு பாமரனின் விமரசனமாக மட்டுமே இதனைப் பாருங்கள். எந்த ஒரு குறையுமே அதைத் திருத்துவதில் நிறைவடைந்துவிடுகிறது. ஆகவே குறைகளை திருத்தி நிறைவைக் காண முயலுங்கள். முயலுவோம்.

எனது கருத்துக்கு எதிர் கருத்து கூறியவர்களுக்கும், வாழ்த்திய ஒருசிலருக்கும், இப்படி கடுமையாக எழுதியுள்ளானே என்று திட்டியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கோ.சந்திரசேகரன் 05-10-2013

நால்வகை விழாக்கள்

இந்த பத்தாண்டு நிறைவு பயன கூடல் என்பது

  1. unconferernce முறையில் நடை பெற்ற விக்கி பயனர்களில் ஒன்று கூடல் நிகழ்வா,
  2. அல்லது விக்கி குறித்த ஒரு விஞ்ஞான கருத்தரங்கமா
  3. அல்லது அனைத்து அரசு துறைகள், பல்கலைகழகங்கள், அரசியல் கட்சிகள், அமெரிக்க குடியரசு தலைவர், தலாய் லாமா ஆகியோரை அழைத்து விக்கி குறித்து பரப்புரை செய்யும் பேரணி பொதுக்கூட்டம், மாநாடா
  4. பள்ளி கல்லூரிகளை நடைபெறும் கலைவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் போலா

என்பது குறித்து முதலில் தெளிவு வேண்டும்

கல்லூரிகாலம் முதல் பல வகைப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொண்டவன் என்ற முறையில் என் கருத்துக்களையும் அளிக்கிறேன்

  • Unconference based Reunion என்றால் அது நடைபெறும் விதம் வேறு
  • Scientific Conference என்றால் அது நடைபெறும் விதம் வேறு
  • Intercollegiate or Intra collegiate Cultural and sports events என்றால் அது நடைபெறும் விதம் வேறு
  • Rally, Public Meeting என்றால் அது நடைபெறும் விதம் வேறு

உதாரணமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஒரு பொதுக்கூட்டமோ, மாநாடோ, பேரணியோ அல்லது நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்வின் நோக்கம் அதிகம் நபர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து தகவல் சென்றடைவேண்டும் . எனவே அந்த நிகழ்ச்சிக்கு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும், அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், அரிசா சங்கம் போன்றவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும், சாலை விபத்து குறித்து சிறு நூல் அச்சிட்டு அளிக்கலாம், விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளர் அழைக்கப்படவேண்டும், அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் , ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைக்க வேண்டும்.

அதே போல் சாலை பாதுகாப்பு வாரம் குறித்து பள்ளிகளுக்கு இடையில் ஒரு கட்டுரை போட்டி நடத்துகிறோம் என்றால், அந்த நிகழ்வின் நோக்கம் அதிகம் நபர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து தகவல் சென்றடைவேண்டும் . எனவே அந்த நிகழ்ச்சிக்கு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும், அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், அரிசா சங்கம் போன்றவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், சிறு சிறு பேனர்கள் (3x2 அடி) செய்து ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும், சாலை விபத்து குறித்து சிறு நூல் அச்சிட்டு அளிக்கலாம், விழாவில் தலைமையேற்க எந்த சிறப்பு அழைப்பாளர் அழைக்கப்படவேண்டும், அரசு துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் , ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைக்க வேண்டும்.

இவை இரண்டும் இல்லாமல் சாலை வடிவமைப்பு, விபத்து சிகிச்சை குறித்து ஒரு விஞ்ஞான கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது அந்த நிகழ்வின் நோக்கம் அந்த நிகழ்ச்சி குறித்த செய்தி பொது மக்களை சென்றடைய வேண்டும் என்பதை விட, அந்த துறை சார் வல்லுனர்களை சென்று அடைய வேண்டும் என்பதே. எனவே அந்த நிகழ்வை பொருத்தவரை அழைப்பிதழ்களை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பதேவையில்லை. உதாரணத்தில் குறிப்பிட்ட கருத்தரங்கிற்று மருத்துவத்துறை, போக்குவரத்து துறை, காவல் துறை அழைக்கப்பட வேண்டும், தமிழ் வளர்ச்சி துறை, விவசாய துறைக்கு அழைப்பு தேவையில்லை. அதே போல் தமிழ் கணினி குறித்த விஞ்ஞான கருத்தரங்கிற்கு தமிழ் துறையும், தகவல் தொழினுட்பம் (விக்கி மரபுபடி இந்த வார்த்தை தானே !) துறையை அழைக்க வேண்டும். அனைத்து பல்கலை கழகங்களை தொடர்பு கொள்ள தேவையில்லை. மருத்துவ பல்கலைகழங்களில் கூட இந்த துறையை மட்டும் தொடர்பு கொண்டால் போதும். இந்த நிகழ்வின் நோக்கம், சிறந்த கட்டுரைகள், ஆராய்ச்சி குறிப்புகள், வகுப்புகள், விவாதகங்கள் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தானே தவிர இந்த நிகழ்வின் நோக்கமும் சென்ற இரு நிகழ்வுகளின் நோக்கமும் வேறு. ஒரு விஞ்ஞான கருத்தரங்கை பேரணி நடைமுறைகளை வைத்தோ, கலை நிகழ்வு நடைமுறைகளை வைத்தோ, பொதுகூட்ட நடைமுறைகளை வைத்தோ எடை போடுவது மிகவும் பிழையான செயல் ஆகும்

இது தவிர மற்றொரு நிகழ்வும் உண்டு. அது இந்த நிகழ்ச்சியை போல் குறிப்பிட்ட ஆண்டுகள் நிறைவை ஒட்டிய மீள்கூடல் நிகழ்வு. இந்த வகை நிகழ்ச்சிகளின் நோக்கம் அனைவரும் நேரில் சந்தித்து பேசுவது தானே தவிர இங்கு அரசு துறைகளுக்கு அழைப்பு, சிறப்பு விருந்தினரை முன்னிலைப்படுத்துவது, மாணவர்களை அழைப்பது என்பது எல்லாம் இல்லை . விழா அழைப்பு கூட தேவையில்லை. காரணம் இங்கு வருபவர்கள் அனைவருமே விருந்து அளிப்பவர்களே. யாரும் விருந்தினர் இல்லை. All Hosts and No Guests.

நான்குவகை நிகழ்வுகளும் வெவ்வேறானவை அவற்றின் நோக்கங்களும் வெவ்வேறானவை அவற்றை நடத்தும் முறைகளும் வெவ்வேறானவை

ஒரு நிகழ்வின் நடைமுறையை வைத்து மற்றொரு வகை நிகழ்ச்சியை எடைபோடுவது, குறைகூறுவது மிகவும் பிழையான செயல் ஆகும்

புனைவு : வீட்டிற்கு வந்த ஒருவர் மேசையில் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்து புரட்டி பார்த்து விட்டு கூறினார் "என்ன பத்திரிகைடா இது. ஒரு தொடர் இல்லை, நடுப்பக்க படம் இல்லை, கேள்விபதில் இல்லை, சினிமா கிசுகிசு இல்லை. இப்படி ஒரு பத்திரிகையை எவண்டா படிப்பான் " "அண்ணாச்சி, அது குமுதமோ, ஆனந்த விகடனோ அல்ல. அது New England Journal of Medicine. அது அப்படித்தான் இருக்கும்"

எப்பொருள் எத்தன்மை என்பதுணர்ந்து அதன்பின்
அப்பொருள் விமர்சிப்ப தறிவு

புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:58, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அருமையான விளக்கம்! :) விக்கி மரபையும், unconference மரபையும் புரிந்துகொள்ள மறுக்கின்றவர்களுக்குப் புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:14, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சேகரன், இந்த நிகழ்வு ஒருவராலோ இருவராலோ தன்னிச்சையாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இரண்டு மாதங்களுக்கு மேலாக பல பயனர்கள் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடித் திட்டமிட்டு நடத்தப்பட்டது. நிகழ்வின் நோக்கம் என்ன? என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பணம் செலவாகும்? என்பவற்றைத் தீர்மானிப்பது தொடக்கம், பன்னாட்டுப் பரப்புரைகளுக்காகச் சிறப்பிதழ்க் கட்டுரைகள் எழுதல், கையேடு தயாரிப்பு, வடிவமைப்புக்கள் அவற்றுக்கான ஆலோசனைகள் எனப் பல விடயங்கள் ஏராளமான பயனர்களின் பங்களிப்புடனேயே நடை பெற்றன. இந்தச் செயற்பாடுகளில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமன்றி நார்வே, கனடா, செருமனி, இலங்கை என்று பல நாடுகளிலும் இருந்து பயனர்கள் முனைப்பாக ஈடுபட்டிருந்தனர். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்? அந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போ 20,000க்கு நடத்திக் காட்டுவேன், 20 ரூபாய்க்கு நடத்திக்காட்டுவேன் என்பதெல்லாம் நேர்மையற்ற செயல். வெறும் வெட்டிப்பேச்சு. செய்தியறிக்கை தயாரிக்கவில்லை என்றோ அதைப் பத்திரிகையாளருக்குக் கொடுக்கவில்லை என்றோ உங்களுக்கு யார் சொன்னது? என்னென்ன நடந்தது என்றே உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. மற்றப் பயனர்கள் எவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லை. புரிந்து கொள்வது உங்களது நோக்கம் அல்ல என்றே எண்ண வேண்டியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என எண்ணினோமோ அதைவிடச் சிறப்பாகவே நிகழ்வை நடத்தியுள்ளோம். அடுத்த கட்ட வளர்ச்சிக்காகப் பல வாய்ப்புக்களைக் கண்டறிந்துள்ளோம். இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறவேண்டும். நீங்கள் உண்மையிலேயே தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை விரும்புவதாக இருந்தால், இத்தோடு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் நிறுத்திவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யலாமா என்று பாருங்கள். முடியாவிட்டால், மற்றப் பயனர்களை ஒழுங்காக வேலை செய்ய விடுங்கள். ---மயூரநாதன் (பேச்சு) 18:00, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அன்பு நண்பர்களே, எந்த விஷயத்தைப் பற்றியும் விமர்சனம் செய்தாலே விமர்சிப்பவருக்கு கடைசியாக அவமதிப்பும், பழிச்சொல்லும் தான் கிடைக்கும் என்பதை ஒருவழியாக திரு.மயூரநாதன் தன் கருத்துக்களின் மூலம் தெரிவித்து விட்டார். மிக்க நன்றி ஐயா!... இது நான் எதிர்பார்த்தது தான். நீங்கள் சொன்னது போல் நான் சென்ற மாதங்களில் விழா ஏற்பாடுகளில் எதுவும் கலந்து கொள்ளவில்லை தான். ஆனால் அதற்காக அந்த ஏற்பாடுகள் குறித்த செய்திகளை நான் படிக்கவில்லை என்றோ அல்லது நண்பர்கள் மூலம் அறியவில்லை என்றே எப்படி உங்களுக்கு தெரியும்? என்னுடைய உண்மையான ஆதங்கத்தை வெட்டிப் பேச்சு என்று சொல்வதால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நான் எதையும் புரியாமல் எழுதவில்லை. நீங்கள் எண்ணியது போல் விழா சிறப்பாக நடைபெற்றதாக எண்ணி நீங்கள் மகிழ்வடையும் பட்சத்தில் எனக்கும் மகிழ்ச்சியே. கடைசியாக எனக்கு ஒரு அறிவுரை வேறு வழங்கியுள்ளீர்கள். அதற்கு மிக மிக நன்றி. ”உங்கள் விழா” குறித்து எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டேன் தான். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. (ஆமாம் என்னுடைய எழுத்து எப்படி மற்ற பயனர்களின் வேலையைத் தடுக்கும் என்று புரியவில்லை...நான் யாரையும் தங்களின் வேலையை விட்டுவிட்டு என் கருத்துக்களை படிக்கச் சொல்லவில்லையே.ஆகவே வேலையுள்ளவர்களே, இப்போது நான் வெட்டியாய் (?) எழுதியதையும் படித்து விட்டு மீண்டும் என் மீது சேற்றி வாரி இறைக்காதீர்கள்.)

சௌமியன்

நண்பர்களே, என் எண்ணங்களை கால தாமதமாக பகிர்வதற்கு மன்னிக்கவும். நான் ஒரு மாணவனின் கண்நோட்டத்தில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து பாடம் பயில்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். ஒரு அரசு நிறுவனமாகவோ, தனியார் நிறுவனமாகவோ செயல்படுவதை விட ஒரு சமூக நிறுவனமாக செயல்படுவது சற்று கடினம் என்று எண்ணுகிறேன். எதிர்பார்ப்புகள் 'கட்டற்றதாக' இருக்கக்கூடும்! ஒரு பொதுநிகழ்ச்சி பற்றி வெளியுலகிடம் பகிர்ந்து கொண்டபிறகு, சில வேலைகள் தடைப்பட்டால் அவற்றை துவக்கியவர் எப்பாடுபட்டேனும் அவற்றை நடத்தியே ஆகவேண்டும். ஓரிரு முறை இவ்வாறு தடங்கல் ஏற்ப்பட்டால், நிகழ்ச்சி நடத்துபவர் மெல்ல மெல்ல சில நெருங்கிய அன்பர்களின் உதவியுடன் நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் கவனம் செலுத்துவது இயற்க்கை. இந்நிலையில் உதவி செய்ய விழைந்த மற்ற ஆர்வலர்கள் தமக்கு பங்கு கிடைக்கவில்லை என வருத்தப்படுவதும் இயல்பே. இத்தகைய பொது நிகழ்ச்சியில் உதவி செய்யவும் பங்கேற்றுக்கொள்ளவும் ஆட்கள் கிடைக்காமல் நான் மிரண்டும் போயிருக்கிறேன். ஆக, இங்கு குறைகள் என்று நீங்கள் குறிப்பிடும் சில கருத்துக்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியவை. இது நம் வீட்டு கல்யாணம். சில அனுபவங்களின் தாக்கம் அனுபவித்தபிறகு நன்கு புரியலாம்.

ஊடகங்களுக்கு முன்கூட்டியே செய்தி அனுப்புவது பற்றிய செயல்பாட்டில், என் பிழை ஒன்று உள்ளது. திரு இரவி ஊடகங்களுக்கு அழைப்பு அனுப்ப என்னிடம் சொல்லியிருந்தார். நானும் அழைப்பை பாக்ஸ் மூலமும் குரியர் மூலமும் அனுப்பிவைத்தேன். நன்கு நாட்கள் கழித்துதன இது சென்னை பிரஸ் கிளப்-க்கு சென்றடையவில்லை என்று உணர்ந்தேன். குரியர் கம்பெனிகாரர்கள் என் அழைப்பை ஹைதராபாத்-க்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். புகாருக்கு அவர்கள் இன்னமும் பதில் அளிக்கவில்லை. ஆனால் கால தாமதமான அழைப்பு பிரஸ் மீட்-ஐ பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இரவி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் என் வருத்தத்தை தெரியப்படுத்துகிறேன். மன்னிக்கவும்.

இவ்விழாவில் நான் உங்கள் விருந்தினன் போல் பங்கேற்றேன். எதிர்காலத்தில் நானும் புரவலனாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். Chapter அமைப்பு உங்களுக்கு உதவும் கரம். அதே சமயத்தில், தேவையற்று தலையீடு செய்வது உங்கள் ஊக்கத்தை பறிப்பதாகும். ஆகவே, நாங்கள் சற்றே விலகியிருந்து உங்கள் உதவி கோரலுக்கு காத்திருக்கிறோம். இன்றைய நிலையில், ஒரே நபராக இருக்கின்ற காரணத்தால் எல்லோருக்கும் அனைத்து செயல்களையும் செய்து தரும் நிலையில் நான் இல்லை. எதிர்காலத்தில் எந்த மாதிரியான செயல்களை எங்களிடமிருந்து எதிப்பார்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டால் எங்களை தயார் படுத்திக்கொள்ள இயலும். இந்தப்புரிதலுக்கான உரையாடலை எதிப்பார்க்கிறேன். தமிழ் சமுதாயத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக எண்ண வேண்டாம். பல மொழி இயக்கங்களும் இன்னமும் எங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

Un-conference என்ற முறையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி விமரிசையாக நிகழ்ந்ததாகவே உணர்கிறேன். எங்கு வரவேண்டும், எப்படி வரலாம் என்ற குறிப்புக்கள் உதவியாக இருந்தன. தங்கும் இடம் மிக வசதியாக இருந்தது. மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் நாம் கேட்ட உரை உபயோகமானது. FOSS இயக்க நண்பர்களுடைய கருத்து பரிமாற்றமும் உபயோகமாக இருந்தது. முதல் பங்களிப்பாளரான மயூரநாதன்-அவர்களுடைய முன்னாள் அனுபவங்கள் சுவையாக இருந்தன. செல்வா அவர்களுடன் உணவருந்தும் வேளையில் பேச முடிந்தது. தேனி சுப்பிரமணி, துரை மணிகண்டன், VB மணிகண்டன் ஆகியோருடன் கன்னியாகுமரி நிகழ்ச்சி சம்பந்தமாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்தது. இவர்களை நேரில் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தர் மற்றும் பாலா இருவரை மட்டுமே முன்கூட்டி சந்தித்திருந்தேன். இரவி பலகாலமாக அறிமுகமானவர் போன்றே தோன்றினார். ஒரு 77 வயது இளைஞர் என்னை ஊக்குவித்தார். அன்பர்கள் சிவகுமார், சிவகோசரன் ஆகியோரிடமும் வெளிப்படையாக பேச முடிந்தது. பெயர்களை குறிப்பிட்டு சொல்வது விட்டுப்போன பெயருடையவர்களை வருந்தச்செய்யலாம். நான் சந்தித்த எல்லா நண்பர்களும் மிக இயல்பாக நட்பு பாராட்டினார்கள். பலருடனும் கருத்து பரிமாறிக்கொள்ள தேவைப்பட்ட அவகாசம் கிடைத்தது. இந்த அவகாசம் மிக முக்கியமானது.

TAG அரங்கத்தை தேட சற்று சிரமமாக இருந்தது உண்மை. நிகழ்ச்சிக்கு பிறகு, பங்கேற்றோர் பட்டியலை காண்கையில், கேள்விப்பட்டு சந்திக்க விரும்பிய சிலரை காணாமல் விட்டது சிறு குறை.

மற்ற மொழி விழாக்களில் நடைபெற்ற சில வித்தியாசமான நிகழ்வுகள்: தெலுங்கு மாநாட்டில், அயல் நாட்டு பங்களிப்பாளர்கள் Google hangout மூலம் பங்கேற்றார்கள். பெங்களூர்-ல் நடைபெற்ற வடமொழி நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களுக்கான கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

என் முக்கிய நோக்கம் அன்பர்களுடன் நட்பு பாராட்டி புரிந்துகொள்வதாகத்தான் இருந்தது. இது தான் இந்த நிகழ்ச்சியின் பெரும் சாதனை. பத்தாண்டு நிறைவை கொண்டாடும் இந்த சமுதாயத்தில் பலருக்கு இடையே நேருக்கு நேர் சந்திப்பு என்பது இப்போது தான் நடந்தது என்பது வியப்பாக இருந்தது. என்னதான் இணையத்தில் சேர்ந்து பணிபுரிந்தாலும், இதுபோன்ற நேருக்கு நேர் சந்திப்பு மிக முக்கியம் என்று நினைக்கிறேன். WMF-இடமிருந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி பெற ஒரு சிறு ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வில் உடனடியாக பகிரமுடிந்தவை பின் வருமாறு:

பங்குகொண்டோர் - 13 இணையம் மூலமே முன் அறிந்தவர்கள் எண்ணிக்கை (சராசரி ) - 8.7 நேருக்கு நேர் முன் அறிந்தவர்கள் எண்ணிக்கை (சராசரி ) - 3.2 பத்தாண்டு விழாவின் வாயிலாக நேருக்கு நேர் அறிமுகமானோர் (சராசரி) - 14.7

வலைத்தளம் மூலம் அறிந்தவர்கள் எண்ணிக்கையைக்காணிலும் இப்போது நேருக்கு நேர் அறிமுகமானோர் கிட்டத்தட்ட இருமடங்கு. நேருக்கு நேர் அறிந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு. அதிக நெருக்கம் பெற கருவியாக அமைந்த இவ்விழா நிச்சயமாக பயனர்களிடையே ஒத்துழைப்பை பெருக்கும்.

உங்கள் முயற்சி மேன்மேலும் பெருக எங்கள் வாழ்த்துக்கள். சந்திப்பிழைகள் சொற்ப்பிழைகள் போன்றவைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.

சௌமியன், நீங்கள் இரண்டு நாட்களும் எங்களுடன் இருந்து நிகழ்வை மேலும் பயனுள்ளதாக்கியதற்கு நன்றி. உங்களுடன் பேசிப் பழகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளப் போதிய நேரம் கிடைத்தது. இது எதிர் காலத்தில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக உங்களிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வழி சமைக்கும் என நம்புகிறேன். இப்பொழுது உங்களைத் தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்கள் பலருக்குத் தெரியும். எனவே அடிக்கடி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்து எங்களுடன் கலந்துரையாடி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ---மயூரநாதன் (பேச்சு) 18:20, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சௌமியன், எங்கள் அழைப்பை ஏற்று கூடலுக்கு வந்தமைக்கு மிக்க நன்றி. இதன் மூலம் இந்திய விக்கிமீடியா கிளை பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் கூடி உள்ளது. வருங்காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். கூடல் தொடர்பாக எங்கெல்லாம் முறையான கடிதங்கள் தேவைப்பட்டனவோ அங்கெல்லாம் உடனுக்குடன் கடிதங்களை வழங்கி பேருதவி செய்தீர்கள். மிக்க நன்றி. ஊடகச் சந்திப்பு தொடர்பான உங்கள் கடிதம் சரியான நேரத்திலேயே கிடைத்தது. அதில் கால தாமதம் ஏதும் இல்லை. எனவே, அதற்காக நீங்கள் வருந்த வேண்டியதில்லை. மிகச் சிறப்பான ஊடக கவனமும் கிடைத்துள்ளது. அரங்கைக் கண்டடைவதில் இருந்த சிக்கல் உணரப்பட்டுள்ளது. Google Hangoutம் எண்ணமாக இருந்து செயல்படுத்த முடியாமல் போனது. அடுத்த முறை இவற்றைக் கருத்தில் கொள்வோம். தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 18:47, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றி

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூடல்/நிறைவுக் கொண்டாட்டங்கள் குறித்து இங்கு பதிவு செய்யபப்ட்ட எனது கருத்துகளின் உணமையை உணர்ந்து கொண்டவர்களுக்கும், சிலரைத் திருப்திபடுத்திடும் நோக்கத்துடன் மட்டும் இங்கு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தவர்களுக்கும், நடுநிலையோடு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த சிலருக்கும் என்று அனைவருக்கும் என் இனிய நன்றிகள்....

நானும் சிலருக்குப் பதிலளிக்கிறேன் என்று பல பக்கங்களுக்குப் பதிலை இங்கு எழுத முடியும். அது தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத்தான் உருவாக்கும் என்பதால் எனது பதில்களை இங்கு தவிர்க்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியா ஒன்றை மட்டுமே தங்களுடைய அறிமுகத்திற்காகக் கொண்டிருக்கிறவர்களுக்கு வேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தமிழ் விக்கிப்பீடியா உதவக்கூடும். பல்வேறு நிலைகளில் தனித்துவமான அடையாளம் கொண்டிருக்கும் என் வளர்ச்சிக்குத் தமிழ் விக்கிப்பீடியா உதவப் போவதில்லை. என் வழியாகத் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வேண்டுமானால், குறிப்பிடத்தக்கதான பரவலான அறிமுகம் கிடைத்திருக்கிறது. இதற்கு எனது பயனர் பக்கத்திலிருக்கும் விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகள் , விக்கிப்பீடியா குறித்த எனது ஊடகப் படைப்புகள் மற்றும் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் போன்ற பக்கங்களே சான்று.

இன்று முதல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான எனது அனைத்துப் பங்களிப்புகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. (தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியாகும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் எனது தொடர் முடிவடையாத நிலையிலுள்ளது. இந்தத் தொடரில் வெளியான பக்கங்கள் பட வருடி செய்யப்பட்டு இங்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையடைவதற்காகவும், எனது தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பங்களிப்புகளில் ஒன்றிற்கான சான்றாகவும் இது இருப்பதால் இந்தப் பங்களிப்பு மட்டும் என்னால் மேற்கொள்ளப்படும்)

தமிழ் விக்கிப்பீடியாவில், தங்களுடைய தனித்திறனால் வெளிப்படும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சிலரின் செயல்பாடுகளால் இலங்கையைச் சேர்ந்த பயனர் புன்னியாமீன் (தொடங்கிய கட்டுரைகள்: 8,558) என்பவர் வெளியேற நேர்ந்தது. இதைத் தொடர்ந்து நானும் தற்போது வெளியேறுகிறேன். எங்கள் இருவருக்கும் முன்பாக எத்தனை பேர் இப்படி வெளியேறினார்களோ தெரியவில்லை...!

இங்கு யாருக்கும் பயந்து போய் நான் வெளியேறுவதாகக் கொள்ள வேண்டாம். பின்னால், என்னுடைய தனித் திறனுக்குக் கிடைக்கக் கூடியவை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவினால்தான் கிடைத்தது என்கிற தவறான கருத்து ஏற்பட்டு விடக் கூடாதே... என்பதால்தான் இந்த முடிவு.

என்னுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகளுக்கு தொடக்கத்திலிருந்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய நன்றிகள் என்றென்றும் உண்டு...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:40, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தயவுசெய்து இந்த மாதிரியொரு தீவரமான முடிவை மறுபரிசீலியுங்கள். நீங்கள் சிறந்த எழுத்தாளர். விக்கிக்கு பல்வேறு வழிகளில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். உங்களின் தனிப்பட்ட திறன்களை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. உங்கள் நூல் இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படவில்லை என்ற உங்கள் ஆதங்கம் நியாமானதே. ஒரு அறிமுகப்படுத்தல் வழங்கி இருந்தால் புதுப் பயனர்களுக்கு உதவியாக அமைந்து இருக்கும். இந்த நிகழ்வு உங்களையோ யாரையுமோ தனிப்பட எந்தவிதத்திலும் பாதிக்கும் வண்ணம் எள்ளவிலும் திட்டமிடப்படவில்லை. அவ்வாறு நீங்கள் உணர்வீர்கள் என்றால் அது வருந்தப்படத்தக்கதே. நன்றி. --Natkeeran (பேச்சு) 00:06, 8 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:33, 9 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்----நந்தகுமார் (பேச்சு) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனியாரே! தேனீ போன்ற தங்கள் உழைப்பை நிறுத்துவது வேதனை அளிக்கிறது. உங்கள் திட்டத்துடன், திடமாக இருங்கள். இணையத்தமிழ், நம் அன்னைத்தமிழ் அல்லவா? பலமொழிகளின் வன்மையை தமிழில் புகுத்தவல்ல, இத்தளத்தை விடுதல் சிறப்பன்று. பல விக்கித்திட்டங்களிலும் ஈடுபடுக் கோருகிறேன்.உள்ளதையும், உணர்ச்சிகளையும் உதருங்கள். உள்ளத்தை நாடுங்கள்.--≈ உழவன் ( கூறுக ) 03:13, 8 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:33, 9 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்----நந்தகுமார் (பேச்சு) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனீ யார்? என்று அறியுமளவு தங்கள் பங்களிப்புகள் சிறப்பாக இருந்தன. தங்கள் மீது எவரும் "நான் உன்னைவிட சிறந்தவன்/உயர்ந்தவன்" போன்ற எதிர்மறை தனிநபர் விமரிசனங்கள் செய்யவில்லை பொதுவான கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுங்கள், தேனீ போன்ற தங்கள் உழைப்பை தொடருங்கள், சிறந்த வழிகாட்டியாய் இருங்கள்.--ஸ்ரீதர் (பேச்சு) 04:16, 8 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:33, 9 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்----நந்தகுமார் (பேச்சு) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி.மு.சுப்பிரமணி, ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? இந்த உரையாடல் நடந்து முடிந்த நிகழ்வைப் பற்றிய அலசல்தானே? இதில் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நூலைப் பல விக்கித் தளங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம், விக்கிப்பீடியர்கள் பலரும் அவரவர் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறோம். இந்த நிகழ்விலும் செய்திருக்கலாம்தான். ஆனால் விடுபட்டதை நீங்கள் பெரிதாக எண்ண வேண்டியதில்லை. உங்கள் முடிவைக் கைவிட்டு தொடர்ந்து விக்கிப்பீடியராகப் பங்களிக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:47, 10 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்----நந்தகுமார் (பேச்சு) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
முடிவை கைவிட வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு இலட்சமாவது கட்டுரையை தேனியார் எழுதுவதாக கூறியிருந்தார் என்பதையும் நினைவுக்கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:24, 10 அக்டோபர் 2013 (UTC)--👍 விருப்பம்----நந்தகுமார் (பேச்சு) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அன்புள்ள தேனியாரே தாங்கள் எடுத்த முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வரவேண்டும். உங்களைப் பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். உங்களின் சொந்த உழைப்பால் முன்னேறியவர். அவசியம் மீண்டும் தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைக் காணவேண்டும். நன்றி. --முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 15:44, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனியேரே, வருத்தமாக இருக்கிறது. தமிழ்மொழி விக்கிப்பீடியாவில் மட்டும் எழுதுவதில்லை என்று பிற மொழிகளில் எழுதிக் கொண்டிருந்தவன் தான் நான். மாற்றம் வேண்டும் போது வெளியிலிருப்பதை விட உள்ளேயிருப்பதே சிறந்தது என நினைத்து மீண்டும் எழுதுகிறேன். அதுபோல மீண்டும் வந்து உங்கள் ஆலோசனைகளைத் தகுந்த விவாதயிடத்தில் வையுங்கள். விக்கிப்பீடியா யாருடைய சொத்தும் அல்ல நாம் குறையாகக் கருதும் பல விசயங்கள் பின்னாளில் மாறலாம். ஊர் கூடி இழுக்கும் தேரில் உங்கள் பங்களிப்பும் அவசியம். (உங்களளவிற்கு சாதிக்காத என்னை உங்களுடன் ஒப்பிட்டதற்கு மன்னிக்க, இருந்தும் சக்கையைவிட்டுவிட்டு சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்)--நீச்சல்காரன் (பேச்சு) 16:28, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனி சுப்பிரமணி தன் முடிவை மீளப் பரிசீலிக்க வேண்டும். தங்களைப் போன்ற பங்களிப்பாளர்கள் கருத்தாடல்களில் நிகழும் முரண்களைப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல, மீண்டும்வரவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:36, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தனிமனிதத் தாக்குதல்

தனிமனிதத் தாக்குதல் (Personal Attack) என்பது ஒரு மனிதரை உடல்ரீதீயாக தாக்குவதல்லாமல்; உளரீதியாக தாக்குவதை குறிக்கும். ஒருவரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் வசைச் சொற்கள், இழிச்சொற்கள் மட்டுமே ஒருவரை உளரீதியாக தாக்கத்தை உண்டுப்பன்னுகின்றது என்பது உளவியல் பார்வையில் தவறான கருத்தாகும். அதனை விடவும் ஒருவரை உளரீதியாக பாதிக்கக் கூடிய அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து சொற்பயன்பாடுகளும் கூட தனிமனிதத் தாக்குதலாகக் கொள்ளப்படும்.

இங்கே விக்கிப்பீடியாவில் //"இன்று முதல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான எனது அனைத்துப் பங்களிப்புகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது."// என்று நீண்டக்காலமாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உழைத்த ஒரு பங்களிப்பாளர் கூறுகிறார் என்றால் அவர் எந்தளவுக்கு உளத்தாக்கத்திற்கு உட்பட்டிருப்பார் எனபதை உளவியல் ரீதியாக உணர்ந்துக்கொள்ளலாம். இவ்வாறான தனிமனிதத் தாக்குதல்கள் வசைச்சொற்கள் இழிச்சொற்கள் போன்றவற்றையும் விட கொடியது. இவ்வாறு தாக்குதல்களுக்கு உற்படுவோர் மட்டுமன்றி; இத்தகைய தாக்குதல்கள் நமக்கும் நாளை வரலாம் என எண்ணும் நிலையில் ஏனையப் பயனர்களும், விக்கியின் அன்மைய மாற்றங்களை அடிக்கடிப் பார்ப்போரும், தேடு பொறிகள் ஊடாக குறிப்பிட்ட பக்கங்களைக் காண்போரும் விக்கியில் பங்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பேரிழப்பாகும்.

இங்கே தேனியார் விக்கியில் இருந்து விழகுவதற்கு அவரை உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய தனிமனிதத் தாக்குதல் சொற்களாக //பிரியாணி போட்டு கடற்கரையில் கூட்டம் கூட்டி வெற்றி முரசு கொட்ட இது கட்சி மாநாடு அன்று.// போன்ற இன்னும் பல நா தடித்தச் சொற்கள்' நேரடியாக தேனியாரை தாக்கும் நோக்கிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இங்கே இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டும். தேனியார் "தனது பங்களிப்புகள் நிறுத்திக்கொள்ளப்படுகிறது" என்றவுடன் இங்கே இன்னுமொருவர் (ஆண்டுக்கணக்கில் விக்கியில் எந்த கட்டுரையையும் ஆரம்பிக்காதவர்) "மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் நடந்துக்கொண்டே இருப்பேன்." என ஒரு குத்தல் சொல்லாடலை கொடுத்திருந்தார். இது எல்லோருக்கும் புரிந்ததோ இல்லையோ நடப்பு உரையாடல்களை நன்கு கவனித்து வருவோருக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனையும் ஒரு புதிய கட்டுரை தொடங்குவதுப் போல் தொடங்கி மேலுள்ள சொற்றொடரை பயன்படுத்தியிருந்தார். (கவனிக்க: குறிப்பிட்ட நபரின் நோக்கம் கட்டுரையை தொடங்குவதல்ல; மாறாக தேனியார் மீது மேற்கொள்வதற்கான தனிமனிதத் தாக்குலுக்காகவே அக்கட்டுரையும் அக்கட்டுரையின் சொல்லாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்பாடுகளும் தனிமனிதத் தாக்குதல்கள் தான்.

அங்கே இத்தனிமனிதத் தாக்குதலை உணர்ந்து கேள்வி எழுப்பியமையை கண்டித்து "தனிமனிதத் தாக்குதல்கள் தொடர்ந்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும்." எனும் எச்சரிக்கையும் விடப்படுகிறது. பின்னையது தனிமனிதத் தாக்குதல் என்றால் முன்னையது என்னவாம்? இவ்வாறு விக்கியில் நீண்டக் காலமும், சிறந்தப் பங்களிப்புகளையும் வழங்கிய தேனியார் போன்றோரை தாக்கும் உத்திகளையும் உருவாக்கும் புறநிலையை செயல்பாடுகளும், விக்கிக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் தனது நட்புவட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும், தானாகவே தாக்கும் செயல்பாடுகளும் என எந்த வகையான தாக்குதல்களும் கண்டனத்துக்கு உரியவைகள்.

விக்கிப்பீடியாவில் விமரசனங்களை உள்வாங்கும் கட்டமைப்பு இல்லாமை

விக்கிப்பீடியா எந்த ஒரு ஆக்கத்தையும் நடுநிலையோடு எழுதவேண்டும் எனும் சிறந்தக் கொள்கையுடையது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா அதன் விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவதில்லை. இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களை பயன்படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் அதனை அப்புறப்படுத்த முனையும் போதோ அல்லது அப்புறபடுத்தியப் பின்போ அதன் நிறை குறைகளை (குறிப்பாக குறைகளை) தானியங்கியாக கேட்கும் நடைமுறைகளை சிறுச் சிறு நிறுவனங்கள் கூட கொண்டுள்ளன. காரணம் அம்மென்பொருளின் பயன்பாடு குறித்த பயனர் கருத்தறிந்து மேலும் மேம்படுத்திக்கொள்வதற்காகும். ஆனால் தமிழ் மொழியில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கக் கிடைக்கப்பெற்ற "விக்கி மென்பொருள்" அல்லது ஏனைய மொழிகள் எனும் அடிப்படையில் "தமிழுக்கு கிடைத்த விக்கி இடைமுகம்" இதுவரை தமிழர் வரலாற்றில் கிடைக்காத ஒரு அரும்பெரும் சொத்து என்றே கூறவேண்டும்; அதுவே "தமிழ் விக்கிப்பீடியா" என்று எல்லோரும் அழைக்கின்றோம். இந்த தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வயது வேறுபாடின்றி, தொழில்நிலை பாகுபாடின்றி அநேகமாக மொழி ஆர்வளர்கள், எழுத்து ஆர்வளர்கள், எமது தாய் மொழிக்காக எதனையாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில் முன்வருகின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளில், பல்வேறு தொழில்நிலை, வருமானஎல்லை என எல்லாவற்றிற்கும் அப்பால் ஏதோ ஒரு வகையில் ஒத்த நோக்குடன் தமிழ் மொழியில் தமிழருக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் பலரும் இங்கு இணைந்துள்ளனர். (இதில் தாய்மொழி பற்றினால் மட்டுமன்றி, மொழித்திறன் அடிப்படையில் பங்களிப்போரும் உள்ளனர் என்பதை கருத்தில்கொள்க.) இவ்வாறு "கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஒத்த நோக்கம்" கொண்டவர்களானாலும் அரசியல் பின்புலம், வாழ்நிலை சூழல், அறிவின் எல்லை, மொழியாளுமை என பல்வேறு பின்னனியில் இருந்து ஒரு குமுக நிலையில் பங்களிக்கும் போது பல்வேறு விதமான கருத்துக்கள் விமர்சனங்கள் எழுவது இயல்பானது. இந்த இயல்பு நிலையை உணர்ந்து, எழும் கருத்தையும் விமர்சனத்தையும் உள்வாங்கிக்கொண்டு அல்லது அவற்றை தமது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பயணிக்கும் கட்டமைப்பு "இங்கே உள்ள ஒரு சிலரின் நடைமுறைப் பிறழ்வுகளால்" பின்னடைவை நோக்கிச்செல்லும் அபாயத்தைக் காணக்கூடியதாகவே உள்ளது. குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியா விமர்சனங்களை உள்வாங்கும் கட்டமைப்பு இல்லை எனும் நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

எதுவும் அல்லது எந்த ஒரு நபரும் விமர்சனத்து அப்பால் பட்டவர்கள்/வைகள் அல்ல எனும் கோட்பாடுள்ளோரும், விமர்சனத்தையும் விமர்சிக்கலாம் எனும் நக்கீரன் போன்றோரும் தமிழ் விக்கிப்பீடியாவின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியத்தை தருகின்றது. விமர்சனம் என்றவுடனேயே அதன் சரி பிழை பாறாது, விமர்சனங்களையும் உள்வாங்கி அதனையும் தமது வளர்ச்சிக்கு சாதகமான நிலையில் மாற்றக்கூடிய தன்மையும் இங்கு இல்லை. மாறாக தமிழ் நாட்டு அரசியல் போன்று, விமர்சனங்கள் எழும் போதெல்லாம், சக தமிழ் விக்கிப்பீடியர்களும் ஒன்று திரண்டு விமர்சனத்தை எதிர்கொள்ளாமல், விமர்சித்தவரை தாக்கும் தளமாகவும், தனிமனிதத் தாக்குதலுக்கான களமாகவும் தமிழ் விக்கிப்பீடியா மாறி வருவது பின்னடைவுகளுக்கே வழிவகுக்கும்.--786haja (பேச்சு) 10:15, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பி.கு 1: ஒவ்வொருவரது அறிவும், கிரக்கிக்கும் ஆற்றலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனும் அடிப்படையில் யாரையும் அறிவாளி என்றோ மடையர் என்றோ என்னால் கூறமுடியாது. ஆனால் ஒரு கருத்து எழும் போது கருத்துக்கு பதிலளிக்காமல், அல்லது கருத்தை கருத்தால் தெளிவுப்படுத்தும் திறன் இல்லாமையால், தனது அணுக்கத்தைப் பயன்படுத்தி கணக்கை முடக்குவே என அச்சுறுத்தல் போன்ற செயல்பாடுகள் அறிவுடையதன்று.

பி.கு 2: sysop, bureaucrat போன்ற அணுக்கங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது எனும் அகந்தையில் எவறும் தொடர்ந்தும் தான்தோறித்தனமாக செயல்பட முனைந்தால், ஒவ்வொரு செயல்பாடுகளையும் முறையாக கண்காணித்து உரிய இடத்தில் முறையாக முறையிடுவதன் ஊடாக அணுக்கங்கள் மீள்பெறுவதற்கும் இடமுண்டு என்பதையும் புரிந்துக்கொள்ளவும். (தமிழ் விக்கிப்பீடியா என்பது விக்கிமானியாவினால் தமிழ் மொழிக்கு கிடைக்கப்பட்ட இட வழங்கள் என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.)--786haja (பேச்சு) 10:34, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

//அணுக்கங்கள் மீள்பெறுவதற்கும் இடமுண்டு// Do it if you can.

திரும்பப் பெறுகிறேன்

தமிழ் விக்கிப்பீடியாவில் என் பங்களிப்புகள் தொடர வேண்டுமென்று கருத்து தெரிவித்தும், அதற்கு விருப்பம் தெரிவித்தும் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... பல...

இங்கு கருத்துகளைப் பதிவு செய்யத் தயங்கி என்னுடைய மின்னஞ்சலுக்கு வேண்டுகோள் விடுத்த அனைத்து நண்பர்களுக்கும், செல்பேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய முடிவைத் திரும்பப் பெற வேண்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... பல...

குறிப்பாக, நேற்று (12-10-2013) காலையில் கனடாவிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு என்னுடைய முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக என்னுடன் பேசிய செல்வா அவர்களுக்கும், நேற்று மதியம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக என்னுடைய முடிவைத் திரும்பப் பெற்றிட வேண்டுமென்று வேண்டிய தகவலுழவன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

அனைவருடைய விருப்பத்திற்கேற்ப தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து வெளியேறும் எனது முடிவைத் திரும்பப் பெறுகிறேன். இருப்பினும், தற்போதுள்ள மனநிலையில் என்னால் பங்களிக்க இயலவில்லை. இன்னும் சில நாட்களில் என் பங்களிப்புகள் தொடரும்...

குறிப்பு:

  • இங்கு கருத்து தெரிவித்த நற்கீரன்,சுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் என்னுடைய தமிழ் விக்கிப்பீடியா நூல் குறித்து அறிமுகம் செய்யப்படவில்லை என்று நான் ஆதங்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் தெரிவித்த கருத்து தவறானது. இந்தக் கருத்துப் பக்கத்தில் என்னுடைய கருத்தில் அப்படி நான் எதுவும் குறிப்பிடாத நிலையில் தாங்கள் இருவரும் எப்படி இப்படி ஒரு கருத்தை இங்கு பதிவிட்டீர்கள் என்று தெரியவில்லை.

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:58, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 10:32, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 11:41, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:49, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 16:27, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்கள் முடிவை மீளப்பெற்றதற்கு நன்றி, தேனி. மு. சுப்பிரமணி. உங்கள் நூல் அறிமுகத்தைச் செய்யாததால் நீங்கள் வருந்தினீர்கள் என நான் எப்படி (பிழையாகக்) கருதினேன் என்று கேட்டதால் சொல்கிறேன். உங்கள் நண்பரும் உங்களுடைய பல நூல்களின் பதிப்பாசிரியருமாகிய பயனர் சேகரன் உங்கள் நூலைப் பற்றிக் குறிப்பிடாததைக் குறையாகச் சொல்லியிருந்தது, நீங்களும் மேடையில் ஒரு சிலரை மட்டும் முன்னிறுத்தியதைக் குறையாகச் சொல்லியிருந்தது, இறுதியில் நிகழ்வைப் பற்றிய அலசலின் நடுவே சற்றும் எதிர்பாராதவிதமாக நீங்கள் வருந்தி விலகுவதாக அறிவித்தது என்பதைக் கண்டதும் அவ்வாறு தோன்றியது. இப்போது நீங்களே அவ்வாறில்லை எனத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. முன்னமே உங்களிடம் கேட்டு உறுதி செய்திருக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:22, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்கிபீடியா பத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விக்கிபீஷ்மரான செங்கை பொதுவன் அவர்தம் துணைவியாரும் விக்கிபீடியர்களும் சூழ்ந்திருக்க அமர்ந்திருந்த காட்சி

அன்பிற்கினிய அனைவருக்கும் கபிலனின் வணக்கம். சென்னையிலிருந்து திரும்பிய நாளிலிருந்து ஓய்வு ஒழிவில்லாத பணிச்சுமையால் திரிந்த எனக்கு அந்தப் பசுமையான இருநாட்களின் வளத்தை எழுத்தில் கொணர்வதற்கு நேரம் போதவில்லை. ஏதோ எழுதிவிடக் கூடாது என்று மிகவும் சிரமப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அருமையான நிகழ்வை எனது மனதுக்குள் சுமந்து கொண்டிருந்தேன். பல்வேறு பிரிவுகளாலும் சிதறுண்டு கிடக்கும் தமிழ்த் தேசத்தில் தமிழின் பெயரால் ஒன்று கூடிய அந்த இனிய உள்ளங்களில் பொங்கிய பேரன்பை என்னவென்று சொல்ல? இதுவரை விக்கியர் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை. குரல் கேட்டதுமில்லை. ஆனால் அதுமாதிரி எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கு இந்தப் பத்தாம் ஆண்டு விழா சரியான பாலமாக அமைந்தது. முதல்முதலில் நான் கேட்ட விக்கியரின் குரல் திரு.இரவி அவர்களுடையது. இந்தக் கொண்டாட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டவர். சனிக்கிழமை மதியத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்லவர்களின் கலைநகரமான மாமல்லையில் அந்த விக்கிபீடியர்களின் கூட்டத்தில் நானும் இணைந்தபோது எனக்கு என்னென்னவோ காலப்பதிவுகள் தோன்றி மறைந்தன. அதுவரையில் இணையத்தில் புகைப்படங்களில் பார்த்த முகங்கள் தங்களுடைய இனிய குரலோடும், இனித்த உள்ளத்தோடும் எனக்கு வாழ்த்தொலிகள் வழங்கியபோது உண்மையில் தாய்வழி உறவுகளைக் கண்ட குழந்தையாய் நான் துள்ளினேன்.

ஒரு பீஷ்மரைப் போலப் புல்தரையில் மல்லாந்து படுத்திருந்தார் நான் வெகுநாட்களாகக் காணவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த செங்கைப் பொதுவன் ஐயா. அடடா என்ன தமிழுள்ளம்? பொங்கிப் பெருகும் அவர்தம் அறிவாற்றலை விக்கிப்பீடியா இன்னும் ஆழமாய்ப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சில், கருத்தில் என்ன இனிமையும் வளமையும்? இணையாய் வந்த துணையும் உடனிருக்க என்னை அவர் வாழ்த்தியது விக்கி தந்த பெரும்பேறு.

எல்லார் கரங்களிலும் காமிராக்கள். அளவளாவிக் கொள்வதும் அன்பு பரிமாறிக் கொள்வதும் ஏதோ திருமண விருந்துக் கொண்டாட்டமாய் இருந்தது. பெயரை விடவும் தன்னுடைய அன்பினால் என்னைக் கவர்ந்தவர்கள் நிறையவே உளர். மறக்க முடியாத அந்த மணல்வெளிக் கடற்கரையில் ஒளிவெள்ளம் பாய்ச்சி ஒவ்வொருவரும் மற்றொருவரின் உளம் ஆய்ந்த உரையாடல் தந்த சுகத்தை என்னென்பது?

விக்கிபீடியாவுக்குத் தாங்கள் அறிமுகம் ஆனவிதம், விக்கிபீடியாவில் தங்களுடைய பணிகள், தங்களுடைய எதிர்கால நோக்கங்கள் என்று வரிசையாகத் தங்களின் அனுபவங்களைக் கூறவைத்துப் படமெடுத்துக் கொண்டார்கள். எல்லோருக்குள்ளும்தான் எத்தனை வண்ண வண்ணக் கனவுகள்? எழுப்பித் தந்தது யார்? விக்கிதானே...

பெண்களுக்கும் குறைவில்லை. குழந்தையான என்னோடு இன்னொரு குழந்தையாய் ஒட்டிக் கொண்டவர் திருபுவனத்திலிருந்து வந்திருந்த ஹிபாயத்துல்லாவின் புதல்வர். அவரோடு சேர்ந்து கைப்பந்து விளையாடவும் வாய்ப்புக் கிடைத்ததே. இரவுப் பேருந்தில் திரும்பும்போது பெரும்பாலும் எனக்கு நல்ல நண்பர்கள் பலர் கிடைத்து விட்டார்கள். பார்வதிஸ்ரீ ஏதோ கூடப்பிறந்த சகோதரி வாஞ்சையோடு என்னோடு பேசினார். பாராட்டினார். தமிழ்ப்பரிதியை நான் கூகுள்+ மூலமாக ஏற்கனவே அறிவேன் என்றாலும் நேரில் சந்தித்தது அன்றுதான். அவர் எத்தனை அருமையான புகைப்படக் கலைஞர்? ஒரு கிராமத்து நெசவாளியைப் போலவே பட்டுக் குறித்த தகவல்களை மிக அழகாக எடுத்து வைத்து பட்டென எல்லார் நெஞ்சையும் கொள்ளை கொண்ட ஸ்ரீதர், கரகரத்த குரலில் கற்கண்டுச் சொற்களால் கௌவிக்கொண்ட சுந்தர் அடேயப்பா எனக்கு எத்தனை பெரிய விக்கிப்பீடியச் சொந்தங்கள். நான் பதிப்பாளன் என்று தெரிந்தவுடன் எனது அனுபவங்களைக் கேட்டு எனக்கு அறிவுரைகள் பல வழங்கிய மயூரநாதன், எப்போதும் தகவல்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர் செல்வா இன்னும் எத்தனை எத்தனையோ ஞானவான்கள்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வுமையத்தில் தங்கியிருந்த அந்தப் பனி இரவு இனிய நண்பர்களோடு கழிந்தது. மறுநாள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்தோம். விக்கியின் 10ஆண்டுக் கொண்டாட்டக் காலைப் பொழுது. இனிப்பிருக்கும் இடந்தேடிச் செல்லும் எறும்புகள் போல் விக்கியர்கள் வந்து கொண்டிருந்தனர். மெல்லக் களை கட்டியது. ஒவ்வொரு நொடிப்பொழுதையும் வீணாக்கி விடாமல் எனது கேமிராவினால் படமெடுத்துக் கொண்டேன். நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கருத்துகளும் விவாதங்களும் நிறைந்தன. மூச்சுத் திணறும் அளவுக்கு விக்கிபீடியாவின் பயன்பாடுகள் முன்மொழியப்பட்டன. வியந்தேன்.

தமிழிலேயே பொறியியல் பயின்று தற்போது பணிவாய்ப்பும் பெற்றிருக்கிற அண்ணா பல்கலைக்கழகத் தோழர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது என்னுடைய மாணவர்களுக்குத் தமிழைத் தோள்தட்டிப் பயிற்றுவிக்க நல்லதோர் சாட்சி கிடைத்தாய் மகிழ்ந்து போனேன். பிரிவைத் தரும் அந்தக் கொடிய மாலைப் பொழுதும் வந்தது.

சான்றிதழும் சட்டையும் மட்டுமல்லாது நெஞ்சம் முழுக்க பொங்கிப் பெருகும் எண்ண அலைகளோடு நான் புதுவைக்குத் திரும்ப நேர்ந்தது. இதோ இப்போது தட்டச்சுச் செய்து கொண்டு இருக்கும்வரை மட்டுமல்ல என்னுடைய உயிரின் கடைசி இயக்கம் வரைக்கும் அந்தப் பசுமையின் வண்ணம் தேய்ந்து போய்விடாது என்னும் அளவுக்கு அந்தப் பதிவுள் என்னுள் பதியமிட்டிருக்கிறது.

இதுவரையில் சொன்னதெல்லாம் வெறும் வருணனை என்று கொண்டால், எல்லாருக்கும் ஒன்றை உரக்கச் சொல்கிறேன் விக்கித் தோழர்களே.

  • மொழி மனித குலத்தின் ஆணிவேர். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழிதான் உயர்வு. அவ்வாறுதான் கருதவேண்டும். உயர்ந்த மொழிகள் மட்டும்தான் தன்னோடு சேர்த்து எல்லா மொழிகளையும் அரவணைத்துச் செல்லும் பாங்குடையவை. அப்படிப்பட்ட உயர்மொழியில் ஒன்றுதான் தமிழ்.
  • தமிழ் தான் தோன்றிய காலத்திலேயே அத்தகைய நிலைத்த புகழைப் பெற்று விட்டது. மெல்லத் தமிழினிச் சாகும் என்னும் பேதமை உரைகள் சங்க இலக்கிய காலத்திலேயே தோன்றி விட்டன என்பதன் அடையாளம்தான் சங்கத்தின் தோற்றமே.. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தினால்தான் சங்கம் வைத்துப் புலவர்கள் கூடி, ஆய்ந்தாய்ந்து தமிழில் தோய்ந்து தோய்ந்து இலக்கியம் பரப்பினார்கள். கலை வளர்த்தார்கள். வித்தகம் பயிற்றுவித்தார்கள்.
  • காலவெள்ளத்தின் எந்தச் சுழியிலும் மூழ்கிப்போய்விடாத பெரும்புணையாய்த் தமிழ் நின்று நம்மையும் நிலைநிறுத்தி வந்திருக்கிறது. தோழர்களே அந்தச் சங்கத்தின் எந்தத் தகுதிக்கும் குறைவுபடாத நிலையில் நம்முடைய விக்கிபீடியா இன்றைக்குத் திகழ்ந்து வருகிறது. பனையோலைகளில் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட சங்க இலக்கியங்களைப் போல, இலக்கணங்களைப் போல, விக்கிபீடியா இன்னும் பத்தாண்டுகள் கழித்து ஒரு பொக்கிஷமாகப் போற்றப்படப்போகும் காலம் வரத்தான் போகிறது.
  • களப்பிரர் காலமும், கிரந்தக் கலப்புகளும், வடமொழித் தாக்கங்களும், ஆங்கிலமோகமும் கடந்து வந்த தமிழ் கணினி யுகத்தினில் காணாமல் போய்விடும் என்றுதான் நாங்கள் தமிழ் பயின்ற காலத்தில் ஏளனப்படுத்தப்பட்டது. ஆனால், அதே கணினியில் அதே இணையத்தில் தண்ணார் தமிழை தலைநிமிரச் செய்தது ஒரு குழு என்றால் அது விக்கிதானே... தோழர்களே தன் பெயரைத் தவிர வேறு ஓர் அடையாளத்தையும் விட்டுச் செல்லாத திருவள்ளுவரையும், பேரிலக்கியங்களைப் படைத்துத் தன் பெயர்கூட அறிய முடியாத அளவுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு ஓரேருழவராய், விட்டகுதிரையாராய், மீனெறி தூண்டிலாராய் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை கவிஞர்கள்?
  • உலகத்தையே தன்பால் மொழியாய் நின்று அடக்கியாண்டிருக்கிற தமிழைப் போலவே உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கச் செய்து உலக மொழிகளுக்கு இணையாகத் தமிழையும் உயர்த்திப் பிடித்திருக்கிற பாலமாய் இயங்கிக் கொண்டிருக்கும் விக்கியின் பின்னால் ஒவ்வொருவருடைய உழைப்பும் போற்றுதற்குரியது. காலத்திற்கும் தமிழினம் தன் தலைதாழ்ந்து வணங்கி வாழ்த்தும்.


  • விக்கிபீடியா குழந்தைகளின் அரிச்சுவடி, அறிஞர்களுக்கு ஆய்வேடு என்று என்னை நேர்கண்டபோது நான் சொன்ன அந்த வாக்கியத்தை மறுபடியும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். விக்கி தற்போது பத்துவயதுக் குழந்தைதான். அதனுடைய இளமைப்பருவத்தில் அது உலகத்தையே ஆளப் போகிறது. காலம்காலமாய் நாம் கண்டு, கேட்டு, கொண்டு, கொடுப்பித்து வந்த அரிய பொக்கிஷங்கள் உலகத்தவரின் பார்வையில் வெளிச்சப்படப் போவது விக்கியினால்தான்.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்தபேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே கிடந்தோரென
மருப்பிலே பயின்ற பாவை

இன்று மடிக்கணினியிலும், தொடுதிரைக் கணியேட்டிலும், அணுகியிலும் துள்ளி விளையாடுகின்றாளே இந்தக் காலம் தமிழின் பொற்காலம் ஆகாதா?

  • மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றுமில்லை தோழர்களே... பணிசெய்ய வேண்டும்... அளப்பரிய பணிசெய்ய வேண்டும். என்பெயர், உன்பெயர், அவன் பெயர், இவன்பெயர் எல்லாப் பெயரும் தமிழுக்குள்ளேதான்... தோழர்களே பெயரில் என்ன இருக்கிறது. பெருமையே முன்னின்று நம்மைச் செலுத்தும். திருக்குறளை மறுபடியும் ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு மட்டுமல்ல.. நமது தமிழ் மரபும் கூட...
  • தோழர்களே... மற்றொன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் முன்பு கூறியதைப் போல, தமிழே பலகூறாய்ச் சிதைந்திருக்கிற வேளையிது. இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் தமிழின் பெயரால் தமிழ் வளர்ச்சியின் பொருட்டாக ஒன்றாகக் கூடியிருக்கிற நாம் நம்மைச் சிதைத்துக் கொண்டு சிறுமைப்பட்டு விடுவது தகாது.
  • திட்டங்களும், பயிற்சிகளும் அதிகமாய் வேண்டும். அதனை விடக் கடின உழைப்பு வேண்டும். நாளைய சமுதாயத்தை நம்பக்கம் தமிழின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால் நம்முடைய வாழ்க்கையைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். வீரியத்தை விடவும் காரியம் பெரிதாக வேண்டும். பெரியோரைப் புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லாத நடுவுநிலைப் பண்பு நன்று பாராட்டும் பண்பு வேண்டும்.
  • வாழ்வு வேறு, எழுத்துவேறு என்று இருந்தால் நாம் வாழ்வதிலேயே புண்ணியமில்லை. அப்புறம் எழுதுவதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது. நம்முடைய எழுத்தே நம் வாழ்வாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நம்முடைய வாழ்வைப் பின்வரும் சந்ததியினர் எழுத்தாக்குவார்கள். அழியாத எழுத்தாக்குவார்கள். இது சத்தியம்.
  • பனையோலையில் கிறுக்கி, மணலில் பதிந்து, பலப்பத்தில் கீறி, மசியினில் ஊறி, அச்சில் பயணித்து அழிந்து போய்விடுமோ என்று அச்சம் கொண்டிருந்த வேளையிலே தமிழ் ஆலாய் வளர்ந்து அருகாய் வேரோடி மூங்கிலாய்க் கிளைத்து விக்கியாய் நிலைத்திருக்கிறது. தோழர்களே உங்கள் பாதங்கள் தொட்டு வேண்டுகிறேன். ஒன்றுபடுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிய தாழ்வு எப்போதும் வேண்டாம்.

👍 விருப்பம் இன்றுதான் இதை முழுவதும் படிக்க வாய்ப்பு கிடைத்தது, கபிலன். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நெகிழ்ந்து போனேன். கண்கள் பனித்தன. // பனையோலையில் கிறுக்கி, மணலில் பதிந்து, பலப்பத்தில் கீறி, மசியினில் ஊறி, அச்சில் பயணித்து அழிந்து போய்விடுமோ என்று அச்சம் கொண்டிருந்த வேளையிலே தமிழ் ஆலாய் வளர்ந்து அருகாய் வேரோடி மூங்கிலாய்க் கிளைத்து விக்கியாய் நிலைத்திருக்கிறது. // -- சுந்தர் \பேச்சு 10:09, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

செல்வா

  • (என் கருத்துகளைக் காலம் தாழ்ந்து பதிவிடுகின்றேன்; பொறுத்தாற்ற வேண்டுகின்றேன்; அக்டோபர் 7, 2013 அன்றுதான் கனடா திரும்பினேன்). இந்தத் த.வி-10-ஆவது ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக நடந்து, அதில் நானும் கலந்துகொள்ள முடிந்தை நினைத்து பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றேன். மே-9 முதல் திறந்த வகையில் திட்டமிடல் செய்து கடும் உழைப்போடு சிறப்பாக நடத்தித் தந்த இரவிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
  • மயூரநாதன் அவர்களையும், செங்கைப் பொதுவன் ஐயா அவர்களையும், இன்னும் ஒரு 20 த.வி விக்கிப்பீடியர்களையும் முதன்முதலாகச் சந்தித்தது உள்ளத்துள் பெருநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த விழாவைப் பற்றி பல நிறைகுறைகள் பேசப்பட்டன, விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் இருந்து பலவும் கற்றுக்கொள்வோமாக. நிறைகுறைகள் பற்றிப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. விழாவின் நோக்கங்களும் பொறுப்பேற்பு முறைகளும் நன்கறிந்தவர்கள் குறைகள் கூறுவதற்கு மாறாக முன் வந்து பங்குபற்றியிருக்கலாம் (மே-9 முதல் திறந்த முறையிலேயே கருத்துப்பகிர்வுகள் நடந்துள்ளன). விக்கிப்பீடியாவில் ஒருவர் ஓர் எழுத்துப்பிழையை விட்டாலும், குறைகூறுவதில்லை, உடனே வந்து திருத்திவிடடுவோம், அல்லவா, அதுபோல், நம்மில் பலரும் நாம் குறையாக நினைத்ததைச் சரி செய்ய முன் வந்திருக்கலாம். எல்லாக் கல்லூரிகளுக்கும் எல்லா இடங்களில் பெரிதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானோரைக் கூட்டுவது நோக்கமாக இருக்கவில்லை. அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான பரிந்துரைகளை முன்வந்து அளித்து பங்குபற்றுமை இருந்திருக்கவேண்டும். இவ் விழாவானது விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடுவதும், சிறு பரப்புரை செய்வதும், 10-ஆண்டு நிறைவைச் சிறிய அளவிலாவது பதிவு செய்வதுமே. பெரிய ஆரவாரம் செய்தல் கூடாது, தெருக்களில் ஊர்வலமாக வரல் கூடாது என்றெல்லாம் கூறவில்லை. அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், அவற்றைத் திட்டமிடல் காலகட்டத்தில் செய்திருக்க வேண்டும்.இக்கூற்றும் வருகால நிகழ்ச்சிக்காகவே கூறுகின்றேன். நான் கனடாவில் இருந்து வந்ததே ஒரு 10 தமிழ் விக்கிப்பீடியர்களையாவது நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுமே என்பதற்காகவே. நல்லெண்ணமும், நல்லுணர்வும், வினையாண்மையும் பெருகட்டும். தமிழ் விக்கிப்பீடியா பத்து மடங்கல்ல 100 மடங்கு அல்ல ஆயிரக்கணக்கான மடங்கு செப்பம் எய்தி சிறக்க வேண்டும்.
  • தேனி சுப்பிரமணி, த.வி-யில் இருந்து விலகவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நாம் யாவரும் சேர்ந்து செல்லவேண்டிய தொலைவு மிகவுள்ளது.
  • திரு சேகரன், உங்கள் கருத்துகளுக்கு நன்றி. திருத்திக்கொள்கின்றோம் ஐயா. விக்கியின் நடைமுறையும் நோக்கமும் சற்று வேறானதாக இருந்திருக்குமோ என்று நீங்களும் ஒரு சிறிது எண்ணிப்பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன். இவ்விழா நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு சிறப்பாகவும் பயன் மிக்கதாகவும் அமைந்தது. அதனால் குறைகள் ஏதும் இல்லை என்று பொருள் இல்லை. விளைபயன், அதுவும் நிலைத்து நிற்கும் விளைபயனை எண்ணினால் அக்குறைகள் பொருட்டன்று.
  • திரு சௌமியன் அவர்களுக்கும், விட்ணுவரதன், இரஃகீம் அவர்களுக்கும் சிறப்பான நன்றி. மிகச்சிறப்பாக நடத்திய இரவிக்கும் உடன் உழைத்த அனைவருக்கும் (சூரியபிரகாசு அவர் நண்பர்கள்) நெஞ்சார்ந்த நன்றி.
செல்வா (பேச்சு) 01:15, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 05:49, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:48, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:47, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 13:01, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 03:07, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிவகோசரன்

கருத்துக்களைப் பதிவிட காலதாமதமானதையிட்டு வருந்துகின்றேன். கூடல் மிக அருமை! குறையொன்றுமில்லை! விக்கிப்பீடியர்கள் இவ்வளவு பேரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வந்திருந்த எல்லா விக்கிப்பயனர்களுடனும் குறைந்தபட்சம் அறிமுகம் என்றளவிலாவது உரையாடியதாகவே எண்ணுகின்றேன். யாரைச் சொல்ல? யாரை விட? உரையாடிய அனைத்து விக்கிப் பயனர்களும் மிகுந்த நட்புடன் இருந்தனர். கூடலுக்காகக் கடின உழைப்பாற்றிய இரவிக்கும் ஏனைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். மேலும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடியவை என சில பொறுப்பான விக்கியர்கள் தெரிவித்த கருத்துக்களை இனிவரும் நிகழ்வுகளில் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னைப்பொறுத்தவரை இது முதலாவது நிகழ்வு என்ற வகையிலும் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் என்ற வகையிலும் விக்கி நடைமுறைகள்/பண்புகளை வைத்து நோக்கும் வகையிலும் குறையேதும் இருப்பதாகவே தோன்றவில்லை. தேனியாரின் முடிவு வருத்தமளிக்கின்றது. தயவுசெய்து முடிவை மாற்றி தமிழ் விக்கிப்பீடியாவுடன் தொடர வேண்டுகிறேன். சேகரனின் கருத்துக்களை உள்வாங்கி பதிலளிக்கும் பயனர்களின் முதிர்ச்சியை எண்ணி மகிழும் அதேவேளை, விக்கியில் பெரிதாக எதுவுமே செய்யாமல் (என் அறிவுக்கெட்டியபடி), விக்கிப்பீடியா பற்றியோ நிகழ்வு பற்றியோ தெளிவில்லாமல் அபத்தமாகப் பேசும் இவருக்குப் பதிலளிப்பதில் விக்கிப்பீடியர்களின் நேரம் வீணாவதையொட்டி வருத்தம். இலங்கைப் பயனர்களுக்குத் தமிழ்நாட்டு விக்கியர்களின் சிறப்புப் பரிசிற்கு மிக்க நன்றி! இன்னும் பல கூடல்கள், இன்னும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! --சிவகோசரன் (பேச்சு) 08:41, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 16:18, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 16:22, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குறை கூறுபவர்களுக்கு பேராசிரியர் பயனர்:செல்வா அவர்களின் கருத்து

விக்கிக்கு வெளியில் முகநூல் உரையாடல் ஒன்றில் பேராசிரியர் பயனர்:செல்வா அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் என் குழப்பங்களை எல்லாம் தீர்த்து என் அகக்கண்களை திறந்தன. அந்த உரையாடலில் சில வரிகள் இங்கு பொருத்தமாக இருப்பதால், அவற்றை (மட்டும்) பகிர்கிறேன் . . . . Emphasis Mine

வீணான பழியை விக்கிப்பீடியாமீது வைக்கின்றீர்கள். கரித்துக்கொட்டுகின்றீர்கள். அதன் நற்பயன்களை ஏற்க மறுக்கின்றீர்கள், சாய்வுடையதாகவே நினைக்கின்றீர்கள், அப்பொழுது அதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாமே. விக்கி இல்லை எனில் ஏற்படும் இழப்பு என்னவென்பதை அதை நாளும் பல முறை அணுகுவோருக்குத் தெரியும். அறிவைப் பரவலாக்கலில் கூட்டன்பர்கு நூல் அச்சடிப்பு எவ்வளவு உதவியதோ அது போல இணைய உலகில் அறிவு பரவலாக்கலில் விக்கிப்பீடியாவின் பங்கு மிகப்பெருமையானது. அது உருவான விதமும், இன்றளவும் வெற்றி நடை போடுவதும் வியப்பிலும் வியப்பு.
எதுவும் முறையாக நடக்கும். நன்னம்பிக்கை நல்லெண்ணம் வேண்டும். உழைப்பவர் யாவரும் தன்னார்வலர்களே. யாரும் சம்பளத்துக்கு உழைக்கவில்லை. பல்துறை அறிவிலக்கியத்தை உருவாக்கக் கூட்டாக உழைக்கும் நல்லுள்ளங்கள். 7-ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் விக்கிப்பீடியாவில் உடன் பணியாற்றி வருபவன் என்னும் முறையில் அதனை நன்கு அறிவேன். சற்று அடக்கம், நல்லெண்ணம், நன்னோக்கு, திறந்த மனப்பான்மை, பொறுமை, உழைக்கும் திறம், அதுவும் கூட்டாக உழைக்கும் திறம், நேர்மை, அறிவையும் திறனையும் பகிரும் தன்மை, வளர்முக அணுகுமுறை, தொண்டுள்ளம் ஆகியவை வேண்டும். நற்பணிகளைப் பழிப்பதும் பழிதூற்றுவதும் உங்களுக்கு உகப்பு எனில் மவராசனாகச் செய்யுங்கள். அது உங்கள் தேர்வு
விக்கிப்பீடியா ஓர் கலைக்களஞ்சியம் உருவாக்கும் களம்;. அதன் படைப்பு கலைக்களஞ்சியம். அரட்டை, விவாதம், விளையாட்டு அல்ல. உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் அற ,அறிவு நாணயத்துடன் ஆங்கில, தமிழ் விக்கிப்பீடியாக்களை அறவே பயன்படுத்தாதீர்கள்! பழிப்பதும் தூற்றுவதும் எளிது.

பழிப்பதும் தூற்றுவதும் எளிது, உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் அற ,அறிவு நாணயத்துடன் ஆங்கில, தமிழ் விக்கிப்பீடியாக்களை அறவே பயன்படுத்தாதீர்கள். (வார்த்தைகள் என்னுடையவை அல்ல. உங்கள் பாராட்டுக்களை பயனர்:செல்வா அவர்களிடம் தெரிவிக்கவும்)

புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நலம். புரிந்து கொண்டு, நடையை கட்டினால் மிக்க நலம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:10, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எனக்குப் புரிந்தது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை போல் தெரிகிறது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் நலம் என்கிறீர்கள். யார் யார் என்று நேரடியாகச் சொல்ல வேண்டும். இங்கு மறைமுகமாக எவரையும் குத்தி எழுத வேண்டாம். மிக நீண்ட காலம் 2006 ஆகத்து முதல் பங்களிப்புச் செய்து வரும் நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தைப் பற்றி இன்னும் அறியாதிருப்பது எனக்கு வியப்பைத் தரவில்லை.--Kanags \உரையாடுக 11:29, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

//வியப்பைத் தரவில்லை.//

ஹி.ஹி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:39, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • சொல்லப்பட் சூழலைப் புரிந்து கொள்ளமுடிந்தாலும் சொல்லப்பட்ட சொற்கள் தவறாகயிருப்பதாக நினைக்கிறேன். கொள்கை விருப்பமில்லாதவர்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லும் உரிமை விக்கிமீடியா என்கிற அமைப்புக்குத்தான் உள்ளது என நினைக்கிறேன். கொள்கைமுறிவுகள் விசாலமாகயிருந்தால் புதிய தமிழ் விக்கிப்பீடியாவும் உதயமாக அவை இட்டுச்செல்லலாம்(ஆங்கிலம், எளிய ஆங்கிலம் போல) நம்மைப் போன்ற குறுகிய குழுக்களில் அவை உழைப்பு விரயத்தை அளிக்கும். அதனால் அனைவரும் ஏற்கும் வண்ணம் கொள்கைகள் வகுப்பதே சிறப்பு. அவ்வாறு சிறப்பாக செயல்படும் ஐயா, இப்படி சொல்லியிருப்பது சிறிய வருத்தம். ஆனால் விக்கிக்கு வெளியில் நடைபெற்ற உரையாடல்களை முறையான கருத்தாகக் கொள்ளத் தேவையில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 17:00, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன், நான் கூறியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன் (முழுச்சூழலும் காட்டப்படாததால்). புருனோ அதே இழையில் கடைசியாகச் சொன்னதைப் பகிர்கின்றேன்:
Mariano Anto Bruno Mascarenhas: I agree with what you say sir
23 அக்டோபர் இல் 12:52 AM via கைத்தொலைபேசி · 
Mariano Anto Bruno Mascarenhas: We should not blame Wikipedia or the contributors for small issues
We should understand the effort
Thanks for opening my mind sir
23 அக்டோபர் இல் 12:53 AM via கைத்தொலைபேசி 
Mariano Anto Bruno Mascarenhas: Your words are very powerful and have clarified a lot
23 அக்டோபர் இல் 12:53 AM via கைத்தொலைபேசி 
செ. இரா. செல்வக்குமார்: Thanks Bruno.

அதே இழையிலும், தொடர்பான பல இழைகளிலும் உரையாடல்களைப் பார்த்த பின்னர் முடிவுக்கு வாருங்கள். நான் சொன்னது விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தவேண்டாம் என்னும் நோக்கத்தில் அன்று..... --செல்வா (பேச்சு) 02:55, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

செல்வா-2

நிறைகுறைகள் மிகவும் விரிவாகப் பேசப்பட்டுவிட்டன. நான் இங்கே கூறியது போல பிணக்குகளைப் பெரிதாக்க வேண்டாமே என்றுதான் அதிகம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மேலும் ஏற்கனவே அக்டோபர் 5 அன்று இரவி 1,40,109 பைட்டு அளவு நெடிய விளக்கவுரையை மிகவும் பொறுப்பாக இட்டிருந்தார். விக்கியின் குறிக்கோள் நன்னோக்கம் கொண்டு இணக்க முடிவுகளை நோக்கி நகர்வதாகும். பிணக்குகளைப் பெரிதுபடுத்திக்கொண்டு நல்லுணர்வைக் கெடுப்பது அன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போல மே 9 முதல் திறந்த முறையிலேயே கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டன, ஆகவே குறைகள் சொல்லும் முன் நாம் செய்திருக்க வேண்டியதை, செய்யத் தவறியதையும் நினைவில் கொள்ள வேண்டியது பொறுப்பு. கடுமையாக உழைத்து வெற்றியுடனும் இனிமையுடனும் விழா நடந்த பின் நம்மில் சிலர் குறைகளாகக் காண்பதை நாம் இன்னும் பக்குவமாக வைத்திருக்க வேண்டும். சில எடுத்துக்காட்டுகளை உரைக்கின்றேன். சேகரன் சொன்னவற்றை விட்டுவிடுகின்றேன், ஆனால் விக்கியில் பட்டறிவு பெற்றுள்ள தேனி சுப்பிரமணியின் கூற்றுகளை எடுத்துக்காட்டுகின்றேன்.குறைகள் என்னும் பகுதியில் கீழ்க்காணுமாறு தேனி சுப்பிரமணி குறிக்கின்றார்: "1)" நிகழ்ச்சி நிரல்படி நிகழ்ச்சிகளை நடத்திட எந்தவிதமான திட்டமிடலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. (தன்னிச்சையாகச் செயல்பட விரும்பியது போன்று இருந்தது. முதல் நாளே கலந்துரையாடி, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணிகளைப் பகிர்ந்தளித்திருக்கலாம்)

இதற்கெல்லாம் இரவி ஏற்கனவே விடை அளித்துள்ளார். பிறைக்குறிகளுக்குள் சிவப்பில் நான் காட்டியுள்ளதை எழுதாமல் விட்டிருந்தால் என்ன குறைந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டுகின்றேன். ஏற்கனவே இந்தத் தொடர் கடுமையான சாடல் "எந்தவிதமான திட்டமிடலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை" (இது வளர்முகமாக இல்லாத கூற்றுவேறு), அதில் நன்னோக்கு நல்லெண்ண சிந்தனை அற்றதாகக் காணப்படும் சிவப்பில் காட்டப்பட்ட கூற்றுகளும் தேவையா?

"3)" அரங்கில் நடத்தப் பெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பணி சிறப்பாகச் செய்யப்படவில்லை. (நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரையாவது முன் கூட்டியே நியமித்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் தங்களைத் தவிர வேறு யாரும் மேடை ஏறிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்பட்டதாகவே தோன்றுகிறது)

இந்தக் குறைபாட்டை ஏற்பதாகவே ஒருவர் கொண்டாலும், பிறைக்குறிகளுக்குள் சிவப்பில் காட்டப்பட்டுள்ள கருத்து சொல்லப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள். அது நன்னோக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்டதா?
  1. என் வேண்டுகோள் என்னவென்றால், இவற்றுக்கு தேனி சுப்பிரமணி வருத்தம் தெரிவித்து அவற்றைக் கோடிட்டு நீக்குவது சரியான முற்காட்டாக இருக்கும். நல்லெண்ணங்களைக் கொண்டு செயற்படுவோமே.
  2. அதே போல 10-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் தேனி சுப்பிரமணி எழுதிய விக்கிப்பீடியா நூலைப்பற்றியு அது தமிழக அரசின் பரிசைப் பெற்றது பற்றியும் பெருமையாக வெளிச்சம் இட்டுக் காட்டிப் பேசி இருக்கவேண்டும். எனக்குமே தோன்றாமல் போய்விட்டது. என்னை இதற்காக மன்னிக்க வேண்டுகின்றேன். இது கட்டாயம் ஒரு குறையே. 10-ஆவது ஆண்டுவிழாவில் பேசப்பட வேண்டிய முக்கியமான ஒரு செய்தி.
  3. இரவி கூறிய கூற்றுகளில், "பிரியாணி போட்டு கடற்கரையில் கூட்டம் கூட்டி வெற்றி முரசு கொட்ட இது கட்சி மாநாடு அன்று. " என்பதும்
  • பி.கு. 1. காழ்ப்புணர்வும் வயிற்றெரிச்சலும் கொண்டோர் நல்ல மருத்துவரை நாடுவது உங்கள் உடல்நலத்துக்கு நல்லது.
  • பி.கு. 2. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான உள்ளாற்றலின் மேல் நின்று கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நமக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அரசு, கல்வி, அதிகார மட்டங்களின் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பரப்பிக் காட்டலாமே என்று துடியாய் துடிப்பவர்கள் தமிழ் விக்கிப்பீடியர் என்ற போர்வையின் மூலம் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தான் நாடுகிறார்கள் என்பதும் தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை அடகு வைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதும் என் கணிப்பு. இத்தகையோரின் நோக்கம் அறிந்து தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தைக் காத்துக் கொள்வது நல்லது. அல்லது, வழக்கமான அரசியல் கலந்த தமிழ்நாட்டுச் சங்கங்களில் ஒன்று போல் தமிழ் விக்கிப்பீடியாவும் சிக்கிச் சீரழிந்து போவது உறுதி.


ஆகியவற்றைக் கூறாமல் விட்டு இருந்திருந்தால் என்ன பெரிய இழப்பு இருந்திருக்கும்? கூறியதால் நன்மை விளையுமா? என் அடுத்த வேண்டுகோள் இவற்றுக்கு இரவியும் வருத்தம் தெரிவித்து கோடிட்டு இவற்றை நீக்குவது நல்ல முற்காட்டாக இருக்கும்.

  • விக்கிப்பீடியாவின் நலன் கருதி தேனி சுப்பிரமணியும் இரவியும் இப்படிச் செய்தால் நல்லது என்று கருதுகின்றேன். அரும்பணி ஆற்றிய இரவி இவற்றைக் கோடிட்டு நீக்குவதால் அவர் பணியின் பெருமை இன்னும் கூடும். அதே போல 1000 கட்டுரைகள் எழுதிய தேனி சுப்பிரமணியின் மதிப்பும் கூடும். நாம் யாவருமே இன்னும் சற்று கவனமாகவே இருக்க இவை உதவும். இவற்றை நான் முன்னர் எழுதாததற்குக் காரணம், இவற்றால் இன்னும் பிணக்குகளும் உரையாடல்களும் கூடிவிடுமோ என்னும் அச்சம் தான். இப்பொழுது இதன் தேவையை உணர்ந்து இவற்றை உரைக்கின்றேன்.

--செல்வா (பேச்சு) 04:11, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:47, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//இவற்றை நான் முன்னர் எழுதாததற்குக் காரணம், இவற்றால் இன்னும் பிணக்குகளும் உரையாடல்களும் கூடிவிடுமோ என்னும் அச்சம் தான்.// நீங்கள் ஏன் எழுதவில்லை என்று நான் கேட்ட போது முதலில் பிரயாணத்தில் இருந்ததாக கூறினீர்கள். அதன் பிறகு உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்கள். தற்பொழுதாவது உண்மையை கூறியதற்கு 👍 விருப்பம் சார்.
நீங்களும், பிற மூத்த பயனர்களும், நிர்வாகிகளும், அதிகாரிகளும் 1 அக்டோபர் அன்றே இதை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
உங்களின் (நீங்கள் + அதிகாரிகள் + நிர்வாகிகள் + பிற மூத்த பயனர்கள்) கள்ள மவுனம் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை உணர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்களோ, பிற நிர்வாகிகளோ, பிற அதிகாரிகளோ, பிற மூத்த பயனர்களோ உங்கள் கடமையை முன்னர் செய்திருந்தால் ரவி பதிலளித்திருக்க தேவையே ஏற்பட்டிருக்காது. HK Arun கைப்பாவைகளை இயக்கியிருக்க தேவையும் இல்லை. அதன் பிறகு நடந்த சம்பவங்களும் நடந்திருக்காது. புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 10:46, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
புருனோ, நான் வானூர்திச் செலவில் இருந்ததோ, என் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததோ உண்மை. அக்டோபர் மாதத்தில் என் பங்களிப்புகளை யாரும் பார்க்கலாம். நான் அக்டோபர் 12 அன்று தமிழ் விக்கிப்பீடியாவிலே 10-ஆவது ஆண்டு நிறைவு கூடல் நிகழ்ச்சி பற்றிய கருத்துகள் இட்டபோது ஏற்கனவே அனைத்தும் விரிவாகப் பேசி அலசப்பட்டு இருந்தது. எனவே மேலும் இதனைப் பற்றி பேசுவதால் இன்னும் பிணக்குகள் கூடுமோ என்னும் அச்சத்தில்தான் சுருக்கமாக என் கருத்தை அக்டோபர் 12 அன்று வைத்தேன். மேலே அக்டோபர் 12 அன்று நான் இட்டக் கருத்துகளில் மூன்றாவது புள்ளிக் கருத்தைப் பாருங்கள். இக்கருத்துகளை பயனர் Rajan s இன் பேச்சுப்பக்கத்திலும் சுட்டி இட்டிருந்தேன். ஆனால் மேலும் மேலும் சிக்கல்கள் பெருகி அக்டோபர் 17 உக்கு பிறகும் விடாது கருத்தாடல்கள் நடக்கவே, இன்றளவும் நடக்கவே, இவற்றைத் தீர்வு நோக்கி நகரச்செய்ய என் கருத்துகளை இப்பொழுது இட்டேன். எப்பொழுதோ நின்றுபோய் மற்ற பணிகள் முடுக்கம் அடைந்திருக்க வேண்டியது!! நாம் இன்னும் பேசிக்கொண்டு இருக்கின்றோம்! நான் ஏதோ பொய் கூறியது போலவும், மழுப்பினது போலவும் நீங்கள் கூறுகின்றீர்கள்: //நீங்கள் ஏன் எழுதவில்லை என்று நான் கேட்ட போது முதலில் பிரயாணத்தில் இருந்ததாக கூறினீர்கள். அதன் பிறகு உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்கள். தற்பொழுதாவது உண்மையை கூறியதற்கு // இதனைக் கண்டிக்கின்றேன் புருனோ. இது என் மீது வீண் பழிசுமத்தல் "அவதூறு". மேலே உள்ள உங்கள் கூற்றைத் திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் நீங்கள் கூறும் கள்ள மவுனம் என்பதும் கண்டிக்கத்தக்கச் சொல். இங்கே நல்லுணர்வையும் நல்லுறவையும் பேணி பல்துறை அறிவிலக்கியமாகிய கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே நோக்கம். பிணக்குகளைப் பெரிதாக்கிக்கொண்டும், வழக்காடிக்கொண்டும் இருப்பது அல்ல. இனிதே நிறைவெய்திய 10-ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பான நிறைகுறைகளையே பேசிக்கொண்டிருபதால் பலன் இல்லை. உங்களுக்குத் தமிழ் விக்கிப்பிடியா மீது அக்கறை இருந்தால், வந்து நல்ல தரமான கட்டுரைகள் எழுதுங்கள், ஆக்கப்பணிகளில் பிற பங்களிப்புகள் செய்யுங்கள், பொறுப்பாக கருத்தாடுங்கள். மேலே நீங்கள் என் மீது கூறிய பழிக்கூற்றையும் ("அவதூற்றையும்"), கள்ள மவுனம் போன்ற பழிச்சொல்லையும் திருப்பப்பெறுங்கள். --செல்வா (பேச்சு) 14:52, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//புருனோ, நான் வானூர்திச் செலவில் இருந்ததோ, என் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததோ உண்மை. அக்டோபர் மாதத்தில் என் பங்களிப்புகளை யாரும் பார்க்கலாம். நான் அக்டோபர் 12 அன்று தமிழ் விக்கிப்பீடியாவிலே 10-ஆவது ஆண்டு நிறைவு கூடல் நிகழ்ச்சி பற்றிய கருத்துகள் இட்டபோது ஏற்கனவே அனைத்தும் விரிவாகப் பேசி அலசப்பட்டு இருந்தது. எனவே மேலும் இதனைப் பற்றி பேசுவதால் இன்னும் பிணக்குகள் கூடுமோ என்னும் அச்சத்தில்தான் சுருக்கமாக என் கருத்தை அக்டோபர் 12 அன்று வைத்தேன்.// சார் நீங்கள் வானூர்திச் செலவில் இருந்ததோ, உடல்நலம் சரியில்லாமல் இருந்ததோ உண்மை. ஆனால் உங்கள் கள்ள மவுனத்திற்கு காரணம் அதுவல்ல. நீங்களே குறிப்பிட்டது போல் இதனைப் பற்றி பேசுவதால் இன்னும் பிணக்குகள் கூடுமோ (அதாவது உங்களுக்கு வேண்டியவர்களை குற்றம் சாட்ட வேண்டுமோ) என்னும் அச்சம் தான் நீங்கள் பேசாததற்கு காரணம். உங்கள் பிரயாணமோ, உடல்நலனோ அல்ல. இதைத்தான் கள்ள மவுனம் என்கிறேன். இதைத்தான் பக்க சார்பு என்கிறேன்
//மேலே அக்டோபர் 12 அன்று நான் இட்டக் கருத்துகளில் மூன்றாவது புள்ளிக் கருத்தைப் பாருங்கள். இக்கருத்துகளை பயனர் Rajan s இன் பேச்சுப்பக்கத்திலும் சுட்டி இட்டிருந்தேன். ஆனால் மேலும் மேலும் சிக்கல்கள் பெருகி அக்டோபர் 17 உக்கு பிறகும் விடாது கருத்தாடல்கள் நடக்கவே, இன்றளவும் நடக்கவே, இவற்றைத் தீர்வு நோக்கி நகரச்செய்ய என் கருத்துகளை இப்பொழுது இட்டேன்.// இதை நீங்கள் முதலிலேயே இட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.
//எப்பொழுதோ நின்றுபோய் மற்ற பணிகள் முடுக்கம் அடைந்திருக்க வேண்டியது!! நாம் இன்னும் பேசிக்கொண்டு இருக்கின்றோம்! // உண்மை சார். பிரச்சனை ஆரம்பித்த போது நீங்கள் மவுனமாக இருந்தது முதல் தவறு. அதன் பிறகு பிரச்சனை முடிந்த பிறகு நீங்கள் தூண்டி விட்டது இரண்டாவது தவறு.
//நான் ஏதோ பொய் கூறியது போலவும், மழுப்பினது போலவும் நீங்கள் கூறுகின்றீர்கள்: //நீங்கள் ஏன் எழுதவில்லை என்று நான் கேட்ட போது முதலில் பிரயாணத்தில் இருந்ததாக கூறினீர்கள். அதன் பிறகு உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்கள். தற்பொழுதாவது உண்மையை கூறியதற்கு // இதனைக் கண்டிக்கின்றேன் புருனோ. // நான் கூறவில்லை சார். நீங்கள் தான் கூறினீர்கள். நீங்களே குறிப்பிட்டது போல் இதனைப் பற்றி பேசுவதால் இன்னும் பிணக்குகள் கூடுமோ (அதாவது உங்களுக்கு வேண்டியவர்களை குற்றம் சாட்ட வேண்டுமோ) என்னும் அச்சம் தான் நீங்கள் பேசாததற்கு காரணம்.
//இது என் மீது வீண் பழிசுமத்தல் "அவதூறு". மேலே உள்ள உங்கள் கூற்றைத் திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் நீங்கள் கூறும் கள்ள மவுனம் என்பதும் கண்டிக்கத்தக்கச் சொல். // சார் இது வீண் பழி சுமத்தல் அல்ல. இது அவதூறும் அல்ல. நீங்கள் கூறியது தான். இதை நான் ஏன் திரும்ப பெற வேண்டும்
//இங்கே நல்லுணர்வையும் நல்லுறவையும் பேணி பல்துறை அறிவிலக்கியமாகிய கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே நோக்கம். // இந்த கருத்தை நீங்கள் அக்டோபர் 1ஆம் தேதி எழுதியிருந்தால் இந்த பிரச்சனை பெரிதாகியிருக்காது. உங்களுக்கு வேண்டியவர்கள் பிரச்சனை கிளப்பும் போது அமைதியாக இருக்கும் நீங்கள், உங்களுக்கு வேண்டியவர்கள் விக்கிபிடியா குறித்து அரசிடம் தவறாக கடிதம் எழுதும் போது அமைதியாக இருக்கும் நீங்கள், உங்களுக்கு வேண்டியவர்கள் பிரச்சனையில் தொடர்பில்லாத நபர்கள் மீது பெயர் குறிப்பிட்டு தனிமனித தாக்குதல் செய்யும் போது அமைதியாக இருக்கும் நீங்கள், நீங்களே பல பிரச்சனைகளை கிளப்பும்போது இதை உணரதாக நீங்கள் . . . . பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்கும் போது மட்டும் இங்கே நல்லுணர்வையும் நல்லுறவையும் பேணி பல்துறை அறிவிலக்கியமாகிய கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே நோக்கம் என்று கூறுவது கடுமையான பக்க சார்பு மற்றும் நேர்மைகுறைவான செயல்
// பிணக்குகளைப் பெரிதாக்கிக்கொண்டும், வழக்காடிக்கொண்டும் இருபபது அல். // நல்ல கருத்து சார். யாரும் கைபபவை அல்ல என்று தெரிந்த பிறகும் கேள்வி கேட்டபோது உங்களுக்கு இது நினைவிற்கு வரவில்லையா
// இனிதே ிறைவய்திய 1-ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பான நிறைகுறைகளையே பேசிக்கொண்டிருபதால் பலன் இல்லை.//இதையும் நீங்கள் அக்டோபர் 1 கூறியிருக்க வேண்டும்
// உங்களுக்குத் தமிழ் விக்கிப்பிடியா மீது அக்கறை இருந்தால், வந்து நல்ல தரமான கட்டுரைகள் எழுதுங்கள், ஆக்கப்பணிகளில் பிற பங்களிப்புகள் செய்யுங்கள், பொறுப்பாக கருத்தாடுங்கள். மேலே நீங்கள் என் மீது கூறிய பழிக்கூற்றையும் ("அவதூற்றையும்"), கள்ள மவுனம் போன்ற பழிச்சொல்லையும் திருப்பப்பெறுங்கள்.//நல்ல கருத்து சார். யாரும் கைபபவை அல்ல என்று தெரிந்த பிறகும் கேள்வி கேட்டபோது உங்களுக்கு இது நினைவிற்கு வரவில்லையா . . .நீங்கள் உடைத்தால் மண்குடம், நாங்கள் உடைத்தால் பொன் குடமா. . . . உங்களுக்கு வந்தால் இரத்தம்,எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 00:29, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • புருனோவின் செயல் ஒருசிறிதும் சரியில்லை. வேறு யாரேனும்தான் விடை பகரவேண்டும் அல்லது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் நேரத்தை இனியும் செல்வழிக்க விரும்பவில்லை.--செல்வா (பேச்சு) 00:56, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சார். விக்கிபீடியா என்பது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நான் நியாயம் கேட்ட போது விக்கீபிடியா என்பது தண்டனைகளம் அல்ல என்று குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டிய நீங்கள், இப்பொழுது என் மீது, நான் எந்த தவறும் செய்யாத போது கூட, உங்களின் தவறுகளை சுட்டிகாட்டிய ஒரே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் நேர்மை குறைவை காட்டுகிறது. நீங்கள் கடுஞ்சாய்வு நிலையில் உள்ளீர்கள். இது தண்டனை வழங்கும் களம் அன்று என்பதையும், வழக்காடு மன்றம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். மேலே குறிப்பிட்டபடிப் பார்த்தால் எது "அவதூறு" (பழி, பழி சுமத்தல், பழிதூற்றல்??) என்பதைப்பற்றி நாளும் ஆயிரம் கேள்விகள் எழக்கூடும். அடுத்தவரைப் பற்றி எழுதியது தவறு எனில் அவர் பேச்சுப் பக்கத்தில் போய் கேள்வி கேட்கலாம், பல்வேறு வழிகளில் திருத்திக்கொள்ளலாம். நான் பார்த்த விக்கிப்பீடியர் திருநெல்வேலிக்காரர் என்று எங்காவது கூறியிருந்தால், அது தவறான செய்தியாக இருந்தால் (அவர் கோவையைச் சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்), மேலே உள்ள வரையறையின் படி அவதூறு. நான் கோவையில் மருத்துவராக இருக்கின்றேன் என்று தவறுதலாக ஒருவர் கூறினால் (நான் சென்னையில் மருத்துவராக இருக்கின்றேன்), இது அவதூறா? பிறகு கணக்கற்ற நேரம் எது அவதூறு எது இல்லை என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே இருக்கும் கொள்கைகளின் படி நற்பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தல் போன்றவற்றால் இவை எளிதாக எதிர்கொள்ள முடியும்; ஒரு செய்தி தவறு என்றால் எளிதாகத் திருத்திக்கொள்ளலாம். தீய நோக்குடன் அணுகி ஒன்றைக் கூறுவது (malicious intent) என்பது ஏற்கனவே விக்கியின் நன்னோக்குக் கொள்கைக்குள் அடங்கும். இப்படியான நடவடிக்கை எடுக்க சொன்னால் சீரழியும் நம் விக்கி. குலைந்தே போகும். இப்பொழுது நான் குலைந்தே போகும் என்று கூறியது அவதூறு, நன்னோக்கம் இல்லாதது என்று கணக்கற்ற நேரம் வழக்காடிக்கொண்டிருக்கலாம். நம் நோக்கம் கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுப்பது என்பது. இவற்றால் நேரக்கூடிய கட்டற்ற சீர்குலைவுகளைப் பயனர்கள் தெளிவாக எண்ணிப்பார்க்கவேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 01:26, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
en:WP:DFTT -- சுந்தர் \பேச்சு 02:38, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

செல்வா, கூடல் பற்றிய முதல் கருத்து வந்தது 30 செப்டம்பர். அதில் இருந்து ஆறு நாட்கள் பொறுத்திருந்து அக்டோபர் 5 அன்றே என் கருத்தை இட்டேன். 1,40,109 பைட்டு அளவு கொண்ட இந்த என் நோக்கு அறிக்கையை முன்வைக்க இரண்டு, மூன்று நாட்கள் உழைத்து, என் கணினியிலேயே எழுதி, படித்துப் பார்த்து, பல முறை திருத்தி அதன் பிறகே வெளியிட்டேன். எனவே, எதுவும் அவசரத்திலோ பொறுமையிழந்தோ எழுதியது அன்று. ஆனாலும், உங்கள் வேண்டுகோளை மதித்து, நீங்கள் கூறிப்பிட்ட முதல் இரண்டு கூற்றுகளைத் திருத்தி இன்னும் பண்பான முறையில் முன்வைத்து உள்ளேன். மூன்றாவது கூற்று தனிமனிதத் தாக்குதல் கிடையாது. விக்கிச் சமூகம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதைச் சுட்டிக் காட்டும் என் கடமையைத் தான் செய்தேன். யாரிடம் எதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கும் இன்னும் 20+ விக்கிப்பீடியர்களுக்கும் ஏற்கனவே மின்மடல் மூலம் தெரியப்படுத்தி உள்ளேன். எனவே, என்னுடைய இந்த விளக்கத்தை ஏற்று என்னுடைய மூன்றாவது கூற்றை அப்படியே விடுவதே என் கருத்துரிமையை மதிப்பதாக இருக்கும். இந்தக் கூற்றுகளைக் கூறாமல் விட்டு இருந்திருந்தால் என்ன பெரிய இழப்பு இருந்திருக்கும்? கூறியதால் நன்மை விளையுமா? என்று கேட்டிருந்தீர்கள். இது குறித்தும் மின்மடலில் நான் தெரிவித்ததைப் பற்றிய விவரங்களையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படையாக பதிவு செய்வேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:59, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரவி, செல்வாவின் வேண்டுகோளுக்கிணங்க சில பகுதிகளை நீக்குவதும் நீக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், நீங்கள் ஆதாரம் என்று சொல்லும் ஒன்றைப் பொதுவில் வைக்காதவிடத்து, அதனையொட்டிய கருத்தை எழுதுவது கருத்துரிமை எனக் கொண்டாடுவதன் பொருந்தாமையைச் சுட்டிக் காட்டுகிறேன். தவிர, நீங்கள் சிலருக்கு விளக்கத்தை மின்னஞ்சலில் எழுதினீர்கள் என்பதற்காக அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர் என்றோ, ஏற்றுக்கொண்டாலும் அது தான் உண்மை என்று நிறுவப்பட்டு விட்டது என்றுமோ ஆகிவிடாதன்றோ? --இரா. செல்வராசு (பேச்சு) 03:01, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
செல்வராசு, மின்னஞ்சலில் நான் முன்வைத்த ஆதாரத்தைப் பொதுவில் அப்படியே வைத்து உரையாடத் தயார். அதன் பிறகு விக்கிச்சமூகம் என் கருத்துரிமை குறித்து எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன். ஆனால், ஆதாரத்தைப் பொதுவில் வைக்க வேண்டாம் என்று மின்மடல் மூலம் ஒரு சிலர் கவலை தெரிவித்ததை மதித்தே இது வரை ஆதாரத்தை வெளிப்படையாக பதிவு செய்யவில்லை. ஒன்று, என்னை ஆதாரத்தை முன்வைக்க விட வேண்டும். அல்லது, ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு என் கருத்துரிமையை மதிக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் ஏதோ நான் அவதூறு பரப்புவது போலவும் தனிமாந்தத் தாக்குதலில் ஈடுபடுவது போலவும் தோற்றத்தை உருவாக்குவது சரியா? இன்னும் 48 மணி நேரம் பொறுத்திருப்பேன். அதற்குப் பிறகு ஆதாரத்தை விக்கியில் வெளிப்படையாக பதிவு செய்வேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:40, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பி.,கு 1 புறவயக் கருத்து இல்லை. பி.கு 2, நாம் எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. நிற்க. இவை பற்றி நாம் போதிய உரையாடல் செய்து விட்டோம்...இல்லைய?...களைத்துவிட்டோம். Lets move on, please. --Natkeeran (பேச்சு) 05:05, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், பி. கு. 1ஐ நான் ஏற்கனவே அடித்துத் திருத்தித் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டேன். பி. கு. 2 குறித்து நாம் இது வரை எங்கும் வெளிப்படையாக உரையாடவில்லையே? நானும் தான் களைத்திருக்கிறேன், நற்கீரன் :) ஆனால், இவ்விசயம் நியாயமாகவும் நடுநிலையாகவும் அணுகப்படவில்லை. ஒன்று ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவியுங்கள். இல்லை, எனது கருத்துரிமையை நிலைநாட்ட பொதுவில் ஆதாரத்தை வைத்து உரையாடத் தயார். --இரவி (பேச்சு) 05:19, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரவி, நற்கீரன் கருத்துடன் உடன்படுகிறேன். இவற்றைப் போதுமானவரை பேசிவிட்டோம். மேற்கொண்டு முன்னகர்வை நோக்கிச் செல்வதே சிறப்பானது. பெருந்தன்மையாக இதனை விட்டுவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் குழு தனது வேலையைச் செய்யட்டும். மேலும் குழப்ப வேண்டாம். நீங்கள் ஆதாரம் எனச் சொல்வதையும் வெளியிட வேண்டாம் என்றே நானும் கேட்டுக் கொள்கிறேன். சில காரணங்கள்: முன்னரே அதனைப் பற்றிப் (குறைந்தபட்சம் நிர்வாகிகள்) பேசித் தீர்ந்ததாகப் பார்த்த நினைவு. அதனை இப்போது இதனுடன் முடிச்சுப் போட வேண்டுமா என்பது. இரண்டு - எனக்கும் ஒரு வகையில் அதன் சாரம் ஏற்பில்லை என்றாலும், ஒருவேளை தவறான புரிந்துணர்விற்கான அடிப்படையும் அதில் இருக்கிறது என்று ஐயச்சார்பினை அவர் பக்கமாகக் கொள்ளவும் இடமிருக்கிறது. அதனாலும் உங்கள் ஆதாரத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொதுவாக அறிவிக்க இயலாது. நிற்க. இவை எனது வேண்டுகோள் மட்டுமே. மற்றபடி உங்கள் நிலையைப் பொறுத்துச் செயல்படுங்கள். --இரா. செல்வராசு (பேச்சு) 22:44, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரகீம்

(மின்மடல் மூலம் இரவியிடம் தெரிவித்தது)

I was invited for Tamil Wikipedia's decennial celebrations recently by Ravishankar.

My association with Ravishankar was from the days I initially started working more focussed towards Telugu wikipedia while at Hyderabad. He startd with monthly meetups and encouraged other wikipedians to join.

After almost two years, I was meeting him back.

And the occasion was Tamil Wikipedia's ten years celebrations.

The event was spread across two days, the first one was a field trip to Mamallapuram and second day was a formal event at Anna university amidst Tamil wikipedians and stalwarts from various fields.

I reached the venue a day before and had this opportunity meet wikipedians coming from Srilanka. It was a very nice opportunity sharing thoughts on developing wikipedia and sister projects. In the evening, I and Sancheevini visited a nearby temple and had lot of exchange of thoughts during our journey. We exchanged our ideas and opinions. Next, reaching venue for dinner, i met this super human Sundar Lakshmanan, I was amazed by his knowledge on a diaspora of topics. Indeed every wikipedian is such a beautiful person with enormous knowledge. Mayuranathan, another such person and also the first Tamil wikipedian was there to welcome us both. After dinner, a small talk was initiated and went on till late night.

Next day morning, we got ready and went out for breakfast; after returning from breakfast Vishnu and Sowmyan reached. We had a lot of talks and conversations. Then, we set out for Mamallapuram. First we reached Anna Centenary library, met few other wikipedians, and got into the bus. Throughout journey, there were different persons coming from different backgrounds meeting each other for the first time face to face, surprisingly it was least suggested. Everyone knew each other already through their edits over wikipedia. This shows how wikipedia strengthens society towards knowing each other more better than any other social networking site.

We reached Mahabalipuram around noon and headed for lunch first. Then we visited various monuments. In the mean time I got a chance to talk to many more people, more versatile and varying fields of interest each. We played around, singing, photo sessions, it was all fun. By evening we headed to seashore temple and beach. At beach, we had this game where every one sat around in a circular formation and suggested his own idea of wiki and probable way of implementing it. I suppose this was documented and is available for others to work upon.

Returning back, I had busy talk with newly met friends.

Next day morning, was the big day. Delegates from Government, FSMTN, TVU, and other organisations along with press media had arrived well in time.

There were panel discussions and some book releases happened on stage. It was good if all the points discussed could have been documented as well and few of those points marked as goals for the coming years.

Post event, I had a big talk with Selvakumar which might have disturbed others in the group. But it gave me some clarification about Tamil alphabet and spoken form of Tamil.

This event proved a great opportunity for me to take back some points and implement them in Te wikipedia from ta wikipedia.

Hope Tamil wikipedia shines to greater heights and Tamil wikipedians work more towards the ultimate goal of contributing to sum of human knowledge.