விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜூன் 22, 2011
- நின்றொளிர் காளான்களின் (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.
- லியொனார்டோ டா வின்சி தன் வாழ்நாளில் பெரும்பாலும் கண்ணாடி பிம்ப எழுத்துமுறையிலேயே எழுதினார்.
- சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட என்ன கொடுமை சரவணன் இது? என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.
- சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் அப் ஊர்பி கொண்டிட்டா என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.
- 1858இல் வெளியான கிரேயின் மனித உடற்கூறு இயல் நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.