விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 21, 2010
- இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் (படம்) என்று கருதப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் நடப்புத் தலைவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஆவார்.
- நவகண்டம் என்பது தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வது ஆகும்.
- சுசுமு ஓனோ பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர் ஆவார்.
- இந்தியாவில் மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். மக்களவையைப் போல் இது கலைக்கப்பட மாட்டாது.
- சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த வேளையில் நிறுவப்பட்டது.
- பொய்க் கர்ப்பம் என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கு கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும்.