விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 28, 2010
- மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் பங்கேற்றுப் பட்டம் வென்ற முதல் இலங்கைத் தமிழர் யாழ் நூல் இயற்றிய சுவாமி விபுலாநந்தர் ஆவார்.
- 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
- தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்பவை முறையே நைதரசன், பாசுபரசு மற்றும் பொட்டாசியம் ஆகியனவாம்.
- கடற்பாம்புகள் அனைத்துமே நச்சுத் தன்மை உடையவை.
- ஒரு பொருள் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்ணிற்குச் செல்லவேண்டுமென்றால் அதன் திசைவேகம் நொடிக்கு 11.2 கிலோ மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
- பெனசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.