விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 25, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான சிரித்திரன் (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
  • கணித தீபிகை நூலை எழுதிய பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ய என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க0 என்று மாற்றினார்.
  • தமிழீழத்திற்கு எதிரான நிலை கொண்ட த இந்து இதழாசிரியர் என். ராம் இலங்கை அரசின் உயர்குடிமை விருதான லங்காரத்னா பெற்றவர்.
  • சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.
  • ஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.